Author: admin

பெங்களூரு: கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், “கமல்ஹாசனை விமர்சிப்பவர்கள் கன்னட மொழிக்காக என்ன செய்தார்கள்?” என்று நடிகர் சிவராஜ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறுகையில், “கமல்ஹாசன் எப்போதும் கன்னட மொழி குறித்து உயர்வாகவே பேசுவார், பெங்களூரு குறித்து மிகுந்த அபிமானம் கொண்டவர். நமது நகரைப் பற்றி அவர் எப்போதும் பெருமையாக பேசுவார். நாங்கள் எல்லாம் அவரைப் பார்த்து வளர்ந்தவர்கள். நான் எப்போதுமே அவரின் தீவிர ரசிகன். தமிழ் நடிகரும், இயக்குநருமான அவர், கன்னட கலாச்சாரம் மற்றும் சினிமாவுக்கு தொடர்ந்து மதிப்பளித்து வருகிறார். நான் கமல்ஹாசனை பார்த்து வளர்ந்தவன். நான் அவரைக் குறித்து எவ்வாறு பெருமைப்படுகிறேன் என்றால், நான் என் தந்தையை பற்றி பெருமை கொள்வது போன்றது அது. கேமிராக்களுக்கு முன்பு கன்னட மொழி பற்றி பெருமை பேசுவது மட்டும் போதாது. வார்த்தைகளை விட செயல் முக்கியமானது. கன்னட…

Read More

கோவை: நீர்மட்டம் உயர்ந்து வருவதால் சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் மாநகராட்சியின் 30-க்கும் மேற்பட்ட வார்டுகளுக்கும், வழியோரம் உள்ள 22 கிராமங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அணையில் இருந்து முன்பு தினசரி சராசரியாக 100 எம்.எல்.டி (மில்லியன் லிட்டர்) வரை குடிநீர் எடுக்கப்பட்டது. அணையில் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்ததால், குடிநீரின் அளவும் குறைக்கப்பட்டது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை காரணமாக, அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் எடுக்கப்படும் குடிநீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறும்போது, “சிறுவாணி அணையில் அணையில் 49.53 அடி வரை நீரைத் தேக்க முடியும். கடந்த 25-ம் தேதி நீர்மட்டம் 21.55 அடியாக இருந்தது. 67.84 எம்.எல்.டி குடிநீர் எடுக்கப்பட்டது. நேற்று 78.53 எம்.எல்.டி குடிநீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. அணையில் நேற்று 34.80 அடிக்கு நீர்மட்டம் இருந்தது. 63…

Read More

கோவை: இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பம்ப்செட் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், வழக்கமாக மிக அதிக வியாபாரம் நடக்கும் மே மாதம் மந்த நிலையில் காணப்படுவதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் பம்ப்செட் தேவையை பூர்த்தி செய்வதில் கோவை மாவட்டத்தில் உள்ள பம்ப்செட் உற்பத்தி தொழில் நிறுவனங்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை கொண்டுள்ளன. வழக்கமாக கோடை காலத்தில் பம்ப்செட் தேவை அதிகம் காணப்படும் நிலையில், இந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய காரணத்தால் விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து இந்திய பம்ப்செட் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கார்த்திக் கூறும்போது, “மே மாதத்தில் பம்ப்செட் விற்பனை மிக அதிகளவில் இருக்கும். ஆனால் இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால் பம்ப்செட் விற்பனையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வீடு மற்றும் விவசாய தேவைக்கான பம்ப்செட் விற்பனை மிகவும் குறைந்துள்ளது. ஏற்கெனவே கடந்த…

Read More

அமிஷ் திரிபாதியின் ‘சிவா முத்தொகுப்பு’குழந்தைகளை கவர்ந்திழுக்கும் மற்றொரு தொடர், இளைஞர்கள் துல்லியமாக இருக்க வேண்டும், அமிஷின் ‘சிவா முத்தொகுப்பு’. இது ‘மெலுஹாவின் அழியாதவர்’, ‘வயுபுத்ராஸின் சத்தியங்கள்’ மற்றும் ‘நாகங்களின் ரகசியம்’ ஆகியவற்றைக் கொண்டுள்ளது, மேலும் இது கற்பனை, புராணங்கள் மற்றும் பலவற்றின் சரியான கலவையாகும்.

Read More

இது AI- உருவாக்கிய படம், இது பிரதிநிதித்துவ நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எதிர்பாராத ஒரு கண்டுபிடிப்பில், விஞ்ஞானிகள் பென்குயின் நீர்த்துளிகள் அல்லது குவானோ பூமியிலிருந்து சூரிய ஒளியை பிரதிபலிக்கும் மேகக்கணி உருவாக்கத்தைத் தூண்டுவதன் மூலம் அண்டார்டிகாவை குளிர்விக்க உதவக்கூடும் என்று கண்டறிந்துள்ளனர். கம்யூனிகேஷன்ஸ் எர்த் & சுற்றுச்சூழலில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வு, பென்குயின் காலனிகளில் இருந்து வெளியிடப்படும் அம்மோனியா கடலோர அண்டார்டிகா மீது மேக-விதை ஏரோசோல்கள் உருவாகுவதை கணிசமாக அதிகரிக்கிறது என்பதைக் காட்டுகிறது.தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் வளிமண்டல விஞ்ஞானி மத்தேயு போயர் இருந்து ஹெல்சின்கி பல்கலைக்கழகம் அடெய்லி பெங்குவின் குவானோ அம்மோனியா வாயுவை வெளியிடுகிறது என்று கண்டறியப்பட்டது, இது தெற்கு கடலில் உள்ள பைட்டோபிளாங்க்டனில் இருந்து சல்பர் அடிப்படையிலான சேர்மங்களுடன் இணைந்து தாழ்வான மேகங்களை உருவாக்கும் துகள்களை உருவாக்குகிறது. “இந்த செயல்முறையை உண்மையில் அளவிடவும், அண்டார்டிகாவில் அதன் செல்வாக்கைக் காணவும் செய்யப்படவில்லை” என்று போயர் AFP இடம் கூறினார். “இது உண்மையில் சுற்றுச்சூழல்…

Read More

வட கரோலினா கவர்னர் ஜோஷ் ஸ்டீன் (படம்: ஆபி) பிரிக்கப்பட்ட வட கரோலினா உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது, இது ஒரு புதிய சட்டத்தை ஜனநாயகக் கட்சியின் ஆளுநரிடமிருந்து நியமிக்கும் அதிகாரத்தை மாற்றியது, இந்த மாத தொடக்கத்தில் சட்டத்தின் அரசியலமைப்பு விவாதிக்கப்பட்டாலும் கூட, இந்த மாத தொடக்கத்தில் அமல்படுத்தத் தொடங்கியது. நீதிமன்றத்தில் குடியரசுக் கட்சியின் பெரும்பான்மை மறுத்துவிட்டது அல்லது ஆளுநர் ஜோஷ் ஸ்டீன் மூன்று வாரங்களுக்கு முன்பு செய்ததாகக் கோரிக்கைகளை மறுத்துவிட்டார் அல்லது தள்ளுபடி செய்தார், கடந்த ஆண்டு GOP கட்டுப்பாட்டில் உள்ள பொதுச் சபையால் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தை அமல்படுத்துவதைத் தடுக்க வேண்டும். ஏப்ரல் பிற்பகுதியில், ஸ்டீனின் வழக்கைக் கேட்கும் சில விசாரணை நீதிபதிகள் சட்டத்தை அரசியலமைப்பிற்கு முரணானதாக அறிவித்து, சட்டத்தை மேற்கொள்ள முடியாது என்று கூறினார். ஆனால் ஏப்ரல் 30 அன்று – போலீக் அளித்த வாரியத்தின் ஐந்து நியமனங்கள் இல்லையெனில் அவற்றின் விதிமுறைகளைத் தொடங்குவதற்கு முந்தைய நாள் – இடைநிலை…

Read More

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்துக்கு 3 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா, கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.சந்தூர்கர் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் திங்கள்கிழமை பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்று மூவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். இதனை சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்தியத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.அஞ்சாரியா, கவுகாத்தி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி விஜய் பிஷ்னோய் மற்றும் பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.சந்துர்கர் ஆகியோரை இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதில் குடியரசு தலைவர் மகிழ்ச்சியடைகிறார்,” என்று அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். முன்னாள் தலைமை…

Read More

சென்னை: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவை மேம்படுத்த திறன் எனும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அலுவலர்களுக்கான இணையவழி ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மாநில அடைவுத் திறன் தேர்வில் (ஸ்லாஸ்) மாநிலத்தின் மொத்த நிலை குறித்து பகுப்பாய்வு செய்யப்பட்டது. இந்த தேர்வு மதிப்பெண்கள் எமிஸ் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை பள்ளிகள் அளவில் தலைமையாசிரியர்களும், வட்டார அளவில் அதன் கல்வி அலுவலர்களும் அறிந்து கொள்ள வேண்டும். அதன்பின்னர் வரும் கல்வியாண்டில் இதை மேம்படுத்துவதற்கான செயல் திட்டத்தை (action plan) தயார் செய்து ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும் கூட்டத்தில் சமர்ப்பித்து விளக்க வேண்டும். மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் இதுபற்றி விவாதித்து முன்னேற்றத்தை…

Read More

முலான்பூர்: நடப்பு ஐபிஎல் சிசனின் முதல் குவாலிபையர் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 101 ரன்களில் ஆல் அவுட் செய்தது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. முலான்​பூரில் உள்ள மகா​ராஜா யாதவீந்​திர சிங் சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானத்​தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி, பந்துவீச முடிவு செய்தது. அந்த அணியின் பந்து வீச்சுக்கு வலு சேர்க்கும் வகையில் ஹேசில்வுட் ஆடும் லெவனில் இடம்பெற்றார். அதோடு இந்த போட்டியில் அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் முழு உடற்தகுதியை பெற்று ஃபீல்ட் செய்தார். அணியை வழிநடத்தினார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ப்ரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். அவர்கள் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இந்த ஆட்டத்தில் அவர்களால் அதை நிறைவேற்ற முடியவில்லை. 2-வது ஓவர் தொடங்கி சீரான இடைவெளியில் பஞ்சாப் கிங்ஸ் அணி விக்கெட்டுகளை இழக்க தொடங்கியது. ப்ரியன்ஷ் 7, பிரப்சிம்ரன் 18,…

Read More

நியூஜெர்சி: உக்ரைன் மீது தொடர்ந்து மூன்றாவது நாளாக இரவு நேரத்தில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா வான்வழி தாக்குதல் மேற்கொண்டது. இந்நிலையில், ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எதிர்வினை ஆற்றியுள்ளார். குறிப்பாக ரஷ்ய அதிபர் புதினை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். “ரஷ்யாவின் புதின் உடன் சிறந்த நட்பு ரீதியான உறவை நான் கொண்டுள்ளேன். இப்போது அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. தேவையின்றி பலரை கொல்கிறார். காரணமே இல்லாமல் உக்ரைன் நாட்டின் பல்வேறு நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அவரது செயல் எனக்கு அறவே பிடிக்கவில்லை. இந்தப் போக்கு ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வித்திடும்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் ட்ரம்ப் சாடியுள்ளார். “அவரது வாய் பேச்சுதான் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகிறது. அவர் அமைதியாக இருப்பது நல்லது” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா உக்கிர தாக்குதல்: ஒரே இரவில்…

Read More