ஆசிய நாடுகளில் கரோனா புதிய அலை பரவிவரும் நிலையில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2019-ல் சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் உலகெங்கும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த பாதிப்பு சீரடைய பல ஆண்டுகள் ஆனது. தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு அதனை அரசுகள் கட்டுப்படுத்தின. இந்நிலையில் ஆசிய நாடுகளில் தற்போது மீண்டும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக மக்கள்தொகை அடர்த்தி கொண்ட ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. ஹாங்காங்கில் சளி மாதிரிகள் பரிசோதனையில் கரோனா பாசிட்டிவ் விகிதம் சமீபத்தில் ஒரு வருடத்தில் மிக அதிக அளவை எட்டியது. மே முதல் வாரத்தில் இறப்புகள் உட்பட கடும் நோய் பாதிப்பு ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 31 ஆக உயர்ந்துள்ளது. ஹாங்காங்கில் கழிவுநீரில் காணப்படும் வைரஸ் அளவு, கரோனா தொடர்பான மருத்துவ ஆலோசனை, மருத்துவமனையில் சேர்க்கப்படுதல்…
Author: admin
ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் இறந்த 6 தீவிரவாதிகளில் 2 பேர் பெரிய தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் கடந்த 48 மணிநேரத்தில் 6 தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்காக நிகழ்த்தப்பட்ட 2 ஆபரேஷன்கள் குறித்து காஷ்மீர் போலீஸ் ஐஜி வி.கே. பேர்டி, ராணுவ மேஜர் ஜெனரல் தனஞ்செய் ஜோஷி ஆகியோர் காஷ்மீரின் அவந்திபோரா நகரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது போலீஸ் ஐஜி வி.கே. பேர்டி கூறியதாவது: ஜம்மு – காஷ்மீரின் கேலர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், 13-ம் தேதி கேலர் பகுதியை எங்களின் படைகள் சுற்றி வளைத்த போது, தீவிரவாதிகளின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவர்கள் ராணுவ படையினர் மீது தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு நாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினோம். இதில், தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தினோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். மேஜர் ஜெனரல் தனஞ்செய் ஜோஷி கூறியதாவது: எல்லை கிராமமான டிரால் பகுதியில் 2-வது…
சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத் தேர்வு எழுதிய 8.71 லட்சம் மாணவர்களில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல இந்த ஆண்டும் மாணவிகளே தேர்ச்சியில் முன்னிலை பெற்றுள்ளனர். 1,867 அரசுப் பள்ளிகள் உட்பட மொத்தம் 4,917 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழகம் முழுவதும் 4,113 மையங்களில் கடந்த மார்ச் 28 முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு எழுத 8.87 லட்சம் மாணவர்கள் பதிவு செய்தனர். 4.36 லட்சம் மாணவர்கள், 4.35 லட்சம் மாணவிகள் என மொத்தம் 8.71 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். இடைநிற்றல் உள்ளிட்ட காரணங்களால் 15,652 பேர் பங்கேற்கவில்லை. 88 முகாம்களில் விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 21-ல் தொடங்கி 30-ம்…
புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது போலாரி தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு விமானம் அழிக்கப்பட்டதை பாகிஸ்தானின் முன்னாள் ஏர் மார்ஷல் மசூத் அக்தர் உறுதிப்படுத்தியுள்ளார். பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது தெரியவந்ததையடுத்து அந்த நாட்டின் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. அதன் பின்னர் புரிந்துணர்வு அடிப்படையில் இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது எந்தவித பாதிப்பும் இல்லை என்று பாகிஸ்தான் தொடர்ச்சியாக கூறி வந்தாலும் செயற்கைக்கோள் எடுத்த படங்கள் உண்மை நிலையை எடுத்துக்காட்டுவதாக இருந்தன. இந்த நிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு சொந்தமான போலாரி தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு (ஏடபிள்யூஏசிஎஸ்) விமானம் மே 9 மற்றும் 10-ம் தேதி இரவு நடத்தப்பட்ட தாக்குதலில் அழிக்கப்பட்டதை ஓய்வுபெற்ற பாகிஸ்தான் ஏர் மார்ஷல் மசூத்…
இந்தியாவில் இல்லாமல் அமெரிக்காவில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கினால் அதன் விலை 3,000 அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் என்று இத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது, தற்போதைய விலையான 1,000 அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்குடன் பேசியதாகவும், இந்தியாவில் ஆப்பிளின் விரிவாக்கத்தை கட்டுப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும் கூறியதைத் தொடர்ந்து இந்த எதிர்வினைகள் எழுந்துள்ளன. அமெரிக்க அதிபரின் கருத்துக்கு பதிலளித்த மராத்தா வர்த்தகம், தொழில்கள், மற்றும் வேளாண்மை சபையின் (எம்சிசிஐஏ) இயக்குநர் ஜெனரல் பிரசாந்த் கிர்பேன் கூறியதாவது: இந்தியா, சினா, வியட்நாமை தவிர்த்து அமெரிக்காவில் ஐபோன்களை தயாரிக்க முடிவு செய்தால் அதன் விலை 3,000 டாலர்களாக அதிகரிக்கும். இது, இந்தியாவில் தயாரிக்கும் செலவான 1,000 டாலருடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிகம். அமெரிக்க நுகர்வோர்கள் ஐபோனை 3,000 டாலர்களை கொடுத்து வாங்க தயாராக இருப்பார்களா?…
10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் பெற விரும்பும் மாணவர்கள் மே 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்; 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவர்கள் படித்த பள்ளிகள் மூலமும், தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்கள் வழியாகவும் மே 20 முதல் 24-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணமாக அனைத்து பாடங்களுக்கும் தலா ரூ.275 செலுத்த வேண்டும். விடைத்தாள் நகல் பெற்றதும் மாணவர்கள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். இதுதவிர 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் தேர்வுத்துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) மே 19-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மூலமும் அவரவர் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். 10-ம்…
காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து சர்ச்சைக்குரிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரும், துணை பிரதமருமான இஷாக் தர் விருப்பம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் செனட் உறுப்பினர்களிடையே உரையாற்றிய இஷாக் தர் இதுகுறித்து மேலும் கூறுகையில், “ இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து பிரச்சினைகளையும் பேசி தீர்க்க அரசியல் செயல்முறை அவசியம். பாகிஸ்தானுக்கு வரும் தண்ணீரை தடுத்து நிறுத்தும் வகையில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. சிந்து நதி நீரை தடுக்கும் எந்தவொரு முயற்சியும் போர் நடவடிக்கையாகவே கருதப்படும்” என்றார். இதனிடையே பாகிஸ்தான் பிரதமர் ஷொபஸ் ஷெரீபும் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்தைக்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார். அதேநேரம், பாகிஸ்தானுடனான எந்தவொரு பேச்சுவார்தையும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்ததாக மட்டுமே இருக்கும். ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகளின் பட்டியல்…
டாக்டர் ஜாக்குலின் ஓல்ட்ஸ் மற்றும் டாக்டர் ரிச்சர்ட் ஸ்வார்ட்ஸ் ஆகியோர் சி.என்.பி.சியிடம், “வாடிக்கையாளர்களிடமிருந்து நாங்கள் நிறைய கேட்கிறோம், ‘நீங்கள் என்னை நடத்துவதை விட மற்ற அனைவரையும் நீங்கள் சிறப்பாக நடத்துகிறீர்கள்!’ பெரும்பாலும், அவர்களின் பங்குதாரர், ‘நான் என் உண்மையான காதல் என்று பொருள்.’மக்கள் ஒருவருக்கொருவர் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தொடங்கும் போது இந்த வகையான பதற்றம் வழக்கமாக உருவாகிறது என்று அவர்கள் மேலும் பகிர்ந்து கொண்டனர். உலகில், அவர்கள் கண்ணியமானவர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள், அந்நியர்களுடன் கூட அக்கறையுள்ளவர்கள். ஆனால் வீட்டில், அதே முயற்சியும் கருணையும் மறைந்துவிடும்.இங்கே உண்மை என்னவென்றால்: கனிவாகவும் சிந்தனையுடனும் இருப்பதை நிறுத்துவதற்கான ஒரு தவிர்க்கவும் “நம்பகத்தன்மையை” பயன்படுத்துவது ஒரு உறவை மிகவும் உண்மையானதாக மாற்றாது – இது மிகவும் புண்படுத்தும். உங்கள் உண்மையான சுயமாக இருப்பது என்பது நீங்கள் மிகவும் விரும்பும் நபருடன் கவனக்குறைவாக இருப்பதைக் குறிக்காது.
சென்னை: டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டிய நிலையில், டாஸ்மாக் நிர்வாக இயக்குநரின் வீடு உட்பட சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அவரை அழைத்து சென்றும் தீவிர விசாரணை நடத்தினர். அவரது வீடு அருகே கிழித்து வீசப்பட்டநிலையில் கிடந்த சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்துக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், இதில் வரி ஏய்ப்பு, சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்திருப்பதாகவும் அமலாக்கத் துறைக்கு புகார்கள் சென்றன. இதன் அடிப்படையில், சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் நிறுவன தலைமை அலுவலகம், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மாக் குடோன், அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் நண்பர் வீடு, அலுவலகங்கள், திமுக எம்.பி.ஜெகத்ரட்சகனின் அக்கார்டு மதுபான உற்பத்தி நிறுவனம், எஸ்என்ஜே,கால்ஸ், எம்ஜிஎம் உள்ளிட்ட மதுபான உற்பத்தி…
AI கலைஞர் ஜே பிராபகரன் கோலிவுட் ராயல்டியை மெட் காலாவின் சின்னமான நீல கம்பளத்தை வீழ்த்தி, தமிழ் கலாச்சாரத்தை எதிர்கால பாணியுடன் கலக்கிறார்.
