சென்னை: சென்னையில் சிபிசிஎல் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி மூலம், 300 மாற்றுத் திறனாளிகளுக்கு, உதவி உபகரணங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ், ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் 300 மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கால்கள், பேட்டரியால் இயங்கும் 4 சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட உதவி உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி திருவொற்றியூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதியில், கழிவுநீரகற்று பணி மேற்கொள்வதற்காக, ரூ.1.50 கோடி மதிப்பில் நவீன இயந்திரம் பொருத்தப்பட்ட கழிவுநீரகற்று வாகனத்தை கொடியசைத்து அனுப்பி வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது: மாற்றுத்திறனாளிகளை மாற்றத்துக்கான திறனாளிகளாக நம் முதல்வர் உயர்த்திக் கொண்டு இருக்கிறார். அந்த வகையில், மாற்றுத் திறனாளிகளை உள்ளாட்சி அமைப்புகளில், நியமன முறையில் தேர்ந்தெடுக்க…
Author: admin
கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்கு என்பது ஒரு தாய் எதிர்கொள்ளக்கூடிய மிகவும் ஆபத்தான அனுபவங்களில் ஒன்றாகும். ஒரு சில சொட்டு இரத்தம் கூட உடனடி பீதியைத் தூண்டும். பயம் உண்மையானது. பி.எம்.சி கர்ப்பம் மற்றும் பிரசவத்தில் வெளியிடப்பட்ட 2025 கோஹார்ட் ஆய்வில், கர்ப்பத்தின் எந்த கட்டத்திலும் யோனி இரத்தப்போக்கு அனுபவிக்கும் பெண்கள் குறைப்பிரசவம், பிரசவம், குறைந்த பிறப்பு எடை மற்றும் சவ்வுகளின் முன்கூட்டிய சிதைவு உள்ளிட்ட கடுமையான சிக்கல்களுக்கு கணிசமாக அதிக ஆபத்தை எதிர்கொள்கிறார்கள் என்று கண்டறியப்பட்டது.இதை இன்னும் பயமுறுத்துகிறது என்னவென்றால், இரத்தப்போக்கு லேசாகத் தொடங்கலாம், சில நேரங்களில் வலி இல்லாமல், தவறான பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கும். கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்கின் எந்தவொரு அத்தியாயமும் ஒரு எச்சரிக்கை அறிகுறியாகும், ஒருபோதும் புறக்கணிக்கப்படக்கூடாது என்பதை இந்த ஆய்வு தெளிவாகக் குறிக்கிறது. விரைவான மருத்துவ மதிப்பீடு ஆரோக்கியமான பிரசவத்திற்கும் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் உயிருக்கு ஆபத்தான விளைவுகளுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கலாம்.கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்கு…
வதோதரா: குஜராத் மாநிலம் வதோதராவில் பானிபூரி கேட்டு அடம்பிடித்து நடுரோட்டில் அமர்ந்து பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊர்வலம், அரசியல் பேரணி, அவ்வப்போது பெய்யும் கனமழை காரணமாக போக்குவரத்து தடைபடுவது வாடிக்கை. ஆனால், குஜராத்தில் பெண் ஒருவர் பானிபூரி தரக்கோரி நடுரோட்டில் தர்ணா செய்த விநோத சம்பவம் நடந்தேறியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கூற்றுப்படி, ரூ.20 கொடுத்து கடைக்காரரிடம் பானிபூரி கேட்டுள்ளார். அந்தப் பெண் எதிர்பார்த்ததோ ஆறு. ஆனால், கடைக்காரர் கொடுத்ததோ நான்கு.. இதனால் ஏமாற்றம் அடைந்த அந்தப் பெண் இரண்டு பானிபூரிக்கு நீதி கேட்டு நடுரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார். இதனால் அப்பகுதி முழுவதும் வாகன நெரிசல் ஏற்பட்டதையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. விரைந்து வந்த போலீஸார் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டபோது போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கண்ணீர்மல்க முறையிட்டார். ரூ.20-க்கு ஆறு பானிபூரிகளை…
ஹாங்காங்: இரண்டாம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்த பெரிய வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, ஹாங்காங்கில் இருந்து இரவோடு இரவாக ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர். ஹாங்காங்கில் கட்டுமானத் தளம் ஒன்றில் இரண்டாம் உலகப் போர் காலத்தைச் சேர்ந்த பெரிய வெடிகுண்டின் எஞ்சிய பகுதி கண்டெடுக்கப்பட்டது. அமெரிக்காவால் தயாரிக்கப்பட்டது என கூறப்படும் நிலையில், இந்த வெடிகுண்டு கிட்டத்தட்ட ஒன்றரை மீட்டர் நீளமும் ஏறக்குறைய 450 கிலோ கிராம் எடையும் கொண்டது என்று ஹாங்காங்ஹ் காவல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய ஹாங்காங் காவல் துறை அதிகாரி ஒருவர், “வெடிகுண்டை அகற்றுவதில் ஆபத்து இருக்கிறது. இது இரண்டாம் உலகப் போர் காலத்து வெடிகுண்டு என்பதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். பாதுகாப்பு நலன் கருதி 18 குடியிருப்புக் கட்டடங்களிலிருந்து சுமார் 6,000 பேரை வெளியேற்றத் திட்டமிட்டோம். வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் தொடங்கி சனிக்கிழமை காலை 11.30 மணி வரை நீடித்தது. இந்த நடவடிக்கையால்…
தனுஷ் படத்தை இயக்க இருப்பதை உறுதி செய்திருக்கிறார் ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லப்பர் பந்து’. இதில் தினேஷ், ஹரிஷ் கல்யாண், காளி வெங்கட், ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இன்று அப்படம் வெளியாகி ஓராண்டு ஆகிறது. இதனை முன்னிட்டு தனது அடுத்த படத்தினை அறிவித்துள்ளார் தமிழரசன். அடுத்த படத்தில் தனுஷை இயக்க இருப்பதை உறுதி செய்திருக்கிறார். முன்னதாக, அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார் என்பது செய்தியாக வெளியானாலும், உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. ’லப்பர் பந்து’ ஓராண்டு ஆனது குறித்தும், தனுஷ் படம் குறித்து தமிழரசன் பச்சமுத்து வெளியிட்டுள்ள பதிவில், “நம்மளால சினிமாவுக்கு போக முடியுமா? போனா உதவி இயக்குநர் ஆக முடியுமா? உதவி இயக்குநர் ஆனாலும் நம்மளால கத பண்ண முடியுமா? பண்ண கதைய நடிகர்கள் கிட்ட சொல்லி ஒகே பண்ண முடியுமா? நடிகர்கள் ஓகே…
சென்னை: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் வரும் 26-ம் தேதி வரை ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளையும் (செப்.21), நாளை மறுதினமும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23, 26-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா…
68 வது கிராமி விருதுகள் சில மாதங்கள் தொலைவில் உள்ளன, ஆனால் வரவிருக்கும் விழாவைச் சுற்றியுள்ள சலசலப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது – எந்தவொரு உத்தியோகபூர்வ பரிந்துரைகளும் அறிவிக்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே. இருப்பினும், பிளாக்பிங்கின் ரோஸ் தனது சர்ச்சைக்குரிய FYC பிரச்சாரத்தைப் பற்றி ஆய்வுக்கு உள்ளானதால், எல்லா சலசலப்புகளும் வரவேற்கப்படவில்லை. பிளாக்பிங்கின் ரோஸ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கடன்: இன்ஸ்டாகிராம் | ரோஸஸ்_அரே_ரோசிFYC பிரச்சாரங்கள் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கின்றனஒவ்வொரு ஆண்டும், கலைஞர்கள் தங்கள் படைப்புகளை கிராமி பரிசீலிப்புக்காக சமர்ப்பிக்கிறார்கள். நவம்பர் வரை உத்தியோகபூர்வ பரிந்துரைகள் அறிவிக்கப்படாது என்றாலும், சமர்ப்பிக்கும் காலம் மூடப்பட்டுள்ளது, மேலும் சாத்தியமான போட்டியாளர்களின் குறிப்புகள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. அவற்றில், பிளாக்பிங்கின் ரோஸ் கிராமி வாக்காளர்களுக்கு உங்கள் பரிசீலனைக்கு (FYC) தொகுப்புகளுக்கு அனுப்புவதன் மூலம் தலைப்புச் செய்திகளை வெளியிட்டுள்ளார். புருனோ செவ்வாய் கிரகத்துடன் பிளாக்பிங்க் ரோஸ். கடன்: இன்ஸ்டாகிராம் | ரோஸஸ்_அரே_ரோசிரெக்கார்டிங் அகாடமி இந்த பெட்டிகளில் சமர்ப்பிக்கப்பட்ட இசையின் பாராட்டு நகல்களை…
மும்பை: ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 சீரிஸ், புத்தம் புதிய ஐபோன் ஏர், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11, ஏர்போட்ஸ் ப்ரோ (3வது தலைமுறை) ஆகிய அனைத்தும் கடந்த 9-ம் தேதி அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய ஐபோன்கள் உள்ளிட்ட சாதனங்கள் தற்போது ஆப்பிள் இந்தியா வலைதளம், ஆப்பிள் ஸ்டோர், முன்னணி ஆன்லைன் தளங்கள், நாட்டில் உள்ள பிற ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களிடம் இருந்து வாங்குவதற்குக் கிடைக்கின்றன. மேலும், அவை டெல்லி, மும்பை, புனே மற்றும் பெங்களூருவில் அமைந்துள்ள ஆப்பிளின் அதிகாரப்பூர்வ கடைகள் வழியாகவும் கிடைக்கின்றன. இந்திய ரூபாய் மதிப்பில் ஐபோன் 17 மாடல்களின் விலை ரூ.89,000 முதல் தொடங்கும் என தகவல் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நேற்று காலை விற்பனைக்கு வந்த ஐபோன் 17 சீரிஸை வாங்க ஆப்பிள் ஸ்டோர் நிறுவனங்கள் முன்பு நள்ளிரவு முதலே வாடிக்கையாளர்கள் குவிந்துவிட்டனர். மும்பையிலுள்ள பிகேசி ஆப்பிள் ஐபோன் ஸ்டோர் முன்பு…
கீவ்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை அடுத்த வாரத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தின்போது சந்திக்க உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்து வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அந்நாட்டுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளார். நேற்று ஒரே இரவில் உக்ரைன் மீது 40 ஏவுகணைகள் மற்றும் 580 ட்ரோன்களை ரஷ்யா ஏவியதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் இந்த சரமாரியான தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபருடான சந்திப்பின்போது, உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களை வலியுறுத்த இருப்பதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். மேலும், ரஷ்யாவைக் கட்டுப்படுத்த அந்த நாட்டுக்கு எதிராக கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க வலியுறுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “ரஷ்ய அதிபர்…
சென்னை: சென்னைக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கூடவே, குடிநீர் தொடர்பான பொதுமக்களின் குறைகள் மற்றும் புகார்களை விரைவாக நிவர்த்தி செய்ய “சென்னை குடிநீர் செயலி” என்ற புதிய செல்போன் செயலியினை மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார். இச்செயலியை சென்னை குடிநீர் வாரியம் வடிவமைத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, நாளொன்றுக்கு கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் தேவைக்கு ஏற்பவும், பெருகிவரும் சென்னை மாநகரின் மக்கள் தொகையை கருத்தில் கொண்டும், ஏரியின் நீர் இருப்பை கருத்தில் கொண்டும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஏற்கனவே தினசரி வழங்கி வந்த 265 மில்லியன் லிட்டர் குடிநீருடன், கூடுதலாக இத்திட்டத்தின் மூலம் 265 மில்லியன் லிட்டர் குடிநீர் தினசரி…