Author: admin

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்களை மாற்றியமைத்து, மின்னல் வேகத்தில் பணிகளை தானியக்கமாக்குவதால், ஒரு புதிய உலகளாவிய ஆய்வு ஒரு சிக்கலான உண்மையை வெளிப்படுத்தியுள்ளது: ஆண்களை விட பெண்கள் AI க்கு வேலைகளை இழக்க மூன்று மடங்கு அதிகம்.ஐக்கிய நாடுகளின் நிறுவனமான சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐ.எல்.ஓ) நடத்திய ஆய்வில், இந்த வேகமாக நகரும் ஆட்டோமேஷன் அலை அனைவரையும் சமமாக தாக்கவில்லை என்பதைக் காட்டுகிறது-மேலும் பெண்கள் அதன் தாக்கத்தைத் தாங்குகிறார்கள்.எண்கள் ஒரு முழுமையான கதையைச் சொல்கின்றனபணக்கார நாடுகளில், பெண்கள் வைத்திருக்கும் வேலைகளில் சுமார் 10% AI ஆல் மாற்றப்படும் அபாயத்தில் உள்ளது. இதற்கு நேர்மாறாக, ஆண் வைத்திருக்கும் வேலைகளில் 3.5% மட்டுமே அந்த வகையில் அடங்கும். இது ஆட்டோமேஷன் பற்றி மட்டுமல்ல – இது பணியிடத்தில் பாலின இடைவெளியை விரிவுபடுத்துவது பற்றியது.எனவே, இந்த ஏற்றத்தாழ்வின் பின்னால் என்ன இருக்கிறது?வேலைகள் மிகவும் ஆபத்தில் உள்ளனஐ.எல்.ஓவின் கூற்றுப்படி, ஏஐ குறிப்பாக எழுத்தர் மற்றும் நிர்வாக பாத்திரங்களை…

Read More

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் (பிஓகே) கூடிய விரைவில் இந்தியாவுடன் இணையும் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இந்திய தொழிலக கூட்டமைப்பின் (சிஐஐ) 2025 உச்சி மாநாடு நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் கலந்து கொண்டு ராஜ்நாத் சிங் மேலும் பேசியதாவது: இந்தியாவின் பாதுகாப்பு துறையின் ஏற்றுமதி 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1,000 கோடியாக இருந்தது. இது தற்போது, 23,500 கோடி என்ற சாதனை அளவை எட்டியுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றியின் மூலம் மேக் இன் இந்தியா பிரச்சாரத்தின் வெற்றியை நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர். இந்த திட்டம் நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல அதன் வளமைக்கும் அவசியம். இது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு கட்டமைப்பு தங்களது திறனையும், வலிமையும் வெளிப்படுத்தி உலகம் முழுவதையும் ஆச்சரியப்படுத்தியது. போர் விமானங்கள், ஏவுகணை அமைப்புகளை மட்டும் இந்தியா உருவாக்கவில்லை. அடுத்த தலைமுறை போர் தொழில்நுட்பங்களுக்கும் நாம் தயாராகி…

Read More

அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இது கடைசி லீக் ஆட்டமாகும். ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 13 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்விகளுடன் 18 புள்ளிகள் பெற்று ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. எனினும் அந்த அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று லீக் சுற்றை முதல் இரு இடங்களுடன் நிறைவு செய்வதில் தீவிரம் காட்டக்கூடும். இன்றைய ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணி 20 புள்ளிகளை எட்டும். பெங்களூரு அணி தனது கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் 19 புள்ளிகளுடனே தொடரை நிறைவு செய்யும். அதேவேளையில் மும்பை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அதிகபட்சமாக…

Read More

Last Updated : 22 May, 2025 11:53 AM Published : 22 May 2025 11:53 AM Last Updated : 22 May 2025 11:53 AM லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்… Follow FOLLOW US தவறவிடாதீர்!

Read More

‘காதல் மட்டும் வேணா’ படத்தை இயக்கி நடித்த சமீர் அலி கான், தற்போது ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ என்ற படத்தை, சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி, நாயகனாக நடித்துள்ளார். மான்சி நாயகியாக நடித்துள்ள இதில் ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, ஆலி, சோனியா போஸ், மாலா பார்வதி, தீபிகா அமின், உதயதீப், கும்கி அஸ்வின் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். “இரண்டு வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட நாயகனும் நாயகியும் காதலில் விழுகின்றனர். இவர்கள் காதலுக்கு எத்தகைய இடையூறுகள் எழுகின்றன? அதை எப்படிக் கடந்து எவ்வாறு இணைகின்றனர் என்பதைக் கலகலப்பான முறையில் இந்தப் படத்தில் கூறி இருக்கிறோம்” என்கிறார் சமீர் அலிகான். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Read More

சென்னை: பழைய புத்தகக் கடை போல அரசு நூலகங்கள் செயல்படுவதாக தமிழக பாஜக செயலாளர் எஸ்.ஜி.சூர்யா விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தி.மு.க ஆட்சி என்றாலே ஏதோ கல்விக்கும் அறிவுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போன்ற மாயை தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த மாயை இப்போது நூலகத் துறைக்குள் நடக்கும் நாடகங்களால் உடைபட்டு வருகிறது. தி.மு.க ஆட்சி அமைந்த 2021 -22, 2022 – 23 ஆண்டுகளில் வெளிவந்த புதிய நூல்களுக்கு நூலக ஆணை வழங்குவதற்கு மாதிரி பிரதிகள் கூட இதுவரை பெறப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இறுதிக்குள் முந்தைய ஆண்டு வெளியான புத்தகங்களின் மாதிரிகள் பெற வேண்டும். ஆனால் இப்போது வரை நூலகத்துறை எதையும் வாங்கியதாக தகவல் இல்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கப்படாமல் இருக்கின்றன. இதனால் பெரும்பாலான நூலகங்கள் பழைய புத்தகக் கடைகளை போலத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன’ என்பதுதான் திமுகவின் நான்காண்டு கால…

Read More

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 30) பவுனுக்கு ரூ.200 என உயர்ந்துள்ளது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.71,360-க்கு விற்பனை ஆகிறது. நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.40 குறைந்திருந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு உலக நாடுகளின் வர்த்தக ரீதியான செயல்பாடும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 30) கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,920-க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு பவுன் தங்கம் ரூ.71,360-க்கும் விற்பனை ஆகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.27 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,731 என விற்பனை ஆகிறது.

Read More

சிட்னி ஸ்வீனி தனது உண்மையான குளியல் நீரின் சொட்டுடன் 5,000 பார்கள் சோப்பை விற்கிறார், டாக்டர் ஸ்குவாட்சுடன் வரையறுக்கப்பட்ட பதிப்பு கொலாபில், ஆன்லைனில் பின்னடைவைத் தூண்டுகிறார். சிலர் இதை புத்திசாலித்தனமான மார்க்கெட்டிங் என்று அழைக்கிறார்கள், பல ரசிகர்கள் ரைசிங் ஸ்டாரின் புறநிலைப்படுத்தல் குறித்து வருத்தப்படுகிறார்கள். சிட்னி ஸ்வீனி நிறைய விஷயங்களைச் செய்துள்ளார், யூபோரியாவில் நடித்தார், உங்களைத் தவிர வேறு யாரிடமும் திருடப்பட்ட காட்சிகள், மற்றும் இணையத்தின் விருப்பமான ஐடி பெண்ணாக மாறும். ஆனால் அவள் எங்களை அதிகம் ஆச்சரியப்படுத்த முடியாது என்று நீங்கள் நினைக்கும் போது, ​​அவள் சென்று அவளுடைய உண்மையான குளியல் நீரிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு சோப்பைத் தொடங்குகிறாள். “குளியல் நீர் பிளிஸ்” என்று கன்னத்தில் அழைக்கப்படும் வரையறுக்கப்பட்ட பதிப்பு சோப்பு, இயற்கையான சீர்ப்படுத்தும் பிராண்ட் டாக்டர் ஸ்குவாட்சுடன் நகைச்சுவையான மற்றும் எதிர்பாராத கொலாபின் ஒரு பகுதியாகும். இல்லை, இது இரவு நேர நகைச்சுவை ஓவியத்திலிருந்து சில வித்தை அல்ல.…

Read More

பெர்னார்ட் கெரிக் (பட கடன்: ஆபி) நியூயார்க் போலீஸ் கமிஷனரும் 9/11 ஹீரோவும் பெர்னார்ட் கெரிக் 69 வயதில் இறந்துவிட்டார் என்று நியூயார்க் காவல் துறை வியாழக்கிழமை சமூக ஊடகங்கள் மூலம் உறுதிப்படுத்தியது.இதற்கிடையில், எஃப்.பி.ஐ இயக்குனர் காஷ் படேல் அஞ்சலி செலுத்தி, “பெர்னி 2025 மே 29 அன்று, நோயுடன் ஒரு தனியார் போருக்குப் பிறகு சோகமாக காலமானார்” என்று கூறினார். அவர் கெரிக்கை “ஒரு போர்வீரன், ஒரு தேசபக்தர், இந்த நாடு இதுவரை அறிந்த மிகவும் தைரியமான பொது ஊழியர்களில் ஒருவர் என்று விவரித்தார்.”படேல் மேலும் கூறுகையில், “அவர் துணிச்சல், வீரம் மற்றும் சேவைக்காக 100 தடவைகளுக்கு மேல் அலங்கரிக்கப்பட்டார், பாதிக்கப்பட்டவர்களை கட்டிடங்களை எரிப்பதில் இருந்து மீட்டெடுத்தார், படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பினார், மேலும் உலகின் மிக ஆபத்தான குற்றவாளிகளில் சிலரை நீதிக்கு கொண்டு வந்தார்.””அவரது மரபு பதக்கங்களில் அல்லது பட்டங்களில் மட்டுமல்ல, அவர் காப்பாற்றிய வாழ்க்கையிலும், அவர் மீண்டும்…

Read More

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏகே 56 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து காஷ்மீர் முழுவதும் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாஸ்குசன் வனப்பகுதியில் ராணுவம், மத்திய படைகள், மாநில போலீஸார் இணைந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் மறைந்திருந்த இர்பான் பஷீர், உசைர் சலாம் ஆகிய 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏகே56 ரக துப்பாக்கிகள், குண்டுகள் மற்றும் கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து காஷ்மீர் காவல் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பஹல்காம் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களை…

Read More