Author: admin

ரூ.1,000 கோடி முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் துணை மேலாளர் விசாரணைக்கு ஆஜரானார். சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தி்ல் அண்மையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1.000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த 16-ம் தேதி சென்னை மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு, ஆழ்வார்பேட்டை கே.பி.தாசன் சாலையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, எம்ஆர்சி நகரில் உள்ள தொழிலதிபர் ரித்தீஷ் வீடு உட்பட சென்னையில் 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 2 நாட்களாக நடைபெற்ற சோதனை 17-ம் தேதி நள்ளிரவு நிறைவடைந்தது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனை நடைபெற்ற 2 நாட்களும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகனை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும்,…

Read More

சசிகுமார், சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்துக்கு இயக்குநர் ராஜமவுலி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ள அவர், “மிகவும் அற்புதமான ஒரு படத்தைப் பார்த்தேன். மனதுக்கு இதமான படத்தில் சிரிக்க வைக்கும் நகைச்சுவையும் இடம்பெற்றிருந்தது. தொடக்கம் முதல் இறுதி வரை என்னை ஆர்வத்துடன் வைத்திருந்தது. அபிஷன் ஜீவிந்தின் மிகச்சிறந்த எழுத்து மற்றும் இயக்கம். சமீபத்திய ஆண்டுகளில் சிறந்த சினிமா அனுபவத்திற்கு நன்றி. தவறவிடாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார். அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. இதனை மில்லியன் டாலர் நிறுவனம் தயாரித்து, ரெட் ஜெயன்ட் நிறுவனம் மூலம் வெளியிட்டது. இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைப்பாளராக பணிபுரிந்திருந்தார். மே 1-ம் தேதி ‘ரெட்ரோ’ படத்துடன் வெளியான இப்படம் முதல் நாளில் குறைவான வசூலே இருந்தாலும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. தற்போது தமிழகத்தில்…

Read More

சென்னை: சரக்குகள் கையாளுவதை அதிகரிக்க, ஈரோடு, திருப்பூர், பெருந்துறை, வஞ்சிபாளையம் ஆகிய 4 ரயில்வே ஷெட்டுகளை நவீனமயமாக்கும் பணிகளை விரைவில் தொடங்க உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ரயில்வேயில் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சரக்குகளைக் கையாளும் ரயில் நிலையங்களை மேம்படுத்துவது, சரக்கு ரயிலில் நவீன வசதிகளை ஏற்படுத்துவது, சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த பல்வேறு நிறுவனங்களுடன் ஆலோசிப்பது உள்பட பல்வேறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக தெற்கு ரயில்வேயில் சேலம் கோட்டத்தில் 4 ரயில்வே ஷெட்டுகளை நவீனமயமாக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் பயண கட்டணத்தை உயர்த்தாமல், மாற்று வழிகளில் வருவாயை அதிகரிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே மேற்கொண்டு வருகிறது. ரயில்வேக்கு சொந்தமான இடங்களை தனியாருக்கு 35 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டு, வருவாயை அதிகரிப்பது, விரைவு ரயில்கள், ரயில் நிலையங்களில் விளம்பரங்கள் செய்வது, ரயில்வே…

Read More

இஞ்சி பூனைகள் பொதுமக்களின் நீடித்த மோகம், கார்பீல்ட் முதல் பூட்ஸ் வரை புஸ் வரை அரிஸ்டோகாட்ஸிலிருந்து மிகவும் விரும்பப்பட்ட துலூஸ் வரை. அவர்களின் ஆரஞ்சு கோட்டுகள் மற்றும் தனித்துவமான ஆளுமைகள் அவர்களை பிரபலமான கலாச்சாரத்தின் சின்னங்களாக மாற்றியுள்ளன. விஞ்ஞானிகள் இப்போது ஒரு மர்மத்தை கண்டுபிடித்துள்ளனர், இது பல தசாப்தங்களாக இந்த பூனைகளை ஆரஞ்சு ஆக்குகிறது என்பது குறித்து மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஜப்பானில் ஆராய்ச்சியாளர்களின் சமீபத்திய ஆராய்ச்சி, இஞ்சி பூனைகளின் தனித்துவமான ஃபர் நிறத்தை உருவாக்கும் மரபணு செயல்முறைகளைப் புரிந்துகொள்வதற்கு பெரும் பங்களிப்புகளைச் செய்துள்ளது, குறிப்பாக ஆண்கள்.இஞ்சி பூனைகளின் மரபியல் கண்டுபிடிப்பு ஒரு அறிவார்ந்த வெற்றி மட்டுமல்ல – இது அறிவியல் மற்றும் விலங்குகளுக்கான உற்சாகம் ஒன்றிணைக்கும் விதத்திற்கு ஒரு அஞ்சலி. விஞ்ஞானிகள் வீட்டு பூனைகளின் மரபியலை ஆராய்வதால், இது நமது அன்பான செல்லப்பிராணிகளின் ஆரோக்கியத்தைப் பற்றி மேலும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது மட்டுமல்லாமல், மரபியல், சுகாதாரம் மற்றும் நடத்தை…

Read More

‘யோகிடா’ படத்தில் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தங்கள் காதலை உறுதி செய்துள்ளனர் விஷாலும் – நடிகை சாய் தன்ஷிகாவும். நடிகர் சங்க கட்டிடம் முடிந்து, அதில்தான் திருமணம் செய்வேன் என்று கூறியிருந்தார் விஷால். அவர் யாரை திருமணம் செய்யவுள்ளார் என்ற கேள்வியும் எழுந்தது. நடிகை சாய் தன்ஷிகாவை தான் விஷால் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்று தொடர்ந்து தகவல் பரவியது. ‘கபாலி’, ‘பேராண்மை’, ‘பரதேசி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் சாய் தன்ஷிகா. சென்னையில் சாய் தன்ஷிகா நடித்த ‘யோகிடா’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார். மேடையில் பேசிய சாய் தன்ஷிகா விஷாலுக்கும் தனக்கும் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதை உறுதி செய்தார். இருவருக்கும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நிகழ்ச்சியில் இருவரது க்யூட்டான தருணங்கள் சமூக…

Read More

சென்னை: சென்னை தரமணி ராஜீவ்காந்தி சாலையில் பள்ளம் ஏற்பட்ட பகுதியில், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் சீர் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை சோழிங்கநல்லூரிலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி நேற்று முன்தினம் மாலை வாடகை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வாடகை காரில் ஐடி ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேர், ஓட்டுநர் ஆகியோர் பயணித்தனர். தரமணியில் டைடல் பார்க் சந்திப்பு அருகில், ராஜீவ்காந்தி சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென் சாலை நடுவே சுமார் 10 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டு, கார் பள்ளத்தில் விழுந்தது. தகவலறிந்து வந்த போலீஸார், மற்றும் தீயணைப்பு வீரர்கள், கிரேன் உதவியுடன் காரை மீட்டு, அதிலிருந்து 5 பேரையும் காயமின்றி மீட்டனர். இதனால் அந்தச் சாலையில் நேற்று முன்தினம் மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தப் பள்ளத்துக்கும், மெட்ரோ ரயில் பணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை…

Read More

அமெரிக்க உச்சநீதிமன்றம் திங்களன்று டிரம்ப் நிர்வாகத்தை 350,000 வெனிசுலா மக்களைக் காப்பாற்றிய சட்டப் பாதுகாப்புகளை முடிவுக்கு கொண்டுவர அனுமதித்தது.வெனிசுலாவிற்கு தற்காலிக பாதுகாக்கப்பட்ட நிலையை (டி.பி.எஸ்) ரத்து செய்ய உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டி நொய்ம் ஒரு கோரிக்கையை வழங்கினார், அதே நேரத்தில் மேல்முறையீடு கீழ் நீதிமன்றத்தில் தொடர்கிறது.போர், இயற்கை பேரழிவுகள் அல்லது பிற “அசாதாரண” நிலைமைகள் காரணமாக பாதுகாப்பாக வீடு திரும்ப முடியாத வெளிநாட்டு குடிமக்களுக்கு அமெரிக்கா டி.பி.எஸ்.கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு கூட்டாட்சி நீதிபதி வெனிசுலா பிரஜைகளுக்கான டி.பி.எஸ்ஸை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்ப் நிர்வாகத்தின் திட்டங்களுக்கு மார்ச் மாதத்தில் தற்காலிகமாக தங்கியிருந்தார்.அமெரிக்க மாவட்ட நீதிபதி எட்வர்ட் சென், டி.பி.எஸ் “இனவெறியை” முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்டம் மற்றும் வெனிசுலா மக்களை குற்றவாளிகளாக தவறாக விளக்குகிறது என்றார்.”எதிர்மறையான குழு ஸ்டீரியோடைப்பின் அடிப்படையில் செயல்படுவதும், முழு குழுவிற்கும் இதுபோன்ற ஸ்டீரியோடைப்பை பொதுமைப்படுத்துவதும் இனவெறிக்கு சிறந்த எடுத்துக்காட்டு” என்று சென் எழுதினார்.வழக்குரைஞர் ஜெனரல் ஜான் சாவர் கன்சர்வேடிவ்…

Read More

‘யோகிடா’ படத்தில் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் விஷாலுடன் தனக்கு திருமணம் ஆக இருப்பதை உறுதி செய்துள்ளார் நடிகை சாய் தன்ஷிகா. நடிகர் சங்க கட்டிடம் முடிந்து, அதில்தான் திருமணம் செய்வேன் என்று கூறியிருந்தார் விஷால். அவருக்கு சில காதல் தோல்விகளும் ஏற்பட்டன. இதனால் யாரை திருமணம் செய்யவுள்ளார் என்ற கேள்வியும் எழுந்தது. இந்தப் பின்னணியில், சாய் தன்ஷிகாவை தான் விஷால் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்று இன்று காலை முதல் தகவல் பரவியது. ‘கபாலி’, ‘பேராண்மை’, ‘பரதேசி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் சாய் தன்ஷிகா. இது தொடர்பாக விசாரித்தபோது, சில வருடங்களாக விஷால் – சாய் தன்ஷிகா காதலித்து வருகிறார்கள் என்றும் நட்பாக பேசத் தொடங்கி, பின்பு காதலாக மாறிவிட்டது என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று சென்னையில் சாய் தன்ஷிகா நடித்த ‘யோகிடா’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விஷால் சிறப்பு…

Read More

மதுரை: ”உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதில் சர்வதேச அளவில் தமிழகம் சிறப்பிடம் பெற்று வருகிறது” என்று மதுரை அரசு மருத்துவக் கல்லூரி விழாவில் டீன் அருள் சுந்தரேஷ் குமார் தெரிவித்துள்ளார். மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் கழகம் சார்பில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்த தொடர் கல்வித் திட்டம் விழா நடந்தது. மருத்துவக் கல்லூரி முதல்வர் அருள் சுந்தரேஷ் குமார் தலைமை வகித்து பேசினார். அப்போது அவர், “தமிழக அரசு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. அதனாலே, இந்தியாவிலே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சர்வதே அளவிலான புள்ளி விவரங்களிலும் தமிழகம் சிறப்பிடம் பெற்றுள்ளது. மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து அவர்களது உடல் உறுப்புகளை பெறுவதில் சவாலானது. மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து உடல் உறுப்புகளை பெறுவது வரை ரத்த அழுத்தம், ஆக்ஸிஜன் குறையாமல் அதே நிலையில் அவர்களது உடலை பராமரிக்க வேண்டும். மூளைச்சாவு அடைந்தவர்களை…

Read More

ஒரு நடிகனாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுவதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் சூரி கூறியதாவது: “இன்று தமிழ் சினிமாவை உலக அளவில் கவனிக்க வைக்கும் இயக்குநர்களில் லோகேஷ் கனகராஜ், அட்லீ இருவரும் முக்கியமானவர்கள். இந்திய அளவில் ராஜமவுலி என்றால் தமிழ் சினிமாவை இந்த இருவரும்தான் உலக அளவில் கொண்டு சென்றிருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் என்னிடம் 2,3 கதைகளை அவருடைய தயாரிப்பில் நடிக்க கேட்டிருந்தார். நிச்சயமாக எதிர்காலத்தில் அது நடக்கும். அதே போல ஒரு நடிகனாக எனக்கும் அவருடைய இயக்கத்தில் நடிக்க ஆசை. அதுவும் எதிர்காலத்தில் நடக்கும் என நினக்கிறேன். எல்சியூ-வில் வருவது குறித்து நாம் நினைக்கலாம். அனால் கதைக்கு அது தேவைப்பட வேண்டும்” இவ்வாறு சூரி தெரிவித்தார். கருடன்’, ‘விடுதலை 2’ படங்களுக்குப் பிறகு சூரி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மாமன்’. இப்படம் கடந்த மே 16-ம் தேதி வெளியானது. இதன் கதையை சூரி எழுத,…

Read More