குடியாத்தம்: குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் ‘அம்மன் சிரசு ஊர்வலம்’ நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம் சிரசு திருவிழா நேற்று நடைபெற்றது. குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி 1-ம் தேதி சிரசு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான சிரசு திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 11-ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும், நேற்று முன்தினம் தேர்த்திருவிழாவும் விமரிசையாக நடைபெற்றது. முக்கிய விழாவான சிரசு திருவிழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவையொட்டி, நேற்று அதிகாலை 4 மணிக்கு பிச்சனூர்பேட்டை, நடுப்பேட்டை பகுதிகளில் இருந்து அம்மனுக்கு சீர்வரிசை, பட்டுப்புடவை ஆகியவை கொண்டு வரப்பட்டு தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதிகாலை, அம்மன் சிரசு ஊர்வலம் புறப்பட்டது. சிரசு ஊர்வலம் சென்ற தெருக்களில்…
Author: admin
நடப்பாண்டு ஆர்டிஇ திட்டம் முடங்கும் அபாயம் இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான இலவச சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை தொடங்கப்படவில்லை. இந்த ஆண்டு சேர்க்கை தொடங்கப்படாத காரணத்தால் லட்சக்கணக்கான குழந்தைகள் முன் பருவ சேர்க்கையான எல்கேஜி,யூகேஜி விண்ணப்பம் அளிக்க முடியாத நிலையில் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இந்த ஆண்டு எந்த அறிவிப்பும் இல்லாமல் இந்த திட்டம் முடங்கும் நிலையில் உள்ளது. எனவே மாணவர் சேர்க்கையை இந்த ஆண்டு உடனடியாக தொடங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.…
தமிழகத்தில் சில மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஆகிய இடங்களில் 9 செ.மீ., தருமபுரி மாவட்டம் அரூர், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் 7 செ.மீ., காரைக்காலில் 6 செ.மீ., நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டம் கோவில்பட்டி, சேலம் மாவட்டம் சங்ககிரி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி…
கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் கதைக்களம் என்ன என்பது குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது வெளிநாட்டு தணிக்கைக்கு விண்ணப்பித்தது மூலம், படத்தின் கதைக்களம் என்ன என்பது தெரியவந்துள்ளது. அதன்படி, “ரங்கராய சக்திவேல் நாயக்கர் ஒரு பிரபலமான, செல்வாக்கு மிக்க காட்ஃபாதர். வன்முறையும், உலகளாவிய சிண்டிகேட் கும்பலுடனான தொடர்பும்தான் இவரது உலகம். ரங்கராய சக்திவேல் நாயக்கருக்கு அவருடைய மகன் மிகவும் நெருக்கமானவர். கதையின் ஒரு கட்டத்தில் ரங்கராய சக்திவேல் நாயக்கர் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது. ஆனால், இறுதியில் அவர் திரும்பி வருகிறார். விதியால் பிரிந்த அவரும்,…
மலச்சிக்கல் பெரும்பாலும் ஒரு சிறிய பிரச்சினையாகக் கருதப்படுகிறது, ஆனால் புதிய ஆராய்ச்சி இது இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று கூறுகிறது. இங்கிலாந்தில் 400,000 க்கும் மேற்பட்டவர்களைப் பற்றிய ஆய்வு மலச்சிக்கலுக்கும் இதய பிரச்சினைகளுக்கும் இடையிலான தொடர்பைக் காட்டுகிறது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் மலச்சிக்கல் இரண்டையும் கொண்டவர்கள் அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர். அழற்சி குடல் நோய் மாரடைப்பு அபாயத்தையும் உயர்த்துகிறது, குறிப்பாக இளைய நபர்களிடையே. தடுக்கப்பட்டதாக உணர்கிறீர்களா? சரி, அது ஒரு குடல் பிரச்சினையை விட அதிகமாக இருக்கலாம். மலச்சிக்கல், பெரும்பாலும் ஒரு சிறிய உடல்நல அக்கறை என்று நிராகரிக்கப்படுகிறது, வளர்ந்து வரும் ஆராய்ச்சியின் படி, இதய ஆரோக்கியத்திற்கு கடுமையான ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடும். குடல் ஆரோக்கியத்திற்கும் இதய செயல்பாட்டிற்கும் இடையிலான தொடர்பைப் புரிந்துகொள்வது தடுப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு முக்கியமானது.மலச்சிக்கல் என்பது வாரத்திற்கு மூன்று குடல் இயக்கங்களைக் கொண்டிருக்கக்கூடிய ஒரு நிலை. இதன் பொருள் பூப் கடினமானது, உலர்ந்த அல்லது கட்டியாக…
Last Updated : 15 May, 2025 11:29 PM Published : 15 May 2025 11:29 PM Last Updated : 15 May 2025 11:29 PM பாகிஸ்தான் விவகாரத்தில் 3-ம் தரப்புக்கு இடமில்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் விவகாரத்தை பொறுத்தவரை இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. இது இருதரப்பு விவகாரம். இதில் 3-ம் தரப்புக்கு இடமில்லை. தீவிரவாதம் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே தெளிவுபடுத்தி உள்ளார். இந்தியாவுக்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பதுங்கி உள்ளனர். அவர்களின் பட்டியலை பாகிஸ்தானிடம் வழங்கி உள்ளோம். அந்த தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். பாகிஸ்தானில் செயல்படும்…
சென்னை: ‘படை தலைவன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘ரமணா 2’ படம் எடுப்பது குறித்த தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். சகாப்தம், மதுரை வீரன் படங்களைத் தொடர்ந்து விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்துக்கு ‘படை தலைவன்’ என தலைப்பு வைத்துள்ளனர். இதை, வால்டர், ரேக்ளா படங்களை இயக்கிய யு.அன்பு இயக்கியுள்ளார். விஜே கம்பைன்ஸ் சார்பில் ஜகநாதன் பரமசிவம் வழங்கும் இந்தப் படத்துக்கு எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். திரைக்கதை, வசனத்தை பார்த்திபன் தேசிங்கு எழுதியுள்ளார். கஸ்தூரி ராஜா, யாமினி சுந்தர், முனீஸ்காந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலாதா விஜயகாந்த், விஜய பிரபாகரன், சசிக்குமார், ஏ.ஆர் முருகதாஸ், கஸ்தூரி ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஏ.ஆர் முருகதாஸ் பேசும்போது, “தமிழ் சினிமாவுக்கு ஒரு கம்பீரமான கதாநாயகன் கிடைத்திருக்கிறார்.…
கடந்த 2021ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘நோபடி’. பாப் ஓடன்கிர்க் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த இப்படத்தை இல்யா நைஷல்லர் இயக்கி இருந்தார். யுனிவர்ஸல் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. 2021ஆம் ஆண்டுக்கு பிறகு வெளியான பல்வேறு ஆக்ஷன், த்ரில்லர் படங்களில் இப்படத்தின் தாக்கம் இருப்பதை பார்க்க முடியும். தற்போது இப்படத்தின் 2ஆம் பாகம் உருவாகியுள்ளது. இதன் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரெய்லர் எப்படி? – ஆக்ஷன், த்ரில்லர், டார்க் காமெடி ரசிகர்கள் விரும்பும் அத்தனை அம்சமும் இப்படத்தில் இருக்கும் என்பதை ட்ரெய்லரின் மூலம் அறியமுடிகிறது. ‘பிரேக்கிங் பேட்’, ‘பெட்டர் கால் சால்’ ரசிகர்களுக்கு படத்தின் ஹீரோவை பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை. குடும்பத்துக்காக நேரம் ஒதுக்கி சுற்றுலா செல்லும் ஹீரோவுக்கு அங்கு வில்லன் ஆட்களால் பிரச்சினை ஏற்படுவதாக ட்ரெய்லரில் காட்டப்படுகிறது. முதல் பாகத்தில் இருந்ததை ஒரு படி மேலாக ஆக்ஷன், வன்முறை, மாஸ் காட்சிகள் இதில் தாராளமாக இடம் பெற்றிருக்கும் என்று…
இப்போது உலகில் வேகமாக பரவுகின்ற 5 நோய்கள்5 ஆபத்தான நோய்கள் உலகம் முழுவதும் வேகமாக பரவுகின்றனகோவிட் மட்டுமல்ல: இந்த 5 நோய்கள் 2025 இல் அமைதியாக உயர்ந்து கொண்டிருக்கின்றனதொற்றுநோய்களின் உச்சத்திற்குப் பிறகு நோய் வெடிப்பதை உலகம் விட்டுவிட்டது என்று நினைப்பது எளிது. ஆனால் உண்மை மிகவும் கவலையான படத்தை வரைகிறது. 2025 வெளிவருகையில், பல தொற்று நோய்கள் அமைதியாக – ஆனால் விரைவாக -நாடுகளையும் சமூகங்களையும் பரப்புகின்றன.தலைப்புச் செய்திகள் பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு மட்டுமே முன்னிலைப்படுத்தினாலும், மேற்பரப்புக்கு அடியில் அதிக குமிழ்கள் உள்ளன.தற்போது உலகளவில் ஆபத்தான வேகத்தில் பரவியுள்ள 5 நோய்கள் இங்கே. இவை வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல – அவை இயற்கை, காலநிலை மற்றும் பொது சுகாதாரம் எவ்வாறு வெட்டுகின்றன என்பதை நினைவூட்டுகின்றன. மிக முக்கியமானது என்னவென்றால், எழுச்சி எதை ஏற்படுத்துகிறது மற்றும் எவ்வளவு எளிமையான தடுப்பு நடவடிக்கைகள் பல உயிர்களைப் பாதுகாக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்வது.அமெரிக்காவிலும் கனடாவிலும்…
மும்பை: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசனின் ஆட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்கள் வரும் சனிக்கிழமை முதல் மீண்டும் தொடங்குகிறது. இந்நிலையில், இதில் பங்கேற்று விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அந்த நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஜான்சன் அறிவுரை வழங்கியுள்ளார். இது தொடர்பாக ஆஸ்திரேலிய நாட்டில் வெளியாகும் நாளிதழ் ஒன்றில் சிறப்பு கட்டுரை ஒன்றை அவர் எழுதியுள்ளார். “ஐபிஎல் சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்களில் விளையாடுவது தொடர்பாக வீரர்கள் சுயமாக முடிவு செய்து கொள்ளலாம் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறியுள்ளது. விளையாட வேண்டாம் என வீரர்கள் முடிவு செய்தால் அது அவர்களுக்கு நிதி இழப்பு, தொழில்முறை கிரிக்கெட் சார்ந்த வாய்ப்பு, ஏமாற்றம் உள்ளிட்டவற்றை தரலாம். இது அனைத்துக்கும் மேலாக பாதுகாப்பு தான் மிகவும் முக்கியமானது. இந்த முடிவை எடுக்க வேண்டிய இடத்தில் நான் இருந்தால் அதை எளிதில் செய்வேன். பணமா?…
