லண்டன்: இங்கிலாந்தில், லிவர்பூல் கிளப் கால்பந்து அணியின் ப்ரீமியர் லீக் சாம்பியன்ஷிப் வெற்றி அணிவகுப்பு கொண்டாட்டத்தின் போது நகர வீதியில் குழுமியிருந்த அந்த அணியின் ரசிகர்கள் மீது மினிவேன் ஒன்று மோதியதில் சுமார் 50 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் காயமடைந்த 20 பேருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. 27 பேர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அதில் நான்கு பேர் சிறுவர்கள். ஒரு நபரும், சிறுவர் ஒருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை இங்கிலாந்து ஊடக நிறுவனம் ஒன்று உறுதி செய்துள்ளது. இந்தச் சம்பவம் இங்கிலாந்து நேரப்படி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள லிவர்பூல் நகரின் மையப்பகுதியில் லிவர்பூல் கால்பந்து அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தனர். இங்கிலாந்தில் அதிகார ரசிகர்களை கொண்ட அணிகளில் லிவர்பூல் முதலிடத்தில் உள்ளது. அதனால்…
Author: admin
மலையாள நடிகரான உன்னி முகுந்தன் மீது, அவரது மேலாளராக இருந்த விபின் குமார் என்பவர், காக்கநாடு இன்ஃபோபார்க் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். அதில், டோவினோ தாமஸின் ‘நரிவேட்டை’ படத்தைப் பாராட்டி முகநூலில் பதிவிட்டிருந்தேன். இதனால் கோபமடைந்த உன்னி முகுந்தன், தன்னைத் தாக்கியதாகவும் ‘மார்கோ’ படத்துக்குப் பிறகு அவருக்குச் சரியான வாய்ப்புகள் அமையாததால் விரக்தியில் இப்படிச் செய்ததாகவும் கூறியிருந்தார். இது பரபரப்பானது. இந்நிலையில், விபின் குமாரின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்து உன்னி முகுந்தன் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த 2018-ம் ஆண்டு நான் சொந்த படம் தயாரிக்க இருந்த போது விபின் குமார் தொடர்பு கொண்டார். பல பிரபலங்களின் பிஆர்ஓ என தன்னை அறிமுகம் செய்துகொண்டார். அவரை என் தனிப்பட்ட மேலாளராக நான் நியமிக்கவில்லை. ‘மார்கோ’ படப்பிடிப்பின்போது அவரால் எனக்குப் பல பிரச்சினைகள் ஏற்பட்டது. பின்னர் தனது தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்டார். இந்நிலையில் எனக்கு எதிராகப் புகார் தெரிவித்துள்ளார். அவர்…
சென்னை: எய்ட்ஸ், ஆஸ்துமா, காசநோய், நீரிழிவு, உடல்பருமன் உள்ளிட்ட 56 நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதாக விளம்பரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலர் (இந்திய முறை மருத்துவம்) மருத்துவர் ஒய்.ஆர்.மானேக்சா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய மருத்துவச் சங்கம் மற்றும் மத்திய அரசுக்கு இடையே நடைபெற்று வரும் ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 26-ம் தேதி சில ஆணைகளை பிறப்பித்துள்ளது. அதில் மருந்து மற்றும் மாயத்தீர்வு (ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள்) சட்டம் 1954 மற்றும் 1955-ன்படி, 56 நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடபாக ஆட்சேபனைக்குரிய வகையில் விளம்பரம் செய்தல் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி 1.குடல்அழற்சி, 2.தமனிதடிப்பு, 3.பார்வையின்மை, 4.ரத்தவிஷம், 5.பிரைட்ஸ்நோய், 6.புற்றுநோய்கள், 7.கண்புரை, 8.காதுகேளாமை, 9.நீரிழிவுநோய், 10.மூளைநோய்கள் மற்றும் கோளாறுகள், 11.கண்நோய்கள் மற்றும் கோளாறுகள், 12.கருப்பையின் நோய்கள் மற்றும் கோளாறுகள், 13. மாதவிடாய் கோளாறுகள், 14.நரம்பு மண்டல…
சென்னை: தங்கம் விலை இன்று (மே.26) பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.71,600-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றமேதும் இல்லை. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. அந்தவகையில், தங்கம் விலை கடந்த வெள்ளிக்கிழமை, பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.71,920-க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று (திங்கள் கிழமை) வாரத்தின் முதல் நாளில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.8,950-க்கும், பவுனுக்கு ரூ. 320 குறைந்து, ஒரு பவுன் ரூ.71,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமேதுமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.111-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இப்போது வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் பெரும்பாலும் அவரது நேர்த்தியுடன், அருள் மற்றும் அரச கடமைகளுக்கான அர்ப்பணிப்புக்காக கொண்டாடப்படுகிறார். பிரிட்டிஷ் ராயல் குடும்பத்தில் சேர்ந்ததிலிருந்து, அவர் தீவிரமான ஊடக ஆய்வுக்கு உட்பட்டுள்ளார், ஒவ்வொரு நடவடிக்கையும் நெருக்கமாக ஆராயப்படுகிறது. அவரது மெருகூட்டப்பட்ட பொது உருவம் இருந்தபோதிலும், கேட் சர்ச்சையிலிருந்து விடுபடவில்லை. பொது தோற்றங்களில் தவறாகச் சொல்வதற்கு அனுமதியின்றி வெளிப்படும் தனிப்பட்ட தருணங்களிலிருந்து, கேட் கவனத்தை ஈர்க்கும் சவால்களை எதிர்கொண்டுள்ளார். கேட் மிடில்டன் அரச சர்ச்சைகளைத் தூண்டிவிட்டு, முடியாட்சிக்குள்ளான வாழ்க்கையின் சிக்கலான அழுத்தங்களை வெளிப்படுத்திய சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் இங்கே.இளவரசர் வில்லியமுடனான 2007 பிரிந்த: ஆரம்பகால ராயல் ரொமான்ஸ் சோதிக்கப்பட்டது2011 இல் விசித்திரக் கதை திருமணத்திற்கு முன்பு, கேட் மற்றும் இளவரசர் வில்லியமின் உறவு ஒரு பாறை இணைப்பு இருந்தது. 2007 ஆம் ஆண்டில், இந்த ஜோடி வதந்திகள் மற்றும் தீவிரமான ஊடக ஊகங்களுக்கு மத்தியில் சுருக்கமாக பிரிந்தது. சில அறிக்கைகள் வில்லியம் மிகவும்…
1000 அடி சுனாமி எச்சரிக்கை வர்ஜீனியா டெக்கின் விஞ்ஞானிகளிடமிருந்து புதிதாக வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் பசிபிக் வடமேற்கு முழுவதும் வெளிவரக்கூடிய ஒரு புத்திசாலித்தனமான காட்சியை வெளிப்படுத்தியுள்ளது. அவர்களின் கண்டுபிடிப்புகளின்படி, வடக்கு கலிபோர்னியா, ஓரிகான் மற்றும் வாஷிங்டனில் உள்ள கடலோரப் பகுதிகள் பேரழிவு வெள்ளம் மற்றும் மெகா-சுனாமிகளின் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன-இது 1,000 அடி உயரத்தை எட்டுகிறது the டெக்டோனிக் செயல்பாடு மற்றும் காலநிலை மாற்றத்தின் ஒருங்கிணைந்த சக்திகளைக் குறிக்கிறது. இந்த ஆபத்தான ஆராய்ச்சியின் மையத்தில் காஸ்கேடியா துணை மண்டலம் .பொருளாதார டைம்ஸ் அறிக்கையின்படி, ஒரு பெரிய பூகம்பம் இன்று இந்த மண்டலத்தைத் தாக்கினால், கடல் மட்டங்கள் மற்றும் கடலோர நில வீழ்ச்சி காரணமாக முன்னர் கற்பனை செய்ததை விட தாக்கங்கள் மிகவும் அழிவுகரமானதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள், வீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்டு, சமூகங்கள் எவ்வாறு நிமிடங்களில் அதிகமாக இருக்கக்கூடும் என்பதை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.காஸ்கேடியா…
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (படம்: ஆபி) டிரம்ப் நிர்வாகம் சட்டவிரோத குடியேறியவர்களை அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் அரசு சாரா தங்குமிடங்களுக்கு தொடர்ந்து விடுவித்து வருகிறது. தற்காலிக வீட்டுவசதி மற்றும் எந்தவொரு உதவியும் கடத்தல்காரர்களைத் வழக்குத் தொடரப் பயன்படும் சட்டத்தை மீறும் அதே அமைப்புகளுக்கு எச்சரித்த பின்னர் இந்த நடவடிக்கை வருகிறது.மார்ச் 11 தேதியிட்ட கடிதத்தில், புலம்பெயர்ந்தோருக்கு உணவு, வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து வழங்குவது கூட்டாட்சி சட்டத்தை மீறுவதாக கருதப்படலாம் என்று பெடரல் அவசரநிலை மேலாண்மை நிறுவனம் (ஃபெமா) எச்சரித்தது. பரந்த விசாரணையின் ஒரு பகுதியாக சட்டவிரோத குடியேறியவர்கள் தங்குமிடங்களிலிருந்து விரிவான தகவல்களை நிறுவனம் கோரியது.அரசு சாரா தங்குமிடங்கள் ஏன் முக்கியமானவை?அமெரிக்காவின் பிற பகுதிகளுக்கு தற்காலிக வீட்டுவசதி, உணவு மற்றும் உதவியை வழங்குவதன் மூலம் புலம்பெயர்ந்தோரை ஆதரிப்பதில் தங்குமிடம் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், ஃபெமாவின் கடிதத்தைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்தோருக்கு தொடர்ந்து உதவுவது எந்தவொரு சட்ட சிக்கலிலும் தரையிறங்க முடியுமா என்று இந்த…
புதுடெல்லி: கீழடி அறிக்கையை வெளியிடுவதில் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அக்கறை காட்டவில்லை என்பது ஒரு கற்பனைக் கதை என்றும், இது வேண்டுமென்றே துறையை தவறாக சித்தரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது என்றும் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை விளக்கம் அளித்துள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கை வெளியீடு குறித்து ஊடகங்களின் ஒரு பகுதியினரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட செய்திக் கட்டுரைக்கு எதிராக இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையானது தலைமை இயக்குநரின் பெயரில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடங்களின் அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு அகழ்வாராய்ச்சிப் பணியிலும் அதிக நேரம், ஆற்றல் மற்றும் பணம் செலவிடப்படுவதால், இந்த அம்சத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இல்லையெனில் அகழ்வாராய்ச்சிப் பணியின் அடிப்படை நோக்கம் நிறைவேற்றப்படாமலேயே இருக்கும். ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டில், அகழ்வாராய்ச்சியாளர்களால் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, அவை பல்வேறு துறை நிபுணர்களுக்கு அனுப்பப்படுகின்றன. அவர்கள் அறிக்கைகளை…
கோடை விடுமுறைக்குப் பிறகு வரும் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: 2025-26ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 2-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, பள்ளி துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பள்ளிகளில் கீழ்க்காணும் நடைமுறைகளையும் பின்பற்றுமாறு தலைமையாசிரியர்கள் / அனைத்து வகை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். *உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வருகை புரிதல் வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களின் வருகை, ஒழுக்கம், சீருடை ஆகியவற்றை நெறிப்படுத்திட வேண்டும். *ஒவ்வொரு வகுப்பிற்கும் வாரத்திற்கு இரண்டு பாடவேளைகள் உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. உடற்கல்வி ஆசிரியர்கள் குறிப்பிட்ட வகுப்பு மாணவர்கள் அனைவரையும் இப்பாடவேளைகளில் விளையாட வைக்க வேண்டும். *வாரத்தில் ஒருநாளில் பள்ளி…
ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் போட்டியில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ் 2-வது சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த அர்ஜூன் எரிகைசியிடம் தோல்வி அடைந்தார். நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. 6 வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்தத் தொடரின் முதல் சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் தோல்வி அடைந்திருந்தார். இந்நிலையில் நேற்று 2-வது சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான அர்ஜூன் எரிகைசியுடன் மோதினார் குகேஷ். அர்ஜூன் எரிகைசி கருப்பு காய்களுடனும், குகேஷ் வெள்ளை காய்களுடனும் களமிறங்கினர். 4 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள அர்ஜூன் எரிகைசி 62-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 21 வயதான அர்ஜூன் எரிகைசி 2,801 ரேட்டிங் புள்ளிகளை பெற்று வரலாற்றில் அதிக ரேட்டிங் புள்ளிகளை…
