Author: admin

சென்னை: “நகைக் கடன் தொடர்பான ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளைத் தளர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக” முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தங்க நகைக்கடன் பெறுவதற்காக ரிசர்வ் வங்கியால் முன்மொழியப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரி நான் மத்திய நிதியமைச்சருக்கு எழுதிய கடிதம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறிய தொகைகளை, குறிப்பாக ரூ. 2 லட்சத்துக்கு கீழ், கடன்பெறும் உழவர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்குத் தக்க நேரத்தில், எளிதில் கடன் கிடைக்க வேண்டும் என்பதைத்தான் தொடர்ந்து நான் வலியுறுத்தி வந்துள்ளேன். அந்த வகையில், நான் கடிதம் எழுதிய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதைப் பாராட்டும், அதேவேளையில், ஏழை எளிய மக்கள் மீது பெரும் தாக்கம் செலுத்தும் இதுபோன்ற கொள்கை முடிவுகளை மாநிலங்களுடன் உரிய முறையில் கலந்தாலோசித்த பிறகே, இனி முடிவுசெய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, தங்க…

Read More

காட்சி தகவல்களை விளக்குவதற்காக, மனித மூளை வண்ணங்கள், ஆழம், நிழல்கள் மற்றும் சூழலை வடிகட்டுகிறது. இருப்பினும், இது தொடர்ந்து தவறு செய்கிறது. ஒரு உருப்படி அல்லது விவரம் எப்போதாவது பின்னணியில் கலக்கக்கூடும், அது உதவியற்ற கண்ணுக்கு கண்ணுக்கு தெரியாதது. உங்கள் மூளை ஆப்டிகல் மாயைகளிலிருந்து ஒரு ஊக்கத்தைப் பெறுகிறது. சிக்கலான படங்களில் முறைகேடுகளை அடையாளம் காணும் உங்கள் திறனை மேம்படுத்த இந்த காட்சி புதிர்கள் சிறந்தவை. அவற்றை ஒரு உடற்பயிற்சி கூடத்திற்கு தகுதியான மன மற்றும் காட்சி வெப்பமயமாதல்கள் என்று நினைத்துப் பாருங்கள்.வெற்றுப் பார்வை ஆப்டிகல் மாயையில் மறைந்திருக்கும் இந்த நத்தை வெறுமனே ஒரு விளையாட்டை விட அதிகம். இது ஒரு தீவிரமான மன உடற்பயிற்சி. உங்கள் பெருமூளை செயலாக்க சக்தி சோதனைக்கு வைக்கப்படும். உங்கள் பெருமூளை செயலாக்க சக்தி சோதனைக்கு வைக்கப்படும்.உங்கள் மன வரம்புகளை சோதிக்க நீங்கள் தயாரா? இது முதல் பார்வையில் ஒரு கரடுமுரடான காட்சியாகத் தோன்றலாம். இருப்பினும்,…

Read More

பெங்களூரு: பெங்களூரு புறநகரில் பண்ணை வீட்டில் ரேவ் பார்ட்டியில் ஈடுபட்ட சீன பெண் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் ரேவ் பார்ட்டி நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அதிகாலை 3 மணியளவில் சோதனையிடச் சென்றனர். அப்போது 31 பேர் கஞ்சா, போதைப் பொருள், மது வகைகளை அருந்திவிட்டு, நடனமாடி கொண்டிருந்தனர். அதில் 28 வயதான சீனாவை சேர்ந்த பெண் பொறியாளரும் இருந்தார். இதையடுத்து போலீஸார் 31 பேரையும் பிடித்து, அவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட 31 பேரும் பவுரிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மருத்துவ‌ப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் பெங்களூரு மாநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். ரேவ் பார்ட்டியை ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் கட்டிடத்தின் உரிமையாளர் மீதும் தேவனஹள்ளி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.…

Read More

சென்னை: முன்னெப்போதும் இல்லாத வகையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் லீக் ஆட்டங்கள் அதன் இறுதிக் கட்டத்தை எட்டுவதற்கு முன்பாகவே பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் மும்பை என நான்கு அணிகள் முன்னேறியுள்ளன. வழக்கமாக கடைசி நேரத்தில் லீக் ஆட்டங்களில் நிலவும் பரபரப்பும், அழுத்தமும் இந்த முறை இல்லை. மாறாக லீக் சுற்றில் புள்ளிப்பட்டியலில் ‘டாப் 2’ இடத்தை யார் பிடிப்பது என்ற போட்டி தான் இந்த 4 அணிகளுக்கும் இடையே நிலவுகிறது. அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணியை 33 ரன்களில் வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். இதனால் லீக் சுற்றுக்கான புள்ளிப்பட்டியலில் டாப் 2 அணிகளில் ஒன்றாக குஜராத் அணி நிறைவு செய்வதற்கான வாய்ப்பில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 13 ஆட்டங்களில் 9 வெற்றிகளுடன் 18 புள்ளிகளை பெற்றுள்ளது அந்த அணி. 25-ம் தேதி நடைபெற உள்ள கடைசி லீக் ஆட்டத்தில்…

Read More

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7-ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் பேசியது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா ஜூலை 7-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான யாகசாலை பூஜைகள் ஜூலை 1-ம் தேதி தொடங்குகின்றன. விழாக் காலங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தினமும் 5 லட்சம் லிட்டர் வீதம் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைத்திட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஏற்பாடு செய்ய வேண்டும். சுகாதாரமான முறையில் குடிநீர் விநியோகம் செய்தல், திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள், பேருந்து நிறுத்துமிடங்களில் குடிநீர் மற்றும் தற்காலிக கழிப்பிட வசதிகள் செய்தல், திருக்கோயில் வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்கள், மாடுகளை…

Read More

நடிகர் அல்லு அர்ஜுன், ‘புஷ்பா 2’ படத்தை அடுத்து நடிக்கும் படத்தை, அட்லி இயக்குகிறார். சயின்ஸ் பிக்‌ஷன் கதையை கொண்ட இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. “சர்வதேச தரத்துடன் இந்தியாவில் தயாராகும் ‘பான் வேர்ல்ட்’ படமாக இது இருக்கும்” என படக் குழுவினர் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர். ஜூன் மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்தப் படத்தில் 6 ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காகத் தமிழ் மற்றும் பாலிவுட்டில் உள்ள முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்து வருவதாகக் கூறப்படுகிறது.

Read More

சோழிங்கநல்லூர்: “நான், பொருளாளர், பொதுச் செயலாளர் என அனைவரும் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டவர்கள். எனவே, பொதுக்குழு நினைத்தால்தான் எங்களை நியமிக்கவோ, நீக்கவோ முடியும். வேறு யாராலும் அவ்வாறு செய்ய முடியாது. கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் என்னுடைய கடிதம்தான் செல்லும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், “மன உளைச்சலில் இருந்தேன்… நேற்றுதான் விடுதலை கிடைத்தது” என்று அவர் கூறினார். சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கான பாமக மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை மற்றும் உறுப்பினர் படிவம் வழங்கி, உறுப்பினர் சேர்க்கையை கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (மே 30) தொடங்கிவைத்தார். இந்தக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியது: “ரொம்ப முக்கியமான கட்டத்தில், முக்கியமான நேரத்தில் நாம் இருக்கிறோம். எனவே, இதை மனதில் வையுங்கள். கட்சிக்குள் ஏதோ சில குழப்பங்கள்…

Read More

குறைந்த முக்கிய கூட்டங்கள் அல்லது சாதாரண வெள்ளிக்கிழமைகளுக்கு ஏற்றது, உங்கள் இனத்தை அலங்கரிக்கப்பட்ட குர்தாவை டெனிம் ஜாக்கெட், உடுப்பு அல்லது ஒரு பாயும் ஷ்ரக் கூட அடுக்கவும். இந்த உயர்-குறைந்த கலவை ஒரு ஃபேஷன் பிடித்தது, இது மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, மேலும் நீங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் விஷயங்களை ஸ்டைலிங் செய்வதற்கான நிலையான அணுகுமுறையை ஆதரிக்கிறது. அந்த சிரமமின்றி தேசி-கூல் ஆற்றலுக்காக ஜும்காஸ், கோலாபுரிஸ் அல்லது வண்ணமயமான பொட்லி பையை சேர்க்கவும்.(பட வரவு: Pinterest)

Read More

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசில் வங்கி மோசடிகள் 416 சதவீதம் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மோடி அரசின் 11 ஆண்டுகளில் ரூ.6,36,992 கோடி மதிப்புள்ள வங்கி மோசடிகள் நடந்துள்ளன, இது 416% அதிகரிப்பு ஆகும். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகும், கடந்த 6 ஆண்டுகளில் ரூ.500 போலி ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 291% அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு அது மேலும் அதிகமாகும். மோடி ஜி, உங்கள் நரம்புகளில் என்ன பாய்கிறது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், உங்கள் அரசின் நரம்புகளில் மோசடி மற்றும் போலித்தனம் பாய்கிறது என்பது உறுதி” என்று தெரிவித்துள்ளார் முன்னதாக, மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்ட மற்றொரு பதிவில், “மோடி அரசு தனது மொத்த தோல்விகளை மறைக்க பொருளாதாரம் குறித்து பொய்களைப் பரப்புவதை ஒரு பழக்கமாக்கியுள்ளது. தொடர்ந்து 11 ஆண்டுகளாக, இந்த திறமையற்ற அரசு, பொருளாதாரத்தின் ஒவ்வொரு…

Read More

புதுடெல்லி: ஜூன் 15-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வை (NEET-PG) இரண்டு ஷிப்டுகளுக்குப் பதிலாக ஒரே ஷிப்டில் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நீட்-பிஜி தேர்வுகளை இரண்டு ஷிப்டுகளில் நடத்தும் தேசிய தேர்வு வாரியத்தின் முடிவை நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் குமார் மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு நிராகரித்தது. இது “எதேச்சதிகாரமான தன்மையை உருவாக்குகிறது” என்று உச்ச நீதிமன்றம் கூறியது. நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு, ஒரே ஷிப்டில் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும், முழுமையான வெளிப்படைத்தன்மை பராமரிக்கப்படுவதை உறுதி செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. தேர்வு திட்டமிடப்பட்ட தேதியான ஜூன் 15-ம் தேதிக்குள் இந்த ஏற்பாடுகளைச் செய்ய முடியாது என்று தேசிய தேர்வு வாரியம் கண்டறிந்தால், நேர நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. பிஜி நீட் தேர்வுகளை இரண்டு ஷிப்டுகளில் நடத்துவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை…

Read More