Author: admin

‘சூர்யா 46’ படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதன் படக்குழுவினர் விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் படத்தைத் தொடர்ந்து, வெங்கி அட்லுரி இயக்கவுள்ள படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் சூர்யா. இது சூர்யா நடிப்பில் உருவாகும் 46-வது படமாகும். இதன் பணிகள் படப்பூஜையுடன் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதனை இயக்குநர் த்ரிவிக்ரம் தொடங்கிவைத்தார். வெங்கி அட்லுரி இயக்கவுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் ராதிகா சரத்குமார், ரவீனா தண்டன், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவாளராக நிமிஷ் ரவி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், தயாரிப்பு வடிவமைப்பாளராக பங்கலான், எடிட்டராக நவீன் நூலி ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இதன் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து, அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதன் பெரும்பாலான காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்கவும் படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

Read More

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பலத்த மழை பெய்ததில் குறுவை பயிரிட்ட 250 ஏக்கர் அளவிலான விளைநிலங்கள் மழை தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், குறிஞ்சிப்பாடி, லால்பேட்டை, வேப்பூர், பண்ருட்டி, அண்ணாமலைநகர், விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை தண்ணீர் ஆறு போல ஓடியது, தாழ்வான இடங்களில் மழை தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழையால் ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் கூடலையாத்தூர், முடிகண்டநல்லூர்,கானூர், பேரூர், காவாலகுடி, மழவராயநல்லூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் குறுவை பருவ நெல் நடவு செய்யப்பட்ட வயல்கள் சுமார் 250 ஏக்கர் மழை தண்ணீரில் மூழ்கியுள்ளது. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் சரியான வடிகால் வசதி இல்லாததால் மழை…

Read More

திருவனந்தபுரம்: வடக்கு கேரளாவில் வயநாடு, காசர்கோடு, கண்ணூர் மற்றும் கோழிக்கோடு போன்ற மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பேரிடர் மீட்பு, வடிகால்களை சுத்தம் செய்தல் மற்றும் நிவாரண முகாம் போன்றவற்றை தயார் நிலையில் வைக்கவும் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இன்று (மே 19) கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக காசர்கோடு, கண்ணூர், வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வானிலை தொடர்பான அவசரநிலைகளை எதிர்கொள்ள மாநில அரசு முன்னேற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது. முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில், பல்வேறு துறைகளின் பருவமழை தயார்நிலை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய கேரள வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன், மே 20 ஆம் தேதிக்குள் பருவமழைக்கு முந்தைய அனைத்து பணிகளையும் அவசரமாக முடித்து, மாவட்ட அளவிலான திட்டமிடல் கூட்டங்களைக் கூட்டுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தினார். “பருவமழை தொடர்பான…

Read More

விஷால் – சாய் தன்ஷிகா இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சங்க கட்டிடம் முடிந்து, அதில்தான் திருமணம் செய்வேன் என்று கூறியிருந்தார் விஷால். அவருக்கு சில காதல் தோல்விகளும் ஏற்பட்டன. இதனால் யாரை திருமணம் செய்யவுள்ளார் என்ற கேள்வியும் எழுந்தது. இந்தப் பின்னணியில், சாய் தன்ஷிகாவை தான் விஷால் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்று இன்று காலை முதல் தகவல் பரவுகிறது. ‘கபாலி’, ‘பேராண்மை’, ‘பரதேசி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் சாய் தன்ஷிகா என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக விசாரித்தபோது, சில வருடங்களாக விஷால் – சாய் தன்ஷிகா காதலித்து வருகிறார்கள். நட்பாக பேசத் தொடங்கி, பின்பு காதலாக மாறிவிட்டது. ஆகஸ்ட்டில் நடிகர் சங்க கட்டிடம் திறந்தவுடன், அந்த மாத இறுதி அல்லது செப்டம்பரில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை சாய் தன்ஷிகா நடித்துள்ள ‘யோகிடா’…

Read More

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை, தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட குற்றவாளிகளுக்கு பல்லடம் அருகே நடந்த மூவர் கொலை சம்பவம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த விளக்கேத்தி மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த வயதான தம்பதிகளான ராமசாமி (72) – பாக்கியம் (63) ஆகியோர், பணம், நகைக்காக, கடந்த மாதம் 28-ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து பத்தே முக்கால் பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. 12 தனிப்படை அமைப்பு: இந்த கொலை வழக்கு குற்றவாளிகளைக் கைது செய்ய, மேற்கு மண்டல ஐ.ஜி.செந்தில்குமார், டி.ஐ.ஜி சசிமோகன் ஆகியோர் மேற்பார்வையில், ஈரோடு எஸ்பி சுஜாதா தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய…

Read More

கோடை 2025 அமெச்சூர் வானியலாளர்கள் மற்றும் ஸ்டார்கேஸர்களுக்கு ஒரு வான மகிழ்ச்சியாக இருக்கும். திகைப்பூட்டும் விண்கல் மழை மற்றும் ஒளிரும் முழு நிலவுகள் முதல் கிரக சீரமைப்புகள் மற்றும் அரிய கிரகணங்கள் வரை, நைட் ஸ்கை மறக்க முடியாத தொடர்ச்சியான வானியல் நிகழ்வுகளை வழங்கும். சிறப்பம்சங்கள் மூச்சடைக்கக்கூடிய பெர்சீட் விண்கல் மழை, வியத்தகு மொத்த சந்திர கிரகணம் மற்றும் இலையுதிர்கால உத்தராயணம் ஆகியவை அடங்கும், ஒவ்வொன்றும் அகிலத்துடன் இணைக்க தனித்துவமான வாய்ப்புகளை வழங்குகின்றன. இந்த நிகழ்வுகள் நெருங்கும்போது, ​​நேரமும் தெரிவுநிலையும் முக்கியமானவை. எப்போது, ​​எங்கு பார்க்க வேண்டும் என்பதை அறிவது, நமது பிரபஞ்சத்தின் அழகையும் தாளத்தையும் ஒளிரச் செய்யும் இந்த பிரமிக்க வைக்கும் தருணங்களை நீங்கள் இழக்கவில்லை என்பதை உறுதி செய்யும். அனைத்து ஸ்டார்கேஸர்களுக்கும், இந்த கோடையில் வானியல் நிகழ்வுகளின் பட்டியலை கீழே சரிபார்க்கவும் 2025 நீங்கள் நிச்சயமாக தவறவிட முடியாது.வானியல் நிகழ்வுகளின் பட்டியல் 2025தேதிநிகழ்வுவிளக்கம்ஜூன் 25அமாவாசைகோடைகாலத்தின் முதல் அமாவாசை 2025…

Read More

ஓசூர்: தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து 904 கன அடியாக அதிகரித்துள்ளது. அணை வேகமாக நிரம்புவதால் ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான தமிழக மற்றும் கர்நாடக தென்பெண்ணை ஆற்று பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது. நீர்பிடிப்புப் பகுதிகளி்ல் நேற்று முன்தினம் மழை பெய்ததால், அணைக்கு நீர் வரத்து மேலும் உயர்ந்த நிலையில், நேற்று இரவு ஓசூர் மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் கனமழை பெய்தது, இதனால் ஓசூரில் 48 மிமீ, கெலவரப்பள்ளியில் 90 மிமீ, தேன்கனிக்கோட்டை 22 மிமீ,அஞ்செட்டியில் 4.80 மிமீ என மழை பெய்துள்ளது. தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக நேற்று அணைக்கு நீர் வரத்து…

Read More

சென்னை: தங்கம் விலை மீண்டும் ஒரு பவுன் ரூ.70 ஆயிரத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் இன்று (மே.19) 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு பவுன் ரூ.70,040-க்கும் விற்பனையாகிறது. சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப, தங்​கம் விலை உயர்ந்​தும், குறைந்​தும் வரு​கிறது. கடந்த ஏப்​.22-ம் தேதி ஒரு பவுன் தங்​கம் ரூ.74,320 ஆக உயர்ந்​து, புதிய உச்​சத்தை தொட்​டது. அதன்​பிறகு, தங்​கம் விலை ஏற்ற இறக்​க​மாக இருந்து வரு​கிறது. அந்த வகையில், சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை கடந்த 13-ம் தேதி (மே 13) காலை, மாலை என அடுத்தடுத்து 2 முறை உயர்ந்து அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. காலையில் பவுனுக்கு ரூ.120, மாலை​யில் ரூ.720 என மொத்​த​மாக, பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.70,840-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. கிரா​முக்கு ரூ.105 உயர்ந்​து, 8,855-க்கு விற்​பனை​யானது. அதன் பின்னர் சற்றே குறையத் தொடங்கியது. (மே 15) 22 காரட் ஆபரணத்…

Read More

கோவிட் -19 தொற்றுநோய்கள் உலகளாவிய தொற்றுநோயாக அறிவிக்கப்பட்ட 5 ஆண்டுகளுக்கு மேலாக, உலகெங்கிலும் மாறுபட்ட திறன்களில் உலகம் தொடர்ந்து வைரஸின் இருப்புக்குச் சென்று வருகிறது. உலகத்திற்கு மேலாக, மக்கள் வைரஸுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அடைந்துள்ளனர் (எல்லோரும் அதைப் பெற்றிருப்பதால், அவர்களுக்குத் தெரியாது என்றாலும்), புதிய வழக்குகள் இடைவிடாது உயர்ந்து, சில கவலைகளை எழுப்புகின்றன.சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் வழக்குகளைப் பார்க்கின்றனசமீபத்தில், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் சமீபத்தில் கோவிட் -19 வழக்குகளில் கூர்மையான உயர்வு குறித்து தெரிவித்துள்ளன. இந்த புதிய அலை சுகாதார அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவலைகளை எழுப்பியுள்ளது. மேலும் கண்டுபிடிப்போம் …தரவு என்ன சொல்கிறது?மே 2025 இன் ஆரம்பத்தில், சிங்கப்பூர் கோவ் -19 நோய்த்தொற்றுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு கண்டது. ஏப்ரல் கடைசி வாரத்தில் சுமார் 11,100 டாலரிலிருந்து வழக்குகளின் எண்ணிக்கை உயர்ந்தது. மே முதல் வாரத்தில் சுமார் 14,200 வழக்குகள் வரை ஒரு வாரத்தில் 28% உயர்வு. இந்த…

Read More

லக்னோ: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் உத்தரபிரதேசத்தின் ராம்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் இன்டர் சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) க்காக இந்தியாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஷாஜாத் உத்தரபிரதேச காவல்துறையின் சிறப்பு படையினரால் (எஸ்டிஎப்) கைது செய்யப்பட்டார். இது தொடர்பான விசாரணையில், ஷாஜாத் தேசிய பாதுகாப்பு தொடர்பான பல முக்கிய தகவல்களையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளார் என்பதும், அவர் பல ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு பல முறை பயணம் செய்து, எல்லையைத் தாண்டி அழகுசாதனப் பொருட்கள், உடைகள், மசாலாப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், இந்தியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ முகவர்களுக்கு ஷாஜாத் பணம் மற்றும் இந்திய சிம் கார்டுகளை வழங்கியதும், ராம்பூர் மாவட்டம் மற்றும் உத்தரபிரதேசத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த நபர்களை ஐ.எஸ்.ஐ-க்காக வேலை செய்ய பாகிஸ்தானுக்கு அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவ்வாறு பாகிஸ்தான் சென்ற நபர்களின் விசாக்கள் ஐ.எஸ்.ஐ முகவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.…

Read More