Author: admin

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் எந்தவொரு நிதி உதவியும் பயங்கரவாதம் வளர துணை போகும் என்பதால், அந்நாட்டுக்கு உதவி செய்வதை சர்வதேச நாணய நிதியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். கடந்த வாரம் பாகிஸ்தான் ராணுவத்தால் குறிவைக்கப்பட்ட ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளில் ஒன்றான குஜராத்தின் பூஜ் விமானப்படை தளத்துக்குச் சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், “ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடிவடையவில்லை. இது வெறும் டிரெய்லர்தான். முழு படம் பின்னர் வெளிப்படும். இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய போர் நிறுத்தம் பாகிஸ்தானுக்கு ஒரு சோதனைக் காலம் போன்றது. பாகிஸ்தான் மீண்டும் மோசமான நடத்தைக்குத் திரும்பினால், இந்தியா தகுந்த பதிலடி கொடுக்கும். நமது விமானப்படை பாகிஸ்தானின் ஒவ்வொரு மூலையையும் அடையும் திறன் கொண்டது என்பது சிறிய விஷயமல்ல. இது ஆபரேஷன் சிந்தூரின் போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை அதன் வீரம்,…

Read More

சென்னை: செஞ்சியில் ஒரே தேர்வு மையத்தில் 167 பேர் வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுத்த விவகாரத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்பது தெரியவந்துள்ளதாக தமிழக அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த 8-ம் தேதி வெளியானது. இதில், விழுப்புரம் மாவட்டத்தில் 192 பள்ளிகளில் தேர்வு எழுதிய 21,581 மாணவ மாணவிகளில் 20,526 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 95.11 ஆகும். இந்நிலையில், செஞ்சி ஒன்றியத்தில் வேதியியல் பாடத்தில் 251 மாணவ மாணவிகள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில், ஒரு மையத்தில் தேர்வு எழுதிய 167 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், முழுமூச்சாக படித்து தேர்வு எழுதி 100 சதவீத மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களும், அவர்களது பெற்றோரும் மன உளைச்சலில் இருந்தனர். சம்பந்தப்பட்ட பள்ளியில் வினாத்தாள் கசிந்திருக்கலாம் என்றும் புகார் எழுந்தது.…

Read More

ஸ்ரீநகர்: காஷ்மீரில் கடந்த 3 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட 2 முக்கிய நடவடிக்கைகளில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, அம்மாநிலத்தின் தெற்கு காஷ்மீரில் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தெற்கு காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு பெரிய நடவடிக்கைகளில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள விக்டர் படையின் தலைமையகத்தில், விக்டர் படையின் பொது அதிகாரி மேஜர் ஜெனரல் தனஞ்சய் ஜோஷியுடன் இணைந்து செய்தியாளர்களிடம் பேசிய காஷ்மீர் காவல் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐஜிபி) வி.கே.பிர்டி, “ஏப்ரல் 22 பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் தங்கள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் மையத்தை தெற்கு காஷ்மீரில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளுக்கு திருப்பி, கடந்த 3 நாட்களில் 6…

Read More

பள்ளி மேல்நிலை வகுப்புகளில் வணிகவியல் பிரிவை தேர்வு செய்த மாணவ, மாணவிகளுக்கு இளநிலை பட்டப் படிப்புகளில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. வணிகவியல் படிப்பை கல்வி நிறுவனங்களில் நேரடியாகவும், தொலை நிலை படிப்பாகவும் படிக்கலாம். பிகாம் பட்டம் பெற்றவர்கள் வங்கி, வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் வேலை வாய்ப்புகளை பெற முடியும். சி.ஏ., எம்.காம்., எம்.பி.ஏ போன்ற படிப்புகளையும் தொடரலாம். பி.பி.ஏ படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்யும் பட்டதாரிகள், முதுநிலையில் எம்.பி.ஏ படிப்பை தொடரலாம். இதன் மூலம் சொந்த தொழில் துவங்குவதுடன், முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பையும் பெறலாம். அதேபோல் பி.ஏ எக்னாமிக்ஸ். திறன்களை வளர்த்துக் கொள்பவர்கள் பொருளாதார நிபுணராகவும் வலம் வரலாம். சார்டட் அக்கவுண்ட் (சி.ஏ) படிப்பு படிக்க பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சி.ஏ படிப்பின் நிலை 1-ல் சேரலாம். பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் சிஏ நிலை 2-ல் நேரடியாக…

Read More

சென்னை: “வட தமிழ்நாடு கல்வியில் வீழ்ச்சியடைவது கண்டு அரசு கவலைப்படவில்லை. வட மாவட்டங்களுக்கு கல்வித்துறையில் எப்போது விடியல் ஏற்படும் என்பது தெரியவில்லை. கல்வியில் வட தமிழ்நாடு முன்னேறவில்லை என்றால், எந்தத் துறையிலும் ஒட்டுமொத்த தமிழகமும் முன்னேற முடியாது,” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 93.80 விழுக்காடும், 11-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் 92.09 விழுக்காடு மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அதே நேரத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் தோற்ற மாணவர்கள் அதை நினைத்து கவலைப்படாமல், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் துணைத் தேர்வுகளை புத்துணர்வுடனும், கவனமாகவும் எழுதி, தேர்ச்சியடைந்து மேல்நிலை வகுப்பில் சேர வாழ்த்துகிறேன். பத்தாம் வகுப்பு, 11ம் வகுப்பு ஆகிய இரு பொதுத்தேர்வுகளிலும் மாணவர்களை விட,…

Read More

மஞ்சள், அல்லது நல்ல பழைய ஹால்டி, இந்திய உணவு வகைகளில் பிரதானமாக உள்ளது, மேலும் எந்தவொரு உணவிற்கும் வண்ணத்தை வழங்குவதை விட அதிகமாக செய்கிறது – இது ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளுக்கும் பெயர் பெற்றது, மேலும் இது ஆரோக்கியத்திற்கு சிறந்தது.எங்கள் பல தயாரிப்புகளில் ஹால்டி ஒரு வழி பயன்படுத்தப்படுகையில், ஒரு மாதம் முழுவதும் ஹால்டி இருந்தால் என்ன நடக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பார்ப்போம் …பல சுகாதார நன்மைகள்நீங்கள் ஒரு மாதத்திற்கு மஞ்சள் தவறாமல் உட்கொண்டால், நீங்கள் பல நேர்மறையான விளைவுகளை அனுபவிக்கலாம்:குறைந்த அழற்சி: குர்குமின் உடலில் குறைந்த வீக்கத்திற்கு உதவுகிறது, இது கீல்வாதம், மூட்டு வலி மற்றும் பிற அழற்சி நிலைமைகளுக்கு உதவும்.சிறந்த செரிமானம்: மஞ்சள் செரிமான அமைப்பை ஆற்றவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவும். இது உங்கள் குடலுக்கும் சிறந்தது.நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது: ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற, மஞ்சள் உங்கள் உயிரணுக்களை இலவச தீவிரவாதிகள்…

Read More

யூடியூபில் திரைப்படங்களை விமர்சனம் செய்து அதன் மூலம் ஆதரவாளர்களையும், அதே அளவு ஹேட்டர்களையும் ஈட்டி வைத்திருப்பவர் கிஸா 47 (சந்தானம்). திரை விமர்சகர்களை குறிவைத்து தன்னுடைய பாழடைந்த தியேட்டருக்கு வரவழைத்து கொல்லும் பேய் ஹிட்ச்காக் இருதயராஜ் (செல்வராகவன்) ஹீரோ கிஸாவை தனது திரையரங்குக்கு வரவழைக்கிறார். ஆனால் அவருக்கு முன்பாகவே ஹீரோவின் குடும்பத்தினர் (நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த்) அங்கு சென்று மாட்டிக் கொள்கின்றனர். ஹீரோவும் அவரது நண்பரும் (மொட்டை ராஜேந்திரன்) திரைக்குள் இழுக்கப்பட்டு அதில் ஓடும் திரைப்படத்துக்குள் சென்று பார்க்கும்போதுதான் தெரிகிறது, அதில் இருக்கும் நடிகர்களாக ஹீரோவின் குடும்பத்தினர் இருப்பது. திரைக்குள் ஹீரோவின் காதலி (கீதிகா திவாரி) பேயாக மாறி இருக்கிறார். அவர் ஏன் பேயாக மாறினார்? திரைக்குள் இருந்து தனது குடும்பத்தை ஹீரோ எப்படி வெளியே கொண்டு வந்தார் என்பதே ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் மீதிக் கதை. இந்த ‘டிடி’ பட வரிசையில் இது நான்காவது படம்.…

Read More

சென்னை: தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் நாளை (மே 17) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 16), தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மே 17ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த…

Read More

பல நூற்றாண்டுகளாக, தங்கம் கனவுகளின் விஷயமாக இருந்து வருகிறது. பண்டைய மன்னர்கள் முதல் இடைக்கால இரசவாதிகள் வரை, அடிப்படை உலோகங்களை தங்கமாக மாற்றுவதற்கான யோசனை இறுதி சக்தி, செல்வம் மற்றும் இயற்கையின் மீது தேர்ச்சி ஆகியவற்றைக் குறிக்கிறது. இப்போது, ​​துகள் இயற்பியலின் வயதில், அந்த கற்பனை யதார்த்தத்தை துலக்கியது. செர்ன்ஸ் பெரிய ஹாட்ரான் மோதல் (எல்.எச்.சி), விஞ்ஞானிகள் சாத்தியமற்ற, மாற்றப்பட்ட ஈயத்தை தங்கமாக செய்துள்ளனர். இது ஒரு நானோ விநாடி மட்டுமே நீடித்தது, அது ஒரு புள்ளியைக் காட்டிலும் குறைவாகவே இருந்தது, ஆனால் அது உண்மையானது. நாம் திரும்பக்கூடிய ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள் தங்கத்திற்கு இட்டுச் செல்லுங்கள் விருப்பத்தில். அந்த மனிதநேயம், நமது மதிப்புகள் மற்றும் நமது பொருளாதாரத்தை கூட மாற்றியமைக்கும்?21 ஆம் நூற்றாண்டின் ரசவாதம்ஒரு அற்புதமான பரிசோதனையில், CERN இன் விஞ்ஞானிகள் ஈய கருக்களின் அதிவேக, மிஸ் மோதல்களின் போது தங்க அணுக்களைக் கவனித்தனர். பண்டைய ரசவாதத்தின்…

Read More

சென்னை: “தமிழ்நாட்டில் பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்துள்ளது. உயர்கல்வியிலும் இந்த உயரத்தை உறுதி செய்து வருகிறோம்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பட்டியல் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 96 சதவிகிதத்தை அடைந்து புதிய சாதனை படைத்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கல்வியில் சமூகநீதிக்கான வெற்றி இது. பட்டியல் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி இதுவரை இல்லாத உச்சத்தை அடைந்துள்ளது. உயர் கல்வியிலும் இந்த உயரத்தை உறுதிசெய்து வருகிறோம்.தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்காக நமது திராவிட மாடல் அரசு தீட்டும் திட்டங்களால் வரலாற்றில் இடம்பெறும்.” என்று அவர் கூறியுள்ளார்.

Read More