சென்னை: சுதந்திர போராட்ட தியாகிக்கு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்குவது குறித்து பரிசீலிக்குமாறு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அகில இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் சங்கத்தின் மாநில துணை தலைவர் வி.கே.செல்லம் தாக்கல் செய்த மனுவில், “இந்திய ராணுவத்தில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீட்டில் ஒரு சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. நானும் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவன். இந்நிலையில் எனக்கு தியாகிகளுக்கான இட ஒதுக்கீட்டில் வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்க கோரி அரசுக்கும், வீட்டு வசதி வாரிய தலைவருக்கும் மனு கொடுத்தேன். எனது மனு பரீசிலிக்கப்படவில்லை. இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் எனது மனுவை பரிசீலிக்குமாறு கடந்த 2021-ல், அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, வீட்டு வசதி வாரியத்துக்கு (தமிழ்நாடு வீட்டு வசதி…
Author: admin
நாள்பட்ட அழற்சி புற்றுநோய் வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இது செல்களை சேதப்படுத்துகிறது மற்றும் அசாதாரண வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. வீக்கத்தை எதிர்த்துப் போராட, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், கொட்டைகள், விதைகள், மீன் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற முழு, பதப்படுத்தப்படாத உணவுகளில் கவனம் செலுத்துங்கள். தொகுக்கப்பட்ட தின்பண்டங்கள், சர்க்கரை தானியங்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் துரித உணவு போன்ற தீவிர செயலாக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும், அவை சேர்க்கப்பட்ட சர்க்கரைகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் உப்பு-இவை அனைத்தும் வீக்கத்தை ஊக்குவிக்கின்றன மற்றும் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கின்றன. அழற்சி எதிர்ப்பு மூலிகைகள் மற்றும் மஞ்சள், இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை போன்ற மசாலாப் பொருட்கள் உட்பட உங்கள் கலங்களை மேலும் பாதுகாக்க முடியும்.
புதுடெல்லி: தரையிலிருந்து தரைக்கு பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைச் சோதனைக்கு பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இருநாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. பாகிஸ்தானின் இச்செயலை தேவையற்ற ஆத்திரமூட்டும் செயல் என்று இந்தியா கருதுகிறது. ஏப்.22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எல்லைக்கட்டுப்பாடு கோடு மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லைகளில் தினமும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் நடந்து வருகின்றன. பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானியர்களுக்கான விசா நிறுத்தம், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பணியாளர்களின் எண்ணிக்கைக் குறைப்பு, அட்டாரி எல்லை மூடல் போன்ற இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளைத் தொடர்ந்து பாகிஸ்தான் தனது பலத்தை காட்டும் விதமாக விமானப்படை வீரர்களுக்கு ஏவுகணைத் தாக்குதலுக்கான உத்தரவுகளை வெளியிட்டு வருகின்றன. இதுகுறித்து தகவல் அறிந்தவர்கள் கூறுகையில், “தரையிலிருந்து தரைக்கு பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைச்…
இசையமைப்பாளர் அனிருத்துக்கு காதல் கடிதம் ஒன்றை எழுதி பகிர்ந்துள்ளார் நடிகர் விஜய் தேவரகொண்டா. விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ படத்தின் ‘ஹிர்தயம் லுபாலா’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. விஜய் தேவரகொண்டா – அனிருத் கூட்டணி முதன்முறையாக இப்படத்தில் இணைந்துள்ளது. அனிருத்துடன் முதன்முறையாக இணைந்திருப்பதால், அவருக்கு ஒரு காதல் கடிதம் எழுதி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விஜய் தேவரகொண்டா. அதில், “நான் ’விஜபி’ மற்றும் ‘3’ பட நாட்களில் இருந்தே அனிருத்தின் பெரிய ரசிகன். யார் இவர், நான் எப்போதாவது நடிகனாகிவிட்டால், திரையில் வரும்போது இவருடைய இசை ஒலிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். 10 வருடங்களுக்கு பின்பு இப்போது எனது 13-வது படம் 28 நாட்களில் வெளியாகிறது. இது அனிருத் மற்றும் விஜய் தேவரகொண்டா கூட்டணியின் முதல் பாடம். நான் மனிதனாகவும், நடிகராகவும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். இன்றைக்கு ‘கிங்டம்’…
சென்னை: தமிழகத்தில் நாளை (மே 4) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மே 6-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 3) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 4ம் தேதி, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான…
நாம் அனைவரும் நீண்ட காலம் வாழ விரும்புகிறோம்; எங்கள் ஆசை வழக்கமாக அன்பிலிருந்து உருவாகிறது (உங்கள் குழந்தைகள் குடியேறியதைப் பார்த்து, பேரக்குழந்தைகள் செழித்தோங்குகிறார்கள், நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றால், பெரிய பேரக்குழந்தைகள் கூட!) இப்போது, கடந்த சில தசாப்தங்களாக மருத்துவ அறிவியல் நீண்ட ஆயுட்காலம் வழிவகுத்திருந்தாலும், 100 வயதை எட்டியவர்கள் இன்னும் ஒரு பெரியவர்கள் மட்டுமே, எனவே, உலகம் முழுவதிலுமிருந்து கவனத்தை ஈர்க்கிறார்கள். இப்போது, எத்தேல் கேடர்ஹாம் உலகின் மிகப் பழமையான பெண்ணாக மாறியுள்ளது, இந்த ஆண்டு 115 வயதைத் தொட்டது. ஆனால் அவள் என்ன நீண்ட ஆயுளுக்கு ரகசியம்? ஆழமாக தோண்டுவோம் …எத்தேல் கேட்டர்ஹாம்: கடிகாரத்தைத் திருப்புதல்எத்தேல் ஆகஸ்ட் 21, 1909 அன்று இங்கிலாந்தின் ஹாம்ப்ஷயரில் உள்ள ஷிப்டன் பெல்லிங்கரில் பிறந்தார். அவர் தனது இளமை பருவத்தில் இந்தியாவில் ஆயாவாக பணியாற்றினார், பின்னர் ஒரு பிரிட்டிஷ் இராணுவ மேஜரை மணந்தார். இங்கிலாந்துக்கு இடம் பெயர்வதற்கு முன்பு ஹாங்காங் மற்றும் ஜிப்ரால்டர் போன்ற…
புதுடெல்லி: பாகிஸ்தானில் இருந்து நேரடியாக அல்லது மறைமுகமாக என அனைத்துவித இறக்குமதிகளுக்கும் இந்தியா உடனடி தடைவிதித்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் இந்திய துறைமுகங்களிலும் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பின் படி, “மறுஉத்தரவு வரும் வரை பாகிஸ்தானில் உற்பத்தியாகும் பொருட்கள் அல்லது அங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு உடனடியாக அமலாகும் வகையில் தடைவிதிக்க ஏதுவாக வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் புதிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொதுநலனை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக். கப்பல்களுக்கும் தடை: அதேபோல், கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் பிறப்பித்துள்ள மற்றொரு உத்தரவில் பாகிஸ்தான் கொடியை தாங்கிய எந்தவொரு கப்பலும் இந்திய துறைமுகங்களுக்குள் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில், “இந்திய சொத்துக்கள், சரக்கு மற்றும் உள்கட்டமைப்பை பாதுகாக்கும் வகையில், வணிகக் கப்பல் சட்டம் 1958, பிரிவு 411-ன் கீழ் உடனடியாக அமலுக்கு வரும்படி இந்த…
சென்னை: தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பெரியார் பல்கலைக்கழகம் நடத்திய மாணவர் சேர்க்கை, கட்டணக் கொள்ளை ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்), பி.எஸ்.சி (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) ஆகிய புதிய பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை அறிவிக்கை வெளியிடப் பட்டிருக்கிறது. பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் இல்லாத பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை நடத்துவது மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கும் செயலாகும். இது கண்டிக்கத்தக்கது. இம்மெர்சிவ் தொழில்நுட்பம் சார்ந்த இரு பட்டப்படிப்புகளை நடத்த தனியார் நிறுவனங்களிடமிருந்து பெரியார் பல்கலைக்கழகம் கடந்த மாதம் விருப்பம் கோரியிருந்தது. அப்போதே இப்பாடப்பிரிவுகளை நடத்த பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் இல்லை என்பதை சுட்டிக்காட்டியிருந்த நான், இந்த சிக்கலில் தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவு…
இரத்த அழுத்தம் உங்கள் தமனிகளின் சுவர்களுக்கு எதிராக இரத்தத்தை பரப்பும் சக்தி. இது பாதரசத்தின் மில்லிமீட்டரில் அளவிடப்படுகிறது (மிமீ எச்ஜி) மற்றும் பொதுவாக இரண்டு எண்களாக வெளிப்படுத்தப்படுகிறது: சிஸ்டாலிக் அழுத்தம் (மேல் எண், இதயம் துடிக்கும் போது அழுத்தம்) மற்றும் டயஸ்டாலிக் அழுத்தம் (கீழ் எண், துடிப்புகளுக்கு இடையிலான அழுத்தம்). இரத்த அழுத்தம் பெரிதும் மாறுபடும், மேலும் உயர் இரத்த அழுத்தம் (உயர் இரத்த அழுத்தம்) அல்லது குறைந்த இரத்த அழுத்தம் (ஹைபோடென்ஷன்) என தன்னை முன்வைக்க முடியும். இரண்டு நிபந்தனைகளும் சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றாலும், குறைந்த பிபி ஒரு சிறிய வழக்கு பொதுவாக அதிக அக்கறை காட்டாது, இருப்பினும் அதிக பிபியால் பாதிக்கப்படுபவர்கள் எப்போதும் தங்கள் பிபி கண்காணிக்க வேண்டும்.ஆரோக்கியமான நபர்களில், இரத்த அழுத்தம் பொதுவாக 120/80 மிமீ எச்.ஜி.க்கு குறைவாக கருதப்படுகிறது, இருப்பினும் இது வயதுக்கு ஏற்ப மாறுபடும். ஹை பிபி இதய நோய்கள், பக்கவாதம் மற்றும்…
கன்னடம் பேசும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக பிரபல பாடகர் சோனு நிகம் மீது கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள், காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில் பெங்களூருவில் பாடகர் சோனு நிகமின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சோனு நிகம் மேடையில் பாடிக் கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் கன்னடத்தில் ஒரு பாடல் பாடும்படி கேட்டார். அப்போது பாடுவதை நிறுத்திவிட்டு பேசிய சோனு நிகம், “என்னுடைய வாழ்க்கையில், நான் பல மொழிகளில் பாடல்களைப் பாடியிருக்கிறேன். ஆனால், நான் பாடிய சிறந்த பாடல்கள் கன்னட மொழியில்தான். நான், உங்கள் ஊருக்கு வரும்போதெல்லாம், நிறைய அன்பைக் கொண்டுவருகிறேன். நாங்கள் பல இடங்களில் பல நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். கர்நாடகாவில் நாங்கள் நிகழ்ச்சியை நடத்தும்போதெல்லாம், உங்கள் மீது மிகுந்த மரியாதையுடன் வருகிறோம். நீங்கள் என்னை உங்கள் குடும்பத்தைப் போலவே நடத்தினீர்கள். ஆனால், என்னுடைய கரியர் அளவுக்கு வயது இல்லாத ஒரு பையன் கன்னடத்தில் பாடச் சொல்லி என்னை மிரட்டுவது எனக்குப்…
