வாஷிங்டன்: அமெரிக்க அரசின் செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதனை எக்ஸ் தள பதிவு மூலம் அவர் தெரிவித்துள்ளார். “சிறப்பு அரசு ஊழியராக எனது பணிக்காலம் முடிவடையும் நிலையில், தேவையற்ற செலவுகளைக் குறைப்பதற்கான பணியை மேற்கொள்ளும் வாய்ப்பை அளித்த அதிபர் டொனல்டுக்கு ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். செயல் திறனை ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட துறையின் நோக்கம் காலப்போக்கில் வலுப்பெறும்” என மஸ்க் தெரிவித்துள்ளார். இதை வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார். பின்னணி என்ன? – அதிபர் ட்ரம்ப்பின் புதிய வரி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் மஸ்க். ‘ஏமாற்றமடைந்தேன்’ என அதை விமர்சித்திருந்தார். இந்நிலையில், அந்த விமர்சனத்தை வெளிப்படுத்திய மறுநாளே அரசு பொறுப்பில் இருந்து விலகும் முடிவை அறிவித்துள்ளார். புதிய வரி மசோதாவின் சில அம்சங்களில் தனக்கு விருப்பம் இல்லை என ஊடகத்துடனான பேட்டியில் மஸ்க் தெரிவித்திருந்தார். இனி ஸ்பேஸ் எக்ஸ்…
Author: admin
ராமேசுவரம்: ராமேசுவரத்தில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னீ தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். வைகாசி அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிலிருந்தே தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, மற்றும் கர்நாடகாவிலும் இருந்து பக்தர்கள் ராமேசுவரம் வரத் துவங்கினர். திங்கட்கிழமை அதிகாலை ராமநாதசுவாமி கோயிலின் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை, சாயரட்சை பூஜை, கால பூஜைகளும் நடைபெற்றன. தொடர்ந்து அக்னி தீர்த்தக் கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள 22 புனித தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினர். அதைத் தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், அமாவாசை கூட்டத்தினால் ராமேசுவரத்தில் பல்வேறு பகுதிகளில் வாகன நெரிசலும் ஏற்பட்டது.
சமீபத்தில் பார்த்திபன் – வடிவேலு இருவரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். வடிவேலுவை சந்தித்தது குறித்து பார்த்திபன், “நகைச்சுவையில் மட்டுமல்ல நடிப்பிலும் ஈடில்லாதவர். சந்தித்தோம். இன்று. விரைவில் படம் வெளியாகும்!” என்று தனது எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இருவரும் இணைந்து படமொன்றில் நடிக்கவுள்ளார்கள் என்பது உறுதியாகி இருக்கிறது. பார்த்திபன் – வடிவேலு கூட்டணி காமெடி காட்சிகள் மிகவும் பிரபலம். இப்போதும் காமெடி தொலைக்காட்சிகளில் இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் தினமும் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் நீண்ட வருடங்கள் கழித்து இருவரும் நடிக்க இருப்பதால், இந்தக் கூட்டணிக்கு எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. ‘கேங்கர்ஸ்’ படத்துக்குப் பிறகு வடிவேலு நடிப்பில் ‘மாரீசன்’ படம் வெளியாக இருக்கிறது. இதில் ‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு ஃபகத் பாசிலுடன் இணைந்து நடித்துள்ளார் வடிவேலு. இப்படம் ஜூலையில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
விழுப்புரம்: அன்புமணியை அவரது 35-வது வயதில் அமைச்சராக்கினேன். நான் செய்த சத்தியத்தை மீறி அவரை அமைச்சராக்கியது தவறு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், தேவைப்பட்டால் பொதுக்குழுவைக் கூட்டி அன்புமணியை கட்சியை விட்டே நீக்குவேன் என்று தெரிவித்துள்ளார். பாமகவின் நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் இன்று (மே.29) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அன்புமணியை அவரது 35 வயதில் நான் அமைச்சராக்கினேன். நான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறி அவரை அமைச்சராக்கியது எனது தவறு. எங்களின் கட்சி பற்றிய பலமுறை கேள்வி கேட்டிருக்கிறீர்கள். நானும் பதில் சொல்லியிருக்கிறேன். தருமபுரியில் நடந்த கூட்டமொன்றில் அன்புமணி பேசியதை பார்த்திருப்பீர்கள், நானும் கேட்டேன். அந்தப் பேச்சில், “நான் என்ன தவறு செய்தேன், ஏன் பதவி நீக்கம் என்று.” அன்புமணி கேட்டிருந்தார். அது கட்சிக்காரர்களையும் மக்களையும் திசைதிருப்பும் முயற்சி. தனது தவறுகளை மறைத்து மக்களிடமும், கட்சிக்காரர்களிடமும் அனுதாபம்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.71,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சற்று உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.8,995-க்கும், பவுனுக்கு ரூ.360 உயர்ந்து, ரூ.71,960-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், 24 காரட் சுத்த தங்கம் ஒரு பவுன் ரூ.78,496-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.111 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1 லட்சத்து 11 ஆயிரமாகவும் இருந்தது.
புகைப்படம்: ராகுல் அரபகா/ சென்டர் வேலை-வாழ்க்கை மற்றும் வேலை சமநிலையில் எரித்தல் போன்ற சிக்கல்கள் ஒரு பரபரப்பான விவாதத்தின் தலைப்பாக மாறியிருக்கும் நேரத்தில், ஒரு ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப தொடக்கமானது அதன் ஊழியர்களின் வேலையில் முதலீடு செய்கிறது. எப்படி? தொடக்கமானது டென்வர் என்ற கோல்டன் ரெட்ரீவரை அதன் தலைமை மகிழ்ச்சி அதிகாரியாக (CHO) பணியமர்த்தியுள்ளது! இதயத்தைத் தூண்டும் செய்தி நிறுவனத்தின் இணை நிறுவனர் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது, பின்னர் அந்த இடுகை இணையத்தில் வைரலாகி ஆயிரக்கணக்கான விருப்பங்களைப் பெற்றது.”எங்கள் புதிய வாடகை, டென்வர் – தலைமை மகிழ்ச்சி அதிகாரி. அவர் குறியீடாக இல்லை. அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. அவர் அதைக் காட்டுகிறார், இதயங்களைத் திருடுகிறார், ஆற்றலை உயர்த்துகிறார். மேலும், நாங்கள் இப்போது அதிகாரப்பூர்வமாக செல்லப்பிராணி நட்பு. சிறந்த முடிவு. பி.டி.டபிள்யூ: அவர் நிறுவனத்தில் சிறந்த சலுகைகளைப் பெற்றுள்ளார், ”என்று ஒரு லிங்க்ட்இன் இடுகையில் பகிரப்பட்ட அறுவடை ரோபாட்டிக்ஸின் இணை நிறுவனர்…
ஒரு சமீபத்திய ஆய்வு மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் பயாலஜி ஆஃப் ஏஜிங் ஜெர்மனியில், தற்போதுள்ள இரண்டு மருந்துகளான ராபமைசின் மற்றும் டிராமெடினிப் ஆகியவற்றின் கலவையானது எலிகளின் ஆயுட்காலம் 30 சதவீதம் வரை நீட்டிக்க முடியும் என்று வெளிப்படுத்தியுள்ளது. எலிகள் கணிசமாக நீண்ட காலமாக வாழ்ந்தது மட்டுமல்லாமல், வயதானவர்களிலும் ஆரோக்கியமாக இருந்தது, குறைக்கப்பட்ட வீக்கம், தாமதமான கட்டி வளர்ச்சி மற்றும் சிறந்த ஒட்டுமொத்த உடல் செயல்பாடு ஆகியவற்றைக் காட்டுகிறது. இந்த கண்டுபிடிப்பு மனிதர்களுக்கான வயதான எதிர்ப்பு சிகிச்சைகளைப் பின்தொடர்வதில் ஒரு முக்கிய படியைக் குறிக்கக்கூடும், வயது தொடர்பான சரிவை குறைக்கலாம் அல்லது எதிர்காலத்தில் ஓரளவு மாற்றியமைக்கப்படலாம் என்ற நம்பிக்கையை வழங்குகிறது.எலிகளின் ஆயுட்காலம் அதிகரிக்கும் மருந்து கலவை என்ன?ராபமைசின் மற்றும் டிராமெடினிப் இரண்டும் அறியப்பட்ட மருந்துகள் முதன்மையாக புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன. மாற்று நோயாளிகளில் உறுப்பு நிராகரிப்பைத் தடுக்க ராபமைசின் பயன்படுத்தப்படுகிறது மற்றும் விலங்குகளில் வாழ்க்கை நீட்டிக்கும் பண்புகளைக் காட்டியுள்ளது. டிராமெடினிப், பெரிய…
பிரதிநிதி படம் (AP) டெட்ராய்ட்: மிச்சிகன் உச்சநீதிமன்றம் புதன்கிழமை 2021 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு உயர்நிலைப் பள்ளியில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த மாணவர்களின் குடும்பங்களின் மேல்முறையீடுகளை தள்ளுபடி செய்தது, வெகுஜன துப்பாக்கிச் சூட்டுக்கு ஊழியர்களை ஓரளவு பொறுப்பேற்க முயற்சிக்கும் முயற்சிகளை முடிவுக்குக் கொண்டுவந்தது. மிச்சிகன் சட்டத்தின் கீழ், பொதுப் பள்ளி ஊழியர்கள் உட்பட ஒரு அரசு அமைப்புக்கு எதிரான வழக்குகளில் வெல்லப்படுவதற்கு நோய் எதிர்ப்பு சக்தி ஒரு அதிக தடையாகும். மொத்த அலட்சியம் நிகழ்ந்தது என்பதை வழக்கறிஞர்கள் பொதுவாகக் காட்ட வேண்டும். நீதிமன்றம், இரண்டு தண்டனை உத்தரவில், அது வழக்குக்குள் நுழையாது என்று கூறியது. இந்த முடிவு என்பது பள்ளி ஊழியர்களுக்கு ஆதரவாக 3-0 மேல்முறையீட்டு நீதிமன்ற முடிவு நிற்கும். குடும்பங்களுக்கான வழக்கறிஞர் ஒரு பிற்பகல் செய்தி மாநாட்டில் பேசுவதாகக் கூறினார். ஆக்ஸ்போர்டு ஊழியர்கள் சோகத்தின் “அருகாமையில்” என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று செப்டம்பர் மாதம் மேல்முறையீட்டு நீதிமன்றம் கூறியது,…
புதுடெல்லி: “பயங்கரவாத தாக்குதல்களுக்கான இந்தியாவின் பதிலடி பற்றி மட்டுமே நான் பேசினேன். முந்தைய போர்களைப் பற்றி அல்ல என்பதை பொங்கி எழும் வெறியர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.” என்று தன்னை விமர்சிப்போருக்கு சசி தரூர் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பனாமாவில் ஒரு நீண்ட மற்றும் வெற்றிகரமான நாளுக்குப் பிறகு, ஆறு மணி நேரத்தில் கொலம்பியாவின் போகோடாவிற்குப் புறப்படுவதற்காக நள்ளிரவில் நான் செல்ல வேண்டும். எனவே இதற்கு எனக்கு உண்மையில் நேரமில்லை. எனினும், கடந்த காலங்களில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய வீரம் பற்றிய எனது அறியாமையைப் பற்றிப் பொங்கி எழும் வெறியர்களுக்காக நான் கூற விரும்புவது இதுதான். 1. பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான பழிவாங்கல்களைப் பற்றி மட்டுமே நான் தெளிவாகவும் வெளிப்படையாகவும் பேசினேன், முந்தைய போர்களைப் பற்றி அல்ல. 2. நான் பேசுவதற்கு முன் சமீபத்திய ஆண்டுகளில் மட்டும் நடந்த பல தாக்குதல்களைப் பற்றிய குறிப்புகள்…
புதுடெல்லி: ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான சிபிஆர்இ, “ குளோபல் டெக் டேலண்ட் கைடுபுக் 2025″ என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: உலகளாவிய சக்திவாய்ந்த தொழில்நுட்பம் கொண்ட 12 மையங்களில் பெங்களூருவும் அடங்கும். பெய்ஜிங், பாஸ்டன், லண்டன், நியூயார்க் மெட்ரோ, பாரிஸ், சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி, சியாட்டில், ஷாங்காய், சிங்கப்பூர், டோக்கியோ மற்றும் டொராண்டோ ஆகியவை பிற தொழில்நுட்ப சக்தி மையங்களாகும். ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிகப்பெரிய தொழில்நுட்ப திறமைவாய்ந்த சந்தையாக பெங்களூரு உள்ளது. அதன் தொழில்நுட்ப பணியாளர்கள் எண்ணிக்கை 1 மில்லியனை (10 லட்சம்) தாண்டி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் , பெங்களூரு நகரம் உலகளாவிய தொழில்நுட்ப சந்தையில் முக்கிய மையமாக மாறியுள்ளது. 28 யூனிகார்ன் நிறுவனங்களை உள்ளடக்கிய பெங்களூருவின் ஸ்டார்ட் அப் சூழல் சாதகமான வணிக விதிமுறை மற்றும் வலுவான நிறுவன ஆதரவிலிருந்து பெரிதும் பயனடைந்து வருவதாக அந்த அறிககையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
