சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியில் நிகழ்ச்சி ஒன்றுக்காக தூவப்பட்ட பிளீச்சிங் பவுடர் தரமற்று இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, அது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார். சென்னை புளியந்தோப்பு ஆட்டிறைச்சி கூடம் அருகில், அமைச்சர் பி.கே.சேகர் பாபு தலைமையில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர் பாபுவுக்கு பதிலாக மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா பங்கேற்றார். இந்நிகழ்ச்சிக்காக அப்பகுதியில் மாநகராட்சி சார்பில் பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டிருந்தது. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் மேயர் பிரியாவிடம், “இது கறி அறுக்கும் இடம். அதனால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இன்று நடக்கும் அன்னதான நிகழ்ச்சியில் பலரும் சாப்பிடுகின்றனர். ஆனால், ஒரு இடத்தில்கூட பிளீச்சிங் பவுடரே தூவவில்லை. இதுகுறித்து நானும் அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியும் யாரும் கண்டுகொள்வதில்லை. இன்று இந்த பகுதியில் தூவப்பட்ட பிளீச்சிங் பவுடர் இதுதான். இதில் ஏதாவது வாசனை வருகிறதா என்று மட்டும் பாருங்கள், குறைந்தபட்ச வாசனைக்கூட…
Author: admin
கோஸ்மோஸ் 482 இதுபோன்றதாகத் தோன்றலாம் (புகைப்பட கடன்: நாசா) A சோவியத் விண்கலம் விண்வெளி குப்பைகள்-கண்காணிப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, 1970 களில் வீனஸுக்கு ஒரு பணிக்காக தொடங்கப்பட்டது.டெல்ஃப்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டச்சு விஞ்ஞானியும் செயற்கைக்கோள் டிராக்கரும் மார்கோ லாங்ப்ரூக் கூறுகையில், மே 10 ஆம் தேதி எதிர்பார்க்கப்படும் தோல்வியுற்ற விண்கலத்தின் மறு நுழைவு அசாதாரணமானது, ஆனால் பொது பீதிக்கு ஒரு காரணம் அல்ல. அது அப்படியே இருந்தால், அது சுமார் 150 மைல் (மணிக்கு 242 கிமீ) தரையில் அடிக்கக்கூடும்.”ஆபத்து இல்லாமல் இருக்கும்போது, நாங்கள் மிகவும் கவலைப்படக்கூடாது” என்று லாங்ப்ரூக் ஒரு மின்னஞ்சலில் கூறினார்.கப்பல் ஒப்பீட்டளவில் கச்சிதமானது, மேலும் முழுமையாய் கூட, “ஆபத்து ஒரு சீரற்ற விண்கல் வீழ்ச்சியைப் போன்றது, அவற்றில் பல ஒவ்வொரு ஆண்டும் நிகழ்கின்றன. உங்கள் வாழ்நாளில் மின்னலால் பாதிக்கப்படுவதற்கான பெரிய அபாயத்தை நீங்கள் இயக்குகிறீர்கள்” என்று அவர் கூறினார்.ஒரு தனிநபர் அல்லது பொருளைத் தாக்கும் விண்கலத்தின்…
திருவனந்தபுரம்: விழிஞ்சம் துறைமுகத் திறப்பு விழா மேடைக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வந்திருந்ததை சுட்டிக்காட்டி ‘பலர் இரவுத் தூக்கத்தை இழப்பார்கள்’ என்று இண்டியா கூட்டணியை கேலி செய்தார். கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் அதானி குழுமம் சார்பில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “நான் முதல்வரிடம் (பினராயி விஜயன்) ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் இண்டியா கூட்டணியின் முக்கியமான தூண். சசி தரூரும் இங்கே அமர்ந்திருக்கிறார். இன்றைய நிகழ்வு பலருக்கு தூக்கமில்லாத இரவுகளைத் தரலாம்” என்றார். பிரதமர் மோடியின் கருத்தை சரியாக வெளிப்படுத்துவதற்கு, அவரின் பேச்சை மொழிபெயர்த்தவர் சிரமப்பட்டதாக தெரிகிறது. அதற்கு பதில் அளித்த பிரதமர் மோடி, “செய்தி… செல்ல வேண்டிய இடத்துக்குச் சென்றுவிட்டது” என்றார். முன்னதாக, இன்று காலையில் கேரளாவுக்கு…
ஜூனில் ‘அடங்காதே’ வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அடங்காதே’. தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பிரச்சினை, தணிக்கை பிரச்சினை என பல்வேறு தடங்கல்களால் வெளியாகாமல் இருந்தது. தணிக்கை பிரச்சினை சரியாகிவிட்ட பிறகும், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பிரச்சினைகளால் படம் வெளியாகாமல் இருந்தது. தற்போது அனைத்து பிரச்சினையும் பேசி தீர்க்கப்பட்டு, ஜூனில் ‘அடங்காதே’ வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். ஷண்முகம் முத்துசுவாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனை ஸ்ரீக்ரீன் நிறுவனம் சரவணன் தயாரித்துள்ளார். இப்படத்தினை இ5 நிறுவனம் கைப்பற்றி உலகமெங்கும் வெளியிடவுள்ளது. இப்படத்தின் வெளியீட்டுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்று தயாரிப்பாளர் சரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
சென்னை: ஏப்ரல் மாதத்தில் 87.59 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 87.59 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86.99 லட்சம் பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86.65 லட்சம் பயணிகளும், மார்ச் மாதத்தில் 92.10 லட்சம் பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக கடந்த ஏப்.30-ம் தேதியன்று 3.49 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு பயணச் சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்-அப், பேடிஎம் செயலி, போன்பே மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச் சீட்டுகளுக்கும் 20 சதவீதம்…
இம்பால்: கடந்த 2023, மே 3ம் தேதி மணிப்பூரில் ஏற்பட்ட இனக்கலவரத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிப்பூர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க முக்கிய பகுதிகளான இம்பால், சுராசந்த்பூர் மற்றும் காங்கோக்பி மாவட்டங்களின் தலைநகரங்களில் போலீஸார் தீவிர சோதனை மற்றும் வாகனச் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூர் மக்கள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள இம்பாலின் குமான் லம்பாக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “மாநிலத்தில், அதிலும் குறிப்பாக சனிக்கிழமையன்று சமூக விரோதிகளால் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது” என்றார். மைத்தேயி சமூக அமைப்பான, மணிப்பூர் ஒருமைப்பாட்டுக்கான ஒருங்கிணைப்புத் குழு, மே 3-ம் தேதி அனைத்து வேலைகளையும் நிறுத்திவைத்து விட்டு மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. குகி மாணவர்கள் அமைப்பு மற்றும் சோமி மாணவர்கள் கூட்டமைப்பு…
சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படம் வெளியான முதல் நாளில் தமிழக அளவில் ரூ.17.75 கோடியையும், இந்திய அளவில் சுமார் ரூ.20 கோடியையும் வசூல் செய்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம், ‘ரெட்ரோ’. பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, கருணாகரன், நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 2 டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் மே 1-ல் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில், ‘ரெட்ரோ’ படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ‘ரெட்ரோ’ முதல் நாளில் ரூ.17.75 லட்சம் வசூலை ஈட்டியுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. அதேவேளையில், இந்திய அளவில் இப்படம் முதல் நாளில் ரூ.20 கோடி அளவில் வசூல் செய்துள்ளது. ‘கங்குவா’ உடன்…
சென்னை: சிவகிரி அருகே தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ள பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தொடர் படுகொலைகளை திமுக அரசால் தடுக்க முடியவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. தனியாக வசித்து வருபவர்களைக் குறிவைத்து, தொடர்ந்து கொலைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டும், பல்லடம் பகுதியில், ஒரே குடும்பத்தில் நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், திருப்பூர் மாவட்டம் சேமலைகவுண்டம்பாளையத்தில், தாய், தந்தை, மகன் என மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர். அனைத்துக் கொலைகளுமே, சுமார் 50 கி.மீ. சுற்றளவில்தான் நடைபெறுகின்றன. ஆனால், இதுவரை ஒரு குற்றவாளி…
திருவேற்காடு: பூந்தமல்லி திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில், கருங்கல் கருவறை வாசற்கால் நிறுவும் பணி மற்றும் ரூ.17.47 கோடி மதிப்பில் 3 புதிய ராஜகோபுரங்கள், 2 முன் மண்டபங்கள் அமைக்கும் பணியை இன்று காலை அமைச்சர்கள் சேகர்பாபு, சா.மு.நாசர் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காட்டில் அமைந்துள்ளது தேவி கருமாரியம்மன் கோயில், தமிழகத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றாக விளங்கும் இக்கோயிலுக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பிறமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து திரும்புகின்றனர். இந்நிலையில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் ரூ.70.27 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின் கீழ் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில், கருங்கல் கருவறை வாசற்கால் நிறுவும் பணி மற்றும் ரூ.17.47 கோடி மதிப்பில் 3 புதிய ராஜகோபுரங்கள், 2 முன் மண்டபங்கள் அமைக்கும் பணியை இன்று காலை இந்து சமய…
சென்னை: சாம்சங் விவகாரத்தில் தொழிலாளர் துறை சரியாக நடந்து கொள்ளவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை, தியாகராய நகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற தொழிலாளர் தின விழாவுக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காஷ்மீர் சம்பவத்தை சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பு பிரச்சாரம் செய்ய பயன்படுத்தக் கூடாது. சிந்து நதி நீரைப் பயன்படுத்தி பாகிஸ்தானில் 4.50 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது. 70 சதவீத மக்களின் குடிநீர் தேவையை சிந்து நதி நீர் பூர்த்தி செய்கிறது. சிந்து நதி நீரை பாகிஸ்தானுக்கு தர மாட்டோம் என்ற முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படும். எனவே, வரி உயர்வை எதிர்த்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 29…
