இதய செயலிழப்பு என்றும் அழைக்கப்படும் இதய செயலிழப்பு (சி.எச்.எஃப்), இதய தசை பலவீனமடைகிறது மற்றும் உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான இரத்தத்தை பம்ப் செய்ய முடியாது. நிலை மீளக்கூடியதாகவோ அல்லது குணப்படுத்தவோ இல்லை என்றாலும், அதை உணவு, மருந்துகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்துடன் நிர்வகிக்க முடியும். இதய செயலிழப்பு (சி.எச்.எஃப்) உள்ள பெரும்பாலான மக்கள் பல ஆண்டுகளாக ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துகிறார்கள், அவர்கள் தங்கள் இதயத்தை மிகுந்த அக்கறை செலுத்தினால், மருந்துகளைத் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் உங்கள் இதயத்தை சரிபார்க்க வேண்டியது அவசியம், குறிப்பாக நீங்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், பருமனானவர்கள் என்றால், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் அல்லது உங்கள் குடும்பத்தில் இதய நோய் இயங்கினால். இது தவிர, உங்கள் இதயம் தோல்வியடைகிறது என்பதற்கான சில ஆரம்ப அறிகுறிகளும் உள்ளன, எனவே இவற்றைப் பாருங்கள் ..சோர்வு மற்றும் பலவீனம்இதய செயலிழப்பின் ஆரம்ப அறிகுறிகளில்…
Author: admin
புதுடெல்லி: பனாமா நாட்டில் மோடி அரசின் முடிவுகளை காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பாராட்டியிருப்பதற்கு அவரது கட்சியில் மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசி தரூர் சமீப காலமாக பிரதமர் மோடியையும் மத்திய அரசையும் பாராட்டி பேசி வருகிறார். இதற்கு காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. என்றாலும் சசி தரூர் அதனை கண்டுகொள்வதில்லை. ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளிடம் விவரிக்கும் எம்.பி.க்கள் குழுவில் காங்கிரஸ் எதிர்ப்பையும் மீறி சசி தரூர் இடம்பெற்றுள்ளார். அவர் பனாமா நாட்டில் பேசுகையில், “இந்தியா – பாகிஸ்தான் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை (எல்ஓசி) முதன்முறையாக கடந்து சென்று தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு முன் நாம் இவ்வாறு தாக்குதல் நடத்தியதில்லை. 2019 புல்வாமா தாக்குதலுக்கு பிறகு நாம் சர்வதேச எல்லையை (ஐபி) கடந்து சென்றோம். தற்போது இரு எல்லைகளையும் கடந்து சென்று பஞ்சாபின் இதயப் பகுதியில் தாக்குதல்…
சென்னை: அங்கீகாரம் இல்லாத மருத்துவ கல்லூரிகளில் சேர, மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க வேண்டாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் அரசு மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகளில் இருந்து 15 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவ கலந்தாய்வு குழு (எம்சிசி) ஆன்லைனில் நடத்துகிறது. தமிழகத்தில் அனைத்து மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை தமிழக மருத்துவ கல்வி, ஆராய்ச்சி இயக்ககம் நடத்துகிறது. இந்தியாவில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காதவர்கள் பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று மருத்துவம் படிக்கின்றனர். இந்த நிலையில், மருத்துவ கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு…
முலான்பூர்: ஐபிஎல் டி20 தொடரின் பிளே ஆஃப் சுற்றில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி. ஐபிஎல் தொடரில் முலான்பூரில் நேற்று நடைபெற்ற பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பீல்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியில் நூவன் துஷாரா நீக்கப்பட்டு ஜோஷ் ஹேசில்வுட் சேர்க்கப்பட்டார். பஞ்சாப் அணியில் ஒரே ஒரு மாற்றம் இருந்தது. மார்கோ யான்சனுக்கு பதிலாக அஸ்மதுல்லா ஓமர்ஸாய் சேர்க்கப்பட்டார். பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணி, ஆர்சிபியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மளமளவென விக்கெட்களை பறிகொடுத்தது. பிரியன்ஷ் ஆர்யா 7 ரன்களில் யாஷ் தயாள் பந்தை, கவர் திசையில் அடிக்க கிருணல் பாண்டியாவிடம் எளிதாக கேட்ச் ஆனது. மற்றொரு…
வாஷிங்டன்: உலக நாடுகள் இடையேயான வர்த்தகத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வரி உயர்வை அறிவித்தார். அவரின் இந்த வரி விதிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தடைவிதித்தது. அதை எதிர்த்து ட்ரம்ப் நிர்வாகம் பெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியது. இந்நிலையில், வர்த்தக நீதிமன்றத்தின் தடை உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது பெடரல் மேல்முறையீட்டு நீதிமன்றம். சீனா, இந்தியா, ஐரோப்பிய யூனியன் என உலக நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்துக்கு வரி உயர்வை ட்ரம்ப் அறிவித்தார். அவரது இந்த வரி விதிப்பு கொள்கை ரீதியான முடிவு உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதோடு அமெரிக்காவில் உள்நாட்டிலேயே இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. மேலும், இது சட்டவிரோதமானது என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மன்ஹாட்டன் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு ட்ரம்ப் வரிவிதிப்புக்கு எதிரான மனு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பின்…
நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா, வனிதா ஃபிலிம் புரொடக் ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம், ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’. இதை வனிதா இயக்கி நாயகியாக நடித்துள்ளார். ராபர்ட், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி.ராஜபாண்டி – விஷ்ணு ராமகிருஷ்ணன் – டி.ஜி. கபில் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு காந்த் தேவா இசையமைத்துள்ளார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தப் படம் ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. இதன் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் இயக்குநர் வசந்தபாலன், அம்பிகா, பாத்திமா பாபு, மதியழகன், ஷகிலா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். வசந்த பாலன் பேசும்போது, “இங்கு பெண்களுக்கானக் குரலை பெண்களே உயர்த்த வேண்டிய நிலை உள்ளது. திரைப்படத் துறையில் இருந்து கொண்டு வனிதா நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம்,…
சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியை தாக்கியதில் பாதிக்கப்பட்ட இரு மாணவிகளுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருபவர் சாந்தி. இவர் பள்ளி கழிப்பறைக்குச் சென்றபோது கதவு மூடப்படாமல் இருந்ததை பார்த்த 6-ம் வகுப்பு மாணவிகள், கழிப்பறைக் கதவை மூடிஉள்ளனர். சிறிது நேரம் கழித்து கதவை திறந்து விட்ட மாணவிகளை ஆசிரியை சாந்தி தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், சக மாணவிகள் முன்பாக அடித்துள்ளார். இதில் மாணவிகளின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்டக் கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தும் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை ஆறுமுகம் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரை விசாரித்த ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன், விழுப்புரம் மாவட்ட கல்வி அதிகாரியை, சின்னசேலம்…
புதுடெல்லி: ஒழுங்குமுறை அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் செயல்முறைகளில் குறைவான வெளிப்படைத்தன்மை ஆகியவை நிச்சயமற்றத் தன்மையை உருவாக்கி, தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAs) சரியான நேரத்தில் முடிவடைவதை பாதிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரித்துள்ளார். மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தற்போது அமெரிக்காவில் அந்நாட்டு வர்த்தகத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும்வேளையில் நிதியமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்திய போட்டி ஆணையத்தின் (Competition Commission of India) 16-வது ஆண்டு விழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர், இந்தியாவின் சுதந்திரமான மற்றும் நியாயமான சந்தையின் முக்கியத்துவத்தையும், அது எவ்வாறு முழுமையான பொருளாதாரத்துக்கு உதவும் என்பதையும் எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது: “ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்ட, வேகமான பொருளாதாரத்தில் ஒழுங்குமுறை அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் நிச்சயமற்ற தன்மைக்கு வழிவகுக்கும். வெளிநாடுகளுடன் நாம் சுதந்திர வர்த்தகத்துக்கான பேச்சுவார்த்தைகள் நடத்தி வரும் இந்த வேளையில், அவை…
புதுடெல்லி: இந்துத்துவா சித்தாந்தவாதியான விநாயக் சாவர்க்கர் மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவின் ரத்த சம்பந்தமான உறவினர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். சாவர்க்கரின் பேரன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்ததை அடுத்து, புனே நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் ராகுல் இவ்வாறு கூறியுள்ளார். கோட்சேவுடன் தன்னை இணைக்கும் தனது தாய்வழி வம்சாவளியை சத்யாகி சாவர்க்கர் வேண்டுமென்றே மறைத்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். லண்டனில் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சாவர்க்கர் குறித்து பேசியதற்காக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கை சத்யாகி சாவர்க்கர் தொடர்ந்தார். சாவர்க்கர் எழுதிய புத்தகத்தில், ஒரு முறை அவரும் சில நண்பர்களும் சேர்ந்து முஸ்லிம் நபரை அடித்ததாகவும், அதனை அவர்கள் மகிழ்ச்சியாக உணர்ந்ததாகவும் சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக சத்யாகி சாவர்க்கர் குற்றம்சாட்டியிருந்தார். அதுபோன்ற எந்த சம்பவமும் நடக்கவில்லை,…
Last Updated : 21 May, 2025 07:08 AM Published : 21 May 2025 07:08 AM Last Updated : 21 May 2025 07:08 AM லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்… Follow FOLLOW US தவறவிடாதீர்!
