Author: admin

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் அடிவாரத்தில் ஆசியாவிலேயே மிக உயரமாக 184 அடியில் முருகன் சிலை அமைக்கும் பணிக்கான நடவடிக்கைகள் வெகு விரைவில் மேற்கொள்ளப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், “தமிழக முதல்வர் தலைமையிலான சீர்மிகு ஆட்சியில் திருக்கோயில்களுக்கு குடமுழுக்குகள், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், அன்னதானக் கூடங்கள், தர்ப்பண மண்டபங்கள், பசுமட காப்பகங்கள் என அனைத்து பணிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டம், பேரூர், பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் கடந்த பிப்ரவரி மாதம் குடமுழுக்கு மிகச்சிறப்பாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இத்திருக்கோயிலில் தமிழ்நாட்டில் எங்கும் இல்லாத வகையில் ஒரே நேரத்தில் 50 நபர்கள் அமர்ந்து தர்ப்பணம் செய்கின்ற வகையில் ரூ.11.85 கோடி செலவில் மிகப் பெரிய அளவில் தர்ப்பண மண்டபம், சுகாதார வளாகம், காத்திருப்புக் கூடம், தகவல் மையம், படித்துறை சீரமைப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு…

Read More

மும்பை: பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டினை விளக்குவதற்காக பல்வேறு வெளிநாடுகளுக்குச் செல்ல இருக்கும் பிரதிநிதிகள் குழுவினை மாப்பிள்ளை ஊர்வலத்துடன் ஒப்பிட்டுள்ள சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி. சஞ்சய் ரவுத், இண்டியா கூட்டணி இதனைப் புறக்கணிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மேலும், சிவ சேனா (ஷிண்டே பிரிவு) ஸ்ரீகாந்த் ஷிண்டே எதனைப் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்திய இந்தியா – பாகிஸ்தான் மோதலில், இந்தியாவின் நிலைப்பாட்டினை விளக்கவும், பயங்கரவாதத்தை ஆதரிப்பதாக குற்றம்சாட்டி பாகிஸ்தான் மீதான அழுத்தத்தை அதிகரிக்கவும் அனைத்துக் கட்சிகளின் எம்.பி.கள் அடங்கிய 7 பிரதிநிதிகள் குழுக்களை முக்கியமான வெளிநாடுகளுக்கு அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தநிலையில், இந்த பிரதிநிதிகள் குழுக்கள் குறித்து சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி. சஞ்சய் ரவுத் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “இந்த மணமகன் ஊர்வலத்துக்கு அவசியமே இல்லை. பிரதமர் மிகவும் பலவீனமானவர், இந்த அளவுக்கு அவசரம் காட்டவேண்டிய அவசியம் இல்லை. மகாராஷ்டிராவின் துணை…

Read More

Last Updated : 18 May, 2025 05:39 PM Published : 18 May 2025 05:39 PM Last Updated : 18 May 2025 05:39 PM ஜாவேத் அக்தர் | கோப்புப் படம். மும்பை: “என்னைப் பொறுத்தவரை பாகிஸ்தானைவிட நரகம் மேலானது. நான் நரகத்துக்கே செல்லவே விரும்புகிறேன்.” என பாலிவுட் பிரபலம் ஜாவேத் அக்தர் தெரிவித்துள்ளார். பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாசிரியரும் பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் நேற்று ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த விழாவில் அவர் பேசுகையில், “ஒரு தரப்பினர் என்னை ‘காஃபிர்’ என்று கூறுகின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாத நான் நிச்சயமாக நரகத்துக்கு செல்வேன் என்று அவர்கள் சாபமிடுகின்றனர். மற்றொரு தரப்பினர் என்னை ‘ஜிகாதி’ என்று விமர்சிக்கின்றனர். அவர்கள் என்னை பாகிஸ்தான் செல்லுமாறு கூறுகின்றனர். இருதரப்பினரும் சொல்வதன்படி எனக்கு 2 வாய்ப்புகள் உள்ளன. ஒன்று நான் நரகத்துக்கு செல்ல வேண்டும்.…

Read More

சென்னை: டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்படும் குரூப்-1 தேர்வு வயது உச்சவரம்பை மற்ற 12 மாநிலங்களில் உள்ளது போல 49 வயது வரை உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்துப்போட்டி தேர்வு அமைப்பு சார்பில், சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்படும் குரூப்-1 தேர்வு வயது உச்சவரம்பை மற்ற 12 மாநிலங்களில் உள்ளது போல 49 வயது வரை உயர்த்த வேண்டும்; வெளிப்படைத்தன்மையுடன் டிஎன்பிஎஸ்சி செயல்பட வேண்டும்; தமிழ் வழியில் முதன்மைத் தேர்வு எழுதுபவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு 20 சதவீதம் வழங்க வேண்டும். தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டும்; முதன்மை (மெயின்ஸ்) தேர்வு மதிப்பீட்டினை நியாயமான முறையில் வழங்க வேண்டும்; ஆங்கில விடையே இறுதியானது என்பதை மாற்றி தமிழ் விடைகளே இறுதியானது என மாற்றி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துப்போட்டி தேர்வு அமைப்பு சார்பில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம்…

Read More

ஸ்ரீநகர்: பாகிஸ்தானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து அமலில் இருப்பதாகவும், போர்நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்வதற்கு காலாவதி தேதி இல்லை என்றும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் (டிஜிஎம்ஓ ) அளவிலான பேச்சுவார்த்தை எதுவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திட்டமிட்டப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய ராணுவம் கூறுகையில், “இன்று டிஜிஎம்ஓ அளவிலான பேச்சுவார்த்தை எதுவும் திட்டமிடப்படவில்லை. மே 12ம் தேதி நடந்த ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்கள் சந்திப்பில் ஏற்பட்ட உடன்படிக்கையின் படி, போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்கிறது. அதற்கு காலவரையறை இல்லை” என்று தெரிவித்துள்ளது. நான்கு நாட்கள் நடந்த எல்லை தாண்டிய மோதலைத் தொடர்ந்து, கடந்த வாரத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் நிலம், வான், மற்றும் கடல் என அனைத்து வழிநடந்த தாக்குதலையும் உடனடியாக நிறுத்தும் வகையில் போர் நிறுத்தத்துக்கு ஒத்துக்கொண்டது. இதனைத் தொடர்ந்து மே 12-ம் தேதி, இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான…

Read More

சென்னை: ஆளுநர்கள், குடியரசுத் தலைவர் மாநில மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயிக்க முடியுமா என்று உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கேள்விகள் எழுப்பிய விவகாரம் தொடர்பாக 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக நேற்று (17-5-2025) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காளம், கர்நாடகா, இமாச்சல் பிரதேசம், தெலங்கானா, கேரளா, ஜார்கண்ட், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 8 மாநில முதல்வர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில், “உச்ச நீதிமன்றத்திடம் கேள்விகள் கேட்டு குடியரசுத் தலைவர் அனுப்பியுள்ள குறிப்பினை நாம் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும். நீதிமன்றத்தின் முன் நாம் அனைவரும் ஒருங்கிணைந்த சட்ட உத்தியை உருவாக்கி, அரசியல் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாக்க வழிவகுத்திட வேண்டும். இந்த முக்கியமான பிரச்சினையில் மேற்குறிப்பிட்டுள்ள மாநில முதல்வர்களின் உடனடியான தனிப்பட்ட தலையீட்டை எதிர்நோக்குகிறேன்.” என்று முதல்வர் ஸ்டாலின் கோரியுள்ளார். அக்கடிதத்தின் முழு விவரம் வருமாறு: இந்தியக்…

Read More

புதுடெல்லி: “முக்கியமான தேசிய பிரச்சினையில் மத்திய பாஜக அரசு, நேர்மையின்மை மற்றும் மலிவான அரசியல் விளையாட்டை விளையாடுகிறது.” என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மே 16-ம் தேதி காலையில் மோடி அரசு, பாகிஸ்தான் பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட இருக்கும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு காங்கிரஸ் சார்பில் 4 உறுப்பினர்கள் அல்லது தலைவர்கள் பெயர்களை தெரிவிக்கும் படி கேட்டிருந்தது. அன்று மாலையே நான்கு உறுப்பினர்களின் பெயர்களும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மூலமாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 17-ம் தேதி பின்னிரவில் பிரதிநிதிகளின் குழுவில் இடம்பெறும் முழு உறுப்பினர்களின் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. மிகவும் துரதிருஷ்டவசமாக, காங்கிரஸ் பரிந்துரைத்த நான்கு பேரில் ஒருவர் மட்டுமே பிரதிநிதிகளின் குழுக்களில் இடம்பெற்றுள்ளார். இது மோடி அரசின் முழுமையான நேர்மையின்மையினை நிரூபிக்கிறது. மேலும், முக்கியத்துவம்…

Read More

சென்னை: பாஜகவுடன் கூட்டணி இல்லை என தமிழக வெற்றிக் கழகம் அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகப் பேட்டியில் அவர், “பாஜகவுடன் கூட்டணி இல்லை என தமிழக வெற்றிக் கழகம் அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை. தவெக தலைவர் விஜய் இதுவரை எதுவும் சொல்லவில்லை. எனவே மற்றவர்களின் கருத்து குறித்து பதில் கூற முடியாது. எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என எண்ணுபவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். எல்லோரும் ஒன்று சேர வேண்டிய சூழல் வந்திருக்கிறது என்பது எனது கருத்து. பாஜக பலம் பொருந்திய கட்சியாக இருக்கிறது. இண்டியா கூட்டணி வலுவிழந்த கூட்டணியாக தான் இருக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சசி தரூர் பிரதமர் மோடியை உண்மையாகவே ஆதரிக்க ஆரம்பித்து விட்டார். உண்மையை யாரும் மறைக்க முடியாது.…

Read More

வீட்டு வைத்தியம் பற்றி மிகவும் ஆறுதலான ஒன்று உள்ளது -இது ஒரு சூடான கண்ணாடி மஞ்சள் பால் அல்லது ஒரே இரவில் விதைகளை ஊறவைக்கும் எளிய சடங்கு. சமீபத்தில், மற்றொரு சமையலறை மூலப்பொருள் ஆரோக்கிய வட்டங்களில் அலைகளை உருவாக்கி வருகிறது: ஓக்ரா.மேலும் குறிப்பாக, ஓக்ரா நீர். இரத்த சர்க்கரை மற்றும் செரிமானம் ஆகியவற்றில் அதன் நன்மைகளுக்காக இது பெரும்பாலும் பேசப்படுகிறது. ஆனால் இப்போது, ​​விஞ்ஞானம் ஒரு புதிய சாத்தியத்தை ஆராய்ந்து வருகிறது: உடலில் இருந்து மைக்ரோபிளாஸ்டிக்ஸை அகற்ற ஓக்ரா நீர் உதவ முடியுமா?ஒரு ஆய்வு சில அற்புதமான அவதானிப்புகளை செய்துள்ளது. இது இன்னும் அற்புதங்களை உறுதிப்படுத்தவில்லை, ஆனால் இது நம்பிக்கைக்குரிய மற்றும் சூழல் நட்பு ஒன்றை நோக்கிச் செல்கிறது. இந்த உண்மையைப் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டியது இங்கே.முதலில், மைக்ரோபிளாஸ்டிக்ஸுடனான ஒப்பந்தம் என்ன?மைக்ரோபிளாஸ்டிக்ஸ் என்பது பாட்டில்கள், பேக்கேஜிங் மற்றும் செயற்கை உடைகள் போன்ற பெரிய பிளாஸ்டிக் பொருட்களின் முறிவிலிருந்து வரும்…

Read More

தென்காசி: “மதவாத சக்திகளை உறுதியாக எதிர்க்கும் தலைமையாக திமுக உள்ளது. அதனால் திமுக கூட்டணியில் உள்ளோம். கூட்டணியில் சில ஏமாற்றங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை. தமிழகத்தின் எதிர்காலம் கருதி திமுக கூட்டணியில் உள்ளோம்.” என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளோம். தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வீரகேரளம்புதூர் அருகே உள்ள கலிங்கப்பட்டியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மத்திய அரசு நெடுஞ்சாலைகளில் உள்ள சில சுங்கச்சாவடிகளை அகற்றுவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் புதிதாக சுங்கச்சாவடிகளை அமைத்து வருகிறது. சுங்கச்சாவடிகளில் வசூலாகும் பணத்தை வைத்து சாலையையும் சரியான முறையில் சீரமைப்பதில்லை. இதை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்துள்ளது. தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறும் வகையில் சட்டப்பேரவை தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடுவோம். கரோனா இரண்டாம் அலை, கடுமையான நிதி நெருக்கடி போன்ற இக்கட்டான…

Read More