Author: admin

அந்த வகையில், மத்திய குடிமைப் பணி தேர்வுகளில் தமிழகத்தில் இருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் 1000 மாணவர்களுக்கு, அவர்கள் முதல்நிலை தேர்வுக்கு தயாராகும் வகையில், 10 மாதங்களுக்கு, மாதம் ரூ.7,500-ம் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.25,000 ரூபாயும், ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் 659 பேருக்கு முதன்மைத் தேர்வுக்கு பயிற்சி பெற ஏதுவாக ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டது. தற்போது, யுபிஎஸ்சி குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், நான் முதல்வன் யு.பி.எஸ்.சி குடிமைப் பணிகள் முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை பெற்ற 659 பயனாளிகளில், 155 பேர் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Read More

இந்நிலையில், ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனின் பயிற்சியாளராக குமார் சங்ககாரா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பயிற்சியாளர் குழுவிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த சீசனை 9-ம் இடத்தில் ராஜஸ்தான் அணி நிறைவு செய்தது. இதையடுத்து அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனை, சிஎஸ்கே வசம் டிரேட் செய்தது ராஜஸ்தான் அணி. அதேநேரத்தில் ஜடேஜா மற்றும் சாம் கர்ரனை சிஎஸ்கே அணியில் இருந்து ராஜஸ்தான் அணி வாங்கி உள்ளது. வரும் சீசனை முன்னிட்டு அடுத்து மாதம் நடைபெற உள்ள ஏலத்தில் தங்களுக்கு வேண்டிய வீரர்களை தேர்வு செய்து, அணியை மீண்டும் வலுவாக கட்டமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

எனவே, அமெரிக்க தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க அத்தகைய திறன்களைக் கொண்ட வெளிநாட்டு தொழிலாளர்களை மூன்று, ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளுக்கு இங்கு கொண்டு வருவதே அதிபரின் தொலைநோக்குப் பார்வை என்று நான் நினைக்கிறேன். இங்குள்ளவர்களுக்கு பயிற்சியளித்த பின்னர் அவர்கள் சொந்த நாட்டுக்கு செல்லலாம். அதன்பிறகு அமெரிக்க தொழிலாளர்கள் இந்த வேலைகளுக்கு பொறுப்பேற்பார்கள்.நாங்கள் பல ஆண்டுகளாக இங்கு கப்பல்கள் அல்லது செமி கண்டக்டர்களை உருவாக்கவில்லை. எச்-1பி விசா திட்டத்துக்கான ட்ரம்ப்பின் புதிய அணுகுமுறை, முக்கியமான தொழில்களை அமெரிக்காவுக்கு திருப்பி கொண்டு வருவதற்கும், இறக்குமதிகளை நம்பியிருப்பதைக் குறைப்பதற்குமான முயற்சி. அதிபர் 2,000 டாலர் டிவிடெண்ட் வழங்குவதாக சொல்லியுள்ளார். இது வலுவான வர்த்தகக் கொள்கையின் நன்மைகளை குடும்பங்கள் உணர வைக்கும் செயல்.” என்று அவர் கூறினார்.

Read More

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 30-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசன ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கு ஆன்லைன் மற்றும் நேரடி டிக்கெட் விநியோகம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். வரும் பிப்ரவரி மாதம் முதல் ஆன்லைன் மூலமாகவே அங்கப்பிரதட்சண டோக்கன் தொடர்ந்து 3 மாதங்களுக்கு வழங்கப்படும். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரும் நவம்பர் 17 முதல் 25-ம் தேதி வரை கார்த்திகை மாத பிரம்மோற்சவம் நடைபெறும். அதற்கான பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன.

Read More

தமிழில் ‘உன்னை சரணடைந்தேன்’ படத்தில் நாயகியாக நடித்தவர் மீரா வாசுதேவன். அடுத்து ஜெர்ரி, ஆட்ட நாயகன், அடங்க மறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள மீரா வாசுதேவன், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மலை​யாளத்​தி​லும் தொடர்ந்து நடித்து வரும் அவர், கடந்த 2005ம் ஆண்டு ஒளிப்​ப​தி​வாளர் அசோக் குமார் மகன் விஷால் அகர்​வாலைத் திரு​மணம் செய்து கொண்​டார். 2010ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்​தார்.

Read More

வரும் 21-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நாகபட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 22, 23-ல் கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.வரும் 23-ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Read More

நாமக்​கல் மண்​டலத்​தில் கடந்த 50 ஆண்டு கோழிப்​பண்ணை வரலாற்​றில் முதல்​முறை​யாக ஒரு முட்​டை​யின் விலை 595 பைசாவாக நிர்​ண​யிக்​கப்​பட்​டிருப்​பது கோழிப் பண்​ணை​யாளர்​கள் மத்​தி​யில் மகிழ்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. தற்​போது குளிர் சீசன் தொடங்​கி​யுள்​ள​தால் முட்டை நுகர்வு அதி​கரித்​துள்​ளது. இதனால் முட்டை விலை ஏற்​றம் கண்டு வரு​வ​தாக பண்​ணை​யாளர்​கள் தெரி​வித்​தனர்.நாட்​டின் பிற மண்​டலங்​களில் முட்டை விலை நில​வரம் (பைசாவில்): சென்னை 660, பர்​வாலா 621, பெங்​களூரு 645, டெல்லி 660, ஹைத​ரா​பாத் 605, மும்பை 670, மைசூர் 610, விஜய​வாடா 625, ஹொஸ்​பேட் 585, கொல்​கத்தா 685. இதே​போல,பிராய்​லர் கோழி உயிருடன்​ ஒரு கிலோ ரூ. 104 என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. முட்​டைக்​கோழி உயிருடன்​ ஒரு கிலோ ரூ.112 என நிர்​ணயிக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

பிட்காரி, அல்லது படிகாரம், பொதுவான தோல் பிரச்சனைகளுக்கு எளிய, மலிவான வீட்டு தீர்வாக நீண்ட காலமாக விளம்பரப்படுத்தப்படுகிறது. அதன் இயற்கையான அஸ்ட்ரிஜென்ட் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், டோனர், ஆஃப்டர் ஷேவ் மற்றும் முகப்பரு எதிர்ப்பு ஹேக் என பிரபலமாக்குகிறது. ஆனால் அதன் பாரம்பரிய நற்பெயர் இருந்தபோதிலும், நவீன தோல் மருத்துவமானது முக தோலுக்கு எவ்வளவு பாதுகாப்பானது என்பது பற்றிய முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. ஒரு சமீபத்திய வீடியோவில், பிரபல தோல் மருத்துவர் டாக்டர். ஜுஷ்யா பாட்டியா சரின் முகத்தில் ஆலம் அல்லது பிட்காரி பயன்படுத்துவது எப்படி நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்பதை பகிர்ந்துள்ளார். வெளித்தோற்றத்தில் பாதிப்பில்லாததாகத் தோன்றுவது பெரும்பாலான மக்கள் கருதாத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று வளர்ந்து வரும் ஆராய்ச்சி காட்டுகிறது.பிட்காரியின் உப்பு அமைப்பு பிட்காரி ஒரு சல்பேட் என்று டாக்டர் ஜூஷ்யா சிறப்பித்துக் காட்டுகிறார். இரசாயன ரீதியாக இரட்டை சல்பேட் உப்பு, பொட்டாசியம் அலுமினியம் சல்பேட்,…

Read More

சூரியன் அடிவானத்திற்குக் கீழே நழுவி இரவு தொடங்கும் போது, ​​எதிர்பாராத ஒன்று நமது கிரகத்திற்கு மேலே தோன்றும். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மட்டுமே வெளிப்படும் இயற்கைக் கதிர்வீச்சின் விசித்திரமான மற்றும் மங்கலான வடிவத்தை விண்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர், இது பல மணிநேரங்களுக்கு மேல் வளிமண்டலத்தில் துடிக்கிறது மற்றும் சூரிய உதயத்திற்குப் பிறகு மீண்டும் மறைந்துவிடும். பூமியில் இருந்து கண்ணுக்கு தெரியாத மற்றும் பூமியைச் சுற்றி வரும் செயற்கைக்கோள்களால் மட்டுமே கண்டறிய முடியும், புதிதாக அடையாளம் காணப்பட்ட இந்த ரேடியோ உமிழ்வு ஆராய்ச்சியாளர்களை திகைக்க வைத்துள்ளது, ஏனெனில் இது கிரகத்தின் காந்தப்புலம் அல்லது விண்வெளி வானிலை முறைகளுடன் தொடர்புடைய எந்த அறியப்பட்ட இயற்கை மின்காந்த நடத்தைக்கும் பொருந்தவில்லை. பூமியின் விண்வெளி சூழல் முன்னர் கருதப்பட்டதை விட மிகவும் ஆற்றல் வாய்ந்தது மற்றும் மர்மமானது என்று கண்டுபிடிப்பு தெரிவிக்கிறது, நமது கிரகம் பரந்த அண்டத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பது பற்றிய புதிய அறிவியல்…

Read More

உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க பரோபகாரர்களில் ஒருவரான மெக்கென்சி ஸ்காட், ஒருமுறை கல்லூரியில் தங்குவதற்கு நண்பரின் நிதி உதவியை நம்பிய பிறகு முழு வட்டத்திற்கு வந்துள்ளார். ஒரு பிரின்ஸ்டன் இளங்கலைப் பட்டதாரியாக, ஸ்காட் $1,000 கட்டணத்தைச் செலுத்த முடியாதபோது, ​​அவளது அறைத் தோழியான Jeannie Tarkenton தனக்கான பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வரையில் படிப்பை நிறுத்துவதை எதிர்கொண்டார். பல தசாப்தங்களுக்குப் பிறகு, இப்போது கோடீஸ்வரரான ஸ்காட், டார்கெண்டனின் மாணவர்-கடன் தொடக்கத்தை ஆதரிக்கிறார்.மெக்கென்சி ஸ்காட்டின் கடன் வாங்குபவரிடமிருந்து பெரிய பரோபகாரர் வரையிலான பாதைஸ்காட் ஒரு பாதிக்கப்படக்கூடிய தருணத்தில் உதவியைப் பெற்ற அனுபவம் தாராள மனப்பான்மை பற்றிய அவரது கருத்துக்களை பாதித்தது என்று எழுதியுள்ளார். அவளது முன்னாள் ரூம்மேட் கண்ணீருடன் அவளைக் கண்டுபிடித்து $1,000 கடனை ஏற்பாடு செய்ததை நினைவு கூர்ந்தார், இது ஸ்காட் பிரின்ஸ்டனில் தனது படிப்பைத் தொடர அனுமதித்தது. டார்கென்டன் இளங்கலைப் பட்டதாரி ஸ்காட்டை “மிகவும் கவனம் செலுத்தும்” ஒரு “கடின உழைப்பாளி…

Read More