சென்னை: திமுக அரசின் 5-ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் நேற்று மரியாதை செலுத்தினார். தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இதையடுத்து, அதே ஆண்டு மே 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார். அவர் முதல்வராக பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்றது. திமுக அரசின் 5-வது ஆண்டு தொடங்கியுள்ளது. இதையொட்டி, நேற்று காலை முதல்வர் ஸ்டாலின், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, மு.கருணாநிதி நினைவிடங்களில் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன, கோவி.செழியன், டி.ஆர்.பி.ராஜா, மு.பெ.சாமிநாதன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மேயர் ஆர்.பிரியா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, தலைமைச் செயலகம்…
Author: admin
நம் உடல்களைப் போலவே, நம் மூளையும், வயது. இருப்பினும், வயதான மூளையின் அறிகுறிகள் உடலைப் போல முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல என்பதால் (சுருக்கங்கள், எடை அதிகரிப்பு, முடி வீழ்ச்சி போன்றவை), நாம் மூளையை புறக்கணிக்க முனைகிறோம், உண்மையில் இது இதயத்துடன் உடலின் மிக முக்கியமான உறுப்பு ஆகும். இருப்பினும், மூளைக்கு உடற்பயிற்சி செய்வது அவ்வளவு கடினம் அல்ல, நீங்கள் இப்போது 40 (அல்லது 35) ஐத் தாக்கியிருந்தால், இந்த எளிய, ஆனால் பயனுள்ள பயிற்சிகள் மூலம், உங்கள் மூளையை உடற்பயிற்சி செய்யத் தொடங்க சிறந்த நேரம்.
ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலுக்கு பாராட்டு தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், ‘ஒட்டுமொத்த தேசமும் மோடியுடன் நிற்கிறது’ என தனது வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நேற்று அதிகாலை இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் இந்த துணிச்சலான நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘போராளியின் போர் தொடங்கிவிட்டது. லட்சியம் நிறைவேறும் வரை ஆபரேஷன் சிந்தூரை நிறுத்த வேண்டாம். ஒட்டுமொத்த தேசமும் உங்களுடன் நிற்கிறது. ஜெய்ஹிந்த்’ என்று கூறியுள்ள ரஜினிகாந்த், அதில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டேக் செய்துள்ளார். பஹல்காமில் சிந்திய கண்ணீருக்கு பாகிஸ்தானில் 16-ம் நாள்…
சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே 8) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். அதில், மொத்தம் 95.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் வழக்கம்போல் மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். அதன்படி மாணவிகள்: 96.70 %, மாணவர்கள்: 93.16 % தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.56% என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 3-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்ளுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 9.00 மணியளவில் வெளியானது. மாணவர்கள் தங்களின் மதிப்பெண் விபரங்களை, ‘ஆன்லைன்’ வழியில் தெரிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளை, மற்றும் www.tnreuslts.nic.in ஆகிய இணையதளங்களில், தேர்வர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். பள்ளி…
நீங்கள் எப்போதாவது கார்ப்ஸை சத்தியம் செய்திருந்தால், கேக் வேண்டாம் என்று சொன்னால், அல்லது ஒவ்வொரு இரவும் இரவு உணவிற்கு சாலட் சாப்பிட முயற்சித்தால் the நள்ளிரவில் உங்கள் சரக்கறை சோதனையிடுவதை முடிக்க மட்டுமே – நீங்கள் தனியாக இல்லை. உணவு முறை கடினமானது. உங்களுக்கு பிடித்த உணவுகளை விட்டுவிடாமல் உடல் எடையை குறைக்க ஒரு வழி இருந்தால் என்ன செய்வது? அங்குதான் 80/20 விதி வருகிறது.இது ஒரு உணவு அல்ல – இது ஒரு மனநிலை மாற்றம் போன்றது. மற்றும் நேர்மையாக? இது வாழ்க்கைக்கு சாப்பிட மிகவும் நிலையான வழியாக இருக்கலாம்.80/20 விதி என்ன?இதைப் பற்றி யோசித்துப் பாருங்கள்: 80% நேரம், நீங்கள் உண்மையான, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுகிறீர்கள் – காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், மெலிந்த புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்றவை. மற்ற 20%? அந்த பிரவுனி, பீஸ்ஸா துண்டு அல்லது வெள்ளிக்கிழமை இரவு காக்டெய்ல் ஆகியவற்றை அனுபவிக்க…
புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூருக்கு முன்னதாக பாகிஸ்தான் மீது மேக்தூத், விஜய் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களை இந்திய ராணுவம் நடத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது கடந்த மாதம் 22-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று அதிகாலை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் அதிரடித் தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இதற்கு முன்னதாக 1999-ல் கார்கில், 2019-ல் புல்வாமா, 2016-ல் உரி, 2001-ல் நாடாளுமன்றம் மீது பாகிஸ்தான் தீவிரவாதத் தாக்குதல் நடத்தியபோது அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம்தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரியில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் உயிரிழந்தனர். அதற்கு பதிலடியாக செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டுக்கு அருகே இந்தியா…
சென்னை: தமிழகத்தில் மின்னுற்பத்தி நிறுவு திறன் 3,267 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தினசரி மின்தேவை அதிகரித்து வருவதால், அதைப் பூர்த்தி தமிழக மின்வாரியம் தனது மின்னுற்பத்தி திறனை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அனல், நீர், சூரியசக்தி, எரிவாயு மற்றும் காற்றாலை ஆகியவற்றின் மூலம் மின்னுற்பத்தி நிறுவு திறனை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது அனல்மின் உற்பத்தி நிறுவு திறன் 1,959 மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இதில் இருந்து 1,709 மெகாவாட் திறன் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. இதேபோல், எரிவாயு மூலம் மின்னுற்பத்தி செய்வதற்கான நிறுவு திறன் 1,027 மெகாவாட்டாக உள்ளது. இதில் இருந்து 524 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 503 மெகாவாட் மின்சாரம் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கிறது. இதேபோல், காற்றாலை, சூரியசக்தி உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்ஆற்றல் 25,290 மெகாவாட்டாக உள்ளது. இதில், காற்றாலையில் இருந்து 11,739மெகாவாட்டும், சூரியசக்தி மூலம் 10,153 மெகாவாட்டும் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.…
“கடுமையான பாம்பு” என்றும் அழைக்கப்படும் உள்நாட்டு தைபன், உலகின் எந்தவொரு பாம்பிலும் மிகவும் நச்சு விஷத்தைக் கொண்டுள்ளது. அதன் அறிவியல் பெயர் ஆக்ஸியூரனஸ் மைக்ரோலெபிடோடஸ். இந்த பாம்பிலிருந்து ஒரு கடி தைபோக்சின் எனப்படும் நச்சுகளின் சக்திவாய்ந்த கலவையை வெளியிடுகிறது. இந்த விஷம் தசைகளை முடக்குகிறது, ஒரு நபரை சுவாசிப்பதைத் தடுக்கலாம், உள் இரத்தப்போக்கு ஏற்படலாம், தசை திசுக்களை உடைக்கலாம். இது மிகவும் ஆபத்தான பாம்பு, ஆனால் அதிர்ஷ்டவசமாக, இது அரிதாகவே மக்களுடன் தொடர்பு கொள்கிறது.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் மூலம் நீதி வென்றுள்ளது என்று பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் கண்ணீர் மல்கத் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியதில் 26 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை இந்திய ராணுவத்தினர், பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதலை நடத்தினர். இதனை தொடர்ந்து, பஹல்காம் தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ‘நீதி வென்றது’ என்று தெரிவித்துள்ளனர். மேலும் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக பிரதமர் மோடிக்கு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த சமீர் குஹாவும் ஒருவர். சமீர் குஹாவின் மனைவி சார்போரி குஹா கூறும்போது, “இது நடக்க வேண்டிய ஒன்றுதான். தீவிரவாதத்தை ஆதரிக்கும் மொத்த பாகிஸ்தானுமே அழித்தொழிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற (பஹல்காம் தாக்குதல் போன்ற) சம்பவங்கள் மீண்டும்…
இஸ்லாமாபாத்: “பாகிஸ்தான் நிச்சயம் பழிவாங்கும். இந்தப் போரை இறுதிவரை எடுத்துச் செல்வோம். என் பாகிஸ்தான் மக்களே, உங்கள் பாதுகாப்புக்காக, நமது ராணுவம் நிற்கும். நாம் எப்போதும் ஒற்றுமையாக இருப்போம்” என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர் கூறியது: “இந்தியா நடத்திய தாக்குதலில் உயிர்நீத்த அப்பாவிகளின் ரத்தத்துக்கு பழிவாங்குவோம் என்று நாங்கள் உறுதி ஏற்றுள்ளோம். பாகிஸ்தான் தனது தற்காப்புக்காக ஒரு பயங்கரமான பதிலடியை வழங்க முடியும் என்பதைக் காட்டினோம். எல்லைப் பகுதியில், சுமார் ஒரு மணி நேரம் சண்டை நடந்தது. பாகிஸ்தான் விமானிகள் வான்வெளியில் இருந்து தாக்கினர், எதிரியின் விமானங்கள் துண்டு துண்டாகச் சிதறின. பாகிஸ்தான் நிச்சயம் பழிவாங்கும். இந்தப் போரை இறுதிவரை எடுத்துச் செல்வோம். என் பாகிஸ்தான் மக்களே, உங்கள் பாதுகாப்புக்கு நமது ராணுவம் நிற்கும். நாம் எப்போதும் ஒற்றுமையாக இருப்போம். பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நம்மை நம் பாதையிலிருந்து…
