Author: admin

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் கற்றுக்கொண்டது குறித்து அர்ச்சனா வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அர்ச்சனா. தற்போது திரையுலகிலும் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார். இது தொடர்பாக அர்ச்சனா கூறும்போது, “பிக்பாஸ் நிகழ்ச்சி எனக்கு அடையாளம் மட்டும் கொடுக்கவில்லை. எனது முகமூடி இல்லாத அசல் முகத்தையும் பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்த்தது. இந்த விஷயம் பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்னும் எனக்கு நெருக்கமானதாக மாற்றியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ஒரு விஷயம் நான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், அது அமைதி. நான் அதிகம் பேசக்கூடிய நபர். ஆனால், இப்போது எங்கே பேச வேண்டும் எங்கு அமைதியாக இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேன். இது என்னுடைய புதிய வெர்ஷனை எனக்கே அறிமுகப்படுத்தியது. ஐடி-யில் சேர்ந்திருக்கலாம் அல்லது யுபிஎஸ்சி-க்கு தயாராகி இருக்கலாம். ஏனெனில், என் அப்பா என்னை எப்போதும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக பார்க்க வேண்டும் என்று கனவு கண்டார். ஆனால்,…

Read More

புதுச்சேரி: முன்னாள் முதல்வர் நாராயணசாமி அரசியல் உள்நோக்கத்தோடு துணைநிலை ஆளுநருக்கும், முதல்வருக்கும் ஏதோ கருத்து மோதல் இருப்பது போன்ற செய்தியை கூறியுள்ளார். இது முழுக்க முழுக்க மறுக்கப்பட வேண்டிய, கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இதுபோன்ற பொய்களை எப்போதும் புதுச்சேரி மாநில மக்கள் நம்பமாட்டார்கள், என்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார். புதுச்சேரி பல்கலைக்கழகம் சார்பில் தேசியக்கொடி வெற்றி ஊர்வலம் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (மே 17) நடைபெற்றது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக இந்திய ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தி இந்திய ராணுவத்தின் பலத்தை உலகத்துக்கு தெரியப்படுத்தினர். அதற்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கும் விதமாக இந்தப் பேரணி நடந்தது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு தேசியக்கொடி வெற்றி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பேரணியில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், கல்யாணசுந்தரம் எம்எல்ஏ, பல்கலைக்கழகம் துணை வேந்தர் பிரகாஷ் பாபு மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து…

Read More

குடும்பம், நிதி அல்லது வாழ்க்கை முறை குறித்த கருத்துக்கள் போன்ற ஒத்த மதிப்புகளைக் கொண்டிருப்பது ஒரு உறவுக்கான அடித்தளத்தை உருவாக்குகிறது. இது நீங்கள் இருவரும் பொதுவானதாகக் கண்டால், நீங்கள் ஒரே இசையையோ அல்லது உணவு வகையையோ ரசித்தாலும், கஷ்டங்களை சகித்துக்கொள்ள முடியும் என்பதில் தெளிவாக இருங்கள். உங்கள் நீண்ட கால குறிக்கோள்கள் சீரமைக்கப்பட்டால் உங்கள் எதிர்காலம் மிகவும் சீராக செல்லும்.நீங்கள் சிரித்து வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைகிறீர்கள்உங்கள் பங்குதாரர் சுற்றி இருக்கும்போது நீங்கள் நிறைய சிரிக்கிறீர்களா? ஆம் எனில், ஒரு குறைவான காதல் மொழி சிரிப்பு, உங்கள் போட்டியை நீங்கள் சந்தித்தீர்கள். ஒரு கூட்டு என்பது செயல்பாட்டு மட்டுமல்ல, நீங்கள் ஒருவருக்கொருவர் நிறுவனத்தை ரசிக்கிறீர்கள், அடிக்கடி சிரிப்பீர்கள், மேலும் நினைவுகளை ஒன்றாகச் செய்தால், சிறிய வழிகளில் கூட மகிழ்ச்சியாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது.

Read More

இஸ்லாமாபாத்: இந்தியா – பாகிஸ்தான் இடையே நீடித்த போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை மற்றும் நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை உறுதி செய்ய அமெரிக்காவுடன் இணைந்து பிரிட்டன் பணியாற்றி வருவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார். மேலும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் தங்களின் கடமைகளை நிறைவேற்ற அனைத்து தரப்பையும் அவர் வலியுறுத்தினார். இரண்டு நாள் பாகிஸ்தான் பயணத்தின் இறுதி நாளில் சர்வதேச ஊடகத்திடம் பேசிய டேவிட் லாம்மி கூறுகையில், “நீடித்த போர் நிறுத்தம் ஏற்படுவதற்கும், பேச்சுவார்த்தை நடப்பதை உறுதி செய்வதற்கும், இந்தியா – பாகிஸ்தான் இடையே நம்பிக்கை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை உருவாக்குவதற்கும் அமெரிக்காவுடன் இணைந்து நாங்களும் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். அனைத்து தரப்பினரும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் தங்களின் கடமையை நிறைவேற்றிட நாங்கள் வலியுறுத்துவோம். பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தானுடன் இணைந்து பிரிட்டன் தொடர்ந்து போராடும். பயங்கரவாதம் அந்த நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் பிராந்தியத்துக்கும் ஒரு பெரும் களங்கம். இந்தியா பாகிஸ்தான்…

Read More

கமல்ஹாசன் – சிம்பு கதாபாத்திரங்களின் மோதலை மையப்படுத்தி, தாதா வகையறா பின்புலத்துடன் திரைக்கதை உருவாகி இருப்பதை தெளிவாகக் காட்டுகிறது ‘தக் லைஃப்’ படத்தின் ட்ரெய்லர். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஜூன் 5-ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது, இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. ட்ரெய்லர் எப்படி? – தாதாவாக கமல்ஹாசன், குட்டி தாதாவாக சிம்பு இருவரும் தங்களுக்கே உரிய உடமொழிகளுடன் பிணைப்புடன் ஆரம்பித்து, எதிரெதிர் துருவங்களாக உருவெடுப்பதாக திரைக்கதை நகர்வதை ட்ரெய்லர் காட்சிகள் உறுதி செய்கின்றன. கமல்ஹாசனின் கெட்டப்புகளும் வசன உச்சரிப்புகளும் தனித்து கவனம் ஈர்க்க, இன்னொரு பக்கம் சிம்புவின் ஆக்‌ஷனில் அனல்…

Read More

திண்டுக்கல்: திண்டுக்கல் – சபரிமலை ரயில் பாதை திட்ட ஆய்வுக்காக ரயில்வே நிர்வாகம் ரூ.46 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கேரளப் பகுதியில் புலிகள் சரணாலயம், முல்லை பெரியாறு அணை, அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளதால் 2 கட்டங்களாக இத்திட்டத்தை செயல்படுத்துவது எளிதாக இருக்கும் என்று பொதுமக்களும், வர்த்தகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையாக திண்டுக்கல்-சபரிமலை ரயில் பாதைத் திட்டம் இருந்து வருகிறது. சபரிமலை பக்தர்கள் மட்டுமல்லாது, இடுக்கி மாவட்ட வர்த்தகர்கள், இருமாநில சுற்றுலா பயணிகளும் இத்திட்டம் மூலம் அதிகளவில் பயன்பெறுவர். இதனால் இத்திட்டம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல்-குமுளி அகல ரயில்பாதை போராட்டக் குழு உருவகாக்கப்பட்டு, தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. முதற்கட்டமாக திண்டுக்கல்-லோயர்கேம்ப் வரை தரைப்பகுதியிலும், பின்பு லோயர்கேம்ப்பில் இருந்து குமுளி மலைப்பாதை வண்டிப்பெரியாறு வழியே அடுத்தகட்டமாகவும் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக…

Read More

பாலஸ்தீனத்தை ஆதரிப்பதற்கோ அல்லது ஒரு பாலஸ்தீனியரை திருமணம் செய்துகொள்வதற்கோ வருத்தப்படவில்லை என்று இந்திய-ஆரிஜின் பதர் கான் சூரி கூறினார். ஒரு மாதத்திற்கும் மேலாக ஐ.சி.இ. அவர் விடுவிக்கப்பட்ட பின்னர் என்.பி.சி நியூஸிடம் அவர் எல்லா இடங்களிலும் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளார் என்று கூறினார் – மணிக்கட்டு, கணுக்கால், உடல்.முதல் ஏழு, எட்டு நாட்கள், அவர் தனது நிழலைக் கூட தவறவிட்டார். “கட்டணம் இல்லை, எதுவும் இல்லை. அவர்கள் என்னிடமிருந்து ஒரு துணை மனிதனை உருவாக்கினர்,” என்று அவர் கூறினார்.படார் கான் சூரி ஏன் கைது செய்யப்பட்டார்?பாதர் கான் சூரி அவரது மாமியார் அகமது யூசெப்பிற்காக கைது செய்யப்பட்டார், அவர் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனாயின் ஆலோசகராக பணியாற்றினார். சூரியின் மனைவி மாபீஸ் சலே ஒரு பாலஸ்தீனிய-அமெரிக்கன், சூரியின் குடும்பம் இந்தியாவை தளமாகக் கொண்டிருந்தாலும், அவர் தனது திருமணத்திற்காக காசாவுக்குச் சென்றார். கான் சூரி “ஹமாஸ் பிரச்சாரத்தை தீவிரமாக பரப்பியதாகவும், சமூக ஊடகங்களில் ஆண்டிசெமிட்டிசத்தை…

Read More

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், 600-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்களை இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தின. இதுகுறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் ராணுவம் இந்திய நகரங்களை குறிவைக்க முயன்றபோது, 600க்கும் மேற்பட்ட அந்நாட்டு ட்ரோன்கள் இந்திய பாதுகாப்புப் படைகளால் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. என்ன செய்தது ராணுவம்? – பாகிஸ்தானின் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ளும் விதமாக, இந்திய ஆயுதப் படைகள் ஒரு விரிவான வான் பாதுகாப்பு குடையை செயல்படுத்தின. இதற்காக எல்லை கட்டுப்பாட்டுக் கோடு முழுவதும் 1000க்கும் மேற்பட்ட விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை இந்திய ராணுவம் பயன்படுத்தியது. பெரிய வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்ட 750க்கும் மேற்பட்ட தரையிலிருந்து தாக்கும் வான் ஏவுகணை…

Read More

கும்பகோணம்: 10-ம் வகுப்பு பொது தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற அரசு பேருந்து நடத்துநரின் மகளுக்கு அரசுப் போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட உயர் அலுவலர்கள் பாராட்டு தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் கும்பகோணம்-2 கிளையில் நடத்துநராக பணியாற்றுபவர் வெங்கடேசன். இவரது மகள் சோபியா 10-ம் வகுப்பு பொது தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார். இதையடுத்து, நிர்வாக இயக்குநர் இரா.பொன்முடி வழிக்காட்டுதலின்படி பொது மேலாளர் என்.முத்துக்குமாரசாமி, மாணவி சோபியாவை, கும்பகோணம் கோட்ட தலைமை அரசு போக்குவரத்து கழக அலுவலகத்துக்கு வரவழைத்து, இனிப்பு, பரிசு வழங்கி, பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். இதில், துணை மேலாளர்கள் தங்கபாண்டியன், கார்த்திகேயன், உதவி மேலாளர்கள் கோபாலகிருஷ்ணன், குமார், உதவி பொறியாளர்கள் ராஜ்மோகன், மேரி மற்றும் ஓட்டுநர், நடத்துநர்கள், பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read More

சென்னை: “கோடைக்கால மின் தேவை, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவாக உள்ளது. இதனால், இந்த ஆண்டு கோடை மின் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும்” என தமிழக மின்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். சென்னை, அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இயங்கி வரும் மின்நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை, மின்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் இன்று ஆய்வு செய்தார். அப்போது, தற்போது நிலவி வரும் கடும் கோடை வெப்பம், பல்வேறு மாவட்டங்களில் கடும் சூறாவளி காற்று மற்றும் கனமழை காரணமாக மின்னகத்தில் பதிவான மின்சாரம் தொடர்பான பொதுமக்களின் புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறியது, “மின்னகத்தில், பொதுமக்களிடமிருந்து புகார்களை பெறுவதற்காக, 3 ஷிப்டுகளில், ஒவ்வொரு ஷிப்ட்டுக்கும் 3 மேற்பார்வையாளர்கள் உட்பட 94 பணியாளர்களைக் கொண்டும், 45 மின்பகிர்மான வட்டங்களிலும் நாள் ஒன்றுக்கு 4…

Read More