Author: admin

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்) நடத்தியதற்கு ஆதாரம் ஏதும் இல்லை, அதை யாரும் பார்க்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி சரண்ஜித் சிங் சன்னி கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு பாஜக கடும் எதிர்வினை ஆற்றியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரான சரண்ஜித் சிங் சன்னி பங்கேற்றார். அப்போது பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்து 10 நாட்களான நிலையில் பாகிஸ்தானியர்களின் விசாக்களை ரத்து செய்வது, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வது மாதிரியான நடவடிக்கை அர்த்தமற்றது என அவர் கூறியுள்ளார். “பஹல்காம் தாக்குதல் நடந்து 10 நாட்கள் ஆகிறது. அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொள்ளும் பதிலடியை பார்க்க ஒட்டுமொத்த தேசமும் காத்துக் கொண்டுள்ளது. 56 இன்ச் மார்பு எப்போது செயலில் இருக்கும் என மக்கள்…

Read More

இயக்குநர் மணிரத்னம் படத்தை மட்டும் சரியாக முடித்துக் கொடுப்பது ஏன் என்று நடிகர் சிம்பு பேட்டியொன்றில் பேசியிருக்கிறார். மணிரத்னம் படத்தை மட்டும் சரியாக முடித்துக் கொடுத்துவிடுவார் சிம்பு என்று திரையுலக வட்டாரத்தில் ஒரு பேச்சு இருக்கிறது. இதர இயக்குநர்களின் படங்களுக்கு சரியான நேரத்துக்கு வரமாட்டார் என்று சொல்வார்கள். இந்தப் பேச்சுகளுக்கு பேட்டியொன்றில் பதிலளித்துள்ளார் சிம்பு. அதில் சிம்பு பேசும்போது, “மணி சார் படம் என்றால் சரியாக போய்விடுகிறீர்கள், அவர் மீது பயமா, அவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா என்றெல்லாம் கேட்கிறார்கள். அவர் மீது பயமெல்லாம் இல்லை. எனக்கு அவரை அவ்வளவு பிடிக்கும். அவருடைய படப்பிடிப்புக்கு ஒரு நாள் கூட தாமதமாகச் சென்றதில்லை. சில நாட்கள் அவருக்கும் முன்பே சென்றிருக்கிறேன். அதற்குக் காரணம் என்னவென்றால், நான் ஒரு நடிகன். ஒரு தயாரிப்பாளர், இயக்குநரை நம்பி நடிக்கப் போகிறோம் என்றால், சொன்ன நேரத்தில் படத்தை எடுக்க வேண்டும். இயக்குநர் சரியான நேரத்துக்கு வந்தால் மட்டுமே நடிகர்கள்…

Read More

சென்னை: தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் காவலரை தாக்கிய 3 இளைஞர்களை எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் கைது செய்தனர். தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை பொதுமக்களிடம் 3 இளைஞர்கள் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதைக் கண்ட ஆர்பிஎஃப் காவலர், அங்கு சென்று அவர்களை விலக்கி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், ஆர்பிஎஃப் காவலரை தாக்கினர். பிறகு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து, ஆர்பிஎஃப் அலுவலகத்துக்கு அவர் தகவல் தெரிவித்தார். இதைடுத்து அவர்களை பிடிக்க சென்னை கடற்கரை – தாம்பரம் இடையில் உள்ள ரயில்வே காவல் நிலையத்தில் தகவல் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில், 3 இளைஞர்கள் எழும்பூர் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிவது பற்றி எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில், எழும்பூர் ஆர்பிஎஃப் ஆய்வாளர் கே.பி.செபாஸ்டின், மாம்பலம் காவல் ஆய்வாளர் சிவநேசன் தலைமையில் ஆர்பிஎப் உதவி ஆய்வாளர்…

Read More

ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது மிகப்பெரியது, ஆனால் ஒரு பெண் செல்ல வேண்டிய மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று. உழைப்பு வலி போதுமானதாக இல்லாவிட்டால், பெண்கள், பெற்றெடுத்த பிறகு, பிந்தைய கர்ப்ப எடை, ஏற்ற இறக்கமான ஹார்மோன்கள், முடி வீழ்ச்சி, மனநிலை ஊசலாட்டம், தூக்கமில்லாத இரவுகள் மற்றும் பலவற்றால் பாதிக்கப்படுகின்றனர். பல முறை, பெண்களும் பிந்தைய பார்ட்டம் மனச்சோர்வால் பாதிக்கப்படுகின்றனர், இது அவர்களின் சொந்த உடலைப் பற்றி பாதுகாப்பற்றதாக உணர வைக்கிறது, குறிப்பாக அவர்கள் ஒரு ‘மம்மி பூச்’ வைத்திருந்தால், அது ஒரு குழந்தையைப் பெற்ற பிறகு வயிற்றைக் கொண்டிருக்கும். உதவக்கூடிய சில மருத்துவர் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சிகள் இங்கே உள்ளன, இருப்பினும் உங்கள் உடலைத் தள்ளாமல் இருப்பது சரி, பெற்றெடுத்த பிறகு உங்களுக்கு தேவையான எல்லா நேரங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள் ..

Read More

உலக அளவில் பணக்கார நடிகர்களின் பட்டியலில் நடிகர் ஷாருக்கான் நான்காவது இடம் பிடித்துள்ளார். எஸ்கொயர் இதழ் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு 1.49 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் 1.19 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் தி ராக் டுவைன் ஜான்சன், மூன்றாம் இடத்தில் 891 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் டாம் க்ரூஸும் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக ஷாருக்கான் 876.5 மில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் நான்காம் இடத்தில் உள்ளார். ஜார்ஜ் க்ளூனி 742.8 மில்லியன் டாலர்களுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். 2025 ஆம் ஆண்டின் முதல் 10 பணக்கார நடிகர்களின் பட்டியலில் ராபர்ட் டி நீரோ, ஜாக் நிக்கல்சன் மற்றும் ஜாக்கி சான் போன்ற பிற ஜாம்பவான்களும் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஷாருக்கான் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அவர் நடித்த ’பதான்’, ‘ஜவான்’ இரண்டு…

Read More

சென்னை: “ஜூன்.1-ல் மதுரையில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்படும், அமலாக்கத் துறை போன்ற அமைப்புகளை அரசியல் பழிவாங்கலுக்குப் பயன்படுத்தும் ஒன்றிய பாஜக அரசின் அதிகார அத்துமீறலை மக்கள் மன்றத்திலும் – சட்டத்தின் துணைக் கொண்டும் திமுக எதிர்கொள்ளும்” உள்ளிட்ட 4 தீர்மானங்கள் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. தேர்தல் மற்றும் கட்சிப் பணிகள் குறித்து ஆலோசிப்பதற்காக இன்று (மே.3) காலை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், முற்போக்கான சிந்தனைகளுடன் கடமையாற்றிய கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் விவரம் வருமாறு: தீர்மானம்: 1 – முதல்வருக்கு பாராட்டு – தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி – ஒன்றிய பா.ஜ.க. அரசிடம்…

Read More

மொழி நுட்பத்தில் புத்தொழில் நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் ஸ்டார்டப்-டிஎன் அமைப்பும் தமிழுக்கு புதிய படைப்புகளை மொழி நுட்பத்தில் வழங்க வேண்டும் என்ற நோக்கில் திரள், வாணி, அக்ரிசக்தி ஆகிய நிறுவனங்களும் இணைந்து தமிழி நிரலாக்கப் போட்டியை அறிவித்தன. மூன்று மாதங்களாக நடந்து வந்த இப்போட்டி நேற்று இறுதிச் சுற்றுடன் நிறைவு பெற்றது. இந்நிகழ்வு பற்றி இணையவழி சிறப்பான சேவைகளை வழங்கி வரும் வாணி பிழைதிருத்திச் செயலியின் நிறுவனர் ‘நீச்சல்காரன்’ ராஜா இந்து தமிழ் திசையிடம் தெரிவித்தபோது: “மலேசியா, ஜப்பான், கர்நாடக, ஆந்திரா உட்பட பல உலகின் பல பகுதிகளில் இருந்து 142 அணிகள் விண்ணப்பித்திருந்தனர். உணர்ச்சிகளையும் மூல மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் தீர்வை உருவாக்கிய திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதல் பரிசையும் ஜெம்மா மொழி மாதிரியை தமிழ் நடைக்கு மேலும் ஒத்தியைவு செய்த கோவை காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் இரண்டாம் பரிசையும்…

Read More

பெங்களூரு: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு – சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 10 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 3 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெறும் பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பலப்படுத்திக் கொள்ளும். 4 அரை சதங்களுடன் 443 ரன்கள் குவித்துள்ள விராட் கோலி மீண்டும் ஒரு முறை வெற்றிக்கான பங்களிப்பை வழங்குவதில் தீவிரம் காட்டக்கூடும். கடந்த 3 ஆட்டங்களில் 2 அரை சதங்கள் அடித்துள்ள தேவ்தத் படிக்கல், டெல்லி அணிக்கு எதிரான மந்தமான ஆடுகளத்தில் 73 ரன்கள் விளாசிய கிருணல் பாண்டியா ஆகியோரும் இருந்தும் சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். அதேவேளையில் ரஜத்…

Read More

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் அதிகார நந்தி, 63 நாயன்மார்கள் உற்சவம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். செங்கல்பட்டு வமாட்டம், திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோயில் 1,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலாகும். இந்த கோயில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வரால் பாடல் பெற்றது. இந்த கோயில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 11 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை விழா கடந்த மே 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில், விழாவின் 3-ம் நாளான இன்று காலை மே 3-ம் தேதி அதிகார நந்தி மற்றும் 63 நாயன்மார்களின் உற்சவம் நடைபெற்றது. இதில், சிறப்பு மலர் அலங்காரத்தில் அதிகார நந்தியின் மீது வேதகிரீஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுவாமி, அம்பாளுடன் விநாயகப் பெருமான், முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் மற்றும்…

Read More

துல்கர் சல்மான் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடிக்கவுள்ளார். நஹாஸ் ஹிதாயத் இயக்கும் புதிய படத்தின் நாயகனாக துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் மும்முரமாக தொடங்க இருக்கிறது. இதனை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வேஃபாரர் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார் துல்கர் சல்மான். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் மிஷ்கின். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் ஆண்டனி வர்கீஸும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில், அபூபக்கர் மற்றும் பிலால் மொய்தூ ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷஹாபாஸ் ரஷீத் எழுதியுள்ளனர். ’ஐ அம் கேம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. தற்போது நடிகர்கள் ஒப்பந்தம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒளிப்பதிவாளராக ஜிம்ஷி காலித், இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய், எடிட்டராக சமன் சாக்கோ ஆகியோர் பணிபுரிய இருக்கிறார்கள்.

Read More