Author: admin

கோவை: நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் நடந்த கொலை, கொள்ளை வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றனுக்கு, கோவை சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பினர். அதன்படி, காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பூங்குன்றன் நேற்று ஆஜரானார். அவரிடம் எஸ்.பி. மற்றும் கூடுதல் எஸ்.பி. தலைமையிலான போலீஸார் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை விசாரித்தனர். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘கோடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள், ஆவணங்கள் குறித்தும், பங்களா வளாகத்தில் எந்தெந்த பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் இருந்தன என்பது குறித்தும் பூங்குன்றனிடம் விசாரிக்கப்பட்டது’’ என்றனர்.

Read More

சென்னை: ‘திமுகவை வீழ்த்த முடியாதா என தொடர் தோல்வியின் ஆற்றாமையில் எதிர்க்கட்சியினர் தவிக்கின்றனர். மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை உறுதிசெய்ய கடும் உழைப்பு தேவை’ என்று திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என பதவியேற்பு உறுதிமொழி ஏற்று, இந்த மே மாதம் 7-ம் தேதியுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்து, 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என் தலைமையிலான திமுக அரசு. நம்பிக்கை வைத்து ஆட்சியை ஒப்படைத்த தமிழக மக்கள் அனைவருக்குமான திட்டங்களை வழங்கும் நல்லாட்சியை வழங்கி வருகிறோம். இந்தியாவின் பிற மாநிலங்களும், கொள்கைரீதியாக நமக்கு என்றும் எதிரானவர்கள் ஆளும் மாநிலங்களும்கூட திமுக அரசின் திட்டங்களைப் பின்பற்றும் வகையில் முன்னோடியான அரசாக தமிழகத்தை இந்த 4 ஆண்டுகளில் உயரத்தியுள்ளோம். நாடு போற்றும் சாதனைகளுடன் 5-ம் ஆண்டில் திமுக அரசு பெருமிதத்துடன் அடியெடுத்து வைக்கிறது. அடுத்த…

Read More

இப்போது, ​​உடற்பயிற்சி என்பது நம் உடலுக்கு மட்டுமல்ல, நம் மூளைக்கும் நல்லது என்பதை நாம் அனைவரும் அறிவோம். உடற்பயிற்சி, அறியப்பட்டபடி, உங்கள் மனநிலையை அதிகரிக்கும், பதட்டத்தை வளைக்கிற, மன அழுத்தத்தைக் குறைக்கும் ஃபீல் ஹார்மோன்கள் என்றும் அழைக்கப்படும் எண்டோர்பின்களை வெளியிடுகிறது. புதிர்கள் மற்றும் விளையாட்டுகளைப் போல உங்கள் மூளை சக்தியை அதிகரிக்க நீங்கள் செய்ய வேண்டிய பல விஷயங்கள் இருக்கும்போது, ​​குறிப்பிட்ட பயிற்சிகள் கூட உங்கள் மூளையை கூர்மைப்படுத்தும் என்று உங்களுக்குத் தெரியுமா? அவற்றில் 5 இங்கே. இன்று உங்கள் உடற்பயிற்சி ஆட்சியில் அவற்றைச் சேர்க்கவும்!

Read More

சென்னை: கோடை வெப்பத்தின் தாக்கத்திலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் அங்கன்வாடி, குழந்தைகள் மையங்களுக்கு மே 11 முதல் மே 25 வரை 15 நாட்களுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. தமிழகத்தில் அங்கன்வாடிகளில் பணிபுரியும் முதன்மை ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2-வது வாரமும், உதவியாளர்களுக்கு 3-ம் வாரமும், குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு 4-வது வாரமும் என பயனாளிகளுக்கு உணவூட்டும் பணிகளுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படாத வகையில் கோடை விடுமுறை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2024-ம் ஆண்டில் மே 8 முதல் மே 22-ம் தேதி வரை 15 நாட்களுக்கு குழந்தைகள் மையங்களுக்கு கோடை விடுமுறை அளித்து அரசாணை வெளியிடப்பட்டது. இந்த விடுமுறை காலங்களில் முன்பருவக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துமாவு அளவை கணக்கிட்டு 15 நாட்களுக்கு 750 கிராம் சத்துமாவு கோடை விடுமுறை தொடங்கும் முன்பாகவே வீட்டுக்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் வழங்க ஏற்பாடு…

Read More

இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் விரும்பும் நேரத்திலும், இடத்திலும் இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் என்று அந்நாட்டு ராணுவ செய்தி தொடர்பாளர் அகமது ஷரீப் சவுத்ரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு தாங்கள் விரும்பும் நேரத்தில் தக்க பதிலடி வழங்கப்படும் என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் அகமது ஷரீப் சவுத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “சில மணி நேரங்களுக்கு முன்பு, கோழைத்தனமான எதிரியான இந்தியா, பஹ்வல்பூரின் அகமது கிழக்குப் பகுதியில் உள்ள சுபானுல்லா மசூதி, கோட்லி மற்றும் முசாபராபாத் ஆகிய மூன்று இடங்களில் வான்வழித் தாக்குதல்களை…

Read More

சென்னை: தமிழகம் வந்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவின் குண்டு துளைக்காத வாகனம் திடீரென பழுதடைந்தது ஏன் என டிஜிபி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய அமைச்சரும், பாஜக தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா மத்திய பாதுகாப்பு படையினருடன் கூடிய இசட் பிளஸ் (z+) பாதுகாப்பு பிரிவு உடையவர். அவர் 2-ம் தேதி சென்னைக்கு வருகிறார் என்ற தகவல் அறிந்ததும் அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டன. அதன்படி அவருக்காக குண்டு துளைக்காத வாகனமும் மற்றும் அவருடன் மத்திய பாதுகாப்பு படையினர் பயணிப்பதற்காக இரண்டு வாகனங்களும் தமிழக பாதுகாப்பு படையினர் பயணிக்க 3 வாகனங்களும், ஒரு ஆம்புலன்ஸ் மற்றும் மாற்று வாகனம் ஒன்றும் வழங்கப்பட்டன. இத்தகைய குண்டு துளைக்காத வாகனங்கள், மத்திய அரசிசால் பரிந்துரைக்கப்பட்ட பணிமனைகளில் தயாரிக்கப்பட்டு பாதுகாப்புப் பிரிவின் பயன்பாட்டில் நல்ல முறையில் இயங்கி வருகின்றன. இத்தகைய வாகனங்கள் தொழில்நுட்ப காரணங்களால் அதிவேகமாக செல்லக்கூடாது…

Read More

காற்று சுழற்சி மற்றும் சிக்கிய ஈரப்பதம் காரணமாக மற்ற இனங்களை விட நெகிழ் காதுகள் மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறைகளைக் கொண்ட நாய்கள் காது நோய்த்தொற்றுகளுக்கு அதிக வாய்ப்புள்ளது. பிரபலமான செல்ல நாய் இனங்கள் பீகிள்ஸ், காக்கர் ஸ்பானியல்ஸ் மற்றும் லாப்ரடர்கள் போன்றவை நமைச்சல், பாக்டீரியா, ஈஸ்ட் அல்லது ஒவ்வாமை ஆகியவற்றால் ஏற்படும் வலிமிகுந்த காதுகளால் அடிக்கடி பாதிக்கப்படுகின்றன. அறிகுறிகளில் தலை நடுக்கம், சிவத்தல், வாசனை அல்லது வெளியேற்றம் ஆகியவை அடங்கும். உங்கள் நாயின் காதுகளை தவறாமல் சுத்தம் செய்வது மற்றும் நீச்சல் அல்லது குளியல் பிறகு அவற்றை உலர்த்துவது தொற்றுநோய்களைத் தடுக்க உதவும். காது தொற்று ஏற்பட்டால், VET பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுடன் சிகிச்சை அவசியம். நீண்ட காலத்திற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் நாள்பட்ட நோய்த்தொற்றுகள் செவிப்புலன் இழப்புக்கு வழிவகுக்கும்.

Read More

ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது: “மொத்தம், ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. எங்கள் நடவடிக்கைகள் கவனமான முறையில், கணக்கிடப்பட்டு, தீவிரமடையாமல் உள்ளன. எந்த பாகிஸ்தான் ராணுவ முகாம்களும் குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும் செயல்படுத்தும் முறையிலும் இந்தியா கணிசமான நிதானத்தைக் காட்டியுள்ளது. 25 இந்தியர்களும் ஒரு நேபாள குடிமகனும் கொல்லப்பட்ட காட்டுமிராண்டித்தனமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் விளைவுகளை எதிர்கொள்வார்கள் என்ற நாங்கள் உறுதியளிக்கிறோம். ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றிய விரிவான விளக்கம் இன்று அளிக்கப்படும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கோட்லி, பஹ்வல்பூர் மற்றும் முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத்…

Read More

ஓய்வுபெற்ற அரசு அதிகாரி, தொழிலதிபர்களின் வீடுகள் உட்பட சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழகத்தில் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை செயல்படுவதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கும் தடையில்லா சான்றிதழ் மிக முக்கியமானது. இந்த சான்றிதழ் கிடைத்த பின்னர்தான், தொழில் நிறுவனங்கள் முறைப்படி இயங்க முடியும். இந்நிலையில், சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதில் முறைக்கேட்டில் ஈடுபட்டதாக தற்போது ஓய்வு பெற்ற மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பாண்டியனுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2021-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தி பல கோடி ரொக்கம், நகை, சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து ஓய்வு பெற்ற அரசு அதிகாரி பாண்டியனுக்கு சொந்தமான இடங்களில் நேற்று சோதனை…

Read More

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் டெல்லியில் நேற்று மீண்டும் முக்கிய ஆலோசனை நடத்தினார். கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் எழுந்திருக்கிறது. தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கடந்த ஒரு வாரமாக பல்வேறு தரப்பினருடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங், மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் ஆகியோர் பிரதமரை சந்தித்துப் பேசினர். இதன் தொடர்ச்சியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் டெல்லியில் நேற்று பிரதமர் மோடியுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு 40 நிமிடங்கள் நீடித்தது. கடந்த சில நாட்களாக பிரதமர் மோடியுடன் அஜித் தோவல்…

Read More