Author: admin

லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதையொட்டி போட்டிக்கான ஆடுகளத்தை நேற்று முன்தினம் இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் பார்வையிட சென்றார். அப்போது ஆடுகள வடிவமைப்பாளரான லீ ஃபோர்டிஸ், கவுதம் கம்பீரிடம் 2.3 மீட்டர் விலகி நின்று ஆடுகளத்தை பார்வையிடுமாறு கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கவுதம் கம்பீர், “நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று என்பதை நீங்கள் சொல்லக்கூடாது. அதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நீங்கள் வெறும் ஒரு மைதான ஆடுகள் வடிவமைப்பாளர். அதற்கு மேல் எதுவும் இல்லை” என்று பதிலடி கொடுத்தார். இதுதொடர்பாக இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கூறும்போது, “லீ ஃபோர்டிஸ் நடந்துகொண்ட விதம் தேவை இல்லாதது. இதற்கு முன்னர் எங்களுக்கு இப்படி நடந்தது இல்லை. குறைவான ஸ்பைக்குள் கொண்ட ஷு அல்லது…

Read More

மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணை கடந்த 25-ம் தேதி நடப்பாண்டில் 4-வது முறையாக நிரம்பியது. இதையடுத்து, அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,10,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று இரவு 40,500 கனஅடி யாக குறைந்தது. அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1.10 லட்சம் கனஅடியிலிருந்து நேற்று இரவு 40 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணை நீர்மட்டம் நேற்று 120 அடியாக இருந்தது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 1.25 லட்சம் கனஅடியாக பதிவான நீர்வரத்து நேற்று மாலை 57 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

Read More

இரத்த சர்க்கரை ஏற்ற இறக்கங்கள் உங்கள் மூளை வேதியியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும், மனநிலை மாற்றங்கள், எரிச்சல் மற்றும் மருத்துவ மனச்சோர்வுக்கு கூட பங்களிக்கும். குளுக்கோஸ் அளவு மிகக் குறைவு அல்லது ஸ்பைக் மிக அதிகமாக இருக்கும்போது, அது தெளிவான காரணத்திற்காக இல்லாமல் உணர்ச்சி ஏற்ற இறக்கம், பதட்டம் அல்லது “விளிம்பில்” உணர்வுக்கு வழிவகுக்கும். பெண்கள் இந்த அறிகுறிகளை பி.எம்.எஸ், வேலை மன அழுத்தம் அல்லது குடும்பப் பிரச்சினைகளுக்கு தவறாகப் பயன்படுத்தலாம், ஆனால் நிர்வகிக்கப்படாத இரத்த சர்க்கரை குறை கூறலாம். நீரிழிவு நோயாளிகளிடமும் மனச்சோர்வு மிகவும் பொதுவானது, மன மற்றும் உடல் ஆரோக்கிய சவால்களின் இரு வழி வீதியை உருவாக்குகிறது.

Read More

புதுடெல்லி: கடந்த 2006-ல் உ.பி.​யின் நொய்​டா​வில் 31-வது செக்​டார் குடிசைப் பகு​தி​யில் ஏழைக் குடும்​பங்​களின் குழந்​தைகள் தொடர்ந்து காணா​மல் போயினர். அக்​டோபர் 2006-ல் பாயல் எனும் இளம்​பெண் காணா​மல் போய் வழக்கு பதி​வானது. பாயலின் கைப்​பேசி ஒரு ரிக் ஷா ஓட்​டுநரிடம் இருந்து போலீ​ஸாரிடம் சிக்​கியது. பிறகு இதனை அவருக்கு வழங்​கிய 31-வது செக்​டார் டி-5 பங்​களா​வின் பணி​யாளர் சுரேந்​தர் கோலி போலீ​ஸாரிடம் சிக்​கி​னார். விசா​ரணைக்கு பிறகு டி-5 பங்​களா வளாகத்​தி​லும் அதன் முன்​புள்ள கால்​வா​யிலும் டிசம்​பர் 2006-ல் தோண்​டப்​பட்​டது. இதனுள் ஒன்றன்​பின் ஒன்​றாக சடலங்​கள், எலும்​புக்​கூடு​கள், 26 மண்டை ஓடு​களும் வெளி​யாகி நாட்​டையே உலுக்​கின. இதன் காரண​மாக பங்​களா உரிமை​யாளர் மொஹீந்​தர் சிங் புந்​தேர் மீதும் புகார் எழுந்​தது. குழந்​தைகள், பெண்​களை கொலை செய்​ததுடன், சில உறுப்​பு​களை கோலி உட்​கொண்​ட​தாக​வும் விசா​ரணை​யில் தகவல் வெளி​யானது. இரு​வரும் கைது செய்யப்பட்டு 10 பெண்​கள் மற்​றும் 19 குழந்​தைகள் கொலை​யான​தாக வழக்​கு​கள் பதி​வாகின.…

Read More

சென்னை: சென்​னை​யில் நடந்த முதலா​வது அறி​வு​சார் சொத்​துரிமை மாநாட்டை தொடங்கி வைத்த துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், இந்​தி​யா​வில் 3-வது பெரிய மென்​பொருள் ஏற்​றும​தி​யாள​ராக தமிழகம் திகழ்​வ​தாக தெரி​வித்​தார். இந்த மாநாட்​டில் 6 முன்​னணி நிறு​வனங்​களு​டன் ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது. தமிழக அரசின் தகவல் தொழில்​நுட்​பத் துறை​யின்​கீழ் செயல்​பட்டு வரும் தமிழ்​நாடு தொழில்​நுட்ப மையம் (ஐடிஎன்​டி) சார்​பில் முதலா​வது அறி​வு​சார் சொத்​துரிமை மாநாடு சென்னை கோட்​டூர்​புரத்​தில் நேற்று நடை​பெற்​றது. ‘அறி​வு​சார் மையம் மூலம் தமிழகத்தை இந்​தி​யா​வின் புது​மை​யின் தலைநகர​மாக மாற்​று​தல்’ என்ற தலைப்​பில் நடந்த மாநாட்டை துணை முதல்​வர் உதயநிதி தொடங்கி வைத்து தொழில்​நுட்ப கண்​காட்​சியை பார்​வை​யிட்​டார். தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன் முன்​னிலை வகித்​தார். இந்த மாநாட்​டில் டீப்​-டெக் தொழில்​நுட்​பம், ஸ்டார்ட்​அப் நிறு​வனங்​கள் மற்​றும் ஆராய்ச்​சி​யாளர்​களுக்கு ஆதரவு அளிக்​கும் வகையில் தேசிய ஆராய்ச்சி மேம்​பாட்டு நிறு​வனம், மகேந்​தி​ரா, போஷ் உள்​ளிட்ட 6 முன்​னணி நிறு​வனங்​களு​டன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.…

Read More

சென்னை: பிரதமர் மோடி வரும் ஆக. 26-ம் தேதி மீண்​டும் தமிழகம் வரு​வ​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. பிரதமர் மோடி கடந்த 26-ம் தேதி 2 நாள் பயண​மாக தமிழகம் வந்​தார். தூத்​துக்​குடி​யில் 26-ம் தேதி ரூ.4,900 கோடி மதிப்​பிலான திட்​டப் பணி​களை தொடங்கி வைத்​தார். இதையடுத்​து, அன்​றிரவு விமானம் மூலம் திருச்சி சென்ற பிரதமர் மோடியை அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி சந்​தித்து பேசி​னார். பின்​னர், 27-ம் தேதி கங்கை கொண்ட சோழபுரம் சென்​றார். பிரகதீஸ்​வரர் கோயில் வளாகத்​தில் ராஜ​ராஜ சோழன் முப்பெரும் விழா​வில் கலந்​து​கொண்​டார். இந்​நிலை​யில், ஆக.26-ம் தேதி பிரதமர் மோடி மீண்​டும் தமிழகம் வர இருப்​ப​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. அப்​போது, சிதம்​பரம் நடராஜர் கோயில், திரு​வண்​ணா​மலை கோயில்​களில் தரிசனம் செய்ய இருப்​ப​தாக​வும், தரிசனத்தை முடித்​து​விட்​டு, சிதம்​பரத்​தில் மனதின் குரல் நிகழ்ச்​சி​யில் மோடி பங்​கேற்க இருப்​ப​தாக​வும் கூறப்​படு​கிறது.

Read More

ஒரு படைப்பு குழந்தையை வளர்ப்பதற்கான 10 கேள்விகள்கற்பனைக்கான ஒரு குறுநடை போடும் குழந்தையின் திறன் யாரையும் ஆச்சரியப்படுத்தும். அதனால்தான் சரியான கேள்விகளைக் கேட்பது அவர்களுக்கு சரியான திசையில் வழிகாட்டும். உங்கள் குழந்தையின் மனநிலையை விரிவுபடுத்துமாறு நீங்கள் கேட்க வேண்டிய 10 கேள்விகள் இங்கே

Read More

தேனி: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நிறைபுத்​தரி வழி​பாட்​டுக்​காக சிறப்பு பூஜை செய்​யப்​பட்​டு, பக்​தர்​களுக்கு நெற்​க​திர்​கள் பிர​சாதமாக வழங்​கப்​பட்​டன. பல்​வேறு வழி​பாடு​களுக்கு பிறகு நேற்று இரவு கோயில் நடை சாத்​தப்​பட்​டது. ஒவ்​வொரு ஆண்​டும் நெல் அறு​வடை தொடங்​கும் காலங்​களில் சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நிறைபுத்​தரி வழி​பாடு நடை​பெறுவது வழக்​கம். இந்த ஆண்​டுக்கான பூஜை நேற்று நடை​பெற்​றது. இதற்​காக, அலங்​கரிக்​கப்​பட்ட வாகனங்​களில் நேற்று முன்​தினம் நெற்க​திர்​கள் கொண்​டு​வரப்​பட்​டன. பம்பை கணபதி கோயி​லில் சிறப்பு வழி​பாட்டுக்குப் பிறகு 18-ம் படி வழியே ஐயப்​பன் சந்​நி​திக்கு தலைச்​சுமை​யாகக் கொண்டு வரப்​பட்​டன. தந்​திரி​கள் கண்​டரரு ராஜீவரு, பிரம்​மதத்​தன் ராஜீவரு ஆகியோர் தலை​மை​யில் இந்த நெற்​க​திர்​கள் பெறப்​பட்​டன. தொடர்ந்து கொடி மரத்​துக்கு கிழக்கே உள்ள மண்​டபத்​தில் மேல்​சாந்தி அருண்​கு​மார் நம்​பூ​திரி நேற்று சிறப்பு பூஜைகள் செய்​தார். பின்பு ஐயப்​பன் சந்​நி​தி​யில் நெற்​க​திர்​கள் வைக்​கப்​பட்​டு, பூஜைகள்செய்​யப்​பட்​டன. பின்​னர், அவை பக்​தர்​களுக்கு பிர​சாத​மாக வழங்​கப்​பட்​டன. பல்​வேறு வழி​பாடு​களுக்குப் பிறகு நேற்று இரவு 10…

Read More

சென்னை: எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்​கான கலந்​தாய்​வில் 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டில் 613 அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்​லூரி​களில் சேரு​வதற்​கான ஆணை​களை சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் வழங்​கி​னார். தமிழகத்​தில் அரசு மற்​றும் தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களில் அரசு ஒதுக்​கீட்​டுக்கு 6,600 எம்​பிபிஎஸ் இடங்​கள், 1,583 பிடிஎஸ் இடங்கள் உள்​ளன. இதில் 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டில் அரசு பள்ளி மாணவர்​களுக்கு 494 எம்​பிபிஎஸ் இடங்​கள், 119 பிடிஎஸ் இடங்​கள் வழங்​கப்படுகின்​றன. இந்​நிலை​யில், சிறப்பு பிரிவு (மாற்​றுத்​திற​னாளி, முன்​னாள் ராணுவ வீரர்​களின் வாரிசு, விளை​யாட்டு வீரர்) சிறப்பு பிரிவு கலந்​தாய்வு மற்​றும் 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்டு இடங்​களுக்கு அரசு பள்ளி மாணவர்​களுக்​கான கலந்​தாய்வு நேரடி​யாக நேற்று சென்னை அண்ணா சாலை​யில் உள்ள அரசு பன்​னோக்கு உயர் சிறப்பு மருத்​து​வ​மனை வளாகத்​தில் நடந்​தது. இதில் தேர்​வான மாணவ, மாணவி​களுக்கு கல்​லூரி​களில் சேரு​வதற்​கான ஆணை​களை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் வழங்கினார். இதன்​படி 7.5 சதவீத உள்…

Read More

குழந்தைகளாகிய நாம் அடிக்கடி நம் பெற்றோரை பாதுகாப்பான இடமாக பார்க்கிறோம், அவர்கள் ‘எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்கள்’ என்று நம்புகிறார்கள். பெற்றோர்கள் தங்கள் சொந்த வேறுபாடுகளைக் கொண்டிருப்பது இயல்பானது என்றாலும், அந்த வேறுபாடுகளை குழந்தையின் முன் விவாதிப்பது சரியில்லை. ஒரு குழந்தை பெற்றோரின் பாதுகாப்பின்மை, இயலாமை அல்லது சந்தேகங்களைப் பற்றி கேட்கும்போது, அது தவிர்க்க முடியாமல் கவலையையும் குழப்பத்தையும் உருவாக்கும். குழந்தைகள் தங்கள் பெற்றோரின் பிரச்சினைகள் அல்லது சுமைகளுக்கு காரணம் என்று நினைத்து இந்த உணர்வுகளை உள்வாங்கலாம். இது அவர்களின் பாதுகாப்பு மற்றும் உணர்ச்சி நல்வாழ்வின் உணர்வை சீர்குலைக்கும்.

Read More