Author: admin

குமி: 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தென் கொரியாவின் குமி நகரில் இன்று தொடங்குகிறது. வரும் 31-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஆசிய கண்டங்களைச் சேர்ந்த 43 நாடுகளில் இருந்து 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவில் இருந்து 59 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்தத் தொடரில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா பங்கேற்கவில்லை. அதேவேளையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் கலந்துகொள்கிறார். இந்தியாவில் இருந்து அனுபவம் குறைந்த சச்சின் யாதவ், யஷ்விர் சிங் பங்கேற்கின்றனர். தொடக்க நாளான இன்று காலை 8 மணிக்கு ஆடவருக்கான 20 கிலோ மீட்டர் நடை பந்தயத்தில் பதக்க போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியாவில் இருந்து செர்வின் செபாஸ்டியன், அமித் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். செபாஸ்டியன் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற…

Read More

வாஷிங்டன்: எலான் மஸ்க்குக்கு சொந்தமான எக்ஸ் தளம் இன்று மாலை திடீரென முடங்கியது. இந்திய நேரப்படி 6 மணிக்கு பின்பு நீண்ட நேரம் முடங்கியது. இதனால், சமூக வலைதளப் பயனர்களால் செயல்பட முடியவில்லை. சர்வதேச அளவில் எக்ஸ் தளம் வெள்ளிக்கிழமை முடக்கத்தை சந்தித்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் மீண்டும் இந்த தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. புதிய தகவல்களைப் பதிவேற்ற முயற்சி செய்யும்போது, “ஏதோ தவறாகிவிட்டது. மீண்டும் பதிவேற்ற முயற்சிக்கவும்” என்ற நிலைத்தகவலையே காட்டுகிறது. முன்னதாக நேற்றும் சர்வதேச அளவில் எக்ஸ் தளம் பெரும் செயலிழப்பைச் சந்தித்தது. இந்திய நேரப்படி அதிகாலை 1 மணிக்கு இந்தச் சிக்கல் ஏற்பட்டது. பின்பு சிறிது நேரத்தில் பிரச்சினை சரிசெய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் எக்ஸ் தளம் முடங்குவது இது இரண்டாவது முறை.

Read More

திருவனந்தபுரம்: ‘தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்று தான் கூறியது கர்நாடகாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய சூழலில், “அது, அன்பினால் சொல்லப்பட்டது” என்று இந்த சர்ச்சையில் மன்னிப்பு கேட்க முடியாது என்பதை நடிகர் கமல்ஹாசன் மறைமுகமாக தெரிவித்துள்ளார். இந்த சர்ச்சை குறித்த கேள்விக்கு கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன், “நிறைய வரலாற்று ஆசிரியர்கள் எனக்கு மொழி வரலாற்றை கற்பித்திருக்கிறார்கள். நான் எதையும் அர்த்தப்படுத்திச் சொல்லவில்லை. அரசியல்வாதிகள் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி பேசுவதற்கான நிபுணத்தும் இல்லாதவர்கள். ஒரு ‘மேனன்’ எங்களின் முதல்வராக இருந்த மாநிலம் தமிழகம், எங்களின் முதல்வராக ‘ரெட்டி’ இருந்திருக்கிறார். எங்களின் முதல்வராக ‘தமிழர்’ இருந்திருக்கிறார். கன்னட ஐயங்கார் ஒருவரும் எங்களின் முதல்வராக இருந்திருக்கிறார். இது தமிழக அரசியல் பாரம்பரியத்தைக் காட்டுகிறது. மொழி பற்றி பேசுவதற்கான தகுதி அரசியல்வாதிகளுக்கு இல்லை. நான் உட்பட இதுபோன்ற விஷயங்களைப் பேச அவர்களுக்கு தகுதி இருப்பதில்லை. இந்த ஆழமான விவாதத்தை வரலாற்றாசிரியர்கள்,…

Read More

நாகர்கோவில்: குளச்சல அருகே வாணியக்குடியில் கன்டெய்னர் கரை ஒதுங்கியது. அதிலிருந்து எண்ணெய் படலம் பரவுகிறதா என கண்காணிக்கப்பட்டு வருகிறது. கேரளா மாநிலம் கொச்சி கடல் பகுதியில் லைபீரியா நாட்டு சரக்கு கப்பல் சமீபத்தில் மூழ்கியது. அதில் இருந்த 640 கன்டெய்னர்கள் கடலிலே மூழ்கின. அவை கேரளா கடலோரப் பகுதி உட்பட ஆங்காங்கே கடற்கரைகளில் கரை ஒதுங்கி வருகின்றன. தற்போது கன்டெய்னர்களில் ஒன்று கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியகுடி கடற்கரையில் கரை ஒதுங்கி இருக்கிறது. இது மீனவர் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்திருக்கிறது. சில கன்டெய்னர்கள் சேதமடைந்த நிலையிலே அதில் இருந்து பல ரசாயன மற்றும் எண்ணெய் பொருட்களும் கடலில் சிதறியுள்ளன. அவையும் கன்னியாகுமரி மாவட்டத்தில அனைத்து கடற்கரைகளிலும் கரை ஒதுங்கி கொண்டிருக்கின்றன. இதனால் மீனவர்கள் பாதிப்புக்குள்ளான கடல் பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது கொச்சியில் கடலில் மூழ்கிய கன்டெய்னர்கள் பல குமரி…

Read More

புதுடெல்லி: செமி கண்டக்டர் மையமாக வடகிழக்கு மாநிலங்கள் உருவெடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று வடகிழக்கு முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது. இதில் அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள், ஆளுநர்கள், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரதமர் நரேந்திர மோடி முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது: உலக நாடுகளில் அதிக பன்முகத்தன்மை கொண்ட நாடு இந்தியா. இதற்கு இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மிகச் சிறந்த உதாரணம் ஆகும். வடகிழக்கில் பல்வேறு சமுதாய மக்கள் வசிக்கின்றனர். வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இந்த இலக்கை எட்ட வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி மிகவும் முக்கியம். இந்த பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர்கள்…

Read More

இந்த உன்னதமான யோகா போஸ் உங்கள் முழு உடலையும் நீட்டுவதற்கும் புழக்கத்தை மேம்படுத்துவதற்கும் சிறந்தது. நீங்கள் கீழ்நோக்கி எதிர்கொள்ளும் நாயைச் செய்யும்போது, ​​உங்கள் இதயம் உங்கள் தலையை விட அதிகமாக உள்ளது, இது உங்கள் மூளைக்கு புதிய இரத்த ஓட்ட உதவுகிறது. இது ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்கிறது, இதனால் நீங்கள் புத்துணர்ச்சியையும் விழித்திருப்பதையும் உணர வைக்கிறது.அதை எப்படி செய்வது:உங்கள் கைகளிலும் முழங்கால்களிலும் தொடங்கவும்.உங்கள் கால்விரல்களின் கீழ் சுருட்டி, உங்கள் இடுப்பை மேலே மற்றும் பின்னால் உயர்த்தவும், உங்கள் கால்களை வசதியாக நேராக்கவும்.உங்கள் உடல் தலைகீழான “வி” வடிவத்தை உருவாக்க வேண்டும்.உங்கள் கைகளை உறுதியாக தரையில் அழுத்தி, உங்கள் குதிகால் கீழே வைக்க முயற்சிக்கவும்.உங்கள் தலையை உங்கள் கைகளுக்கு இடையில் தொங்கவிட்டு ஆழமாக சுவாசிக்கட்டும்.5 முதல் 10 சுவாசங்களை பிடித்துக் கொள்ளுங்கள்.இந்த போஸ் உங்கள் முதுகு, கால்கள் மற்றும் தோள்களை நீட்டி, பதற்றத்தை வெளியிடுகிறது மற்றும் ஆற்றலை அதிகரிக்கும்.உடல்நலம்+யோகாவுடன் பொருத்தமாக இருங்கள்

Read More

கொலம்பியாவில் காணப்படும் மர்மமான கோளம் (புகைப்படம்: x) கொலம்பியாவில் ஒரு விசித்திரமான உலோகக் கோளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, விஞ்ஞானிகள் மற்றும் வானப் பார்வையாளர்கள் அதன் தோற்றத்தில் பிரிக்கப்பட்டனர்.சில பார்வையாளர்கள் இந்த பொருள் அன்னிய விண்கலமாக இருக்கலாம் என்று நம்புகிறார்கள், மற்றவர்கள் இது ஒரு புத்திசாலித்தனமான கலை நிறுவல் என்று கூறுகிறார்கள்.இந்த கோளம் கொலம்பியாவின் புகா நகரில் மார்ச் மாதத்தில் தரையிறங்குவதற்கு முன்பு பறப்பதைக் காண முடிந்தது என்று ஃபாக்ஸ் நியூஸ் தெரிவித்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு எக்ஸ்.ஜோஸ் லூயிஸ் வெலாஸ்குவேஸ். அவரைப் பொறுத்தவரை, கோளத்தின் கட்டுமானம் அறியப்பட்ட மனித உற்பத்தி முறைகளுக்கு அப்பாற்பட்டது.ஆனால் எல்லோரும் உறுதியாக நம்பவில்லை.ஜூலியா மோஸ்பிரிட்ஜ்.”நாங்கள் நினைத்த கட்டுப்பாடு எங்களிடம் இல்லாத ஒரு காலத்திற்கு நாங்கள் நுழைகிறோம்,” என்று அவர் கூறினார். “ஏனென்றால், எங்கள் வானத்தில் என்ன இருக்கிறது, எங்கள் நீரில் என்ன இருக்கிறது என்று எங்களுக்கு புரியவில்லை என்று நாங்கள் கற்றுக் கொண்டிருப்பதால் தான். மேலும் ஏதோ நடக்கிறது, அது…

Read More

அயோத்தி: போக்சோ வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 100 எஸ்யுவி கார்கள், 10 ஆயிரம் ஆதரவாளர்களுடன் பாஜக முன்னாள் எம்.பி. பிரிஜ் பூஷண் சிங் வெற்றி வலம் வந்தார். பாஜக மூத்த தலைவரும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமாக இருந்தவர் பிரிஜ் பூஷண் சிங். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பிரிஜ் பூஷண் இருந்த காலத்தில், பல பெண் மல்யுத்த வீரர்கள் தங்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகப் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும் என்றும், பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் உள்ளிட்ட பல வீரங்கணைகள் இரவு பகலாக பல நாட்கள் டெல்லியில் போராடினர். மேலும், இவர் மீது மைனர் பெண் ஒருவர், பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்ததால் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு டெல்லி…

Read More

சென்னை: மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை சமர்பிக்கப்பட்டு 11 மாதங்களாகிவிட்ட சூழலில், அதை அமல்படுத்தாமல் தமிழக அரசு தொடர்ந்து காலதாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு-2020 தமிழக அரசுதொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக்கொள்கை உருவாக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டது. இந்த கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் கல்விக் கொள்கை வடிவமைப்பு தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்டறிந்தனர். இதையடுத்து கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகள் அடங்கிய வரைவறிக்கை தயாரிக்கும் பணிகளில் குழுவினர் ஈடுபட்டனர். அதன்படி மாநிலக் கல்விக் கொள்கை குழுவினர் சுமார் 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை 2023 அக்டோபரில் தயார் செய்தனர். எனினும், வெள்ளப்…

Read More