Author: admin

புதுடெல்லி: “இந்தியா ராஜதந்திர தொடர்புகளை கொண்டிருந்தபோதிலும் பாகிஸ்தானிடமிருந்து விரோதத்தைத் தவிர வேறு எதையும் திரும்பப் பெறவில்லை.” என முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார். ஆசியாவின் முதன்மையான பாதுகாப்பு உச்சி மாநாடான ஷாங்க்ரி-லா உரையாடலில் பேசிய இந்திய முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், “இந்தியா – பாகிஸ்தான் உறவில், நாங்கள் மூலோபாயம் இல்லாமல் செயல்படவில்லை. நாம் சுதந்திரம் பெற்றபோது, ​​சமூக, பொருளாதார, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி என ஒவ்வொரு அளவீட்டிலும் பாகிஸ்தான் நம்மை விட முன்னணியில் இருந்தது. இன்று, அதிக பன்முகத்தன்மை இருந்தபோதிலும் பொருளாதார செயல்திறன், மனிதவள மேம்பாடு மற்றும் சமூக நல்லிணக்கம் என அனைத்து முனைகளிலும் இந்தியா முன்னணியில் உள்ளது. 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற பிறகு, பிரதமர் நரேந்திர மோடி அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தனது பதவியேற்பு விழாவுக்கு அழைத்தது போல, இந்தியா பல முறை ராஜதந்திர…

Read More

விக்கெட் வீழ்த்திய பின்னர் நோட்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ராதிக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தோல்வி அடைந்தது. 206 ரன்கள் இலக்கை துரத்திய ஹைதராபாத் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா 20 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அதிரடியாக விளையாடிய அவர், திக்வேஷ் ராதி வீசிய சுழலில் எக்ஸ்டிரா கவர் திசையில் ஷர்துல் தாக்குரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மாவை ஆட்டமிழக்க செய்த மகிழ்ச்சியை திக்வேஷ் ராதி தனது வழக்கமான ‘நோட்புக் செலிபிரேஷன்’ பாணியில் கொண்டாடினார். இதனால் களத்தில் திக்வேஷ்…

Read More

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், இந்தியில் அறிமுகமாகும் படம் ‘வார் 2’. யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் பட வரிசையின் 6-வது படமான இதில், ஹிருத்திக் ரோஷன், கியாரா அத்வானி உள்பட பலர் நடித்துள்ளனர். அயன் முகர்ஜி இயக்கியுள்ள இந்த பிரம்மாண்ட ஆக்‌ஷன் படத்தின் டீஸர், ஜுனியர் என்.டி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே அதிகமான பார்வைகளைப் பெற்றது. சிலிரிக்க வைக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த டீஸருக்கு கிடைத்துள்ள வரவேற்புக்காக ரசிகர்களுக்கு ஜூனியர் என்.டி.ஆர் நன்றி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர், “சில நேரங்களில் எனது இந்த திரைப்பயணத்தை இடைநிறுத்தி திரும்பிப் பார்ப்பேன். ஒவ்வொரு முறையும், முதலில் நினைவுக்கு வருவது ரசிகர்களாகிய நீங்கள்தான். ‘வார் 2’ டீஸருக்குக் கிடைத்த வரவேற்பு நம்ப முடியாததாக இருக்கிறது. ஆக.14-ல் அந்தப் படத்தை நீங்கள் பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி” என்று…

Read More

சென்னை: ஆட்டோ மீட்டர் கட்டணம் குறித்து தலைமைச் செயலர் ஆலோசித்து வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு மாற்றி அமைத்தது. அதன்பின் தனிநபர் ஒருவர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதின்றம், மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்குமாறு 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பல கட்ட பேச்சுவார்த்தையை நடத்திய அரசு, 2 ஆண்டுகளைக் கடந்த பிறகும் கட்டணத்தை உயர்த்தவில்லை. இதற்கிடையே, இதுதொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆட்டோ ஓட்டுநர்களுடன் போக்குவரத்துத் துறை ஆலோசனை நடத்தி, கட்டணம் தொடர்பான பரிந்துரைகளைப் பெற்றது. ஆனால், கட்டணம் இறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தீவிர போராட்டங்களை ஓட்டுநர் சங்கங்கள் முன்னெடுத்தன. இதற்கிடையே, சென்னை, பசுமை வழிச்சாலையில் உள்ள போக்குவரத்துத் துறை அமைச்சரின் இல்லத்தில் அமைச்சர் சிவசங்கரை, தமி்ழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர் சங்கங்களின்…

Read More

“நேர்மறையாக இருக்க” மற்றும் “முன்னேற” தொடர்ந்து சொல்லும் உலகில், எங்கள் மிக முக்கியமான உணர்ச்சி சமிக்ஞைகளில் சிலவற்றை நாங்கள் அடிக்கடி ம sile னமாக்குவதை முடிக்கிறோம். உணர்ச்சிகள் தவிர்க்கப்பட வேண்டிய சாலைத் தடைகள் அல்ல, அவை எங்களை வழிநடத்தும், தெரிவிக்கும் மற்றும் பாதுகாக்கும் தூதர்கள். நாம் அவர்களை அடக்கும்போது, ​​குறிப்பாக சமூகம் பெரும்பாலும் “எதிர்மறையானது” என்று கருதுகிறது, அறியாமல் நம்முடைய சொந்த மன மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை நாசப்படுத்துகிறோம்.உளவியலாளர்களின் கூற்றுப்படி, மக்கள் பொதுவாக அடக்கிய மூன்று முக்கிய உணர்ச்சிகள் உள்ளன: கோபம், பொறாமை மற்றும் வருத்தம். அவை சங்கடமாக இருக்கும்போது, ​​அவை வளர்ச்சி, தெளிவு மற்றும் நிறைவேற்றத்தை நோக்கி நம்மைத் தள்ளக்கூடிய முக்கியமான நுண்ணறிவுகளைக் கொண்டுள்ளன. இந்த உணர்ச்சிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும், அவற்றைத் தள்ளுவதற்குப் பதிலாக அவற்றை ஏன் கேட்கத் தொடங்க வேண்டும் என்பதையும் ஆராய்வோம்.கோபம்: உங்கள் எல்லைகளின் பாதுகாவலர்கோபம் பெரும்பாலும் ஒரு அழிவுகரமான உணர்ச்சியாகக் காணப்படுகிறது. பலர் இதை…

Read More

புது டெல்லி: இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற வனவிலங்கு பாதுகாவலர்கள் மற்றும் எழுத்தாளர்களில் ஒருவரான வால்மிக் தாபர் சனிக்கிழமை காலை டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 73. 1952 ஆம் ஆண்டு புது டெல்லியில் பிறந்தவர் தாபர். தாபரின் தந்தை ரோமேஷ் தாபர் ஒரு பிரபலமான பத்திரிகையாளர். அவரது அத்தை வரலாற்றாசிரியர் ரோமிலா தாபர். அவர் தி டூன் பள்ளியில் பயின்றார். பின்னர் செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் சமூகவியல் பயின்றார். அதில் தங்கப் பதக்கமும் பெற்றார். தாபர் நடிகர் சஷி கபூரின் மகள் அதாவது நாடகக் கலைஞரான சஞ்சனா கபூரை மணந்தார், அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சிறு வயதில் இருந்து புலிகளை பற்றி படிப்பது மற்றும் ஆராய்ச்சி செய்வதில் அவருக்கு ஆர்வம் இருந்துள்ளது. சில காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சனிக்கிழமை காலை டெல்லியில் காலமானார். ராஜஸ்தானின் ரந்தம்போர் தேசிய பூங்காவில் உள்ள புலிகளின் ஆய்வு மற்றும் பாதுகாப்பிற்காக தனது வாழ்க்கையை…

Read More

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ, ரிச்சர்ட் க்ளீசன், இலங்கையின் சரித் அசலங்கா ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்தின் வில் ஜேக்ஸ், தென் ஆப்பிரிக்காவின் ரியான் ரிக்கெல்டன், கார்பின் போஷ் ஆகியோர் வரும் 26-ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்துடன் தாயகம் புறப்பட்டுச் செல்கின்றனர். வில் ஜேக்ஸ், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்க உள்ளார். அதேவேளையில் ரியான் ரிக்கெல்டன், கார்பின் போஷ் ஆகியோர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தயாராகுவதற்காக தென் ஆப்பிரிக்க அணியுடன் இணைய உள்ளனர். இதனால் இந்த 3 வீரர்களுக்கு பதிலாக மும்பை அணி இங்கிலாந்தைச் சேர்ந்த ஜானி பேர்ஸ்டோ, ரிச்சர்ட் க்ளீசன், இலங்கையின் சரித் அசலங்கா ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான…

Read More

Last Updated : 22 May, 2025 07:25 AM Published : 22 May 2025 07:25 AM Last Updated : 22 May 2025 07:25 AM ஹாலிவுட்டில் வெளியான, ஏர்பிளேன் 2, நோ ஸ்மால் அஃபைர், பிளட்ச், த லிட்டில் ரஸ்கல்ஸ், மேன் ஆஃப் த ஹவுஸ், ஸ்பைஸ் வேர்ல்டு, சாண்டி வெக்ஸியர் உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் ஜார்ஜ் வெண்ட். ஏராளமான சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். என்பிசி தொலைக்காட்சியில் வெளியான ‘சீயர்ஸ்’ என்ற தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்துவந்த இவர், நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 76. தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள் ளனர். மறைந்த நடிகர் ஜார்ஜ் வெண்ட்டின் மனைவி பெர்ன டெட் பிர்கெட் ஹாலிவுட் நடிகை. லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்… Follow…

Read More

சென்னை: “தமிழகத்தில் 38 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு உருமாற்றம் பெற்று வருகிறது; ஆனால், இது குறித்து மக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் மட்டும் முகக்கவசம் அணிந்து கொள்ளலாம். மற்றபடி வதந்திகளைப் பரப்ப வேண்டாம்.” என்று கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (மே.31) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர், “தமிழகத்தில் 38 பேருக்கு கரோனா தொற்று உள்ளது. கரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு உருமாற்றம் பெற்று வருகிறது. ஆனால், இது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. எனவே, மக்கள் இது குறித்து பதற்றம் அடையத் தேவையில்லை. புனே ஆய்வு மையத்துக்கு, தமிழகத்திலிருந்து 17 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பியுள்ளோம். மத்திய சுகாதார அமைச்சகம், முகக் கவசம் அணிவது நல்லது என்று தெரிவித்துள்ளது. அதையேத்தான்…

Read More

புகைபிடித்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம், நீண்ட காலமாக, அபாயகரமானதாக இருக்கும். ஆயினும்கூட, உலகில் மில்லியன் கணக்கான மக்கள் பல முயற்சிகள் இருந்தபோதிலும், பட் உதைக்க போராடுகிறார்கள். புகைப்பழக்கத்தின் பாதகமான விளைவுகளுக்கு வரும்போது, ​​இது ஒரு மனிதனின் விந்தணுக்களின் எண்ணிக்கையை பாதிக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிந்திருந்தாலும், கருத்தரிக்கத் திட்டமிடும் பெண்ணுக்கு இது சமமாக சிக்கலானது என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த உலகம் நோ-டோபாக்கோ நாள், புகைப்பழக்கத்திற்கும் கருவுறாமைக்கும் இடையிலான தொடர்பை ஆராய்வோம் …கருப்பையில் விளைவுகருப்பைகள் கர்ப்பத்திற்குத் தேவையான முட்டைகளை (OVA) உற்பத்தி செய்கின்றன. புகைபிடித்தல் கருப்பையை பல வழிகளில் சேதப்படுத்துகிறது:குறைக்கப்பட்ட கருப்பை இருப்பு: புகைபிடித்தல் ஒரு பெண்ணின் ஆரோக்கியமான முட்டைகளின் எண்ணிக்கையை குறைக்கிறது, மேலும் முன்கூட்டியே (இளைய பெண்களுக்கு வயதான பெண்களை விட அதிக கருப்பை இருப்பு உள்ளது) ஆய்வுகள் புகைப்பிடிப்பவர்கள் புகைபிடிக்காதவர்களுடன் ஒப்பிடும்போது தங்கள் கருப்பை இருப்பு 20% இழக்கக்கூடும் என்று காட்டுகிறது.…

Read More