Author: admin

நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர் அனுராக் காஷ்யப். இது குறித்து அவர் விரிவாக கூறும்போது, “நாங்கள் ‘சேக்ரட் கேம்ஸ்’ மற்றும் ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ உள்ளிட்ட தொடர்களை ​​நெட்ஃபிளிக்ஸுக்காக எடுக்கும்போது அதை ஒரு வாய்ப்பு என்று நினைத்தோம். அவர்களுடன் சேர்ந்து சில நல்ல படைப்புகளை உருவாக்கினோம். பின்னர், மெதுவாக, கோவிட் காலத்தில், எல்லாம் தலைகீழாக மாறியது. இப்போது அவர்கள் செய்து கொண்டிருப்பது தொலைக்காட்சியை விட மோசமானது. அவர்கள் உங்களை முட்டாளாக்க விரும்புகிறார்கள். இந்த அனைத்து நிறுவனங்களும், அது நெட்ஃபிளிக்ஸ் அல்லது அமேசான் அல்லது ஆப்பிள் என எதுவாக இருப்பினும் அவர்களுக்கு இப்போது இந்தியாவில் தேவை ‘டேட்டா’ எனும் எரிபொருள்தான். அவர்களுக்கு விரும்புவது எல்லாம் சந்தாவை மட்டும்தான். 1.4 பில்லியன் மக்கள்தொகையுடன், அவர்கள் தங்கள் சந்தாவை அதிகப்படுத்த விரும்புகிறார்கள். அவர்கள் அனைவரையும் சென்றடைய விரும்புகிறார்கள். யாரையும் அவர்கள் புண்படுத்த விரும்பவில்லை. அவர்கள் கலை அல்லது…

Read More

சென்னை: தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவேர்களாக்கும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், திட்டப் பயனாளிகள் அடையாளம் காணப்பட்டது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதேபோல, துாய்மை பணியாளர்களுக்கு 50 சதவீத மானியத்துடன், நவீன கழிவுநீர் அகற்றும் ஊர்திகள், உபகரணங்கள் வழங்கும் வகையில் நமஸ்தே திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டங்களை செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்துள்ளதால் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி யூடியூபர் சவுக்கு சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில்,‘‘2023-ம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய தூய்மைப் பணியாளர்கள் அமைப்பின் பரிந்துரைப்படி,…

Read More

இது எப்போதுமே லேசான மற்றும் ஜீரணிக்க எளிதான ஒன்றைக் கொண்டு நாளைத் தொடங்குவதாகக் கூறப்படுகிறது, ஏனெனில் இது உடல் பொறிமுறையை நாள் கட்டணம் வசூலிக்க உதவுகிறது. ஒருவருடன் தொடங்கக்கூடிய உணவுகளில் ஒன்று பப்பாளி. இது செரிமானம், நோயெதிர்ப்பு அதிகரிக்கும் மற்றும் தோல் அதிகரிக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்ற ஊட்டச்சத்து நிறைந்த வெப்பமண்டல பழமாகும். இதில் பாப்பெய்ன், செரிமானத்திற்கு உதவும் மற்றும் வீக்கத்தைத் தடுக்கும் ஒரு நொதி உள்ளது. வைட்டமின் சி, வைட்டமின் ஏ மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பிய பப்பாளி நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது, பார்வையை மேம்படுத்துகிறது, ஒளிரும் சருமத்தை ஊக்குவிக்கிறது. தேசிய மருத்துவ நூலகத்தின் ஆய்வின்படி, பப்பாளி கூழ் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ ஆகியவற்றைக் கொண்டுள்ளது; பாண்டோத்தேனிக் அமிலம் மற்றும் ஃபோலேட் போன்ற சிக்கலான வைட்டமின்கள்; மற்றும் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள், அத்துடன் உணவு இழைகள். மற்றும் பென்சில் ஐசோதியோசயனேட், குளுக்கோசினோலேட்டுகள், டோகோபெரோல்கள் (α மற்றும்…

Read More

புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதல் குறித்து முக்கிய வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு விளக்கமளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் திமுக எம்.பி கனிமொழி, காங்கிரஸ் எம்.பி சசி தரூர் உட்பட 7 பேர் இடம்பெற்றுள்ளனர். சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதல் மற்றும் அது குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து முக்கிய வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு விளக்கமளிக்கும் பணியில் ஈடுபடவுள்ள அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் குழுவிற்கு தலைமை தாங்கும் ஏழு எம்.பிக்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், திமுக எம்.பி கனிமொழி, என்சிபி எம்.பி சுப்ரியா சுலே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் இந்தியாவின் பதிலடி தாக்குதலான ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்களின் பெயர்களை நாடாளுமன்ற விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பைப் பகிர்ந்துகொண்ட நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “மிக முக்கியமான தருணங்களில், பாரதம் ஒற்றுமையாக உள்ளது. பயங்கரவாதத்திற்கு…

Read More

புகரெஸ்ட்: கிராண்ட் செஸ் டூரின் ஒரு பகுதியான சூப்பர்பெட் கிளாசிக் செஸ் தொடரில் பட்டம் வென்றார் இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. இது அவர் வென்றுள்ள முதல் கிராண்ட் செஸ் டூர் பட்டமாகும். ருமேனியாவில் உள்ள புகரெஸ்ட் நகரில் நடைபெற்ற இந்த தொடரில் 10 சுற்றுகள் நடந்து முடிந்த நிலையில் 5.5 புள்ளிகளுடன் ஆர்.பிரக்ஞானந்தா, பிரான்ஸ் நாட்டின் கிராண்ட் மாஸ்டர்களான பிரான்ஸின் வச்சியர்-லக்ரேவ், அலிரேசா ஃபிரூஸ்ஜா ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க டை-பிரேக்கர் நடத்தப்பட்டது. முதல் டை-பிரேக்கரில் அலிரேசா ஃபிரூஸ்ஜா மற்றும் பிரக்ஞானந்தா விளையாடினர். ஆட்டம் டிரா ஆனதால் தலா 0.5 புள்ளிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற 2-வது டை-பிரேக்கரில் வச்சியர்-லக்ரேவ், அலிரேசா ஃபிரூஸ்ஜா இடையிலான ஆட்டம் டிரா ஆனது. 3-வது டை-பிரேக்கரில் பிரக்ஞானந்தா, வச்சியர்-லக்ரேவை வீழ்த்தி 1 புள்ளியை பெற்றதோடு சாம்பியன் பட்டத்தையும் வென்றார். இந்த வெற்றியின் மூலம் 77,667 டாலர்கள் அவருக்கு பரிசுத் தொகை கிடைத்துள்ளது.…

Read More

இஸ்லாமாபாத்: ஆபரேஷன் சிந்தூரின்போது தங்கள் நாட்டின் முக்கிய விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது பற்றி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முதன்முறையாக வெளிப்படையாகப் பேசியுள்ளார். கடந்த 10-ம் தேதி அதிகாலை 2.30 மணி அளவில் அந்தத் தகவலை ராணுவ தளபதி ஜெனரல் அசிம் முனீர் தன்னிடம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார். முன்னதாக, நேற்று (வெள்ளிக்கிழமை) இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்வில் இதனை அவர் தெரிவித்துள்ளார். “மே.10 அதிகாலை 2.30 மணி அளவில் எனக்கு ஜெனரல் முனீர் போன் செய்தார். அப்போது நமது நாட்டின் முக்கிய விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் கூறினார். அது மிகவும் சங்கடம் தந்த தருணம்” என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் நடந்துள்ளதாக தெரிகிறது. “பாகிஸ்தானும் இந்தியாவும் அமைதியான அண்டை நாடுகளைப் போல காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு…

Read More

’டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்ம் சசிகுமாரை போனில் அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார். சசிகுமார், சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் வெளியான படம், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், இப்படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், சசிகுமாரை போனில் அழைத்து பாராட்டியுள்ளார். இது குறித்து சசிகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு: “படம் சூப்பர் என யார் சொன்னாலுமே மனம் சொக்கிப் போகும். சூப்பர் ஸ்டாரே படம் சூப்பர் எனச் சொன்னால், சந்தோசத்துக்கு சொல்லவா வேண்டும். ‘அயோத்தி’, ‘நந்தன்’ படம் பார்த்து பாராட்டிய ரஜினி ஹாட்ரிக் பரவசமாக ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் பார்த்து, சூப்பர் சசிகுமார் என அழுத்திச் சொன்னார். ‘தர்மதாஸாகவே வாழ்ந்திருக்கீங்க. சொல்ல வார்த்தையே இல்ல. அந்த அளவுக்கு வாழ்ந்துட்டீங்க. பல சீன்களில் கலங்கடிச்சிட்டீங்க. சமீபகாலமா உங்களோட கதைத் தேர்வு வியக்க வைக்குது…

Read More

சென்னை: பிரச்சினைகளுக்கு துணை நின்று மக்களின் நம்பிக்கையை பெறுங்கள் என தவெக மாவட்ட செயலாளர்களுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவுறுத்தி உள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தலைமை தாங்கினார். கட்சி வளர்ச்சிப் பணிகள், பூத் கமிட்டி மாநாடு தொடர்பாக நிர்வாகிகளுக்கு ஆனந்த் ஆலோசனை வழங்கினார். மேலும், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிகளிலும் தவெகவுக்கு இருக்கும் வெற்றி வாய்ப்பு நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் ஆனந்த் பேசும்போது, ‘‘காலம் குறைவாக இருக்கிறது. அதேநேரத்தில் நமக்கான பணிகள் அதிகமாக இருக்கிறது. வீடு, வீடாக சென்று தவெகவின் கொள்கைகளை எடுத்துக் கூறுங்கள். மக்களின் நம்பிக்கையை பெறுங்கள். மக்கள் பிரச்சினைகளுக்கு தவெக என்றும் துணை நிற்கும் என்று கூறுங்கள். நம்முடைய நோக்கம், 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவது மட்டுமே. அதை மனதில் வைத்து…

Read More

பொதுவாக உயர் இரத்த அழுத்தம் அல்லது உயர் இரத்த அழுத்தம், அறிகுறிகள் இல்லை; எனவே இது ஒரு அமைதியான கொலையாளியாகக் கருதப்படுகிறது, ஆனால் குறிப்பாக இரத்த அழுத்தம் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தப்படும்போது, ​​நோயாளிகளில் சிலருக்கு அறிகுறிகள் இருக்கலாம்.எவ்வாறாயினும், உங்கள் உடல் எப்போதாவது ஏதேனும் முடக்கப்பட்டிருப்பதற்கான எச்சரிக்கை அறிகுறியைக் கொடுக்கக்கூடும். சிறிய குறிகாட்டிகளைக் கடைப்பிடிப்பது உயர் இரத்த அழுத்தத்தின் முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் திறமையான சிகிச்சையில் உதவக்கூடும்.மாரெங்கோ ஆசியா மருத்துவமனைகள் ஃபரிதாபாத், திட்ட மருத்துவ இயக்குநர்-கார்டியாலஜி டாக்டர் கஜிந்தர் குமார் கோயல் கூறுகிறார், “உயர் இரத்த அழுத்தம் அல்லது உயர் இரத்த அழுத்தம் பொதுவாக எந்த அறிகுறிகளையும் கொண்டிருக்காது, ஆனால் மற்ற நிகழ்வுகளில், சில எச்சரிக்கை அறிகுறிகள் இருக்கலாம். நோயாளிகளில் சிலர் இருதரப்பு எடிமாவையும் புகார் செய்யலாம். இது மிகவும் கடுமையானதாக இருந்தால், அது பக்கவாதம் அல்லது இதய செயலிழப்புக்கு கூட வழிவகுக்கும். ஆனால் மிகவும் பொதுவான அறிகுறிகள், தலைவலி மற்றும் சோர்வு…

Read More

புதுடெல்லி: பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு செயல்கள் குறித்து எடுத்துரைக்க வெளிநாடுகளுக்கு எம்.பி.க்கள் குழுவை அனுப்பி வைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் நாடு தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. கடந்த மாதம் 22-ம் தேதி பஹல்காமில், பாகிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் போர் நடந்தது. தற்போது போர்நிறுத்தம் அமலில் உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு தொடர்பாக வெளிநாடுகளுக்கு எடுத்துரைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பல்வேறு நாடுகளுக்கு எம்.பி.க்கள் குழுவை அனுப்பி பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு செயல்கள் குறித்து எடுத்துரைக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானை மற்ற நாடுகளிடமிருந்து தனித்து விட இந்தியா முடிவு செய்துள்ளது. கட்சி பேதமின்றி எம்.பி.க்கள் குழுக்கள் இதற்காக தேர்வு செய்யப்பட உள்ளன. இதுதொடர்பான உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் எல்லை…

Read More