தெஹ்ரான்: இந்தியா உடனான இருதரப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. “காஷ்மீர் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை என இந்தியா உடனான அனைத்து பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நாங்கள் விரும்புகிறோம். மேலும், வர்த்தகம் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு குறித்து எங்கள் அண்டை நாடுகளுடன் பேசவும் தயாராக இருக்கிறோம்” என்று அவர் கூறினார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானில் செயல்பட்ட 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை அழித்தது. இதைத் தொடர்ந்து கடந்த 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிதீவிர போர் நடைபெற்றது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியாவின் முப்படைகளும் தாக்குதல் நடத்தின. இந்திய ராணுவத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சர்வதேச…
Author: admin
ஹாலிவுட் ஃபேன்டசி படமான ‘ஹவ் டு டிரெய்ன் யுவர் டிராகன்’ தமிழில் வெளியாகிறது. 2010-ம் ஆண்டு இதே பெயரில் வெளியான அனிமேஷன் படத்தின் ரீமேக் இது. இதன் 2-ம் பாகமும் 2014-ம் ஆண்டு அனிமேஷன் படமாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இப்போது இதைத் திரைப்படமாக உருவாக்கியுள்ளனர். டீன் டெப்லாய்ஸ் இயக்கியுள்ள இந்த ஆக்ஷன் படத்தில் மாசன் தேம்ஸ், நிகோ பார்க்கர், ஜெராட் பட்லர், நிக் ஃப்ரோஸ்ட், ஜுலியன் டென்னிசன் உள்பட பலர் நடித்துள்ளனர். பெர்க் தீவில் வசிக்கும் வைக்கிங் மக்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கிறது டிராகன்கள். அதற்கு எதிரான போராட்டத்தில் வைக்கிங் இளவரசன் ஹிக்கப் ஈடுபடுகிறான். அவனுக்கு டூத்லெஸ் என்ற டிராகனுடன் நட்பு ஏற்படுகிறது. இந்த நட்பு பழைய பயத்தை உடைத்து உண்மையான வலிமையின் புதிய அர்த்தத்தைக் காட்டுகிறது. பல ஆண்டுகள் எதிரிகளாக இருக்கும் மனிதர்களுக்கும் டிராகன்களுக்கும் இடையில் அமைதியை நோக்கிய பாதையைத் தொடங்குவதாகக் கதை செல்லும். இந்தப் படம் ஆங்கிலம்,…
புதுக்கோட்டை: “தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும். இல்லையேல் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்.” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவுக்கு 5 எம்.பி. சீட்டுகளும், ஒரு மாநிலங்களவை சீட்டும் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை. அவ்வாறு கொடுக்கவில்லை என்றால், அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும். தேமுதிகவுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு ஒருமுறை அன்புமணிக்கும், மற்றொரு முறை ஜி.கே.வாசனுக்கும் தரப்பட்டது. அதை தேமுதிக மனதார ஏற்றுக்கொண்டது. தற்போது கமல்ஹாசனுக்கு திமுக தரப்பில் மாநிலங்களவை சீட் வழங்கியது வரவேற்கத்தக்கது. அரசியலில் நம்பிக்கைதான் முக்கியம். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றினால்தான் பொதுமக்கள் நம்புவார்கள். இன்னும் 2 நாட்களில் தேமுதிக சார்பில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். கடலூரில் நடைபெறும் மாநாட்டில்…
சென்னை: சென்னை மாநகராட்சியின் ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் (NSE) பட்டியலிடும் நிகழ்வினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 26) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சியின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வினை மணி ஒலித்து தொடங்கி வைத்தார். நகர்ப்புர உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு தேவைப்படும் நிதிக்காக பல்வேறு நவீன நிதி திரட்டும் முன்னெடுப்புகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சியில் சென்னை மாநகராட்சி நகர்ப்புர நிதிப் பத்திரங்கள் மூலம் உட்கட்டமைப்பு திட்டத்துக்கு நிதி திரட்டியது ஒரு முக்கிய நிகழ்வாகும். சென்னை மாநகராட்சி 10 ஆண்டு காலத்துக்கு, ஆண்டுக்கு 7.97% என்ற மிகவும் குறைந்த வட்டி விகிதத்தில் 200 கோடி ரூபாய் நகர்ப்புர…
விலை வரம்பு:, 000 4,000–, 500 5,500 (தோராயமாக $ 50– $ 65)1968 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட, பூமா மெல்லிய தோல் கிளாசிக் தெரு ஆடை வரலாற்றில் மிகவும் ஸ்டைலான ஸ்னீக்கர்களில் ஒன்றாக அதன் கோடுகளைப் பெற்றுள்ளது. 70 மற்றும் 80 களில் விளையாட்டு வீரர்கள் மற்றும் ஹிப்-ஹாப் கலைஞர்களால் முதலில் பிரபலப்படுத்தப்பட்ட, ஷூவின் மென்மையான மெல்லிய தோல் மேல், சங்கி ரப்பர் சோல் மற்றும் ரெட்ரோ வடிவமைப்பு ஆகியவை ஒரு ஏக்கம் கவர்ச்சியைக் கொடுக்கும்.ஆழமான பர்கண்டி முதல் வன பச்சை வரை பணக்கார வண்ண விருப்பங்கள், கவனத்திற்காக கத்தாமல் ஆளுமையைச் சேர்க்க உங்களை அனுமதிக்கின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த ஸ்னீக்கர்கள் ஒரு ஆடம்பரமான உணர்வைக் கொண்டிருக்கிறார்கள், பட்டு மெல்லிய தோல் பொருளுக்கு நன்றி, பிரீமியம் விலை அடைப்புக்குறியின் கீழ் நன்றாக தங்கியிருக்கும்போது.சிரமமின்றி குளிர்ச்சியான அதிர்வுக்காக அவற்றை பரந்த-கால் கால்சட்டை, விண்டேஜ் டெனிம் அல்லது ஜாகர்களுடன் இணைக்கவும்.
எலோன் மஸ்கின் ஸ்டார்லிங்க் சேட்டிலைட் வென்ச்சர் இந்திய சந்தையில் நடவடிக்கைகளைத் தொடங்குவதாகக் கூறப்படுகிறது. ஸ்டார்லிங்க் ஸ்பேஸ்எக்ஸ் நிதியுதவி அளிக்கிறது மற்றும் குறைந்த பூமி சுற்றுப்பாதை (லியோ) செயற்கைக்கோள்களின் விண்மீனைப் பயன்படுத்தி அதிவேக இணையத்தை உறுதியளிக்கிறது. இந்தியா மறைக்க இவ்வளவு பெரிய புவியியல் மற்றும் பல குறைவான மண்டலங்களைக் கொண்டிருப்பதால், ஸ்டார்லிங்கின் தொழில்நுட்பம் இணைய ஊடுருவலில், குறிப்பாக கிராமப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் ஒரு புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.சமீபத்திய புதுப்பிப்பின்படி, காலக்கெடு, எதிர்பார்க்கப்பட்ட பயனர் திறன், விலை மாதிரிகள் மற்றும் ஒழுங்குமுறை தடைகள் குறித்து புதிய தகவல்கள் வெளிவருவதால், வெளியீடு முன்பை விட அருகில் உள்ளது. இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையிலிருந்து (டிஓடி) ஒரு கடிதத்தை (LOI) பெறுவதன் மூலம் ஸ்டார்லிங்க் ஒரு முக்கியமான ஒழுங்குமுறை தடையை வென்றுள்ளது. நிறுவனம் நாட்டில் செயல்பட அரசாங்கத்தின் ஆரம்ப ஒப்புதலைக் குறிக்கிறது, இது வணிக அறிமுகத்திற்கு ஒரு படி மேலே உள்ளது.அதிவேக அலைவரிசையுடன் இந்தியாவில்…
அமெரிக்க இராணுவம் கடந்த 3 ஆண்டுகளில் 6 பில்லியன் டாலர்களை துருப்புக்களை நியமிக்கவும் தக்கவைக்கவும் செலவிட்டது (புகைப்படம்: ஆபி) அமெரிக்க இராணுவம் கடந்த மூன்று ஆண்டுகளில் 6 பில்லியன் டாலருக்கும் அதிகமாக சேவை உறுப்பினர்களை நியமிக்கவும் தக்கவைக்கவும் செலவிட்டது, பட்டியல் குறைபாடுகளை எதிர்ப்பதற்கான வளர்ந்து வரும் பிரச்சாரமாக உள்ளது.இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் கடற்படையினர் ஆகியவற்றில் மறுபரிசீலனை செய்வதற்கான நிதி சலுகைகள் 2022 முதல் கடந்த ஆண்டு வரை வியத்தகு அளவில் அதிகரித்தன, கடற்படை மற்றவர்களை விட அதிகமாக இருந்தது, சேவைகளால் வழங்கப்பட்ட நிதி மொத்தத்தின்படி.ஆட்சேர்ப்பு போனஸின் ஒட்டுமொத்த அளவும் சீராக உயர்ந்தது, இது இராணுவம் மற்றும் மரைன் கார்ப்ஸின் செலவினங்களில் குறிப்பிடத்தக்க தாவல்களால் தூண்டப்பட்டது. இராணுவ சேவைகள் வழக்கமாக பல ஆண்டுகளாக ஆட்சேர்ப்பு மற்றும் தக்கவைப்பு போனஸில் பணத்தை ஊற்றுகின்றன. ஆனால் பென்டகன் தலைவர்கள் வீழ்ச்சியடைந்த பட்டியலிடும் எண்களை மாற்றியமைக்க முயன்றதால் மொத்தம் அதிகரித்தது, குறிப்பாக கோவிட் -19 கட்டுப்பாடுகள்…
மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த ஐந்து நாட்களாக கனமழை தொடர்பான சம்பவங்களால் 16 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் நிலச்சரிவு, இடி, மின்னல் தாக்குதல், மரம் அல்லது கட்டிடம் இடிந்து விழுதல் போன்ற சம்பவங்களால் உயிரிழந்தனர். இந்த ஆண்டு வழக்கத்தை விட 8 நாட்களுக்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதன்படி பருவமழை தொடங்கிய மே 24-ல் இருந்தே மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மழை தொடங்கிய முதல் நாளில் இருந்து இதுவரை மழை தொடர்பான சம்பவங்களால் 16 பேர் உயிரிழந்தனர். இது குறித்த மகாராஷ்டிர அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘புனேவில் மூன்று பேர் உயிரிழந்தனர். தானே, லத்தூர் மற்றும் பாந்தராவில் தலா இரண்டு பேர் உயிரிழந்தனர். ராய்காட், அகில்யாநகர், நாக்பூர், வர்தா, சந்தர்பூர், மும்பை புறநகர், கோண்டியா மாவட்டங்களில் தலா ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதனிடையே, மே 24-ம்…
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பெரம்பலூர், ஸ்ரீரங்கம், லால்குடி, அறந்தாங்கி, ஒரத்தநாடு, நன்னிலம், வேப்பூர் உட்பட 10 இடங்களில் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வந்தன. இந்த கல்லூரிகள் 2019-ம் ஆண்டு அரசு கல்லூரிகளாக அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், இதில் பணியாற்றிய 91 கவுரவ விரிவுரையாளர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் 25 பேர் என மொத்தம் 116 பேருக்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால், வாழ்வாதாரத்துக்கே வழியில்லாமல் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பெரம்பலூர் அரசு கலை, அறிவியல் கல்லூரியின் கவுரவ விரிவுரையாளர் எம்.வினோத் `இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியது: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் 2006-ம் ஆண்டு தனது ஆளுகைக்கு உட்பட்ட மாவட்டங்களில் பின்தங்கிய பகுதி மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் உறுப்புக் கல்லூரிகளை தொடங்கியது. இந்த கல்லூரிகளை 2019-ம்…
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயஸ் அய்யரை தேர்வு செய்யாமல் விட்டது பலருக்கும் ஆச்சரியமளிப்பதே. ஏனெனில் கேப்டன்கள், சீனியர்கள் இல்லாத அணியில் கேப்டனாகவே கூட ஸ்ரேயஸ் அய்யரை தேர்வு செய்திருக்க வேண்டும். ஆனால், அணியிலேயே இல்லை என்பது பெரிய ஆச்சரியம் என்பதோடு கவுதம் கம்பீர் மீது பலத்த ஐயங்களை எழுப்பக் கூடியதே. கம்பீர் போன்ற அதாரிட்டேரியன் அணித் தேர்வுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று கூறினால் அது நிச்சயம் நம்பத்தகுந்ததல்ல. ஸ்ரேயஸ் அய்யரை ஏன் தேர்வு செய்யவில்லை என்று கேட்டதற்கு ‘நான் செலக்டர் அல்ல’ என்று ஒற்றை வரியில் அதைப் புறக்கணிக்கிறார் கம்பீர் என்றால் நிச்சயம் குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்ற முதுமொழிக்கேற்ப ஸ்ரேயஸ் அய்யர் தேர்வில் இவரது கையும் இருக்கிறது என்பதே நம் வாசிப்பு. ஸ்ரேயஸ் அய்யர் உள்நாட்டுக் கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார். தற்போது ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி ரிக்கி பாண்டிங் பயிற்சியின் கீழ்…
