Author: admin

கொல்கத்தா: “மேற்கு வங்கத்துக்கு நாளையே கூட தேர்தல் நடத்துங்கள். நாங்களும், மேற்கு வங்க மக்களும் தயாராகவே இருக்கிறோம்” என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார். மேலும், நேரலை விவாதத்துக்கு வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். மேற்கு வங்கத்தின் அலிப்பூர்துவாரில் நகர எரிவாயு விநியோகத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி கொடூரமானது (நிர்மம்தா), ஊழல் நிறைந்தது. மக்கள் மாற்றத்தையும் நல்லாட்சியையும் விரும்புகிறார்கள்” என்று தெரிவித்திருந்தார். பிரதமரின் இந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “நான் உங்களுக்கு (பிரதமர்) சவால் விடுகிறேன். என்னுடன் ஒரு தொலைக்காட்சி நேரடி விவாதத்துக்கு வாருங்கள். நீங்கள், உங்கள் டெலிபிராம்ப்ட்டரையும் கொண்டுவரலாம்” என்று சவால் விடுத்துள்ளார். மேலும் அவர் கூறியது: “எதிர்க்கட்சித் தலைவர்கள் சர்வதேச அளவில் தேசத்தின் நலன்களை பாதுகாக்க முயற்சி செய்துகொண்டு இருக்கும்…

Read More

சென்னை: வடசென்னை ஐடிஐயில் ரோபோடிக்ஸ், ட்ரோன் விமானி போன்ற தொழிற்பிரிவு படிப்புகளில் சேர ஜூன் 13-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு, பயிற்சி துறையின்கீழ் இயங்கி வரும் வடசென்னை ஐடிஐயில் 2025-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அதன்படி, கட்டிட பொறியியல் உதவியாளர், கட்டிட பட வரைவாளர், இயந்திர பட வரைவாளர், லிஃப்ட் மெக்கானிக், எலெக்ட்ரீசியன், ஏசி – ஃப்ரிட்ஜ் டெக்னீசியன், வயர்மேன் ஆகிய 2 ஆண்டு தொழில் பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அதேபோல, ஓராண்டு படிப்புகளான பிளம்பர், வெல்டர், இன்டீரியர் டிசைன் மற்றும் டெக்கரேஷன் மற்றும் 6 மாத தொழில் பிரிவான ட்ரோன் விமானி, தொழில் துறை 4.0 திட்டத்தின்கீழ் ஓராண்டு தொழிற்பிரிவுகளான ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம், டிஜிட்டல் உற்பத்தி, 2 ஆண்டு தொழிற்பிரிவுகளான எலெக்ட்ரிக்…

Read More

14 வயதில் ஐபிஎல் சதம் எடுத்த வைபவ் சூர்யவன்ஷி புள்ளிவிவரங்களை மாற்றி எழுத வைத்தவர் என்ற அளவில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறார். கிரிக்கெட் ஜாம்பவானும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனுமான ஸ்டீவ் வாஹ் கூட வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டியுள்ளார். ஆனால், சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடாதீர்கள் என்று எச்சரிக்கவும் செய்துள்ளார். 18 வயதில் ஆஸ்திரேலியாவின் அதிவேக பெர்த் பிட்சில் சதம் எடுத்தவர் சச்சின், அதுவும் ஆஸ்திரேலியாவின் பெரிய மிரட்டல் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக என்றால் அது சாதாரணத் திறமை அல்ல என்கிறார் ஸ்டீவ் வாஹ். ஏனெனில், பெரிய பெரிய ஜாம்பவான் பேட்டர்களெல்லாம் பெர்த் அதிவேக பவுன்ஸ் பிட்சில் சோபிக்க முடியாமல் திணறியுள்ளனர். ஆனால், சச்சின் 18 வயதில் பெர்த்தில் பிரமாதமாக ஆடி அசத்தியவர். லெஜண்ட்களையே மூக்கின் மீது விரல் வைக்கச் செய்தவர். 1992-ம் ஆண்டு பெர்த்தில் அதிவேக பவுன்ஸ் பிட்சில் 161 பந்துகளில் 114 ரன்களை விளாசினார் சச்சின் டெண்டுல்கர், மற்ற…

Read More

புதுடெல்லி: பொதுமக்களை கொன்றுவிட்டு, பிறகு தண்டனையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மற்றும் விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. 4 நாட்களாக நடைபெற்ற போர் கடந்த 10-ம் தேதி முடிவுக்கு வந்தது. இதையடுத்து சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுடன் தொடர்புடைய நாடுகளிடம் தெரிவிக்க அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த எம்.பி.க்கள் குழுவை மத்திய அரசு அனுப்பியது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கயானா நாட்டின் தற்போதைய துணை அதிபர் பரத் ஜக்தியோவை, ஜார்ஜ்டவுனில் உள்ள அதிபர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பயங்கரவாதம் எங்கு நடந்தாலும், அதை எதிர்த்து நிற்க வேண்டும் என்ற முடிவில் நாங்கள் (இந்தியா) தெளிவாக…

Read More

சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி நடிப்பில் உருவாகியுள்ள படம், ‘மெட்ராஸ் மேட்னி’. கார்த்தி கேயன் மணி இயக்கியுள்ள இதை மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஆனந்த் ஜி.கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு கே.சி.பாலசாரங்கன் இசையமைத்துள்ளார். ஜூன் 6-ம் தேதி, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்தப் படத்தை வெளியிடுகிறது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது, “மொத்த இந்திய சினிமாவும் இன்று முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறது. சினிமாவின் மார்க்கெட் முழுவதும் மாறியிருக்கிறது. கடந்த ஒரு வருடமாக என்ன படம் செய்வது என்பதில் எல்லோரிடமும் குழப்பம் இருக்கிறது. ஆனால் மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கிறார்கள். நல்ல படங்களுக்கு ஆதரவு தருகிறார்கள். ஒரு படம் ஆரம்பிக்கும்போது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான விஷயத்துடன் வந்து ‘பாசிட்டிவா’கத்தான் ஆரம்பிக்கிறோம். ஆனால் எல்லா படங்களும் அப்படி முழுமை பெறுவது இல்லை. அப்படி அமைந்த படமாக ‘மெட்ராஸ் மேட்னி’யை பார்க்கிறேன். சின்ன படம் பெரிய படம்…

Read More

சென்னை: “நகைக் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி விதித்து இருக்கும் கட்டுப்பாடுகள் கூட்டுறவு வங்கிகளை வெகுவாக பாதிக்காது” என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் இன்று (மே 29) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சரிடம், நகைக் கடன்களுக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடு விதித்துள்ளது இது கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்துமா என்று கேட்கப்பட்டது. அதற்கு, “ரிசர்வ் வங்கி விதித்து இருக்கும் கட்டுப்பாடுகள் பாதிக்கும். ஆனால், கூட்டுறவு வங்கிகளை வெகுவாக பாதிக்காது. விலை மதிப்பில் 75% கொடுக்கலாம் என்று கூறுகிறார்கள். அதை தான் நாம் செய்துகொண்டு இருக்கிறோம். ஆனால் ஏழை எளிய, நடுத்தர மக்களை இது வெகுவாக பாதிக்கும். இதை அறிந்த நம் முதல்வர், நடுத்தர மக்களையும் விவசாயிகளையும் பாதிக்கிது என அறிந்து நிதி அமைச்சருக்கு இதை திரும்ப பெற வேண்டும் என கடிதம்…

Read More

‘வாங்கிய கடனை முழுமையாக திருப்பி செலுத்திய பிறகும், வேறொருவர் வாங்கிய கடனுக்கு ஜாமீன் உத்தரவாதம் அளித்திருந்தால் நிலுவை இல்லை என்பதற்கான சான்று (என்ஓசி) அளிக்க மறுக்கக்கூடாது’ என வங்கி நிர்வாகங்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலாஜி என்பவர் தனியார் வங்கி ஒன்றில் தனது டேங்கர் லாரிக்காக கடன் பெற்றிருந்தார். வாங்கிய கடன் தொகையை வட்டியும், முதலுமாக முறையாக திருப்பி செலுத்திய நிலையில், அதற்கான நிலுவை இல்லை என்பதற்கான சான்று (என்ஓசி) வழங்கும்படி வங்கி நிர்வாகத்திடம் கோரினார். ஆனால் அதே வங்கியில் லீலாவதி என்பவர் வாகனத்துக்காக வாங்கிய கடன் தொகைக்கு பாலாஜி, ஜாமீன் உத்தரவாதம் அளித்துள்ள தைக் காரணம் காட்டி, அவருக்கு என்ஓசி வழங்க முடியாது என வங்கி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரர் தனது வாகனத்துக்காக வாங்கிய…

Read More

மூளை நம் உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும், ஏனெனில் இது நம்முடைய அனைத்து செயல்பாடுகளுக்கும் எதிர்வினைகளுக்கும் அடிப்படையில் பொறுப்பாகும். இருப்பினும், மூளைக்கு சரியாக செயல்பட ஒரு குறிப்பிட்ட அளவு ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. சரியான உணவு மற்றும் ஊட்டச்சத்து உட்கொள்ளல் இல்லாமல், மூளை செயல்பாடு கடுமையாக பாதிக்கப்படலாம். எனவே, உங்கள் அன்றாட உணவில் அதன் செயல்பாட்டை மேம்படுத்த நீங்கள் சேர்க்க வேண்டிய முதல் 5 மூளையை அதிகரிக்கும் உணவுகளை இங்கே பட்டியலிடுகிறோம்:

Read More

ஒரு அற்புதமான கண்டுபிடிப்பில், விஞ்ஞானிகள் அரிசி பல்கலைக்கழகம் ஆக்ஸிஜனை நம்புவதற்கு பதிலாக மின்சாரத்தை வெளியிடுவதன் மூலம் உயிர்வாழக்கூடிய ஒரு வகை பாக்டீரியாக்களைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த நுண்ணுயிரிகள் அவற்றின் உயிரணுக்களுக்கு வெளியே எலக்ட்ரான்களை மாற்றுவதற்கு இயற்கையான செயல்முறையைப் பயன்படுத்துகின்றன, இதனால் ஆக்ஸிஜன் இல்லாத சூழல்களில் ஆற்றலை உருவாக்க உதவுகிறது ஆழ்கடல் துவாரங்கள் அல்லது மனித குடல். கண்டுபிடிப்பு இயற்கையில் முன்னர் மறைக்கப்பட்ட உயிர்வாழும் பொறிமுறையை கண்டுபிடித்து குறிப்பிடத்தக்க வாக்குறுதியைக் கொண்டுள்ளது சுத்தமான ஆற்றல்பயோடெக்னாலஜி, மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு. தீவிர நிலைமைகளுக்கு ஏற்றவாறு பண்டைய வாழ்க்கை வடிவங்கள் மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்களுக்கு அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கான புதிய நுண்ணறிவை இந்த ஆய்வு வழங்குகிறது. இயற்கையின் மறைக்கப்பட்ட கருவிகள் மூலம் ஆக்ஸிஜன் இல்லாமல் வாழ்க்கை சக்தியை உருவாக்க முடியும். இந்த கண்டுபிடிப்பு பண்டைய உயிரியலை நவீன ஆற்றல் தீர்வுகளுடன் கட்டுப்படுத்துகிறது.ஆக்ஸிஜன் இல்லாமல் பாக்டீரியா எவ்வாறு வாழ்கிறதுமனிதர்கள் மற்றும் விலங்குகள் உட்பட பெரும்பாலான உயிரினங்கள் ஆக்ஸிஜனைப்…

Read More

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (மையம்) சவுதி அரேபியாவின் கிரீடம் இளவரசர் முகமது பின் சல்மான் (வலது) மற்றும் சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷரா (இடது) ஆகியோருடன் ரியாத் டிரம்ப் (நடுத்தர) (ஏபி) டிரம்ப் நிர்வாகம் வெள்ளிக்கிழமை சிரியா மீதான நீண்டகால பொருளாதாரத் தடைகளைத் திரும்பப் பெறத் தொடங்கியது, போரினால் பாதிக்கப்பட்ட தேசத்துடன் மீண்டும் ஈடுபடுவதற்கான முதல் முறையான படிகளைக் குறிக்கிறது. இந்த மாத தொடக்கத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் எதிர்பாராத அறிவிப்பைப் பின்பற்றுகிறது, இது ஒரு தசாப்த கால உள்நாட்டுப் போருக்குப் பிறகு சிரியாவை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய அணுகுமுறையை சமிக்ஞை செய்கிறது.அமெரிக்க கருவூலத் துறை பல தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிப்பதாக அறிவித்தது, இது பொது உரிமம் 25 ஐ வெளியிட்டது, சிரிய அகமது அல்-ஷரா தலைமையிலான சிரியாவின் இடைக்கால அரசாங்கத்துடன் பரிவர்த்தனைகளை அங்கீகரித்தது, சிரிய மத்திய வங்கி மற்றும் அரசுக்கு சொந்தமான…

Read More