Author: admin

புதுடெல்லி: இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனம் (இஸ்​ரோ) இன்று செலுத்​தும் செயற்​கைக்​கோள் மூலம் இரவுநேர கண்​காணிப்பு திறன் அதி​கரிக்க உள்​ளது. ஆந்​திர மாநிலம் ஸ்ரீஹரி​கோட்​டாவில் உள்ள சதீஷ் தவன் விண்​வெளி மையத்​தில் இருந்து பிஎஸ்​எல்வி ராக்​கெட் மூலம் புதிய ரேடார் செயற்​கைக்​கோளை இஸ்ரோ இன்று காலை 5.59 மணிக்கு விண்​ணில் செலுத்​தியது. இஓஎஸ்-09 என்ற இந்த ரேடார் இமேஜிங் செயற்​கைக்​கோள் 1,696 கிலோ எடை கொண்​டது. பூமி​யில் இருந்து சுமார் 500 கி.மீ. உயரத்​தில் நிலைநிறுத்​தப்பட உள்​ளது. இஸ்​ரோ​வின் 101-வது ராக்​கெட் இதனை விண்​ணில் செலுத்தியது. உள்​நாட்டு தொழில்​நுட்​பத்​தில் தயாரிக்​கப்​பட்ட இந்த செயற்​கைக்​கோள், பெங்​களூரு​வில் உள்ள இஸ்​ரோ​ மையத்​தில் வடிவ​மைக்​கப்​பட்​டது. இந்த ரேடார் செயற்​கைக்​கோள் அனைத்து காலநிலை​யிலும் குறைந்த வெளிச்​சத்​தி​லும் பூமி​யின் மேற்​பரப்பை தெளி​வாக படம்​பிடிக்​கக் கூடியது. இது நாட்​டின் செயற்​கைக்​கோள் அடிப்​படையி​லான கண்​காணிப்பு திறனுக்கு மேலும் பலம் சேர்க்​கும் என கூறப்​படு​கிறது. பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுக்கு பதிலடி​யாக பாகிஸ்​தானுக்கு எதி​ராக…

Read More

சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 29-ம் தேதி நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிதி தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 14 மசோதாக்கள் அவரிடம் நிலுவையில் உள்ளன. சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் செய்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது. மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், குடியரசுத் தலைவர் 3 மாதங்களிலும் முடிவு எடுக்க வேண்டும் என்றும் கெடு விதித்து உத்தரவிட்டது. இதற்கிடையே, தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி, ஏப்ரல் 29-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த கூட்டத்தொடரில் நிதி தொடர்பான 4 மசோதாக்கள் உட்பட மொத்தம் 18 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இவை அனைத்தும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. இந்நிலையில், துறைகளுக்கான நிதி ஒதுக்கம், மானிய கோரிக்கைகள்…

Read More

உலர் பழங்கள் ஏற்றி வந்த ஆப்கானிஸ்தானின் 160 லாரிகளுக்கு அட்டாரி எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆப்கானிஸ்தான், இந்தியா இடையிலான ஒருவழி வர்த்தகத்துக்கு பாகிஸ்தான் அனுமதி வழங்கி இருந்தது. இதன்படி, ஆப்கனிலிருந்து பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் வாஹா எல்லை வழியாக இந்தியாவுக்கு வரும். ஆனால் இந்தியாவிலிருந்து ஆப்கனுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்ய பாகிஸ்தான் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில், பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து, பாகிஸ்தானை தரைவழியாக இணைக்கும் முக்கியமான அட்டாரி-வாஹா எல்லையை மத்திய அரசு மூடியது. இந்த சூழ்நிலையில், ஆப்கனிலிருந்து உலர்பழங்களை ஏற்றி வந்த 160 லாரிகள் அட்டாரி எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய மத்திய அரசு சிறப்பு அனுமதி வழங்கி உள்ளது. முன்னதாக வாஹா பகுதியைக் கடக்க பாகிஸ்தானும் அனுமதி வழங்கியது. ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினரின் ஆட்சி நடைபெறுகிறது. இதை பெரும்பாலான நாடுகள் அங்கீகரிக்கவில்லை. ஆனாலும், ஆப்கானிஸ்தான், இந்தியா இடையிலான இருதரப்பு உறவு…

Read More

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பீகார் மாநிலத்தை சேர்ந்த மாணவி தமிழில் 93 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தனஞ்சே திவாரி, ரீனா தேவி தம்பதி, கடந்த 2019ம் ஆண்டு முதல், குடும்பத்துடன் சென்னை பல்லாவரத்தை அடுத்த கவுல் பஜார் வந்து தங்கி வருகின்றனர். தனஞ்சேதி வாரி அதே பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறையில் கூலி வேலை செய்து வந்த நிலையில், அவரது மனைவி அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவர்களது இரண்டாவது மகள் ஜியா குமாரி (16), கவுல் பஜார் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், ஜியா குமாரி 467 மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவியாக வந்துள்ளார். குறிப்பாக தமிழ் பாடத்தில் 93 மதிப்பெண்கள் பெற்று…

Read More

டாம் க்ரூஸின் மிஷன் சீரிஸ் படங்களுக்கு இந்தியாவில் கிடைக்கும் வரவேற்பு குறித்து சொல்லி தெரிய வேண்டியதில்லை. உள்ளூர் ஹீரோக்களுக்கு இணையாக இந்தியாவில் டாம் க்ரூஸுக்கும் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய பெருமை ‘மிஷன் இம்பாசிபிள்’ படங்களையே சாரும். 1996-ல் தொடங்கிய இந்த படவரிசை ஏறக்குறைய 34 வருடங்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்திருக்கிறது. முந்தைய பாகத்தில் என்டிடி எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்திடம் இருந்து உலகை காக்கும் பொருட்டு நடுக்கடலின் ஆழத்தில் கிடக்கும் செவாஸ்டோபோல் என்னும் நீர்மூழ்கியை தேடி ஈதன் ஹன்ட் (டாம் க்ரூஸ்) செல்வதுடன் முடிந்த கதை, இரண்டு மாதங்களுக்குப் பிறகு இதில் தொடங்குகிறது. நீர்மூழ்கியில் இருக்கும் சோர்ஸ் கோட்-ஐ எடுத்து என்டிடியை தடுக்காவிட்டால் அது உலக நாடுகளின் அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் அபாயம் ஏற்படுகிறது. இன்னொரு புறம் அதே சோர்ஸ் கோட்-ஐ கைப்பற்றி என்டிடியை கட்டுப்படுத்த நினைகும் வில்லன் கேப்ரியல். வில்லனை தடுத்து என்டிடியின் அட்டகாசங்களை ஹீரோ கட்டுப்படுத்தி மீண்டும்…

Read More

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் தகித்து வந்த நிலையில், நேற்று திடீரென பெய்த சாரல் மழை காரணமாக மாநகரம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது. மே 4ம் தேதி முதல் கத்திரி வெயிலும் தொடங்கியது. இதனால் சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் பதிவானது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை, புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகலில் ஆங்காங்கே லேசான சாரல் மழை பெய்தது. இதன் தாக்கத்தால் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை நேற்று மாலை நிலவரப்படி 89 டிகிரி ஃபாரன் ஹீட்டாக குறைந்து, மாநகரம் முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவியது. கோடை வெயிலால் அவதிப்பட்ட மக்களுக்கு இது சற்று ஆறுதலைத் தந்தது.

Read More

நாசா எக்ஸ்ட்ராவெஹிகுலர் மொபிலிட்டி யூனிட் (ஈ.எம்.யூ) என்பது விண்வெளியில் விண்வெளி வீரர்களைப் பாதுகாக்கவும் உதவவும் வடிவமைக்கப்பட்ட ஒரு அதிநவீன விண்கலமாகும். பாதுகாப்பு கியரை விட, ஈ.எம்.யூ என்பது ஒரு சிறிய உயிர்வாழும் அமைப்பாகும், இது விண்வெளி வீரர்களை சூப்பர்-குளிர் வெப்பநிலை, நச்சு கதிர்வீச்சு மற்றும் விண்வெளியின் வெற்றிடத்திலிருந்து பாதுகாக்கிறது. ஈ.எம்.யூ வெப்ப பாதுகாப்பின் அடுக்குகள், அழுத்தப்பட்ட வீட்டுவசதி மற்றும் ஆக்ஸிஜன் வழங்கும், கார்பன் டை ஆக்சைடு நீக்கும் வாழ்க்கை ஆதரவு பையுடனான வெப்பநிலையையும் கட்டுப்படுத்துகிறது. இங்கே, ஈ.எம்.யுவின் அற்புதமான வடிவமைப்பு, அதன் அத்தியாவசிய கூறுகள் மற்றும் விண்வெளிக்கு வெளியே உள்ள சிக்கலான பணிகளை எக்ஸ்ட்ரேவ்ஹிகுலர் நடவடிக்கைகள் (ஈ.வி.ஏக்கள்) மூலம் பாதுகாப்பாக நிறைவேற்றுவது எவ்வாறு சாத்தியமாக்குகிறது என்பதைப் பற்றி விவாதிப்போம்.விண்வெளிகளை சாத்தியமாக்கும் நாசா வழக்குதி நாசா விண்வெளி. விண்வெளி திட்டத்தை நாசாவின் மனித ஆய்வு ஈ.எம்.யுவைப் பொறுத்தது. விண்வெளியின் பாதுகாப்பிற்கு வெளியே பணிபுரியும் போது விண்வெளி வீரர்களைப் பாதுகாப்பதற்கும் அவற்றை வசதியாக வைத்திருக்கவும்…

Read More

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மங்களூருவை அடுத்துள்ள குந்தாப்பூர் சாலையில் நேற்று காலையில் பாகிஸ்தான் தேசிய கொடி கட்டப்பட்டிருந்தது. சாலையோரத்தில் பழுதாக நின்ற வாகனத்திலும் பாகிஸ்தான் கொடி கட்டப்பட்டிருந்தது. இதனால் அங்கு பஜ்ரங் தள், ஹனுமன் சேனா ஆகிய அமைப்பினர் குவிந்ததால் அங்கு போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பஜ்ரங் தள் நிர்வாகி சச்சின் குமார் அளித்த புகாரின்பேரில் குந்தாப்புரா புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து மர்ம நபர்கள் மீது 2 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். குந்தாபுரா சாலையோரத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 15 புள்ளிகளை பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னறே வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் பஞ்சாப் அணி உள்ளது. பஞ்சாப் அணி கடைசியாக கடந்த 8-ம் தேதி டெல்லி அணியுடன் தரம்சாலாவில் மோதியது. ஆனால் இந்த ஆட்டம் இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டிருந்தது. 10 நாட்கள் இடைவேளைக்கு பின்னர் பஞ்சாப் அணி புத்துணர்ச்சியுடன் களமிறங்குகிறது. எஞ்சியுள்ள…

Read More

சென்னை: ஓஎம்ஆர் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில், காருக்குள் இருந்த ஐ.டி. ஊழியர் குடும்பத்துடன் உயிர் தப்பினார். சோழிங்கநல்லூரில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி நேற்று மாலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வாடகை காரில் சோழிங்கநல்லூரை சேர்ந்த ஐ.டி. ஊழியரான விக்னேஷ் (45) என்பவர் மனைவி தன்யா (40) மற்றும் குடும்பத்தினர் அக்ஷயா (12). அத்வைத் (9) ஆகியோர் பயணித்தனர். காரை மரியதாஸ் (47) என்பவர் ஓட்டினார். டைடல் பார்க் சந்திப்பு ஓஎம் ஆர் சாலையில் (இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே) சென்று கொண்டிருந்த போது. திடீரென் சாலை நடுவே சுமார் 10 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம் ஏற்பட் டது. இந்த பள்ளத்துக்குள் கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. காருக்குள் இருந்த 5 பேரும் கூச்சலிட்டனர். தகவல் அறிந்து தரமணி போலீஸார். போக்குவரத்து போலீஸார் மற்றும் தீயணைப்பு…

Read More