Author: admin

சென்னை: சந்தானம் நடிப்பில் நாளை வெளிவரவுள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’படத்தில் இருந்து, சர்ச்சைக்குரிய பாடலை மியூட் செய்து நீக்கிவிட்டதாக படத் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. நடிகர் சந்தானம் நடித்துள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் நாளை (மே 16) வெளியாகிறது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள, ‘கோவிந்தா… கோவிந்தா.’ பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த பாடல், பெருமாளை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஜி.டி.பாலாஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், “பக்தி பாடலின் வரிகளை மாற்றி, படத்துக்கு சம்பந்தமில்லாமல், பெருமாளை அவமதிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மதத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ள இந்தப் பாடலை நீக்கும்படி கூறாமல், திரைப்படத்துக்கு தணிக்கை குழு, யு/ஏ சான்று வழங்கியுள்ளது. எனவே இந்தப் படத்தின் தணிக்கைச் சான்றை நிறுத்தி வைக்க வேண்டும். இந்தப் பாடலுடன்…

Read More

விழுப்புரம்: விழுப்புரம் நகரில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் நேருஜி வீதி – கிழக்கு பாண்டி சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டன. விழுப்புரம் நகரம் நான்குமுனை சந்திப்பில் இருந்து ராகவன்பேட்டை வரை நேருஜி வீதி மற்றும் கிழக்கு பாண்டி சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகளவு உள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதேபோல் முத்தாம்பாளையம் அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு முதல் ஜானகிபுரம் ரயில்வே மேம்பாலம் வரை சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதில் குறிப்பாக, காட்பாடி ரயில்வே மேம்பாலத்தில் இருந்து காமராஜர் வீதி சந்திப்பு வரையிலான மேல வீதியில் அதிகளவு ஆக்கிரமிப்புகள் உள்ளன. ஏற்கெனவே இச்சாலை குறுகலானது என்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னை – திருச்சி நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இச்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்களும் மற்றும் வாகன ஓட்டிகளும் தொடர்ந்து வலியுறுத்தினர். அதன்பேரில் ஆக்கிரமிப்புகளை…

Read More

புதுடெல்லி: விண்வெளியில் மனித வாழ்வின் நிலைத்தன்மையைப் படிப்பதற்காக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்) முதல் உயிரியல் பரிசோதனையை நடத்த இந்தியா தயாராக உள்ளது என்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம். பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட பயோஇ 3 பயோடெக்னாலஜி கொள்கையின் ஒரு பகுதியாக இந்த முயற்சி வருகிறது.”ஒரு வரலாற்று முயற்சியில், உலகில் இதுவரை இல்லாத முதல், இந்தியா” சர்வதேச விண்வெளி நிலையம் “(ஐ.எஸ்.எஸ்) கப்பலில் விண்வெளியில் மனித வாழ்வின் நிலைத்தன்மையைப் படிப்பதற்காக முதல் எப்போதும் உயிரியல் சோதனைகளை நடத்த உள்ளது” என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் எக்ஸ் ஒரு பதிவில் தெரிவித்தார்.”பயோடெக்னாலஜி #DBT துறையுடன் இணைந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான #ISRO தலைமையிலான தனித்துவமான சோதனைகள், வரவிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் (ஐ.எஸ்.எஸ்) மிஷன் ஆக்சியம் -4 இன் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும், இந்திய விண்வெளி வீரர் குழு கேப்டன் சுப்ஹான்ஷு…

Read More

புதுடெல்லி: “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைப் பொறுத்தவரை நான் ஓர் இந்தியராகப் பேசினேன். நான் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அல்ல” என்று சசி தரூர் விளக்கம் அளித்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டதற்கு, வர்த்தக ரீதியாக தான் கொடுத்த அழுத்தமே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியதை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சி அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை இந்தியா ஏற்றதா? ட்ரம்ப் கூறியதற்கு பிரதமர் மோடி ஏன் விளக்கம் தரவில்லை? – இதுபோன்ற கேள்விகளை காங்கிரஸ் எழுப்பி வருகிறது. அதேநேரத்தில், ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டதற்கு பாகிஸ்தான் டிஜிஎம்ஓ தொலைபேசியில் பேசியதே காரணம் என்று இந்திய வெளியுறவுத் துறையும் ராணுவமும் கூறியதற்கு ஆதரவாக சசி தரூர் கருத்துகளை முன்வைத்தார். ட்ரம்ப் உரிமை கோருவதற்கும் கண்டனம் தெரிவித்தார். இதன்மூலம், அவர் ‘லட்சுமண ரேகை’யை மீறியதாக காங்கிரஸ் தரப்பில் விமர்சிக்கப்பட்டது. “நாங்கள் ஒரு ஜனநாயகக் கட்சி,…

Read More

திருநெல்வேலி: “தொழிலதிபர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ள மத்திய அரசு, தமிழகத்தின் கடனில் ரூ.2 லட்சம் கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார். உலக நாடுகள் முழுவதும் 182 இடங்களில் திருவள்ளுவர் சிலைகளை அமைத்து தமிழ் மொழிக்கு தொண்டாற்றி வரும் விஜிபி உலக தமிழ் சங்க தலைவர் வி.ஜி.சந்தோசத்துக்கு நெல்லை பொதிகை தமிழ் சங்கம் சார்பில் பாளையங்கோட்டையில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் வி.ஜி.சந்தோசத்துக்கு வள்ளுவ சுடர்மணி என்ற விருதை சட்டப் பேரவை தலைவர் அப்பாவு வழங்கினார். முன்னதாக செய்தியாளர்களிடம் சட்டப் பேரவை தலைவர் அப்பாவு கூறியது: “பொள்ளாச்சி விவகாரத்தில் நடவடிக்கைகள் சரியாக இல்லை என திமுக உள்ளிட்ட அப்போதைய எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து அரசின் மீது நம்பிக்கை இல்லாததை காட்டியதால் தான் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்கும்போது ரூ.4.5 லட்சம் கோடி கடன் இருந்தது.…

Read More

புதுடெல்லி: இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தியை அதிகரிக்க கூடாது என அந்நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் வசம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அவரது இந்த கருத்தை விமர்சித்து பாஜக எம்.பி-யும் நடிகையுமான கங்கனா ரனாவத் ட்வீட் செய்திருந்தார். பின்னர் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின்படி அதை நீக்கியதாக கங்கனா தெரிவித்துள்ளார். “இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதிகளவில் உற்பத்தியில் ஈடுபட வேண்டாம் என டிம் குக் வசம் ட்ரம்ப் சொன்னது தொடர்பாக நான் பதிவு செய்த ட்வீட்டை நீக்குமாறு தேசியத் தலைவர் நட்டா, என்னை தொடர்பு கொண்டார். அந்தப் பதிவு என்னுடைய தனிப்பட்ட கருத்து என தெரிவித்துக் கொள்கிறேன். அந்தப் பதிவு இன்ஸ்டாவில் இருந்து நீக்கி விட்டேன்” என கங்கனா தனது எக்ஸ் பதிவில் கூறியுள்ளார். கங்கனா டெலிட் செய்த ட்வீட்டில் என்ன சொல்லி இருந்தார்? – “இதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? அவர் அமெரிக்க அதிபர். ஆனால்…

Read More

புதுச்சேரி: “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை,” என்று புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ராணுவத்தை பாராட்டி, புதுச்சேரியில் தேசியக் கொடி ஏந்தி பாஜக சார்பில் வெற்றி பேரணி இன்று நடைபெற்றது. புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய பேரணிக்கு பாஜக மாநில தலைவர் செல்வகணபதி தலைமை தாங்கினார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார், எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், நியமன எம்எல்ஏக்கள் ராமலிங்கம், அசோக்பாபு மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேரணியில் அனைவரும் கையில் தேசியக் கொடி ஏந்தியும், 70 அடி நீளம் கொண்ட தேசியக் கொடியுடனும் பங்கேற்றனர். பேரணியானது அண்ணா சாலை வழியாக சென்று அஜந்தா சிக்னல் அருகே முடிவடைந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்…

Read More

உங்கள் மையத்தை வலுப்படுத்தவும், தொப்பை கொழுப்பை எரிக்கவும் படகு போஸ் சிறந்தது. இந்த போஸில், உங்கள் கால்களையும் மேல் உடலையும் தூக்கி, படகு போன்ற “வி” வடிவத்தை உருவாக்கும்போது நீங்கள் உட்கார்ந்த எலும்புகளில் சமன் செய்கிறீர்கள்.அதை எப்படி செய்வது:உங்கள் கால்கள் நீட்டி தரையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.உங்கள் கால்களை தரையில் இருந்து தூக்கி, உங்கள் முதுகெலும்பை நேராக வைத்து, உங்கள் மேல் உடலை பின்னால் சாய்ந்து கொள்ளுங்கள்.தரையில் இணையாக உங்கள் கைகளை முன்னோக்கி நீட்டவும்.இந்த நிலையை 10-20 வினாடிகள் வைத்திருங்கள், நீங்கள் வலுவாக இருக்கும்போது படிப்படியாக நேரத்தை அதிகரிக்கவும்.நன்மைகள்:இது வயிற்று தசைகளை டன் செய்கிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது, மேலும் வயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

Read More

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஐடெல் ஏ90 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தை சேர்ந்த மொபைல் போன் உற்பத்தி நிறுவனம் ஐடெல் மொபைல். பெரும்பாலும் பட்ஜெட் விலையில் சர்வதேச சந்தையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். அந்த வகையில் தற்போது ஐடெல் ஏ90 மாடலை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது ‘ஏ’ வரிசை மாடல்களில் ஒன்றாக வெளிவந்துள்ளது. பட்ஜெட் விலையில் தரமான கேமரா மற்றும் விரைவான செயல்பாடு கொண்ட ஸ்மார்ட்போனை சந்தையில் எதிர்பார்க்கும் பயனர்களை டார்கெட் செய்து இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது. ஏஐ அம்சங்கள், டஸ்ட் அண்ட் ஸ்பிளாஷ் அசிஸ்டன்ஸ் போன்ற அம்சங்களை இந்த போன் கொண்டுள்ளது. சிறப்பு அம்சங்கள்: 6.6 இன்ச் ஹெச்டி+ டிஸ்பிளே ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் டி7100 ஆக்டா-கோர் பிராசஸர் 13 மெகாபிக்சல் கொண்டுள்ளது பின்பக்க…

Read More

கத்தார்: ஈரானின் அணுசக்தி திட்டத்தைப் பொறுத்தவரை, புத்திசாலித்தனமான தீர்வு வேண்டுமா அல்லது கொடூரத் தாக்குதல் வேண்டுமா என்பதை அந்நாடு முடிவு செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. அணு ஆயுத உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் அமெரிக்கா தொடர்ந்து ஈரானை எச்சரித்து வருகிறது. இந்நிலையில், கத்தார் தலைநகர் தோஹா வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மன்னர் (அமிர்) தமீம் பின் ஹமாத் அல் தானியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து வணிகத் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்வது அல்லது வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்வது என இரண்டு தீர்வுகள் மட்டுமே அந்நாட்டுக்கு உள்ளன. பிரச்சினையை மிருகத்தனமான முறையில் அல்லாமல், புத்திசாலித்தனமான முறையில் தீர்க்க முடியுமா என்று…

Read More