ஆப்டிகல் மாயைகள் உளவியல் புதிர்கள். இவை நமது மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது. அதிக ஐ.க்யூ.எஸ் உள்ளவர்கள் காட்சிகளை வேகமாக செயலாக்குகிறார்கள். ஒரு படம் கைவிடப்பட்ட கிராமப்புற பகுதியைக் காட்டுகிறது. காட்சியில் ஒரு நரி மறைக்கப்பட்டுள்ளது. அதை விரைவாகக் கண்டுபிடிப்பது அதிக காட்சி நுண்ணறிவைக் குறிக்கிறது. சவால் படம்-தரையில் உணர்வை சோதிக்கிறது. நரி சுற்றுச்சூழலுடன் கலக்கிறது. இந்த ப்ரைண்டீசரை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் மூளை உலகத்தை விளக்கும் விதம் ஆப்டிகல் மாயைகளால் காட்டப்படுகிறது, அவை உளவியல் புதிர்கள். நரம்பியல் ஆராய்ச்சியின் படி, அதிக ஐ.க்யூ கள் உள்ளவர்கள் அடிக்கடி விரைவான காட்சி செயலாக்க வேகம் மற்றும் சிறந்த புற விழிப்புணர்வைக் கொண்டுள்ளனர்.காட்சி நரம்பியல் ஆராய்ச்சி உலகத்தை விளக்குவதற்கு நமது மூளை ஹியூரிஸ்டிக்ஸ் அல்லது குறுக்குவழிகளைப் பயன்படுத்துகிறது என்பதை நிரூபித்துள்ளது. இந்த குறுக்குவழிகள் காட்சி படங்களின் செயலாக்கத்தை விரைவுபடுத்தினாலும், அவை நம்மை ஏமாற்றக்கூடும், குறிப்பாக நுட்பமான வடிவங்கள் பின்னணி கூறுகளாக…
Author: admin
போபால்: “பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய ராணுவம் தலைவணங்க வேண்டும்” என்று மத்தியப் பிரதேச துணை முதல்வர் ஜெகதீஷ் தேவ்தா பேசியிருப்பது அரசியல் சர்ச்சையாகியுள்ளது. இந்தப் பேச்சு மலிவானது என கண்டித்துள்ள காங்கிரஸ் கட்சி, மத்தியப் பிரதேச துணை முதல்வர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத் துணை முதல்வர் தேவ்தா பேசிய வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் கட்சி, “நாட்டின் ராணுவம் மற்றும் ராணுவ வீரர்கள், பிரதமர் மோடிக்கு தலைவணங்க வேண்டும் என்று மத்தியப் பிரதேச பாஜக அரசின் துணை முதல்வர் ஜெகதீஷ் தேவ்தா கூறியுள்ளார். அவரின் இந்தப் பேச்சு மலிவானது. வெட்கக்கேடானது. இது ராணுவத்தின் துணிச்சலுக்கும் வீரத்துக்கும் அவமானம். ஒட்டுமொத்த தேசமும் இன்று ராணுவத்தைக் கொண்டாடி வரும் நேரத்தில் பாஜக தலைவர்கள் நமது துணிச்சலான ராணுவத்தைப் பற்றி தாழ்வான எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். பாஜகவும், ஜெகதீஷ் தேவ்தாவும் மன்னிப்பு கேட்க வேண்டும்.…
சென்னை: “புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்ததால், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், கல்விக் கட்டணதுக்குக்கு நிதி இல்லை என்று திமுக அரசு சால்ஜாப்பு சொல்வதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கும், இதற்கும் என்ன சம்பந்தம்? இது மாநில அரசு விடுவிக்க வேண்டிய நிதி. அதை கொடுக்க துப்பில்லாமல், வழக்கம்போல் யார் மேலாவது பழியைப் போட்டு தப்பிக்க முயல்வது, இன்னும் எத்தனைக் காலம்?” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கல்வி உரிமைச் சட்டத்தின்படி (Right to Education Act), தனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் 25 சதவீத ஏழை, எளிய மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும். அதிமுக ஆட்சியில் இத்தொகை முழுமையாகவும், முறையாகவும் செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்டாலின் மாடல் திமுக அரசு, இந்தத் தொகையை செலுத்தாமல் அலட்சியம் காட்டி வருவதாக கல்வியாளர்களும்,…
புது டெல்லி: ஜொமோட்டோ மற்றும் ஸ்விக்கி உணவு டெலிவரி நிறுவனங்கள் மூலம் மழைக்காலங்களில் உணவு ஆர்டர் செய்யும்போது இனி கூடுதல் கட்டணங்கள் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஸ்விக்கி மற்றும் அதன் ஆன்லைன் உணவு விநியோக போட்டியாளரான ஜொமோட்டோ ஆகியவை மழைக் காலத்துக்கான அதன் கோல்டு உறுப்பினர் சலுகைகளில் புதிய மாற்றத்தை செய்துள்ளது. இதன்படி இன்று முதல் (வெள்ளிக்கிழமை), மழைக் காலத்தின் போது கோல்டு உறுப்பினர்களுக்கு இனி சர்ஜ் கட்டணங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட மாட்டாது. எனவே பணம் செலுத்தும் கோல்டு சந்தாதாரர்கள் கூட இனி மழை பெய்யும்போது உணவு விநியோகத்துக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். நிறுவனம் இந்த மாற்றத்தைப் பற்றி செயலியில் அறிவிப்பு மூலம் பயனர்களுக்குத் தெரிவித்துள்ளது. அதில், “மே 16 முதல், மழையின்போது சர்ஜ் கட்டண விலக்கு உங்கள் கோல்டு சலுகைகளின் ஒரு பகுதியாக இருக்காது” என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், சர்ஜ் கட்டணத்தின் சரியான தொகையை ஜொமோட்டோ…
புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதி பேலா எம்.திரிவேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன்மூலம், உச்ச நீதிமன்றத்தின் 75 ஆண்டு கால வரலாற்றில் பதவியை ராஜினாமா செய்த 7-வது பெண் நீதிபதி ஆகிறார். ஆகஸ்ட் 31, 2021 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக பேலா எம்.திரிவேதி பதவியேற்றார். அவருடன் மூன்று பெண்கள் உட்பட 9 புதிய நீதிபதிகள் பதவியேற்றனர். உச்ச நீதிமன்றத்தின் 11-வது பெண் நீதிபதியான அவர், மூன்றரை ஆண்டுகள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். 1995-இல் குஜராத்தில் விசாரணை நீதிமன்ற நீதிபதியாக பணிபுரியத் தொடங்கிய பேலா எம்.திரிவேதி, அதில் இருந்து படிப்படியாக உயர்வு பெற்று பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்ட அரிய பெருமையை பெற்றவர். உச்ச நீதிமன்றத்தின் பல முக்கிய தீர்ப்புகளில் பேலா எம்.திரிவேதி ஒரு பகுதியாக இருந்துள்ளார். ஜூன் 10, 1960 அன்று குஜராத்தில் உள்ள படானில்…
பிளஸ் டூ முடித்த மாணவர்கள், இளநிலை சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். பி.ஏ. டூரிஸம் அண்டு டிராவல் மேனேஜ் மென்ட் ஊட்டி அரசு கல்லூரியில் பயிற்றுவிக்கப்படுகிறது. உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறையாகவும், 10ல் ஒரு வேலை வாய்ப்பை உருவாக்கும் பிரிவாகவும் திகழ்கிறது சுற்றுலாத் துறை. இந்தத் துறைத் தொடர்பான சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை பட்டப் படிப்புக்கு நாளுக்கு நாள் முக்கியத்துவம் அதிகமாகி வருகிறது. மேலாண்மை சார்ந்த கல்வி, உலகச் சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கிய பாடத்திட்டம், படிக்கும் போதே சுற்றுலா சார்ந்த நிறுவனங்களில் பயிற்சி, படித்து முடித்த உடன் வேலை எனப் பல சிறப்புகளைக் கொண்டு இருக்கும் சுற்றுலா படிப்புகள் உலக அளவில் அநேக மாணவர்களால் விரும்பி தேர்ந்தெடுக்கப்படும் படிப்பாக உள்ளது. சுற்றுலா சார்ந்த பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை நிறுவிச் சிறப்பாகச் செயல்பட்டு, வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து வருகின்றன. ஆனாலும்,…
ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனைகள் இந்த நாட்களில் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாக உள்ளன. ஏன்? ஏனெனில் இந்த எளிய மற்றும் ஈர்க்கக்கூடிய சோதனைகள் ஒரு நபரின் உள்ளார்ந்த உணர்வுகளையும் பண்புகளையும் ஒரு சில நிமிடங்களில் வெளிப்படுத்துவதாகக் கூறுகின்றன.எப்படி? சரி, இவை உளவியலை அடிப்படையாகக் கொண்ட விசித்திரமான படங்கள் மற்றும் அவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகள் உள்ளன. முதலில் ஒரு நபரின் கவனத்தை ஈர்ப்பதைப் பொறுத்து, இந்த படங்கள் ஒரு நபரை டிகோட் செய்வதாகக் கூறுகின்றன.உதாரணமாக, இந்த குறிப்பிட்ட படத்தில் இரண்டு விலங்குகள் உள்ளன- ஒரு முயல் மற்றும் கழுகு. படத்தில் ஒரு நபரின் கவனத்தை முதலில் பிடிப்பதை அடிப்படையாகக் கொண்டு, ஒரு நபரின் வாழ்க்கையில் ஆழ்ந்த பாதுகாப்பின்மையைக் கூறுவதாகக் கூறுகிறது. சோதனை எடுக்க, கண்களை மூடிக்கொண்டு ஓய்வெடுக்க ஆழ்ந்த மூச்சு விடுங்கள். பின்னர், மேலே உள்ள படத்தைப் பார்த்து, நீங்கள் முதலில் பார்த்ததைக் கவனியுங்கள். இப்போது, அதன்…
கோவிட் -19 மீண்டும் ஆசியாவில் தலைப்புச் செய்திகளை உருவாக்கி வருகிறது, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை நோய்த்தொற்றுகள், மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் வைரஸ் செயல்பாடு ஆகியவற்றில் கூர்மையான உயர்வைக் கண்டன, வெப்பமான மாதங்களில் இந்த நோய் மெதுவாக இருக்கும் என்ற அனுமானங்களை சவால் செய்கிறது என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளார்.ஹாங்காங்கில், அதிகாரிகள் அலாரத்தை ஒலிக்கின்றனர். “வைரஸின் செயல்பாடு மிகவும் அதிகமாக உள்ளது” என்று சுகாதார பாதுகாப்பு மையத்தில் தொற்று நோய் கிளையின் தலைவர் ஆல்பர்ட் ஆ கூறினார். ஒரு வருடத்தில் நகரம் அதன் மிக உயர்ந்த சதவீத கோவ்-நேர்மறை சுவாச மாதிரிகளை பதிவு செய்தது, மேலும் இறப்புகள் உள்ளிட்ட கடுமையான வழக்குகளும் மே 3 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 31 ஆம் ஆண்டாக உயர்ந்தன.சமூக பரவலின் நம்பகமான குறிகாட்டியான கழிவுநீர் கண்காணிப்பு, உயர்ந்த வைரஸ் சுமைகளைக் காட்டுகிறது, கொரோனவைரஸ் 7 மில்லியனுக்கும் அதிகமான நகரத்தில் பரவலாக புழக்கத்தில் உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.இதற்கிடையில்,…
ராய்பூர்: சத்தீஸ்கரிஸ் நக்சல்களின் பாதிப்புக்குள்ளான மன்பூர்- மொஹ்லா- அம்பாகர் – சவுகி மாவட்டத்தில் எளிதில் செல்லமுடியாத மலைகள் மற்றும் அடர்ந்த காடுகளில் இருக்கும் 17 கிராமங்களுக்கு முதல் முறையாக மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முக்கியமந்திரி மஜ்ரதோலா விக்யுதிகரன் யோஜனா-வின் கீழ், ரூ.3 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த மின்சார வசதிகள் மூலமாக 540 குடும்பங்கள் பயன்பெற உள்ளன. கடினமான நிலப்பரப்பு, நக்சல் பாதிப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், இந்தப் பகுதிகளுக்கு மின்சாரம் கொண்டு செல்வது பெரும் சவால் நிறைந்த பணியாகவே இருந்தது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியது: “இந்த கிராமங்களில் சூரியசக்தி பேனல்கள் மூலம் மின்சாரம் கிடைத்து வந்தது. ஆனால், அதில் பேனல் பராமரிப்பு பணி அதிகம் இருந்தன. பல கிராமங்களில் சூரிய சக்தி பேனல்கள் திருடப்பட்டன. இதனால் குழந்தைகள் மண்ணெண்ணெய் விளக்கொளியில் படிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இப்போது மின்சார வசதி கிடைத்ததை கிராம மக்கள் கொண்டாடி வரவேற்றனர். பல…
மதுரை: “இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பாஜக கூட்டணியில்தான் உள்ளனர். பாஜகவுடன் கூட்டணி அமைப்பதும், அமைக்காததும் தமிழக வெற்றிக் கழகம் தலைவரின் விருப்பம்” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “பாஜகவுடன் கூட்டணி அமைப்பதும், அமைக்காததும் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவரின் விருப்பம். தமிழகத்தில் மக்களுக்கு எதிரான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அனைவரும் ஓரணியில் வந்தால் இதை நிறைவேற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனால், கட்சித் தலைவர்கள் நாட்டு மக்களின் நலன் கருதி ஓரணியில் திரள முடிவெடுக்க வேண்டும். இதை தவிர்த்து கட்சித் தலைவர்கள் அவரவர்கள் எடுக்கும் முடிவு குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தபோது தன்னை…
