Author: admin

சென்னை: தனி​யாரிடம் இருந்து மின்​சா​ரம் கொள்​முதல் செய்​யக் கூடாது என பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் வலி​யுறுத்தி உள்​ளார். இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தனி​யாரிட​மிருந்து ரூ.80,000 கோடி செல​வில் 2,200 மெகா​வாட் மின்​சா​ரத்தை தமிழ்​நாடு மின்​சார வாரி​யம் கொள்​முதல் செய்ய இருப்​ப​தாக வெளிவந்​துள்ள செய்தி பல கேள்வி​களை எழுப்​பு​கிறது. ஆட்சி அமைப்​ப​தற்கு முன்பு ‘தனி​யாரிடம் மின்​சா​ரம் வாங்​கு​வதை குறைத்து மாசற்ற மின் உற்​பத்தி நிலை​யங்​கள் மூலம் 20,000 மெகா​வாட் மின் உற்​பத்தி செய்​யப்​பட்டு குறைந்த விலை​யில் மின்​சா​ரம் வழங்​கப்​படும்’ என்று திமுக வாக்​குறுதி எண் 231-ல் முழங்​கியது. ஆனால் ஆட்​சிக் கட்​டிலில் ஏறியதும் அதற்கு நேர்​மாறாக, மின்​வாரி​யத்தை நஷ்டத்​தில் தள்​ளி, தனி​யாரிட​மிருந்து மின்​சா​ரத்தை வாங்​கி, விலையை உயர்த்​தி, மக்​கள் மீதும், அரசு மீதும் நிதிச்​சுமையை ஏற்றி வரு​கிறது. மாநிலத்​தின் கடன் சுமை​யை​யும் மக்​களின் மின்​கட்டண சுமை​யை​யும் ஒருசேர உயர்த்தி தமிழகத்தை இருளில் தள்​ளி​விட்​டு, விடியல் அரசு என்று…

Read More

சிகிச்சையின் வெற்றி மற்றும் உயிர்வாழும் விகிதங்களை மேம்படுத்த புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது மிக முக்கியமானது. அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பு பல ஸ்கிரீனிங் சோதனைகள் உடலில் உள்ள புற்றுநோய் செல்களைக் கண்டறிய முடியும், இது சரியான நேரத்தில் தலையீடு மற்றும் சிறந்த விளைவுகளை அனுமதிக்கிறது. சில சோதனைகள் பொதுவானவை என்றாலும், மற்றவர்கள் குறிப்பிட்ட உறுப்புகளை குறிவைக்கின்றன அல்லது பாலினம், வயது மற்றும் ஆபத்து காரணிகளின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன. அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் வழிகாட்டுதல்களின்படி, மேமோகிராஃபி, பிஏபி சோதனைகள், கொலோனோஸ்கோபி, பிஎஸ்ஏ சோதனை மற்றும் தோல் பரிசோதனைகள் போன்ற வழக்கமான திரையிடல்கள் செயலில் உள்ள சுகாதார நிர்வாகத்திற்கு அவசியம். எந்த சோதனைகளை எடுக்க வேண்டும் மற்றும் ஆரம்பகால நோயறிதல் மற்றும் பயனுள்ள புற்றுநோய் தடுப்பதை உறுதி செய்யும் போது புரிந்துகொள்வது.புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறியக்கூடிய சோதனைகள் யாவைமேமோகிராபிமார்பக புற்றுநோயைக் கண்டறிவதற்கான முக்கிய இமேஜிங் சோதனை மேமோகிராபி ஆகும், குறிப்பாக வெளிப்படையான அறிகுறிகளைக் காட்டாத பெண்களில். இரண்டு…

Read More

சென்னை: மதுரை மாநாட்​டின் வெற்றி என்​பது, உங்​கள் ஒவ்​வொரு​வரின் உழைப்​பிலும், பங்​களிப்​பிலும் மட்​டுமே சாத்​தி​ய​மாகி இருக்​கிறது. மனசாட்சி உள்ள மக்​களாட்​சியை நிலை​நாட்​டு​வது மட்​டுமே நம் இலக்கு என்று தவெக தலை​வர் விஜய் தெரி​வித்​துள்​ளார். இதுகுறித்து கட்​சித் தொண்​டர்​களுக்கு அவர் எழு​தி​யுள்ள கடிதம்: மதுரை​யில் நடந்த 2-வது மாநில மாநாட்​டின் வெற்றி என்​பது உங்​கள் ஒவ்​வொரு​வரின் உழைப்​பிலும், பங்​களிப்​பிலும் மட்​டுமே சாத்​தி​ய​மாகி இருக்​கிறது. எத்​தனை மறை​முகத் தடைகள் உரு​வாக்​கப்​பட்​டாலும், நமக்​காக மக்​கள் கூடும் திடல்​கள் எப்​போதும் கடல்​களாகத்​தான் மாறும் என்​பதை உணர்ந்​து,மாநாட்​டுப் பணி​களை சிறப்​புடன் மேற்​கொண்ட நிர்​வாகி​கள் உள்​ளிட்ட அனை​வருக்​கும் மனம் நிறைந்த பாராட்​டை​யும், நன்​றியை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறேன். நம் மீது வீசப்​படும் விமர்​சனங்​களில் நல்​ல​வற்றை மட்​டும் நமதாக்கி உரமேற்​று​வோம். மற்​றவற்றை புறந்​தள்​ளிப் புன்​னகைப்​போம். மக்​களோடு மக்​களாக இணைந்து நிற்​கும் மக்​கள் அரசி​யல் மட்​டுமே, நமது நிரந்தர அரசி​யல் நிலைப்​பாடு. மனசாட்சி உள்ள மக்​களாட்​சியை நிலை​நாட்​டு​வது மட்​டுமே நம் இலக்​கு. 1967, 1977…

Read More

உடற்தகுதி சப்ளிமெண்ட்ஸ் என்பது முன்-வொர்க்அவுட்டுகள், கொழுப்பு பர்னர்கள் மற்றும் புரத ஊக்கங்கள், ஆற்றல் மற்றும் வேகமான முடிவுகளுக்கு பிரபலமான தேர்வாகும். இருப்பினும், இந்த தயாரிப்புகள் இதயத்திற்கு வரக்கூடிய மறைக்கப்பட்ட அபாயங்களை பலர் கவனிக்கிறார்கள். அதிக அளவு காஃபின், வெளியிடப்படாத தூண்டுதல்கள் மற்றும் அதிகப்படியான வைட்டமின்கள் அல்லது தாதுக்கள் இதய துடிப்பு, இரத்த அழுத்தம் மற்றும் சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும், குறிப்பாக முன்பே இருக்கும் நிலைமைகளைக் கொண்டவர்கள். சில நேரங்களில் அமைதியாக, மருந்துகள் மருந்துகளுடன் தொடர்பு கொள்ளலாம். இருதய ஆரோக்கியத்தை சமரசம் செய்யாமல் செயல்திறனை மேம்படுத்த விரும்பும் எவருக்கும் இந்த ஆபத்துக்களைப் புரிந்துகொள்வதும் பாதுகாப்பான நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதும் அவசியம்.எப்படி முன்-வொர்க்அவுட்கள் மற்றும் கூடுதல் உங்கள் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும்முன்-வொர்க்அவுட்டுகளில் காஃபின் மற்றும் மறைக்கப்பட்ட தூண்டுதல்கள் இதய ஆரோக்கியத்தை அபாயப்படுத்துகின்றனபல முன்-வொர்க்அவுட் சப்ளிமெண்ட்ஸ் அதிக அளவு காஃபின்-சில நேரங்களில் 300 மி.கி அல்லது ஒரு சேவைக்கு அதிகமாக உள்ளது. இது ஒரே நேரத்தில் மூன்று…

Read More

அண்மையில் ஆண்டிபட்டி அரசு நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ-வும் திமுக எம்பி-யும் ‘முட்டாப் பயலே’ வசனம் பேசி மோதிக்கொண்ட விவகாரம் தொடர்பான விசாரணையே இன்னும் முடியாத நிலையில், மயிலாடுதுறை மாவட்ட திமுக-விலும் அப்படியொரு கலகம் வெடித்துள்ளது. ஜூலையில், அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற மயிலாடுதுறை மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் நிவேதா முருகனுக்கு எதிராக சிலர் பிரச்சினையைக் கிளப்பினார்கள். ஒருவழியாக அதைச் சமாளித்து இருதரப்பையும் சாந்தப்படுத்தினார் நேரு. இந்த நிலையில், கடந்த 16-ம் தேதி நடந்த கூட்டத்திலும் ரத்தக் களறி ஆகுமளவுக்கு மீண்டும் மோதல் வெடித்தது. அந்தக் கூட்டத்தில், ஐடி விங்க் மாநில இணைச் செயலாளர் ஸ்ரீதர், நிவேதா முருகனை குற்றம்சாட்டி பேசினார். இதை கண்டித்த வர்த்தக அணி அமைப்பாளர் பாலமுருகன் நிவேதாவை ஆதரித்துப் பேச, இருதரப்புக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு நாற்காலிகளால் தாக்கிக் கொள்ளுமளவுக்கு விவகாரம் முற்றியது. அரங்கிற்கு வெளியிலும் நிவேதா முருகனுக்கு ஆதரவாக திரண்டிருந்த வெளிநபர்களால் கலவர…

Read More

தக்காளி வீட்டுத் தோட்டக்காரர்களுக்கு மிகவும் பிடித்தது, அவற்றின் புதிய, தாகமாக பழங்களுக்கு மதிப்புள்ளது. ஆயினும்கூட, ஆரோக்கியமான பச்சை தாவரங்களைப் பார்ப்பது பூக்களை உற்பத்தி செய்யத் தவறியது ஊக்கமளிக்கும். பூக்கும் ஒரு முக்கியமான கட்டமாகும், ஏனெனில் இது பழ உற்பத்தியை நேரடியாக பாதிக்கிறது. வெப்பநிலை உச்சநிலை, போதிய சூரிய ஒளி, முறையற்ற நீர்ப்பாசனம், அதிகப்படியான எழுச்சி, பூச்சி பிரச்சினைகள் மற்றும் ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தக்காளி செடிகள் பூப்பதைத் தடுக்கலாம். உங்கள் தாவரங்களை பாதிக்கும் குறிப்பிட்ட காரணத்தை அடையாளம் காண்பதன் மூலம், பூக்களை ஊக்குவிக்கவும் உங்கள் அறுவடையை மேம்படுத்தவும் இலக்கு நடவடிக்கைகளை எடுக்கலாம். இந்த பொதுவான தடைகளைப் புரிந்துகொள்வதும், எளிய வைத்தியங்களைப் பயன்படுத்துவதும் உங்கள் தக்காளி செடிகள் உற்பத்தித்திறன் கொண்டதாக இருப்பதை உறுதி செய்கிறது மற்றும் வளரும் பருவம் முடிவடைவதற்கு முன்பு ஏராளமான பயிர் வழங்குவதை உறுதி செய்கிறது.10 பொதுவான தக்காளி பூக்கும் சிக்கல்கள் மற்றும் தீர்வுகள்சீக்கிரம் நடவுதக்காளி சூடான-வானிலை…

Read More

திருச்சி: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம் கொடுப்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்; என்று தலைப்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநில அளவில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சனிக்கிழமை அன்று திருச்சி காந்தி மார்க்கெட் அருகே வெல்லமண்டி வீதியில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் பேசியது: “திருச்சி மாநகராட்சிக்கு அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் 1000 கோடி ரூபாய் நிதி வழங்கி, பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திருச்சி மாநகராட்சியில் மின்கட்டணம் 67% உயர்வு, வரிகளையும் 100 முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசு. விலைவாசியல் மக்கள் படும் துன்பம் பற்றி திமுகவுக்கு கவலையில்லை. விலைவாசியைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிமுக…

Read More

காலை உணவு என்பது நாள் எரிபொருளை விட அதிகம்; வாய்வழி ஆரோக்கியத்திலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. காலை உணவைத் தவிர்க்கும் பதின்வயதினர் காலையில் சாப்பிடுபவர்களுடன் ஒப்பிடும்போது மோசமான மூச்சை அனுபவிக்கும் வாய்ப்பை விட இரு மடங்கு அதிகமாகும். இந்த முக்கியமான உணவை தவறவிட்டவர்களில், மூன்றாவது அறிக்கையில் ஹலிடோசிஸில், பெரும்பாலும் அதை உணராமல். காலை உணவைத் தவிர்ப்பதில் இருந்து மோசமான உமிழ்நீர் ஓட்டம் பாக்டீரியாவை பெருக்க அனுமதிக்கிறது, இதனால் விரும்பத்தகாத நாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த இணைப்பைப் புரிந்துகொள்வது பதின்ம வயதினரின் வாய்வழி சுகாதாரத்தைக் கட்டுப்படுத்தவும், நம்பிக்கையை மேம்படுத்தவும், சமூக மோசமான சூழ்நிலைகளைத் தவிர்க்கவும் உதவும். ஆரோக்கியமான காலை உணவோடு நாள் தொடங்குவது ஆற்றல் மற்றும் புதிய சுவாசத்தை ஆதரிக்கிறது.காலை உணவைத் தவிர்ப்பது பதின்ம வயதினரில் கெட்ட சுவாசத்தின் அபாயத்தை இரட்டிப்பாக்கும்காலை உணவு நீண்ட காலமாக “அன்றைய மிக முக்கியமான உணவு” என்று அழைக்கப்படுகிறது, ஆனால் புதிய ஆராய்ச்சி ஆரோக்கியமான உணவுடன் நாள்…

Read More

விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’, விஜய், பாபி தியோல், பூஹா ஹெக்டே, கவுதம் மேனன், ப்ரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இது விஜய்யின் நடிப்பில் வெளியாகும் கடைசி படம் என்பதால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கடந்த ஜூன் 22-ம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு சிறிய க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. இதைத் தவிர படம் குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இப்படத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பு…

Read More

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மின்னல் பாய்ந்து சகோதரிகளான பள்ளிச் சிறுமிகள் 2 பேர் உயிரிழந்தனர். பரமக்குடி வட்டம் சத்திரக்குடி அருகே வாழவந்தாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த நூருல் அமீனின் மகள்கள் செய்யது அஸ்பியா பானு (13), சபிக்கா பானு (9). சத்திரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் செய்யது அஸ்பியா பானு 9-ம் வகுப்பும், அரியகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சபிக்கா பானு 5-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்நிலையில், இன்று பள்ளி விடுமுறை என்பதால் சகோதரிகள் இருவரும் வீட்டின் அருகில் உள்ள வேப்பரத்தின் அடியில் வேப்பங்கொட்டை சேகரித்துக் கொண்டிருந்தனர். பிற்பகல் 3 மணியளவில் திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது. மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்த சகோதரிகள் இருவர் மீதும் மின்னல் பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த சத்திரக்குடி போலீஸார் 2 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு…

Read More