Author: admin

கமல் அளித்துள்ள பேட்டியில் தனது பெயரைக் குறிப்பிட்டதற்கு நானி நெகிழ்வுடன் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் நானி நடித்து, தயாரித்து வெளியான படம் ‘ஹிட் 3’. இப்படத்தினை விளம்பரப்படுத்த சென்னைக்கு வந்திருந்தார். அப்போது அளித்த பேட்டியில், ‘விருமாண்டி’ படத்தின் நீதிமன்றக் காட்சியில் தூங்கி எழுந்தது போல் கமல் நடித்திருந்தது குறித்து சிலாகித்து பேசியிருந்தார் நானி. அதனை மீண்டும் மீண்டும் பார்த்தாலும் தன்னால் அது போல் நடிக்க முடியவில்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார். தற்போது ‘தக் லைஃப்’ படத்தினை விளம்பரப்படுத்த கமல் பேட்டியளித்துள்ளார். அதில் ”மற்ற நடிகர்கள் உங்களுடைய குறிப்பிட்ட காட்சியைப் பின்பற்றி நடித்ததைக் குறித்து பேசும் போது எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்” என்ற கேள்வி கமலிடம் எழுப்பப்பட்டது. அதற்கு கமல் “நானி சமீபத்தில் சொல்லியிருந்தார். நானி பெயரை ஏன் குறிப்பிட்டேன் என்றால் சினிமா என்பது அப்படித்தான் இருக்க வேண்டும். நன்றி நானி என்று சொல்வதை விட நானி என்று குறிப்பிட்டதே பெரியது. அது மாதிரி…

Read More

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் கனமழை பெய்யும் என்பதால் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் வர வேண்டாம். சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். அதன் தொடர்ச்சியாக, நீலகிரி மாவட்டத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும். நடப்பு ஆண்டு கேரளாவில் 8 நாள் முன்னதாக கடந்த 24-ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதன் தாக்கத்தால் நீலகிரி, கோவை உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள தமிழக மாவட்டங்களில் மழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் 24ம் தேதி நள்ளிரவு முதல் பரவலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடந்த 6 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, நீர்பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி, எமரால்டு, அப்பர்பவானி ஆகிய…

Read More

புதுடெல்லி: கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜூலை 31-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 15-ம் தேதி வரையில் நீட்டித்துள்ளது வருமான வரித் துறை. வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான படிவத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் அதை அப்லோடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரம் உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. “வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான படிவங்கள், சிஸ்டம் மேம்பாடு மற்றும் டிடிஎஸ் உள்ளிட்டவற்றில் குறிப்பிடத்தக்க திருத்தங்கள் காரணமாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது பயனர்கள் எல்லோருக்கும் துல்லியமான வருமான வரி கணக்கு தாக்கல் அனுபவத்தை உறுதி செய்யும். இது தொடர்பான விரிவான அறிவிப்பு விரைவில் வரும்” என்று எக்ஸ் தளத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் தொடர்பான மென்பொருள் சார்ந்த அம்சங்களை அரசு வெளியிடவில்லை என்ற குற்றச்சாட்டை பட்டைய கணக்கர்கள் சமூக வலைதளங்களில்…

Read More

மும்பையில் ஆரம்பகால பருவமழை மழை பெய்ததன் மூலம், நகரத்தில் நீர் பரவும் நோய்களில் ஒரு ஸ்பைக் ஏற்பட்டுள்ளது. எழுச்சிக்கு மத்தியில், பாலிவுட் நடிகர் எம்ரான் ஹாஷ்மி புதன்கிழமை டெங்குவுக்கு சாதகமாக சோதனை செய்தார். கடைசியாக படத்தில் காணப்பட்ட நடிகர் ‘தரை பூஜ்ஜியம்’ தற்போது பவன் கல்யாண் மற்றும் அவரது தெலுங்கு அறிமுகத்துடன் தனது அடுத்த திரைப்படத்திற்காக படப்பிடிப்பு நடத்தி வருகிறார் ‘Og’. நடிகர் செட்டில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கத் தொடங்கியதும், டெங்கு கண்டறியப்பட்டதும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது TOI அறிக்கை. குல்ட் கருத்துப்படி, கோரேகானின் ஆரே காலனியில் நடிகர் சுட்டுக் கொன்றபோது, ​​அவர் டெங்கு போன்ற அறிகுறிகளை அனுபவிக்கத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து, டாக்டர்களின் பரிந்துரையின் பேரில், அவர் தனது சோதனைகளைச் செய்து, அவர் டெங்குவால் பாதிக்கப்படுவதைக் கண்டுபிடித்தார். கடன்: x | @chirufanikkada1 மகாராஷ்டிரா டெங்கு மற்றும் மலேரியா வழக்குகளில் ஒரு ஸ்பைக்கைக் காண்கிறார் படி திசையன் பிறந்த நோய் கட்டுப்பாட்டுக்கான…

Read More

ஒன்பது மாதங்களுக்கு மேல் செலவழித்த பிறகு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி நிலையம் (ஐ.எஸ்.எஸ்) காரணமாக போயிங் ஸ்டார்லைனர் காப்ஸ்யூல் சிக்கல்கள், பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியுள்ளன. முதலில் எட்டு நாள் பணிக்கு திட்டமிடப்பட்டது, அவர்கள் தங்கியிருப்பது கணிசமாக நீட்டிக்கப்பட்டது, மார்ச் திரும்பியதில் முடிவடைந்தது. அப்போதிருந்து, இரண்டு விண்வெளி வீரர்களும் பூமியின் ஈர்ப்பு விசையை மறுசீரமைக்கவும், தசை வலிமை மற்றும் சமநிலையை மீட்டெடுக்கவும் தீவிரமான உடல் மறுவாழ்வுக்கு உட்பட்டுள்ளனர். மறுவாழ்வுடன், வில்மோர் மற்றும் வில்லியம்ஸ் படிப்படியாக நாசா மற்றும் போயிங்குடன் தங்கள் கடமைகளை மீண்டும் தொடங்குகிறார்கள், தற்போதைய விண்வெளிப் பயணத் திட்டங்களுக்கு பங்களிப்பு செய்கிறார்கள் மற்றும் ஸ்டார்லைனர் விண்கலத்துடன் தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ளும் முயற்சிகளை ஆதரிக்கிறார்கள்.நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் நீண்ட விண்வெளி பணிக்குப் பிறகு தீவிர மறுவாழ்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்மைக்ரோ கிராவிட்டிக்கு நீண்ட காலமாக வெளிப்பட்ட பிறகு பூமியின் ஈர்ப்பு விசையை…

Read More

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது தனது நிர்வாகம் அனைத்து கூட்டாட்சி நிதிகளையும் என்.பி.ஆர் மற்றும் பிபிஎஸ்ஸுக்கு பொது ஒளிபரப்பு (சிபிபி) மூலம் முடக்குவதற்கான நிர்வாக உத்தரவை பிறப்பித்ததை அடுத்து தேசிய பொது வானொலி (என்.பி.ஆர்) வழக்குத் தாக்கல் செய்துள்ளது. மே 2025 இன் தொடக்கத்தில் கையெழுத்திடப்பட்ட இந்த உத்தரவு, வரி செலுத்துவோர் பணத்தை நிர்வாகம் கூறுகிறது என்பதை ஆதரிப்பதைத் தடுக்கும் முயற்சியாக வழங்கப்பட்டது, இது பாகுபாடானது, கருத்தியல் ரீதியாக இயக்கப்படும் பத்திரிகை. இந்த நடவடிக்கை பதிலடி மற்றும் அரசியலமைப்பிற்கு முரணானது என்று என்.பி.ஆர் வாதிடுகிறது, முதல் திருத்தத்தை மீறி அதன் தலையங்க சுதந்திரத்தை குறிவைக்கிறது. ஊடக சார்பு, பொது நிதி மற்றும் கதைகளை வடிவமைப்பதில் அரசாங்க நிதியளிக்கப்பட்ட ஊடகங்களின் பங்கு ஆகியவற்றில் ஒரு பரந்த மோதலை இந்த வழக்கு எடுத்துக்காட்டுகிறது.டொனால்ட் டிரம்பின் வாதம்: பொறுப்புக்கூறலுடன் சார்புஜனாதிபதி டிரம்ப், இப்போது தனது இரண்டாவது பதவியில், நீண்ட காலமாக NPR ஐ விமர்சித்தார். பல…

Read More

புதுடெல்லி: பஹல்காமில் பயங்கரவாதிகள் நிகழ்த்தியது மனிதகுலத்தின் மீதான தாக்குதல் என்றும், இந்தியாவில் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் ஒரு பொருத்தமான பதிலடி என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சிக்கிம் மாநிலம் உதயமானதன் 50-ம் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அம்மாநிலத்துக்குச் செல்ல இருந்தார். எனினும், சீரற்ற வானிலை காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் காணொலி காட்சி வாயிலாக நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “வடகிழக்கு பகுதியை வளர்ச்சியின் மையமாக அரசு கொண்டு வந்துள்ளது. ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் என்னும் நான்கு வலுவான தூண்களில் வளர்ச்சி அடைந்த இந்தியா என்பது உருவாக்கப்படும். சிக்கிம் விவசாயிகளுக்கு திறந்த மனதுடன் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஏனெனில், இன்று முன்னேறி வரும் விவசாயத்தின் புதிய போக்கில் சிக்கிம் முன்னணியில் உள்ளது. சிக்கிமின் இயற்கை மீன்வளத் தொகுப்பை ஊக்குவிக்க, சிக்கிமில் நாட்டின்…

Read More

புதுடெல்லி: ஏஐ தொழில்நுட்பத்தின் வருகையை அடுத்து தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறை அண்மைக்காலமாக அதிக பணிநீக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் 6,700 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இப்போது, ஐபிஎம் நிறுவனம் 8,000 பணியாளர்களை நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. இதில், மனிதவள துறையைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று கூறப்படுகிறது. அந்த பணிகளை செய்ய ஏஐ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய காலத்தில் இந்த பணிநீக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகவல்தொழில்நுட்ப துறையைப் பொருத்தவரையில் பல்வேறு வேலைகளைச் செய்ய ஏஐ தொழில்நுட்பத்தை அவர்கள் அதிக அளவில் நம்பியுள்ளனர். இதனால், பல்வேறு பிரிவுகளில் உள்ள பணியாளர்கள் அடுத்தடுத்து நீக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. தகவல்களை ஒழுங்கமைத்தல், ஊழியர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது மற்றும் உள் ஆவணங்களை நிர்வகித்தல் போன்ற பணிகளை கையாளக்கூடிய மென்பொருளை ஐபிஎம் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த பணிகள் மனித தலையீடு தேவையில்லாத மீண்டும் மீண்டும் ஒரே வேலைகளை கவனித்துக்கொள்வதாகும். வேலையை…

Read More

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக பாட விவரங்கள் வடிவமைத்து போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை விவரம்: ”அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து புத்தகங்களையும் மாணவர்கள் வாசிக்கும் வகையில் கதை சொல்லும் அமர்வுகள், வாசிப்பு சவால்கள், புத்தக கழகங்கள் ஆகியவற்றின் மூலம் அறிவுத் தேடல் மற்றும் கருப்பொருள் வாசிப்பு வாரம் செயல்படுத்தப்படும். இது தவிர வாரந்தோறும் தேசத் தலைவர்கள், அறிவியல் அறிஞர்கள், விளையாட்டு வீரர்கள், சுற்றுச்சூழல் மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றில் பேச்சுப் போட்டி, கதை சொல்லுதல், நடித்துக் காட்டுதல், குழு விவாதம், பட்டிமன்றம் போன்றவை நடத்தப்பட்டு மாணவர்களின் வாசிப்புத் திறன்கள் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த சட்டப் பேரவை கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிட்டார். இதை செயல்படுத்தும் வகையில் மாணவர்களின் அறிவுத் தேடல் மற்றும் வாசிப்புத் திறன்களை…

Read More

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஜாஸ்மின் பவுலினி, லாரேன்ஸா முசெட்டி ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர். பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 8-ம் நிலை வீரரான இத்தாலியின் லாரேன்ஸோ முசெட்டி 6-4, 6-0, 6-4 என்ற நேர் செட் கணக்கில் கொலம்பியாவின் டேனியல் எலாஹி கலனை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். 7-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட் 6-2, 4-6, 1-6, 0-6 என்ற செட் கணக்கில் 41-ம் நிலை வீரரான போர்ச்சுகலின் நுனோ போர்கஸிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 6-4, 4-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் 56-ம் நிலை வீரரான ஹங்கேரியின் ஃபேபியன் மரோசானை தோற்கடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 4-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின்…

Read More