Author: admin

Last Updated : 17 May, 2025 07:59 AM Published : 17 May 2025 07:59 AM Last Updated : 17 May 2025 07:59 AM இந்திய சினிமாவின் தந்தை என்றழைக்கப்படுபவர், தாதாசாகேப் பால்கே. இந்தியாவின் முதல் திரைப்படமாகக் கருதப்படும் ‘ராஜா ஹரிச்சந்திரா’வை 1913-ம் ஆண்டு இயக்கியவர். இவர் வாழ்க்கைக் கதையைத் தழுவி, ‘மேட் இன் இண்டியா’ என்ற தலைப்பில் படம் உருவாக இருப்பதாக இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, கடந்த 2023-ம் ஆண்டு அறிவித்திருந்தார். வருண் குப்தாவும் எஸ்.எஸ். கார்த்திகேயாவும் இதன் ஸ்கிரிப்ட் வேலைகளில் சில வருடங்களாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் தாதாசாகேப் பால்கேவாக ஜுனியர் என்டிஆர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆமிர்கான் நடிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கும் படமும் பால்கேவின் பயோபிக் என்று தகவல் வெளியாகியுள்ளது. சுதந்திரப் போராட்டப் பின்னணியில் உருவாகும் இதன் படப்பிடிப்பு, அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. ஒரே நேரத்தில் பால்கே-வின்…

Read More

சென்னை: தமிழகத்தில் 2026 தேர்தலில் காங்கிரஸ் கட்சியினருக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்கும் வகையில் கூட்டணி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சிகள் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸூம் ஆயத்த பணிகளை தொடங்கும் விதமாக அதன் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கடந்த 2 நாட்களாக சென்னையில் முகாமட்டு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அகில இந்திய செயலாளர் சூரஜ் ஹெக்டே, மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது “தமிழகத்தில், மாநில கட்சிகளின் முதுகில் மாறி மாறி சவாரி செய்யாமல், சொந்த காலில் நிற்க, கட்சியை வளர்க்க,…

Read More

பூஜ்: ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை நிறைவடையவில்லை. தற்காலிகமாகவே நிறுத்தி வைத்திருக்கிறோம். பாகிஸ்தானின் செயல்பாடுகளை பொறுத்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே 4 நாட்கள் அதிதீவிர போர் நடைபெற்றது. பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்று கடந்த 10-ம் தேதி சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது. பாகிஸ்தானுடனான போரின்போது குஜராத்தின் புஜ் நகரில் உள்ள விமான படைத் தளம் மிக முக்கிய பங்காற்றியது. அந்த விமான படைத் தளத்துக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சென்றார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 1965-ம் ஆண்டு போர், கடந்த 1971-ம் ஆண்டு போரின்போது புஜ் விமான படைத் தளம் மிக முக்கிய…

Read More

புதுடெல்லி: நெட்டிசன்கள் தகவல்களை தேடுவதற்கு முந்தைய காலத்தில் குரோம் இண்டர்நெட், மொசில்லா பயர்பாக்ஸை அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில், குரோம், கூகுள் அறிமுகம் செய்யப்பட்டதையடுத்து உலகின் தேடு பொறியில் இன்று வரை அந்த பிரவுசர்கள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆனால், சுந்தர்பிச்சையின் கூகுளின் ஆதிக்கம் விரைவில் முடிவுக்கு வரும் என்று தற்போது நெட்டிசன்கள் வட்டாரத்தில் பேசத் தொடங்கிவிட்டனர். அதற்கு காரணம் இந்தியர் ஒருவர் கூகுளுக்கு சவால் அளிக்கும் வகையில் தேடு பொறி என்ஜினை ஏஐ அடிப்படையில் உருவாக்கியுள்ளதே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. பெர்பிளக்சிட்டி படைப்பாற்றல் மிக்க ஏஐ நிறுவனம். இதன் நிறுவனர் இந்தியரான அர்விந்த் ஸ்ரீநிவாஸ். இவரது நிறுவனம், விரைவில் காமட் என்ற அதன் சொந்த பிரவுசரை வெளியிட உள்ளது. இது, கூகுளுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஏஐ அடிப்படையில் இயங்கும் காமட், ஆழ்ந்த ஆராய்ச்சி மற்றும் தானியங்கி பணிகளை அடிப்படையாகக் கொண்டு இயங்ககூடியது.…

Read More

பெங்களூரு: ஐபிஎல் டி20 தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் இன்று 17-ம் தேதி) மீண்டும் தொடங்குகிறது. இதற்காக திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணை ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி லீக் ஆட்டங்கள் இன்று தொடங்கி வரும் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் பின்னர் 29, 30 ஜூன் 1-ம் தேதிகளில் பிளே ஆஃப் சுற்று நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து 3-ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறுகின்றது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. 10 நாட்கள் இடைவெளிக்கு பின்னர் ஐபிஎல் தொடர் நடைபெறுவது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுதியுள்ளது. ரஜத்…

Read More

சென்னை: தமிழகம் முழுவதும் அரசின் சேவைகளைப் பெற அதிக அளவில் விண்ணப்பங்கள் வரும் நிலையில், இ-சேவை மைய சர்வர் அவ்வபோது முடங்கி பணிகள் பாதிக்கப்படுகிறது. இதனால் மாணவர் சேர்க்கைக்கான சான்றை உரிய காலத்தில் பெற முடியாமல் பெற்றோர் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் அரசு கேபிள் டிவி நிறுவனம், கூட்டுறவுத் துறை, எல்காட் என பல்வேறு துறைகளுக்கு அரசு இ-சேவை மையங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார் பிரவுசிங் சென்டர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள் வழங்கும் சாதிச்சான்று, இருப்பிடச் சான்று, டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிப்பது, குடும்ப அட்டை கோரி விண்ணப்பம், விதவை, கணவனால் கைவிடப்பட்டவர் போன்றோர் சமூகப் பாதுகாப்பு திட்டங்களைப் பெறுதல் போன்றவற்றுக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட ஆன்லைன் சேவைகள் கட்டண அடிப்படையில்…

Read More

சிறுநீரக நோய்கள், மக்கள்தொகையில் கணிசமான பகுதியை பாதிக்கின்றன, பெரும்பாலும் நுட்பமான மற்றும் முக்கியமான அறிகுறிகளின் மூலம் வெளிப்படுகின்றன. தொடர்ச்சியான சோர்வு, வீங்கிய முனைகள், சிறுநீரில் ஏற்படும் மாற்றங்கள், மூச்சுத் திணறல், மற்றும் வறண்ட, அரிப்பு தோல் ஆகியவை பலவீனமான சிறுநீரக செயல்பாட்டைக் குறிக்கலாம். ஆரம்பகால அங்கீகாரம் மற்றும் ஒரு சீரான உணவு, சோடியம் குறைவாகவும் சிறுநீரக நட்பு உணவுகள் நிறைந்ததாகவும், சிறுநீரக ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கும் சிக்கல்களைத் தடுப்பதற்கும் மிக முக்கியமானது. சிறுநீரக நோய்கள் மக்கள்தொகையில் சுமார் 10 சதவீதத்தை பாதிக்கின்றன, ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கானவர்கள் இறக்கின்றனர். உடலில் இருந்து கழிவு மற்றும் அதிகப்படியான திரவங்களை வடிகட்டுதல், இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துதல் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்துதல் ஆகியவற்றில் உங்கள் சிறுநீரக விளையாட்டு ஒரு முக்கிய பங்கு. உங்கள் சிறுநீரகங்கள் சரியாக செயல்படாதபோது, ​​உங்கள் உடல் எச்சரிக்கை சமிக்ஞைகளை அனுப்பலாம்.இந்த அறிகுறிகளை ஆரம்பத்தில் அங்கீகரிப்பது மேலும் சிக்கல்களைத் தடுக்க முக்கியமானது. உங்கள் சிறுநீரகங்கள்…

Read More

திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு கொல்கத்தாவை சேர்ந்த சஞ்சீவ் கோயங்கா எனும் பக்தர் 5.267 கிலோ எடையில் 2 தங்க ஹஸ்தங்களை (கைகள்) நேற்று காணிக்கையாக வழங்கினார். ரூ.3.63 கோடி மதிப்புடைய இந்த தங்க ஹஸ்தங்களை திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய்ய சவுத்ரி பெற்றுக்கொண்டார். முன்னதாக ஏழுமலையானை சஞ்சீவ் கோயங்கா தரிசனம் செய்தார். அவருக்கு ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.

Read More

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே சிபிஎஸ்இ அங்கீகாரம் இல்லாத பள்ளியால், கடைசி நேரத்தில் தேர்வுக்கான ஹால்டிக்கெட் கிடைக்காமல் தவித்துநின்ற 19 மாணவர்கள், பின்னர் மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் அரசுப் பள்ளியில் சேர்ந்து படித்து தேர்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காட்டில் உள்ள பிரைம் என்ற சிபிஎஸ்இ பள்ளியில் 16 மாணவர்கள், 3 மாணவிகள் என 19 பேர் இந்த கல்வியாண்டில் 10-ம் வகுப்பு படித்தனர். ஆனால், தேர்வு நெருங்கியும் அவர்களுக்கு ஹால்டிக்கெட் வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் பள்ளியை அணுகியபோது, அந்தப் பள்ளிக்கு அங்கீகாரம் இல்லாதது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், தங்களது பெற்றோருடன் கடந்த பிப். 14-ம் தேதி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜத்தை சந்தித்து முறையிட்டனர். இதையடுத்து, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் அதிகாரிகளிடம் பேசி, சிறப்பு விதிகள் பெற்று, 19 மாணவர்களையும் பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்…

Read More

டாக்கா: ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக முஸ்டாபிஸுர் ரஹ்மானுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கி உள்ளது வங்கதேச கிரிக்கெட் வாரியம். இதன் மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கடைசி 3 லீக் ஆட்டங்களில் முஸ்டாபிஸுர் ரஹ்மான் பங்கேற்க முடியும். ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த தொடக்க பேட்ஸ்மேனான ஆஸ்திரேலியாவின் ஜேக் பிரேசர் மெக்கர்க் சொந்த காரணங்களுக்கு விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக வங்கதேசத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முஸ்டாபிஸுர் ரஹ்மானை ரூ.6 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது. இதற்கிடையே அவர், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான டி 20 போட்டியில் பங்கேற்பதற்காக அந்நாட்டுக்கு சென்றுள்ளார். வங்கதேசம் – ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான 2 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர் இன்று (17-ம் தேதி) தொடங்குகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மே 18 முதல் 24-ம் தேதி வரை கலந்துகொள்ள முஸ்டாபிஸுர் ரஹ்மானுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம்…

Read More