ஹைதராபாத்: தெலங்கானாவில் முதல் முறையாக திரைத் துறை விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகள் வரும் ஜூன் 14-ம் தேதி வழங்கப்பட உள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திர அரசு சார்பில் திரைப்படக் கலைஞர்களுக்கா ஆண்டுதோறும் நந்தி விருதுகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், தெலங்கானா தனி மாநிலமாக பிரிந்த பிறகு திரைத் துறை விருதுகள் தெலங்கானா சார்பில் வழங்கப்படவில்லை. இந்நிலையில், அம்மாநிலத்தின் சிறந்த நாட்டுப்புற பாடல் கலைஞரான மறைந்த கத்தர் பெயரில் திரைத் துறை விருதுகளை வழங்க அம்மாநில அரசு சமீபத்தில் முடிவு செய்தது. இதற்காக நடிகை ஜெயசுதா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இதில் மாநிலம் உருவான கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2023-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை வெளியான திரைப்படங்களில் இருந்து சிறந்த திரைப்படம் என்ற ஒரு பிரிவில் மட்டும் ஆண்டுக்கு ஒரு விருது வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, சிறந்த திரைப்படங்கள் பட்டியலை ஜெயசுதா தலைமையிலான…
Author: admin
புதுக்கோட்டை: தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க வேண்டும். இல்லையேல் அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்று தேமுதிக பொதுச் செயலாலர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிகவுக்கு 5 எம்.பி. சீட்டுகளும், ஒரு மாநிலங்களவை சீட்டும் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில், தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்க வேண்டியது அதிமுகவின் கடமை. அவ்வாறு கொடுக்கவில்லை என்றால், அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும். தேமுதிகவுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பு ஒருமுறை அன்புமணிக்கும், மற்றொரு முறை ஜி.கே.வாசனுக்கும் தரப்பட்டது. அதை தேமுதிக மனதார ஏற்றுக்கொண்டது. தற்போது கமல்ஹாசனுக்கு திமுக தரப்பில் மாநிலங்களவை சீட் வழங்கியது வரவேற்கத்தக்கது. அரசியலில் நம்பிக்கைதான் முக்கியம். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றினால்தான் பொதுமக்கள் நம்புவார்கள். இன்னும் 2 நாட்களில் தேமுதிக சார்பில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர். கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி…
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் இதுவரை 4.14 லட்சத்துக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மின் ரிக்ஷா, சிறிய மற்றும் பெரிய கார்கள் அடங்கும். இது நாட்டின் பிற மாநிலங்களைவிட அதிகம் ஆகும். தலைநகர் டெல்லியில் 1.83 லட்சம் மின்சார வாகனங்களும், மகாராஷ்டிராவில் 1.79 லட்சமும் பதிவு செய்யப்பட்டுள்ளன. உத்தர பிரதேசத்தில் மின்சார வாகனங்கள் விற்பனை அதிகரித்திருப்பதற்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் மின்சார வாகனக் கொள்கைதான் காரணம் என கூறப்படுகிறது. உத்தர பிரதேச அரசு ‘புதிய மின்சார வாகன உற்பத்தி மற்றும் இயக்கக் கொள்கையை’ 2022-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. இதன் கீழ் மாநிலத்தை மின்சார வாகனம் மற்றும் பேட்டரி உற்பத்தியின் மையமாக மாற்றவும், ரூ.30 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்கவும், 10 லட்சம் வேலைகளை உருவாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவித்தல், சார்ஜிங் நிலையங்களை அதிகரித்தல் மற்றும் மின்சார வாகனங்களை வாங்க பொதுமக்களை ஊக்குவித்தல்…
கல்லீரல் புற்றுநோய் ஒரு குறிப்பிடத்தக்க உலகளாவிய சுகாதார அக்கறை, ஆண்டுதோறும் நூறாயிரக்கணக்கானவர்கள் கண்டறியப்படுகிறார்கள். உங்கள் அபாயத்தைக் குறைப்பது என்பது நைட்ரேட்டுகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உள்ள பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளைத் தவிர்ப்பது, மது அருந்துவதைக் கட்டுப்படுத்துதல் மற்றும் கொழுப்பு கல்லீரல் நோயுடன் தொடர்புடைய சர்க்கரை பானங்களைத் தெளிவாகத் தவிர்ப்பது. கூடுதலாக, ஆழமான வறுத்த உணவுகளைக் குறைப்பது மற்றும் புகையிலை பயன்பாட்டை விட்டு வெளியேறுவது ஆகியவை கல்லீரல் ஆரோக்கியத்திற்கான முக்கியமான படிகள். கல்லீரல் புற்றுநோய் உலகளவில் புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும். உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 800,000 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புற்றுநோய் சங்கம் தெரிவித்துள்ளது. இருப்பினும், சில வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம், ஒருவர் கல்லீரல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம். ஆபத்தை குறைக்கத் தவிர்க்க ஐந்து முக்கிய விஷயங்கள் இங்கே.பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் பன்றி இறைச்சி, தொத்திறைச்சி, ஹாட் டாக் மற்றும் டெலி…
எங்கள் சூரிய மண்டலத்தில் ஒரு புதிய குழந்தை? மர்மமான ‘பிளானட் நைன்’ க்கான வேட்டை ஒரு ஆச்சரியத்தை அளிக்கிறது பாரிஸ்: இது நீண்டகால விஞ்ஞானிகளைக் கொண்ட ஒரு தூண்டுதல் யோசனை: ஒரு பெரிய மற்றும் மர்மமான கிரகம் நம்முடைய விளிம்பில் இருளில் பதுங்கியிருக்கிறது சூரிய குடும்பம்அதைக் கண்டுபிடிப்பதற்கான எங்கள் எல்லா முயற்சிகளையும் தவிர்க்கிறது.சில வானியலாளர்கள் அப்பால் பனிக்கட்டி பாறைகளின் விசித்திரமான, கொத்து சுற்றுப்பாதைகள் என்று கூறுகிறார்கள் நெப்டியூன் பெரிய ஒன்று வெளியே உள்ளது என்பதைக் குறிக்கவும், அவை ஒன்பது கிரகம் என்று பெயரிடப்பட்டுள்ளன. இப்போது, அமெரிக்காவை தளமாகக் கொண்ட மூவரும் இந்த மழுப்பலான உலகத்தை வேட்டையாடுகிறார்கள், அதற்கு பதிலாக புதியதாகத் தோன்றும் விஷயங்களில் தடுமாறியுள்ளனர் குள்ள கிரகம் சூரிய மண்டலத்தின் வெளிப்புற இடங்களில். தொகுதியில் இந்த புதிய குழந்தையின் இருப்பு கிரகத்தின் ஒன்பது கோட்பாட்டை சவால் செய்யக்கூடும். பெயரிடப்பட்டது 2017 of201புதிய பொருள் சுமார் 700 கி.மீ தூரத்தில் உள்ளது, கடந்த…
புதுடெல்லி: ஜப்பானியர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபடும் சைபர் கிரைம் கும்பலுக்கு எதிராக 19 இடங்களில் சிபிஐ நேற்று சோதனை நடத்தியது. இதில் 6 முக்கிய நபர்களை கைது செய்துள்ளது. வெளிநாட்டினருக்கு எதிராக குறிப்பாக ஜப்பான் நாட்டு மக்களை குறிவைத்து இந்தியாவில் நடைபெறும் சைபர் கிரைம் மோசடி தொடர்பாக சிபிஐ ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்துள்ளது. பிரபல பன்னாட்டு நிறுவனங்களின் தொழில்நுட்ப உதவியாளர்கள் என்று கூறி இக்கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக சட்டப்பூர்வ வாடிக்கையாளர் சேவை மையங்களை போன்று கால் சென்டர்களை இயக்கி வந்துள்ளது. இந்நிலையில் இக்கும்பலுக்கு எதிராக டெல்லி, ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தில் 19 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று ஒருங்கிணைந்த சோதனை நடத்தினர். இச்சோதனையில் டெல்லியில் அஷு, பானிபட்டில் கபில் காக்கர், அயோத்தியில் ரோகித் மவுர்யா, வாராணசியில் சுபம் ஜெயஸ்வால், விவேக் ராஜ், ஆதர்ஷ் குமார் என 6 முக்கிய நபர்களை கைது செய்தனர். மேலும் 2 இடங்களில் மோசடி…
சென்னை: சென்னையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புக்கு வரும் 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் அறிவுறுத்தியுள்ளார். சென்னை மாவட்டத்தில் மாநில கல்லூரி (2,380 இடங்கள்), ராணி மேரி கல்லூரி (2,038), பாரதி மகளிர் கல்லூரி (1,410), டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி (1,086), காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி (1,468), நந்தனம் அரசு கலைக் கல்லூரி (1,430), ஆர்.கே.நகர் அரசு கலைக் கல்லூரி (590), ஆலந்தூர் அரசு கலைக் கல்லூரி (280) என மொத்தம் 8 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு பாடப்பிரிவுகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் 2025-26 கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 7-ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in…
பாரிஸ்: கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இன்று தொடங்குகிறது. வரும் ஜூன் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் பட்டம் வெல்வதற்கு உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் மல்லுக்கட்ட உள்ளனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. 22 வயதான அல்கராஸ் இந்த ஆண்டில் களிமண் தரை ஆடுகளத்தில் நடைபெற்றுள்ள 16 ஆட்டங்களில் 15-ல் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் சவால்தரக்கூடும். கடந்த 18 மாதங்களாக டென்னிஸ் உலகில் ஜன்னிக் சின்னர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். ஊக்க மருந்து விவகாரத்தில் 3 மாத தடைகாலத்துக்கு பின்னர் சமீபத்தில் அவர், களத்துக்கு திரும்பியிருந்தார். சமீபத்தில் முடிவடைந்த இத்தாலி ஓபன் தொடரின் கால் இறுதியில் சின்னர், 2 முறை பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்த…
வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள யூதர்கள் அருங்காட்சியகத்தில் யூதர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதரக அதிகாரிகளும், ஊழியர்களும் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து இரவு 9 மணிக்கு அனைவரும் அருங்காட்சியகத்தை விட்டு வெளியே வந்தனர். அப்போது இஸ்ரேல் தூதரக அதிகாரிகள், ஊழியர்களும் வெளியே வந்து வீட்டுக்குச் செல்ல ஆயத்தமாகி நின்றனர். அப்போது அருங்காட்சியகத்துக்கு வெளியே நின்ற மர்ம நபர் ஒருவர் தூதரக ஊழியர்களை நோக்கி ஓடிச் சென்று திடீரென்று குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே இஸ்ரேலிய தூதரக பெண் ஊழியர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். இவர்கள் இருவருமே இஸ்ரேல் தூதரகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் ஆவர். அவர்களது பெயர் யாரோன் லிஷின்ஸ்கி மற்றும் சாரா மில்கிரிம் என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் காதலர்கள் என்று கூறப்படுகிறது. விரைவில் திருமணம் செய்ய இருந்த நிலையில் அவர்கள் 2 பேரும் இறந்துள்ளனர். அப்போது துப்பாக்கிச்…
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்க புதிய படமொன்று தொடங்கப்படவுள்ளது. ’மார்கன்’ மற்றும் ‘சக்தி திருமகன்’ ஆகிய படங்களை முடித்துவிட்டார் விஜய் ஆண்டனி. அதனைத் தொடர்ந்து ‘லாயர்’ படத்தின் பணிகளைத் தொடங்கவுள்ளார். இதனை விஜய் ஆண்டனியே தயாரிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதனிடையே புதிய படமொன்றை அறிவித்துள்ளார் விஜய் ஆண்டனி. சசி இயக்கவுள்ள இப்படத்தினை அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விஜய் ஆண்டனி – சசி இருவரும் இணைந்த ‘பிச்சைக்காரன்’ படம் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது முதற்கட்டப் பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளன. இதில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து அஜய் திஷானும் இணைந்து நடிக்கவுள்ளார். விஜய் ஆண்டனியுடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு தொடங்கப்பட்டுள்ளது.
