சென்னை: “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகளை தட்டிக்கேட்டதற்காக பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்வதா? துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் நாளை மறுநாள் ஓய்வு பெறவிருக்கும் நிலையில், பல்கலைக்கழகத்தில் தமக்கு பிடிக்காதவர்களையும், கடந்த காலங்களில் தமது தவறுகளை விமர்சித்தவர்களையும் பணியிடை நீக்கம் செய்து பழிவாங்கும் செயலில் ஈடுபட்டுள்ளார். துணை வேந்தரின் இந்த பழிவாங்கும் செயலும், அதை திமுக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும் கண்டிக்கத்தக்கவை. பெரியார் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் முனைவர் வைத்தியநாதன். பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். பெரியார் பல்கலைக்கழகத்திற்கு புதிய பதிவாளரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானபோது, துணைவேந்தராக இருப்பவர் ஓய்வு பெறுவதற்கு ஓராண்டுக்கும் குறைவான பதவிக்காலமே இருக்கும் போது, புதிய நியமனங்களை மேற்கொள்ளக்…
Author: admin
பிரதிநிதி படம் (AI) மே 17, 1900 அன்று, அமெரிக்க எழுத்தாளர் லைமன் ஃபிராங்க் பாம் ஒரு கதையை வெளியிட்டார், அது மறக்க முடியாத கதாபாத்திரங்கள், மந்திர அமைப்புகள் மற்றும் தைரியம், நட்பு மற்றும் வீட்டிற்கான தேடல் ஆகியவற்றின் உலகளாவிய கருப்பொருள்களுடன் தலைமுறைகளாக வாசகர்களையும் பார்வையாளர்களையும் மயக்கியது.கதையின் மையத்தில் டோரதி கேல், அமைதியான கன்சாஸ் பண்ணையில் வசிக்கும் ஒரு இளம் பெண். ஒரு சக்திவாய்ந்த சூறாவளி அவளையும் அவளுடைய நாயையும் முழுவதுமாகத் துடைக்கும்போது, அதிசயமும் ஆபத்தும் பதுங்கியிருக்கும் ஓஸ் என்ற அற்புதமான நிலத்தில் அவள் தன்னைக் காண்கிறாள். ஒரு கனிவான சூனியக்காரரால் அறிவுறுத்தப்பட்ட டோரதி ஒரு மஞ்சள் செங்கல் சாலையைப் பின்பற்றி எமரால்டு நகரத்திற்கு புறப்படுகிறார், மர்மமான வழிகாட்டி ஆஃப் ஓஸ் அவள் வீடு திரும்ப உதவ முடியும் என்று நம்புகிறார்.உள்ளே பயணம்வழியில், அவள் ஒரு மூளை, ஒரு தகரம் மனிதர் ஒரு இதயத்திற்காக ஏங்குகிற ஒரு ஸ்கேர்குரோவுடன் நட்பு கொள்கிறாள்,…
சென்னை: அரசுப் பள்ளிகளில் கல்வி, இலக்கியம், விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கிய பிளஸ் 1 வகுப்பை நிறைவு செய்துள்ள 1,500 மாணவர்கள் நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களுக்கு கோடை சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளனர். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை மெருகேற்றும் வகையிலும், கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் செலவழிக்கவும் கோடைக் கொண்டாட்ட சிறப்பு பயிற்சி முகாம்கள் மலை சுற்றுலா தலங்களில் நடத்தப்படும் என்று சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி இந்த சிறப்பு பயிற்சி முகாம்கள் நீலகிரி, சேலம் (ஏற்காடு) ஆகிய மாவட்டங்களில் இரு பிரிவுகளாக 5 நாள்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களுக்கு அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பை நிறைவு செய்துள்ள மாணவர்களில் கல்வி, இலக்கியம், விளையாட்டு, அறிவியல், விநாடி-வினா போட்டியில்…
சென்னை: ரொமேனியாவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்திய சதுரங்கத்தின் குறிப்பிடத்தக்க இந்த தருணத்தை தமிழ்நாடே கொண்டாடுகிறது” என்று கூறியுள்ளார்.இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ரொமேனியாவில் நடைபெற்ற பெருமைமிக்க ‘சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025’ போட்டியில் வாகைசூடி, தனது முதல் கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்றுள்ள ‘நமது சென்னையின் பெருமிதம்’ கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள். கிளாசிக்கல் மற்றும் பிளிட்ஸ் சுற்றுகளில் அசாதாரணமான அமைதியையும் உத்திமிகுந்த ஆழத்தையும் அவரது திறமையான ஆட்டம் வெளிப்படுத்தியது. இந்திய சதுரங்கத்தின் குறிப்பிடத்தக்க இந்த தருணத்தை தமிழ்நாடே கொண்டாடுகிறது,” என்று கூறியுள்ளார்.
நியூயார்க்: அமெரிக்கப் பொருட்களுக்கான 100% வரிகளைக் குறைக்க இந்தியா தயாராக உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். புது டெல்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் விரைவில் ஏற்படவுள்ளதாகவும் அவர் கூறினார். ஃபாக்ஸ் நியூஸுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அளித்த பேட்டியில், “இந்தியா உலகின் மிக உயர்ந்த வரிகளைக் கொண்ட நாடுகளில் ஒன்று. அவர்கள் வணிகம் செய்வதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்குகிறார்கள். அமெரிக்காவுக்கான தங்கள் வரிகளில் 100 சதவீதத்தைக் குறைக்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என ட்ரம்ப் கூறினார். இந்தியாவுடனான ஒப்பந்தம் விரைவில் வருமா என்று கேட்டபோது, ட்ரம்ப், “அது விரைவில் வரும். நான் அவசரப்படவில்லை. பாருங்கள், எல்லோரும் எங்களுடன் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள். எங்களுடன் தென் கொரியா ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது, ஆனால் நான் எல்லோருடனும் ஒப்பந்தம் செய்யப் போவதில்லை. நான் வரம்பை நிர்ணயிக்கப் போகிறேன். ஒப்பந்தங்களைச் செய்ய விரும்பும் 150…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (மே 17) நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலைகளில் திரண்டு பெருமாளை வழிபட்டனர். காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் மூலம் உலகப் புகழ் பெற்றது வரதராஜ பெருமாள் கோயில். இந்தக் கோயில் 108 வைணவ திவ்யா தேசங்களில் ஒன்று. இந்தக் கோயிலின் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த பிரம்மோற்சவத்தையொட்டி காலை, மாலை இரு வேளையும் பெருமாள் வீதியுலா வரும் நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த பிரம்மோற்சவத்தில் புகழ்பெற்ற உற்சவங்கள் கருட சேவை உற்சவம் மற்றும் தேரோட்டம் ஆகும். இந்த உற்சவங்களைக் காண காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் காஞ்சிபுரத்துக்கு வருகை தருவர். கருட சேவை கடந்த 14-ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் இன்று (மே 17) தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தையொட்டி அதிகாலையில் சாமி புறப்பட்டு தேரடியில்…
‘கிங்’ படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கவுள்ளார் ராணி முகர்ஜி. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கவுள்ள படம் ‘கிங்’. மே 20-ம் தேதி இதன் படப்பிடிப்பு மும்பையில் தொடங்குகிறது. இதற்காக ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், ஷாருக்கானுடன் நடிக்கும் நடிகர்கள் ஒப்பந்தமும் நடைபெற்று வருகிறது. தீபிகா படுகோன், ஷாருக்கானின் மகள் சுஹானா, அபிஷேக் பச்சன், அனில் கபூர், ஜாக்கி ஷெராஃப், அர்சாத் வர்சி மற்றும் அபய் வர்மா உள்ளிட்டோர் இதுவரை ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். மும்பை படப்பிடிப்பு முடிந்தவுடன் அடுத்தகட்டமாக வெளிநாட்டில் மொத்தமாக படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. தற்போது ஷாருக்கானுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ராணி முகர்ஜி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். குச் குஜ் ஹோத்தா ஹே, கபி குஷி கபி கம் உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு ஷாரூக்கான் – ராணி முகர்ஜி இணைந்து நடிக்கவுள்ளனர். இப்படத்தை ரெட் சில்லீஸ் நிறுவனம் மற்றும் மர்பிலிக்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது.
சென்னை: கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 17-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் மின்னஞ்சல் முகவரிக்கு நேற்று முன்தினம் இரவு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலும், அந்த வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியிலும் அதிக திறன் கொண்ட வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது வெள்ளிக்கிழமை வெடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பதிவாளர் அலுவலக ஊழியர்கள், இது தொடர்பாக கோட்டூர்புரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உடன் விரைந்து வந்து சோதனை நடத்தினர். அப்போது எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. இதையடுத்து, வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பப்பட்டது தெரியவந்தது. அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 17 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பென் ஸ்டேட்ஸின் சமீபத்திய ஆய்வில், நகைச்சுவை ஒரு மதிப்புமிக்க பெற்றோருக்குரிய கருவி, சிறந்த உறவுகளை வளர்ப்பது மற்றும் பதற்றத்தை குறைக்கிறது என்று கூறுகிறது. பங்கேற்பாளர்களில் குறிப்பிடத்தக்க பெரும்பான்மையானவர்கள் நகைச்சுவை பெற்றோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறார்கள், பலரும் அதைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். நகைச்சுவையுடன் வளர்க்கப்பட்டவர்கள் தங்கள் பெற்றோருடன் வலுவான உறவைப் புகாரளித்து, அவர்கள் நன்றாக வளர்க்கப்பட்டதாக உணர்ந்தனர். பெற்றோராக உங்களால் முடிந்ததைச் செய்த பிறகும், உங்கள் குழந்தை வெறித்தனமாக படுக்கைக்குச் செல்வது அல்லது துண்டிக்கப்படுவதை நீங்கள் இன்னும் காண்கிறீர்களா? உங்கள் குழந்தையுடனான உங்கள் உறவில் என்ன காணவில்லை என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருந்தால், நிபுணர்களுக்கு வியக்கத்தக்க எளிய பதில் உள்ளது: நகைச்சுவை.ஆம், அது சரி. ஒரு புதிய ஆய்வு சிரிப்பு சிறந்த மருந்து மட்டுமல்ல, ஒரு சிறந்த கருவியாகும் என்று கூறுகிறது. பென் ஸ்டேட் ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான ஆய்வின்படி, நகைச்சுவை ஒரு சிறந்த பெற்றோருக்குரிய கருவியாகும். ஒரு பெற்றோர் அல்லது பராமரிப்பாளர்…
மும்பை: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ‘ஸ்லீப்பர் செல்’ ஆக இருந்த இரண்டு பேரை மும்பை விமான நிலையத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “புனேவில் ஐஇடி தயாரித்தது, சோதனை செய்தது தொடர்பான 2023-ம் ஆண்டு வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் இருவரும் தேடப்பட்டு வந்தனர். கைதானவர்கள் அப்துல்லா ஃபைஸ் சேக் என்கிற டயபர்வாலா மற்றும் தல்ஹா கான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து இந்தியா திரும்பியபோது, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்” என்று தெரிவித்தனர். இதனிடையே, தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘கைது செய்யப்பட்ட இருவரும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்தனர். இவர்களுக்கு எதிராக மும்பை என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வரமுடியாத வாரன்ட் பிறப்பித்துள்ளது. இந்த இரண்டு பேர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.3…
