ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா ஜுன் 3ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி ஜுன் 3ம் தேதி காலபூஜை முடிந்து மாலை ராவண சம்ஹாரமும், ஜுன் 4-ம் தேதி பகல் 12 மணியளவில் தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்ட ராமர் கோயிலில் விபீஷணர் பட்டாபிஷேக வைபவ விழாவும், ஜுன் 5-ம் தேதி காலை 8 மணியளவில் ராமலிங்க பிரதிஷ்டை நிகழ்வும் நடைபெறுகிறது. ஜுன் 4-ம் தேதி புதன்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ராமநாதசுவாமி கோயிலில் ஸ்படிக லிங்க பூஜைக்கு பின்னர் ராமநாத சுவாமி, பர்வத வர்த்தினி அம்பாள் மற்றும் ராமர், விபீஷணர் பட்டாபிஷேக விழாவுக்கு கோதண்ட ராமர் கோயிலுக்குச் செல்வதால் அன்று காலை 7 மணியிலிருந்து மாலை 5 மணி வரையிலும் கோயில் நடை அடைக்கப்படுவதுடன், கோயில் தீர்த்தங்களில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப் படமாட்டார்கள் என்று கோயில் நிர்வாகம் சார்பில்…
Author: admin
சென்னை: “என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது. அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.” எனத் தெரிவித்துள்ளார். நடிகர் ராஜேஷ்: தமிழ்த் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார். அவருக்கு வயது 75. குறைந்த ரத்த அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பினால் அவர் உயிரிழந்தார். இயக்குநர் கே.பாலச்சந்தரின், ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நடிகர் ராஜேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். ராஜேஷ் ஒரு சிறந்த டப்பிங் கலைஞரும் கூட. ‘டும் டும் டும்’, ‘மஜா’, ‘உள்ளம்…
மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். ஜூன் 1-ம் தேதி கட்சிப் பொதுக்குழுவில் பங்கேற்க வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்பதற்காக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் ஏற்பாடு செய்த கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல், அதற்கு போட்டியாக அதிமுக கவுன்சிலர்கள் துணையுடன் மாநகராட்சி கூட்டத்தை நடத்தியதற்கு மூளையாக செயல்பட்டதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆரம்பம் முதலே மோதல்.. மதுரை மாநகராட்சி திமுக மேயராக இந்திராணி இருந்து வருகிறார். இவர் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். இந்திராணி மேயரான நாள் முதல், தற்போது வரை இவருக்கும் பெரும்பான்மை திமுக கவுன்சிலர்கள், மண்டலத் தலைவர்களுக்கும் ஒத்துப்போகவில்லை. ஒரே ஒரு மத்திய மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி மட்டும் மேயர் இந்திராணி ஆதரவாளராக இருந்து வருகிறார். மேயர் இந்திராணி பெயரளவுக்கு மேயராகவும், நிழல் மேயராக அவரது கணவர் பொன் வசந்த்…
புதுடெல்லி: உலகின் 4-வது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்திருப்பது சாதாரண விஷயமல்ல என்று தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார். ஜப்பானை பின்னுக்கு தள்ளி உலகின் நான்காவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 4.187 டிரில்லியன் டாலர்களாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ள பதிவில், “நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, ஜிடிபி.யில் ஜப்பானை இந்தியா முந்த வேண்டும் என்பது தொலைதூர மற்றும் துணிச்சலான கனவாக இருந்தது. இன்று அந்த மைல்கல் எட்டப்பட்டு விட்டது. இது சாதாரண விஷயம் அல்ல. ஜப்பான் நீண்ட காலமாக மிகப்பெரிய உற்பத்தித் திறன் மற்றும் மீள்தன்மையுடைய பொருளாதாரமாக இருந்து வருகிறது. இன்று நாம் அடைந்திருப்பது, பல்வேறு துறைகள், தலைமுறைகள் மற்றும் பகுதிகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான இந்தியர்களின் லட்சியம் மற்றும் புத்திகூர்மைக்கு சான்றாக விளங்குகிறது. இந்தியாவின் அடுத்த பாய்ச்சல்…
தேசிய மருத்துவ நூலகத்தின் ஆய்வின்படி, கேரட் சாறு குடிப்பது மொத்த ஆக்ஸிஜனேற்ற நிலையை அதிகரிப்பதன் மூலமும், ஆய்வில் அளவிடப்பட்ட எந்தவொரு இருதய ஆபத்து குறிப்பான்களிலிருந்தும் சுயாதீனமாக லிப்பிட் பெராக்ஸைடேஷனைக் குறைப்பதன் மூலமும் இருதய அமைப்பைப் பாதுகாக்கக்கூடும். மேலும், பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் இரத்த அழுத்தத்தை குறைக்கின்றன. கேரட் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் உள்ள ஃபைபர் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களுடன் இணைந்தால், இது ஆரோக்கியமான இதயம் மற்றும் சிறந்த இரத்த ஓட்டத்தை ஆதரிக்கிறது.எல்லா படங்களும் மரியாதை: இஸ்டாக்முதலில் ஒரு படத்தை எடுக்காமல் உங்கள் உணவை சாப்பிட முடியவில்லையா?எங்கள் உணவு புகைப்பட போட்டியில் சேர்ந்து, அற்புதமான பரிசுகளை வெல்ல ஒரு வாய்ப்பைப் பெறுங்கள்!விவரங்கள்.சுவையான சமையல் குறிப்புகளைக் கண்டறியவும், கவர்ச்சிகரமான உணவுக் கதைகளை அனுபவிக்கவும், சமீபத்திய உணவு செய்திகளுடன் புதுப்பித்துக்கொள்ளவும் எங்கள் வாட்ஸ்அப் உணவு சமூகத்தில் சேரவும்! கிளிக் செய்கஇங்கே
விண்வெளி பொறியியலுக்கான ஒரு அற்புதமான நடவடிக்கையில், ஸ்பேஸ்எக்ஸ் தனது ஸ்டார்ஷிப் சூப்பர் ஹெவி சிஸ்டத்தின் ஒன்பதாவது ஒருங்கிணைந்த சோதனை விமானத்தை தெற்கு டெக்சாஸில் செவ்வாய்க்கிழமை மாலை ஸ்டார்பேஸிலிருந்து அறிமுகப்படுத்தியது. துல்லியமான தரையிறக்கத்தை இலக்காகக் கொண்ட முந்தைய பயணங்களைப் போலல்லாமல், இந்த விமானம் வேண்டுமென்றே ஒரு சக்திவாய்ந்த ஸ்பிளாஷவுனில் முடிந்தது. ராக்கெட்டின் கட்டமைப்பு வரம்புகள் குறித்த முக்கியமான தரவுகளைச் சேகரித்து, முழு மறுபயன்பாட்டை நோக்கிய முன்னேற்றத்தை அதிகரிப்பதே குறிக்கோளாக இருந்தது. இந்த வியத்தகு விபத்து ஒரு கணக்கிடப்பட்ட பரிசோதனையாகும், இது சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் வழக்கமான பணிகள் உட்பட எதிர்கால விண்வெளி ஆய்வுகளுக்கான நம்பகமான, மறுபயன்பாட்டு வெளியீட்டு முறைகளை உருவாக்குவதற்கான ஸ்பேஸ்எக்ஸின் பணியில் ஒரு முக்கிய படியைக் குறிக்கிறது.ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் நடுப்பகுதியில் விமானத்தில் கட்டுப்பாட்டை இழந்தது, இதனால் கடல் விபத்துடன் பணி முடிவடையும்இரவு 7:36 மணிக்கு EDT (2336 GMT), முற்றிலும் ஒருங்கிணைந்த ஸ்டார்ஷிப் ஏவுகணை வாகனம்-சூப்பர் ஹெவி பூஸ்டரின்…
நினைவு நாள் 2025 ஆம் ஆண்டில், 70 வயதான கோல்ட் ஸ்டார் தாயான டினா பீட்டர்ஸ் மற்றும் முன்னாள் மேசா கவுண்டி, கொலராடோ, எழுத்தர் மற்றும் ரெக்கார்டர் ஆகியோரை விடுவிக்கக் கோரி எக்ஸ் ட்ரெண்டட் பதிவுகள் ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனையாக விதிக்கப்பட்டன. 2024 ஆம் ஆண்டில் 2021 தேர்தல் பாதுகாப்பு மீறலில் வாக்களிக்கும் இயந்திரத்தை சேதப்படுத்தியது சம்பந்தப்பட்டதற்காக குற்றம் சாட்டப்பட்ட பீட்டர்ஸ் ஒரு துருவமுனைக்கும் நபராக மாறிவிட்டார். எக்ஸ் மீதான முக்கிய குரல்கள் உள்ளிட்ட ஆதரவாளர்கள், தேர்தல் மோசடியை அம்பலப்படுத்தும் ஒரு தேசபக்தராக அவளை கருதுகின்றனர், அதே நேரத்தில் அவர் ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதாக விமர்சகர்கள் வாதிடுகின்றனர். அவரது வழக்கு, இப்போது அமெரிக்க நீதித்துறை மறுஆய்வு கீழ், தொடர்ந்து சூடான விவாதத்தைத் தூண்டுகிறது.டினா பீட்டரின் பின்னணி மற்றும் மேசா கவுண்டி எழுத்தராக பங்குடினா பீட்டர்ஸ் 2019 முதல் 2023 வரை மேசா கவுண்டி எழுத்தர் மற்றும் ரெக்கார்டராக பணியாற்றினார். ஒரு கோல்ட்…
புதுடெல்லி: பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஜம்மு-காஷ்மீர், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களில் இன்று (மே 29) நடைபெற இருந்த சிவில் பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி சிவில் பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என ஹரியானா மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது. அதனால் ‘ஆபரேஷன் ஷீல்ட்’ ஒத்திவைக்கப்படுகிறது என அம்மாநில அரசு தெரிவித்தது. இது தொடர்பாக அரசு துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டது. சண்டிகர் நிர்வாகமும் பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைத்தது குறித்த அறிவிப்பை வெளியிட்டது. ஹரியானாவில் இன்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 22 மாவட்டத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது தொடர்பான மாற்று தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியான காரணங்களுக்காக இந்த ஒத்திகை தள்ளி வைக்கப்பட்டுள்ளது என தகவல். ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத்…
சென்னை: 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருவதால் சர்ச்சைகள் எழுந்துள்ளன. தமிழக பள்ளிக் கல்வியில் 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. இதன் முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. அதில் பிளஸ் 2 வகுப்பில் 95 சதவீத பேரும், பிளஸ் 1 வகுப்பில் 92 சதவீத பேரும் தேர்ச்சி பெற்றனர். அதேநேரம் இவ்விரு வகுப்புகளில் பொதுத் தேர்வில் ஒரு லட்சத்து 218 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். அதில் 73,820 பேர் (71.5%) அரசுப் பள்ளி மாணவர்களாவர். இதற்கிடையே திருச்சி உட்பட சில மாவட்டங்களில் 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் ஆசிரியர்களிடம் அது தொடர்பாக விளக்கம் கேட்டு 17ஏ நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசு மாதிரிப் பள்ளிகளில் ஏதேனும்…
சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, கனடாவின் வென் யு ஜாங்குடன் மோதினார். 31 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-14, 21-9 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் சிந்து, டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற 5-ம் நிலை வீராங்கனையான சீனாவின் சென் யு ஃபெயுடன் மோதுகிறார். மற்ற ஆட்டங்களில் இந்தியாவின் மாளவிகா பன்சோத் 21-14, 18-21, 11-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் சுபானிடா கேட்டோங்கிடமும், பிரியன்ஷு ரஜாவத் 21-14,10-21, 14-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கோடை நரோகாவிடமும் தோல்வி அடைந்தனர். அன்மோல் ஹார்ப் 11-21, 22-24 என்ற செட் கணக்கில் சீனாவின் சென் யு…
