Author: admin

சென்னை: தெரு நாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான தமிழக அரசின் டெண்டருக்கு தடை கோரிய வழக்கில், மத்திய, மாநில விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. சாலையில் நடந்து செல்லும் குழந்தைகள், முதியவர்கள், வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்தி சென்று கடிக்கும் சம்பவங்களும் பரவலாக நடக்கின்றன. இதை கருத்தில் கொண்டு, தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அரசு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, சென்னையில் வளர்ப்பு நாய்களில் இருந்து வேறுபடுத்தி அறியும் வகையில், தெரு நாய்களுக்கு சிப் பொருத்தும் பணிகளுக்கு ரூ.5.20 கோடி மதிப்பில் டெண்டர் கோரப்பட்டது. இந்நிலையில், தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த, இனப்பெருக்க கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தும் வகையில் கோரப்பட்ட டெண்டர் மற்றும் நிதி ஒதுக்கீட்டுக்கு தடை கோரி விலங்குகள் நல…

Read More

நடைபயிற்சி மற்றும் ஓட்டம் இரண்டும் ஆரோக்கியமான மற்றும் பொருத்தமாக இருக்கும்போது சிறந்த விருப்பங்கள். அவை தீவிரத்தின் உச்சம் என்றாலும், இரண்டும் இருதய அமைப்பு, மன நல்வாழ்வு மற்றும் ஒட்டுமொத்த உடற்பயிற்சி ஆகியவற்றிற்கு நிறைய வழங்க முடியும். அவர்களுக்கு இடையிலான முடிவு பெரும்பாலும் ஒருவரின் உடல்நல நோக்கங்கள், உடல் திறன் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றில் உள்ளது.இருதய நன்மைகள்விறுவிறுப்பான நடைபயிற்சி இருதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் சுழற்சியை மேம்படுத்துகிறது. கூட்டு பிரச்சினைகள், முதியவர்கள் அல்லது அவர்களின் உடற்பயிற்சி வழக்கத்திற்கு புதியவர்களுக்கு நடைபயிற்சி சிறந்தது.இருப்பினும், இயங்குவது இதயத் துடிப்பை மிக விரைவாக அதிகரிக்கிறது, குறுகிய காலத்திற்குள் ஏரோபிக் திறனை அதிகரிக்கிறது. இது இதய தசையை பலப்படுத்துகிறது, மேலும் இது தொடர்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் செய்தால் குறைந்த இதய நோய்க்கு பங்களிக்கும்.தசை மற்றும் எலும்பு ஆரோக்கியம்இவை இரண்டும் எடை தாங்கும், இதனால் அவை எலும்பு வலிமையைப் பாதுகாத்து மேம்படுத்துகின்றன. நடைபயிற்சி…

Read More

மிகவும் அழிவுகரமான நிகழ்வுகளில் ஒன்று என்றால் என்ன பூமிவரலாறு உண்மையில் வாழ்க்கை வளர உதவியது? 3.26 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கிரகத்திற்குள் நுழைந்த ஒரு பெரிய விண்கல் அதைச் செய்திருக்கலாம், தேசிய அறிவியல் அகாடமியின் செயல்முறைகளில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வின்படி. ஹார்வர்ட் புவியியலாளர் நட்ஜா டிராபனால் முன்னிலை வகித்த ஆராய்ச்சி, மகத்தான தாக்கம் ஒரு “மாபெரும் உர குண்டு” போல செயல்பட்டது, ஆரம்பகால பூமியெங்கும் வாழ்க்கை-ஆதரவு ஊட்டச்சத்துக்களை சிதறடிக்கும் மற்றும் பரிணாம வளர்ச்சியை வடிவமைக்கும் நுண்ணுயிர் வெடிப்பை ஜம்ப்ஸ்டார்டிங் செய்யக்கூடும் என்று ஆராய்ச்சி முன்மொழிகிறது.டைனோசர் கொலையாளியை விட பெரிய ஒரு விண்கற்களை வாழ்க்கை எவ்வாறு தப்பிப்பிழைத்ததுடைனோசர்களை அழித்த விண்கற்களை விட 50 முதல் 200 மடங்கு பெரியதாக மதிப்பிடப்பட்டுள்ளது விண்கல் வெற்றி பேலியார்ச்சியன் சகாப்தத்தில் பூமி. இந்த நேரத்தில், நமது கிரகம் இன்றையவற்றிலிருந்து வெகு தொலைவில் இருந்தது -பிரம்மாண்டமான பெருங்கடல்கள், சிறிய நிலப்பரப்புகள் மற்றும் ஆக்ஸிஜன் இல்லாத வளிமண்டலம்.மோதலால் செய்யப்பட்ட…

Read More

பாட்னா: தீவிரவாதம் எனும் நச்சுப் பாம்பு மீண்டும் தனது தலையை தூக்க முயன்றால், துளையிலிருந்து வெளியே இழுக்கப்பட்டு நசுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பிஹார் மாநிலம் கராகத் நகரில் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது: இந்தியப் பெண்கள் அணியும் குங்குமத்தின் சக்தியை பாகிஸ்தானும் இந்த உலகமும் பார்த்தன. பாகிஸ்தான் ராணுவப் பாதுகாப்பில் இருந்த தீவிரவாதிகளை நாம் மண்டியிட வைத்தோம். பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களின் மறைவிடங்களை இந்திய ஆயுதப் படைகள் தகர்த்தெறிந்தன. பாகிஸ்தான் விமானப்படை தளங்கள், ராணுவ அமைப்புகளையும் நாம் அழித்தோம். இது புதிய இந்தியா. இதன் சக்தி அனைவரும் காணக்கூடியதாக உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நமது அம்பறாத்தூணியில் இருந்து வீசப்பட்ட ஓர் அம்பு மட்டுமே. தீவிரவாதத்திற்கு எதிரான போர் முடிவடையவில்லை. நிறுத்தப்படவும் இல்லை. தீவிரவாதம் எனும் நச்சுப் பாம்பு மீண்டும் தனது தலையை…

Read More

மும்பை இந்தியன்ஸ் அணி நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணியை பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் வெளியேற்றியது. இதில் ரோஹித் சர்மாவின் ஆட்டம் முக்கியப் பங்களிப்புச் செய்ததோடு சில சாதனைகளையும் அவர் நிகழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடர்களில் ரோஹித் சர்மா 7038 ரன்களை எடுத்து விராட் கோலியின் 8,618 ஐபிஎல் ரன்களுக்கு அடுத்ததாக 7000+ ஐபிஎல் ரன்களைக் கடந்த 2-வது வீரராகத் திகழ்கிறார். அதே போல் கிறிஸ் கெயில் ஐபிஎல் தொடர்களில் 357 சிக்சர்களுடன் முதலிடம் வகிக்க ரோஹித் சர்மா 302 சிக்சர்களை விளாசியுள்ளார். ரோஹித்தின் 302 சிக்சர்களில் 251 சிக்சர்கள் மும்பை இந்தியன்ஸுக்காகவும் 51 சிக்சர்கள் டெக்கான் சார்ஜர்ஸுக்காகவும் அடித்தது. ஒரே அணிக்காக அதிக சிக்சர்களை அடித்த வகையில் விராட் கோலி 291 சிக்சர்களை ஆர்சிபி அணிக்காக மட்டுமே அடித்து சாதனையை தன்வசம் வைத்துள்ளார். மும்பை நேற்று எடுத்த 228 என்ற ரன் எண்ணிக்கை ஐபிஎல் நாக் அவுட் சுற்றில் எடுத்த…

Read More

வாஷிங்டன்: இந்தியா – பாகிஸ்தான் மோதலை தடுத்ததில் அமெரிக்காவின் பங்கு குறித்தும், இதன் மூலம் அணுசக்தியின் பேரழிவு தடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். தொழிலதிபர் எலான் மஸ்க் உடன் தி ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை டொனால்டு ட்ரம்ப் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்தது: “இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலை தடுத்தது நாங்கள்தான். அது நடக்காமல் போயிருந்தால் மிகப்பெரிய அணுசக்தி பேரழிவாக மாறி இருக்கலாம் என்று நான் நம்புகிறேன். ஒருவருக்கொருவர் சுட்டுக் கொள்பவர்கள், அணு ஆயுத பயன்பாடு கொண்டவர்களுடன் நாங்கள் வர்த்தகம் மேற்கொள்ள முடியாது. அமெரிக்காவின் போர்நிறுத்த முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்த இரு நாட்டு தலைவர்களையும் நான் பாராட்டுகிறேன். இந்த பணியை செம்மையாக செய்த அமெரிக்க அரசு அதிகாரிகள், நிர்வாகிகளை பாராட்டுகிறேன். உலக அளவிலான மோதலை அமெரிக்கா தனது தலைமை பண்பு மற்றும் ராணுவ சக்தியால் தடுத்துள்ளது.” என்றார். கடந்த 13-ம் தேதி அன்று இந்தியா – பாகிஸ்தான் தரப்பினர்…

Read More

அந்த காலகட்ட நாடக உலகில், டி.எஸ்.நடராஜனுக்குத் தனிப் பெயர் இருந்தது. அவருடைய ‘என் தங்கை’ நாடகம் மாபெரும் வெற்றி பெற்றதால், ‘என் தங்கை’ நடராஜன் என்றே அவரை அழைத்து வந்தனர். இந்த நாடகம் நடந்து வந்த கால கட்டத்தில்தான், பாவலர் பாலசுந்தரம் எழுதிய ‘பராசக்தி’ நாடகமும் புகழ் பெற்று வந்தது. அப்போது பிரபலமாக இருந்த இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமியிடம் சில தயாரிப்பாளர்கள், அதைப் படமாக்கக் கேட்டுக்கொண்டனர். இரண்டு நாடகங்களையும் பார்த்தார், ஏ.எஸ்.ஏ.சாமி. இரண்டும் தங்கை பற்றிய கதை என்பதால் இரண்டையும் ஒன்றாக்கி படமாக்கலாம் என்றார். அதற்கு நடராஜன் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து ‘பக்த மார்க்கண்டேயா’, ‘பக்த பிரகலாதா’ உள்பட தமிழ், தெலுங்கில் பல படங்களை இயக்கிய சித்தரப்பு நாராயண ராவ் என்ற சி.ஹெச்.நாராயணமூர்த்தி, ‘என் தங்கை’ கதையைத் திரைப்படமாக்கினார். அசோகா பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் அண்ணனாக நடிக்க, பிரபல பாடகர் திருச்சி லோகநாதனைத் தேர்வு செய்தனர். சில காட்சிகள் படமாக்கப்பட்ட பிறகு, சிறந்த…

Read More

சென்னை: சிறுநீரகம் காக்கும் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 33,869 பேருக்கு பாதிப்புக்கான அறிகுறி கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறுநீரக செயலிழப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் விதமாக தமிழகத்தில் ‘சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவ திட்டம்’ கடந்த 2023 ஜூலை 10-ம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்த நோயாளிகள் மற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், அந்தந்த கிராமத்திலேயே சிறுநீரக பரிசோதனை செய்யப்படுகிறது. குறிப்பாக, கிராம சுகாதார செவிலியர்கள், பெண் சுகாதார தன்னார்வலர்களை கொண்டு, துணை சுகாதார நிலையத்திலேயே பரிசோதனை செய்யப்படுகிறது. இதுகுறித்து பொது சுகாதார துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: விவசாய தொழிலாளர்கள், கட்டிட வேலை செய்வோருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுதவிர, தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் என 2 கோடி பேர் உள்ளனர். சிறுநீரக செயலிழப்பால் இவர்களும் பாதிக்கப்படக்கூடும். 1.07…

Read More

டிரிகோனசனா போஸ் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது, இதன் விளைவாக அதிகப்படியான யூரிக் அமிலத்தை வெளியேற்றலாம். இது இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது மற்றும் வயிற்று உறுப்புகளைத் தூண்டுகிறது, மேலும் யூரிக் அமிலம் போன்ற நச்சுகளை அகற்ற உடலுக்கு உதவுகிறது. முழு நன்மைகளையும் அறுவடை செய்ய, இந்த ஆசனத்தை தினமும் செய்யுங்கள்.அதை எப்படி செய்வது:உங்கள் கால்களை அகலமாக நிற்கவும்.உங்கள் வலது பாதத்தை 90 டிகிரி வெளிப்புறமாக மாற்றவும்.உங்கள் கைகளை பக்கவாட்டாக நீட்டவும்.உங்கள் உடலை உங்கள் வலது பாதத்தை நோக்கி வளைத்து, உங்கள் வலது கையை உங்கள் ஷின், கணுக்கால் அல்லது தரையில் வைக்கவும். (உங்களுக்கு எது வசதியானது)உங்கள் இடது கையைப் பார்த்து, உங்கள் இடது கையை மேல்நோக்கி நீட்டவும்.30 விநாடிகள் பிடி, பின்னர் பக்கங்களை மாற்றவும்.இது போஸ் மெதுவாக உங்கள் பக்கங்களை நீட்டி, உங்கள் செரிமான உறுப்புகளை செயல்படுத்துகிறது, எனவே உங்கள் உடலுக்கு யூரிக் அமிலத்தை அகற்ற உதவுகிறது. உடல்நலம்+யோகாவுடன் பொருத்தமாக…

Read More

புவனேஸ்வர்: ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் மூத்த அரசு அதிகாரி பைகுந்த நாத் சாரங்கியின் வீடுகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரூ.2.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்ச வழக்கில் இருந்து தப்பிக்க 500 ரூபாய் நோட்டுகளை ஜன்னல் வழியாக அவர் அள்ளி வீசினார். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் ஊரக வளர்ச்சி துறையின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. அந்த அலுவலகத்தில் சாலை திட்ட தலைமை பொறியாளராக பைகுந்த நாத் சாரங்கி பணியாற்றி வருகிறார். அவர் அதிகமாக லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து ஒடிசா லஞ்ச ஒழிப்பு போலீஸார், அந்த மாநிலத்தின் அனுகோள் நகரில் உள்ள பைகுந்த நாத் சாரங்கியின் வீடு மற்றும் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். இவை தவிர அவரது அலுவலக அறை மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. புவனேஸ்வரின் பிடிஎன்…

Read More