Author: admin

ஆசிய நாடுகளில் கரோனா புதிய அலை பரவிவரும் நிலையில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2019-ல் சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் உலகெங்கும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த பாதிப்பு சீரடைய பல ஆண்டுகள் ஆனது. தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு அதனை அரசுகள் கட்டுப்படுத்தின. இந்நிலையில் ஆசிய நாடுகளில் தற்போது மீண்டும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக மக்கள்தொகை அடர்த்தி கொண்ட ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. ஹாங்காங்கில் சளி மாதிரிகள் பரிசோதனையில் கரோனா பாசிட்டிவ் விகிதம் சமீபத்தில் ஒரு வருடத்தில் மிக அதிக அளவை எட்டியது. மே முதல் வாரத்தில் இறப்புகள் உட்பட கடும் நோய் பாதிப்பு ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 31 ஆக உயர்ந்துள்ளது. ஹாங்காங்கில் கழிவுநீரில் காணப்படும் வைரஸ் அளவு, கரோனா தொடர்பான மருத்துவ ஆலோசனை, மருத்துவமனையில் சேர்க்கப்படுதல்…

Read More

ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் இறந்த 6 தீவிரவாதிகளில் 2 பேர் பெரிய தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் கடந்த 48 மணிநேரத்தில் 6 தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்காக நிகழ்த்தப்பட்ட 2 ஆபரேஷன்கள் குறித்து காஷ்மீர் போலீஸ் ஐஜி வி.கே. பேர்டி, ராணுவ மேஜர் ஜெனரல் தனஞ்செய் ஜோஷி ஆகியோர் காஷ்மீரின் அவந்திபோரா நகரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது போலீஸ் ஐஜி வி.கே. பேர்டி கூறியதாவது: ஜம்மு – காஷ்மீரின் கேலர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், 13-ம் தேதி கேலர் பகுதியை எங்களின் படைகள் சுற்றி வளைத்த போது, தீவிரவாதிகளின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவர்கள் ராணுவ படையினர் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு நாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினோம். இதில், தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தினோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். மேஜர் ஜெனரல் தனஞ்செய் ஜோஷி கூறியதாவது: எல்லை கிராமமான டிரால் பகுதியில் 2-வது…

Read More

சென்னை: தமிழகத்​தில் 10-ம் வகுப்பு (எஸ்​எஸ்​எல்​சி) பொதுத் தேர்வு எழு​திய 8.71 லட்​சம் மாணவர்​களில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்​துள்​ளனர். வழக்​கம்​போல இந்த ஆண்​டும் மாணவி​களே தேர்ச்​சி​யில் முன்​னிலை பெற்​றுள்​ளனர். 1,867 அரசுப் பள்​ளி​கள் உட்பட மொத்​தம் 4,917 பள்​ளி​கள் 100 சதவீத தேர்ச்சி பெற்​றுள்​ளன. தமிழக பள்​ளிக்​கல்வி பாடத் திட்​டத்​தில் 10, 11, 12-ம் வகுப்​பு​களுக்கு ஆண்​டு​தோறும் பொதுத் தேர்வு நடத்​தப்​படு​கிறது. இந்த ஆண்​டுக்​கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழகம் முழு​வதும் 4,113 மையங்​களில் கடந்த மார்ச் 28 முதல் ஏப்​ரல் 15-ம் தேதி வரை நடை​பெற்​றது. தேர்வு எழுத 8.87 லட்​சம் மாணவர்​கள் பதிவு செய்​தனர். 4.36 லட்​சம் மாணவர்​கள், 4.35 லட்​சம் மாணவி​கள் என மொத்​தம் 8.71 லட்​சம் பேர் தேர்​வில் பங்​கேற்​றனர். இடைநிற்​றல் உள்​ளிட்ட காரணங்​களால் 15,652 பேர் பங்​கேற்​க​வில்​லை. 88 முகாம்​களில் விடைத்​தாள் திருத்​தும் பணி ஏப்​ரல் 21-ல் தொடங்கி 30-ம்…

Read More

புதுடெல்லி: ​பாகிஸ்​தானுக்கு எதி​ராக இந்​தியா மேற்​கொண்ட ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்​போது போலாரி தளத்​தில் நிறுத்​தப்​பட்​டிருந்த கண்​காணிப்பு விமானம் அழிக்​கப்​பட்​டதை பாகிஸ்​தானின் முன்​னாள் ஏர் மார்​ஷல் மசூத் அக்​தர் உறு​திப்​படுத்​தி​யுள்​ளார். பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் நடத்திய தாக்​குதலில் 26 பேர் உயி​ரிழந்​தனர். இந்த சம்​பவத்​தின் பின்​னணி​யில் பாகிஸ்​தான் இருப்​பது தெரிய​வந்​ததையடுத்து அந்த நாட்​டின் மீது ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கையை இந்​தியா தொடங்​கியது. அதன் பின்​னர் புரிந்​துணர்வு அடிப்​படை​யில் இந்​தி​யா-​பாகிஸ்​தான் போர் நிறுத்​தப்​பட்​டது. ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்​போது எந்​த​வித பாதிப்​பும் இல்லை என்று பாகிஸ்​தான் தொடர்ச்​சி​யாக கூறி வந்​தா​லும் செயற்​கைக்​கோள் எடுத்த படங்​கள் உண்மை நிலையை எடுத்​துக்​காட்​டு​வ​தாக இருந்​தன. இந்த நிலை​யில், இந்​தி​யா​வின் ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்​போது பாகிஸ்​தானுக்கு சொந்​த​மான போலாரி தளத்​தில் நிறுத்தி வைக்​கப்​பட்​டிருந்த வான்​வழி எச்​சரிக்கை மற்​றும் கட்​டுப்​பாட்டு அமைப்பு (ஏடபிள்​யூஏசிஎஸ்) விமானம் மே 9 மற்​றும் 10-ம் தேதி இரவு நடத்​தப்​பட்ட தாக்​குதலில் அழிக்​கப்​பட்​டதை ஓய்​வு​பெற்ற பாகிஸ்​தான் ஏர் மார்​ஷல் மசூத்…

Read More

இந்தியாவில் இல்லாமல் அமெரிக்காவில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கினால் அதன் விலை 3,000 அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் என்று இத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது, தற்போதைய விலையான 1,000 அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்குடன் பேசியதாகவும், இந்தியாவில் ஆப்பிளின் விரிவாக்கத்தை கட்டுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும் கூறியதைத் தொடர்ந்து இந்த எதிர்வினைகள் எழுந்துள்ளன. அமெரிக்க அதிபரின் கருத்துக்கு பதிலளித்த மராத்தா வர்த்தகம், தொழில்கள், மற்றும் வேளாண்மை சபையின் (எம்சிசிஐஏ) இயக்குநர் ஜெனரல் பிரசாந்த் கிர்பேன் கூறியதாவது: இந்தியா, சினா, வியட்நாமை தவிர்த்து அமெரிக்காவில் ஐபோன்களை தயாரிக்க முடிவு செய்தால் அதன் விலை 3,000 டாலர்களாக அதிகரிக்கும். இது, இந்தியாவில் தயாரிக்கும் செலவான 1,000 டாலருடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகம். அமெரிக்க நுகர்வோர்கள் ஐபோனை 3,000 டாலர்களை கொடுத்து வாங்க தயாராக இருப்பார்களா?…

Read More

10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் பெற விரும்பும் மாணவர்கள் மே 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்; 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவர்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்கள் வழியாகவும் மே 20 முதல் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணமாக அனைத்து பாடங்களுக்கும் தலா ரூ.275 செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பெற்றதும் மாணவர்கள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். இதுதவிர 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) மே 19-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமும் அவரவர் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். 10-ம்…

Read More

காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து சர்ச்சைக்குரிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரும், துணை பிரதமருமான இஷாக் தர் விருப்பம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் செனட் உறுப்பினர்களிடையே உரையாற்றிய இஷாக் தர் இதுகுறித்து மேலும் கூறுகையில், “ இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து பிரச்சினைகளையும் பேசி தீர்க்க அரசியல் செயல்முறை அவசியம். பாகிஸ்தானுக்கு வரும் தண்ணீரை தடுத்து நிறுத்தும் வகையில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. சிந்து நதி நீரை தடுக்கும் எந்தவொரு முயற்சியும் போர் நடவடிக்கையாகவே கருதப்படும்” என்றார். இதனிடையே பாகிஸ்தான் பிரதமர் ஷொபஸ் ஷெரீபும் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்தைக்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார். அதேநேரம், பாகிஸ்தானுடனான எந்தவொரு பேச்சுவார்தையும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்ததாக மட்டுமே இருக்கும். ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகளின் பட்டியல்…

Read More

டாக்டர் ஜாக்குலின் ஓல்ட்ஸ் மற்றும் டாக்டர் ரிச்சர்ட் ஸ்வார்ட்ஸ் ஆகியோர் சி.என்.பி.சியிடம், “வாடிக்கையாளர்களிடமிருந்து நாங்கள் நிறைய கேட்கிறோம், ‘நீங்கள் என்னை நடத்துவதை விட மற்ற அனைவரையும் நீங்கள் சிறப்பாக நடத்துகிறீர்கள்!’ பெரும்பாலும், அவர்களின் பங்குதாரர், ‘நான் என் உண்மையான காதல் என்று பொருள்.’மக்கள் ஒருவருக்கொருவர் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தொடங்கும் போது இந்த வகையான பதற்றம் வழக்கமாக உருவாகிறது என்று அவர்கள் மேலும் பகிர்ந்து கொண்டனர். உலகில், அவர்கள் கண்ணியமானவர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள், அந்நியர்களுடன் கூட அக்கறையுள்ளவர்கள். ஆனால் வீட்டில், அதே முயற்சியும் கருணையும் மறைந்துவிடும்.இங்கே உண்மை என்னவென்றால்: கனிவாகவும் சிந்தனையுடனும் இருப்பதை நிறுத்துவதற்கான ஒரு தவிர்க்கவும் “நம்பகத்தன்மையை” பயன்படுத்துவது ஒரு உறவை மிகவும் உண்மையானதாக மாற்றாது – இது மிகவும் புண்படுத்தும். உங்கள் உண்மையான சுயமாக இருப்பது என்பது நீங்கள் மிகவும் விரும்பும் நபருடன் கவனக்குறைவாக இருப்பதைக் குறிக்காது.

Read More

சென்னை: டாஸ்​மாக்​கில் ரூ.1,000 கோடி முறை​கேடு நடந்​துள்​ள​தாக அமலாக்​கத் துறை குற்​றம்​சாட்​டிய நிலை​யில், டாஸ்​மாக் நிர்​வாக இயக்​குநரின் வீடு உட்பட சென்​னை​யில் 10-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் அமலாக்​கத் துறை​யினர் நேற்று சோதனை நடத்​தினர். அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அவரை அழைத்து சென்றும் தீவிர விசாரணை நடத்தினர். அவரது வீடு அருகே கிழித்து வீசப்பட்டநிலை​யில் கிடந்த சில ஆவணங்​களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தமிழக அரசின் டாஸ்​மாக் நிறு​வனத்​துக்கு தனி​யார் நிறு​வனங்​களிடம் இருந்து மது​பானங்​கள் கொள்​முதல் செய்​யப்​படு​வ​தில் பல்​வேறு முறை​கேடு​கள் நடப்​ப​தாக​வும், இதில் வரி ஏய்ப்​பு, சட்​ட​விரோத பண பரிவர்த்​தனை நடந்​திருப்​ப​தாக​வும் அமலாக்​கத் துறைக்கு புகார்​கள் சென்​றன. இதன் அடிப்​படை​யில், சென்னை எழும்​பூரில் உள்ள டாஸ்​மாக் நிறுவன தலைமை அலு​வல​கம், அம்​பத்​தூர் தொழிற்​பேட்​டை​யில் உள்ள டாஸ்​மாக் குடோன், அப்​போது அமைச்​ச​ராக இருந்த செந்​தில் பாலாஜி​யின் நண்​பர் வீடு, அலு​வல​கங்​கள், திமுக எம்​.பி.ஜெகத்​ரட்​சக​னின் அக்​கார்டு மது​பான உற்​பத்தி நிறு​வனம், எஸ்​என்​ஜே,கால்​ஸ், எம்​ஜிஎம் உள்​ளிட்ட மது​பான உற்​பத்தி…

Read More

AI கலைஞர் ஜே பிராபகரன் கோலிவுட் ராயல்டியை மெட் காலாவின் சின்னமான நீல கம்பளத்தை வீழ்த்தி, தமிழ் கலாச்சாரத்தை எதிர்கால பாணியுடன் கலக்கிறார்.

Read More