Author: admin

சிறுநீரக நோய்கள், பெரும்பாலும் மேம்பட்ட வரை அமைதியாக, கழிவு வடிகட்டுதல் மற்றும் இரத்த அழுத்த ஒழுங்குமுறை போன்ற முக்கிய செயல்பாடுகளை பாதிக்கின்றன. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் குடும்ப வரலாறு ஆகியவை ஆபத்தை உயர்த்துகின்றன. சிறுநீரக செயலிழப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய இருதய சிக்கல்களுக்கு முன்னேறுவதைத் தடுக்க, வழக்கமான கண்காணிப்பு மற்றும் சிறுநீரக செயல்பாட்டு சோதனைகள் மூலம் முன்கூட்டியே கண்டறிதல் முக்கியமானது, குறிப்பாக அதிக ஆபத்துள்ள நபர்களுக்கு. சிறுநீரகங்கள் உங்கள் உடலில் ஒரு ஒருங்கிணைந்த பாத்திரத்தை வகிக்கும் முக்கிய உறுப்புகள். அவை கழிவுகளை வடிகட்டுகின்றன, திரவங்களை ஒழுங்குபடுத்துகின்றன, மேலும் பல உடல் செயல்பாடுகளை ஆதரிக்கின்றன. சரியான கவனிப்பு எடுக்கப்படாவிட்டால், அது பல நோய்களுக்கு வழிவகுக்கும்.இதை மோசமாக்குவது என்னவென்றால், சிறுநீரக நோய்கள் அமைதியாக உருவாகலாம், மேலும் அது முன்னேறும்போது மட்டுமே அறிகுறிகளைக் காட்டலாம். வழக்கமான கண்காணிப்பு மற்றும் ஆபத்து காரணிகளைப் பற்றிய விழிப்புணர்வு உங்கள் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதிப்படுத்த உதவும்.…

Read More

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க திமுகவில் மண்டல அளவில் கனிமொழி, செந்தில் பாலாஜி மற்றும் கே.என்.நேரு உள்ளிட்ட அமைச்சர்கள் என 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஆளும் திமுக அரசு, தொடர் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தாக வேண்டும் என்ற நோக்கில், கடந்தாண்டு முதலே தேர்தலுக்கான ஆயத்த பணிகளைத் தொடங்கி விட்டது. அந்தவகையில், தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர், மாவட்ட வாரியாக அனைத்து அணிகளின் நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, ஒன்றிய அளவி்ல் பொறுப்பாளர்கள் நியமிப்பது, மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்டவை தொடர்பாக, தலைமைக்கு பரிந்துரைகளை அளித்தனர். இதையடுத்து, தற்போது மாவட்ட வாரியாக பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு, பூத் கமிட்டி உறுப்பிரனர்களுக்கு பல்வேறு…

Read More

ஆரணி/ மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். அதிமுக ஆட்சியில் கடந்த 2016-2021 காலகட்டத்தில் அறநிலைய துறை அமைச்சராக இருந்தவர் சேவூர் ராமச்சந்திரன். ஆரணி எம்எல்ஏவாக உள்ளார். இவர் அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.8 கோடிக்கு சொத்து சேர்த்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து, சேவூர் ராமச்சந்திரன், அவரது மனைவி மணிமேகலை, மகன்கள் சந்தோஷ்குமார், விஜயகுமார் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், ஆரணியில் உள்ள சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மகன் சந்தோஷ்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். இதில், 20 சொத்து ஆவணங்கள், 10-க்கும் மேற்பட்ட வங்கி பாஸ் புத்தகங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. உசிலம்பட்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பி.நீதிபதி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், உசிலம்பட்டி அண்ணா நகரில் உள்ள பி.நீதிபதி வீட்டிலும்…

Read More

மின் தடையால் பாதிக்கப்பட்ட நீட் தேர்வு மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து தேசிய தேர்வு முகமைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூரைச் சேர்ந்த சாய் ப்ரியா, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹரிஹரன் மற்றும் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அக்‌ஷயா உள்ளிட்ட 13 நீட் தேர்வு எழுதிய மாணவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தேசிய மருத்துவ ஆணையத்தின் மூலம் மே 4-ம் தேதி மருத்துவ படிப்புக்காக நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட்டது. இந்நிலையில், ஆவடியில் உள்ள ஶ்ரீ கேந்திரிய வித்யாலயா சி.ஆர்.பி.எப் மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. அனைத்து சோதனைகளுக்கும் பிறகு 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் 2.45 மணிக்கு தொடங்கிய கனமழை காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின்…

Read More

புதுடெல்லி: எல்லை தாண்​டிய தீவிர​வாதத்தை ஊக்​கு​வித்து வரும் பாகிஸ்​தான் குறித்​து, உலக நாடுகளின் தலைவர்களிடம் ஆதா​ரத்துடன் விளக்கும் விதமாக ரவிசங்​கர் பிர​சாத், சசிதரூர், கனி​மொழி உட்பட 7 பேர் தலை​மை​யில் எம்​.பி.க்​கள் குழுக்​களை மத்​திய அரசு அமைத்​துள்​ளது. இந்த குழு​வினர் பிரிட்​டன், வளை​குடா நாடு​கள் உட்பட பல்​வேறு நாடு​களுக்கும் 10 நாட்கள் பயணம் மேற்கொண்டு, இந்​தி​யா​வின் நிலை குறித்து விளக்க உள்​ளனர். காஷ்மீரின் பஹல்​காமில் தீவிர​வா​தி​கள் கடந்த மாதம் 22-ம் தேதி நடத்​திய கொடூர தாக்குதலில் சுற்​றுலா பயணி​கள் உட்பட 26 பேர் உயி​ரிழந்​தனர். இதில் பாகிஸ்தான் தீவிர​வா​தி​களுக்கு நேரடி தொடர்பு இருப்​பது தெரியவந்த​து. இதையடுத்​து, கடந்த 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்​தானுக்கு இந்​தியா பதிலடி கொடுத்​தது. இதில் 100-க்கும் மேற்பட்ட தீவிர​வா​தி​கள் உயி​ரிழந்​தனர். இதைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள எல்லை பகுதிகளை குறிவைத்து ட்ரோன்கள், ஏவுகணைகளை பாகிஸ்தான்…

Read More

யோகிபாபு தங்கமான மனிதர் என்று விஜய் சேதுபதி புகழாரம் சூட்டியிருக்கிறார். ஆறுமுககுமார் எழுதி, இயக்கி தயாரித்துள்ள படம் ‘ஏஸ்’. மே 23-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், பப்லு ப்ரித்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். இந்த விழாவில் விஜய் சேதுபதி பேசும் போது, தன்னுடன் நடித்த ஒவ்வொரு நடிகரையும் குறிப்பிட்டு பணிபுரிந்த அனுபவத்தை குறிப்பிட்டார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள யோகி பாபு குறித்து பேசிய அவர், “யோகிபாபு தான் இப்படத்தின் இன்னொரு ஹீரோ என்று சொல்வேன். அவர் எப்போதுமே ஆச்சரியம் தான். நிறைய படங்களில் நடிக்கிறார். எப்படி அவருடைய மூளை எப்படி இவ்வளவு யோசிக்குது என நினைப்பேன். அவருடைய சிந்தனை என்னை ரொம்ப ஆச்சரியப்படுத்தும். சில சமயங்களில் டப்பிங்கில் டயலாக் சேர்த்துவிடுவார். நான் டப்பிங் செய்து முடித்தவுடன் அவரை அழைத்து படம் போட்டு…

Read More

சென்னை: அதிமுக வளர்ச்சி பணிகள் குறித்து வருமே மே 29, 30 தேதிகளில் மாவட்ட செயலாளர்களுடன் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அதிமுக கூட்டணி சிந்தாமல், சிதறாமல் உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில், அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. மேலும் பல கட்சிகளுடன் தொடர்ந்து மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் வகையில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுகவின் வளர்ச்சி பணிகள் குறித்து, கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில், வரும் மே 29, 30 தேதிகளில் கட்சி ரீதியிலான மாவட்ட வாரியாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும்…

Read More

மிருணாள் தாக்குரின் புதிய க்ளிக்ஸ் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்துள்ளது. புகைப்படங்களை பொறுத்தவரை மிகவும் கேஷுவலான லுக்கில் கவனம் ஈர்க்கிறார் மிருணாள். மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த மிருணாள் தாக்குர், துலுவை தாய்மொழியாக கொண்டவர். அவரின் தொடக்கமே மராத்தி படத்தில் இருந்து தான் ஆரம்பமானது. அடுத்து இந்திப் படங்களில் நடிக்க தொடங்கினார். ஹிருத்திக் ரோஷனின் ‘சூப்பர் 30’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் கவனம் ஈர்த்தார். எல்லாவற்றையும் தாண்டி 2022-ல் வெளியான துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’ மிருணாள் தாக்குருக்கு பரவலான ரசிகர்களைப் பெற்று கொடுத்தது. இருப்பினும் அவர் நேரடி தமிழ் படங்களில் எப்போது நடிப்பார் என்ற எதிர்பார்ப்பில் தமிழ் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தெலுங்கில் வெளியான ‘ஹாய் நானா’, ‘ஃபேமிலி ஸ்டார்’, ‘கல்கி 2898 ஏடி’ படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

Read More

சென்னை: தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் தொடங்கியது. சென்னையில் இருந்து புறப்பட்ட முதல் விமானத்தில் 402 பேர் புறப்பட்டனர். தமிழகத்திலிருந்து நடப்பாண்டு 5,730 பேர் ஹஜ் புனித பயணம் மேற்கொள்கின்றனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக 5,407 பேரும், மீதமுள்ள 323 பேர் பல்வேறு மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் இருந்தும் பயணம் மேற்கொள்கின்றனர். ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் 402 பேர் அடங்கிய முதல் குழுவினர் நேற்று சென்னை விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் தனி விமானத்தில் ஜெட்டாவுக்கு புறப்பட்டனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் சிறுபான்மையர் நலன் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழி அனுப்பி வைத்தார். சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் தமிழக மாநில ஹஜ் குழு தலைவர் ப.அப்துல் சமது, செயல் அலுவலர் மு.அ.சித்திக், நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ்கனி, சட்டப்பேரவை உறுப்பினர் அசன்…

Read More

இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தினேன். ஆனால் அதற்கான பெயரும் புகழும் கிடைக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பாக்ஸ் தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறேன். அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இடையே பொருளாதார உறவை வலுப்படுத்தி உள்ளேன். என்னைப் பொறுத்தவரை வர்த்தகத்தை ஆயுதமாக பயன்படுத்தி அமைதியை நிலைநாட்டி வருகிறேன். அண்மையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மிகப்பெரிய போர் வெடித்தது. இரு நாடுகள் இடையே அணு ஆயுத போர் மூளும் அபாயம் எழுந்தது. உடனடியாக இரு நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவின் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். வர்த்தகத்தை ஆயுதமாக பயன்படுத்தி இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தினேன். ஆனால் அதற்கான அங்கீகாரம் எனக்கு கிடைக்கவில்லை, பெயரும், புகழும் கிடைக்கவில்லை. ரஷ்யா, உக்ரைன் போர்: ரஷ்யா, உக்ரைன் இடையே பல ஆண்டுகளாக போர்…

Read More