Author: admin

பெங்களூரு: சென்​னை​யில் அண்​மை​யில் நடை​பெற்ற ‘தக் லைஃப்’ திரைப்பட நிகழ்​வில் நடிகரும் மக்​கள் நீதி மய்​யத்​தின் தலை​வரு​மான கமல்​ஹாசன் பேசுகை​யில், “தமிழில் இருந்து பிறந்தது தான் கன்​னடம்​” என குறிப்​பிட்​டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்ள கன்னட அமைப்​பினர், அவருக்கு எதி​ராக பெங்​களூரு போலீ​ஸில் புகார் அளித்​தனர். கர்நாடக முதல்​வர் சித்​த​ராமை​யா, பாஜக மாநில தலை​வர் விஜயேந்​திரா உள்​ளிட்டோரும் எதிர்ப்பு தெரி​வித்​தனர். இந்​நிலை​யில் கன்னட கலை மற்​றும் கலாச்​சா​ரத் துறை அமைச்​சர் சிவ​ராஜ் தங்​கடகி கூறும்போது, “கமல்​ஹாசனின் கருத்​தால் கன்னட மக்​களின் மனம் புண்​பட்​டுள்​ளது. கன்னட மொழிக்கு எதி​ரான சிறு கருத்​தை​யும் எங்​களால் ஏற்க முடி​யாது. கமல்​ஹாசன் கட்​டா​யம் மன்​னிப்பு கேட்க வேண்​டும். இல்​லா​விடில் அவர் நடித்த அனைத்து திரைப்​படங்​களை​யும் கர்​நாட​கா​வில் திரை​யிட அனு​ம​திக்க மாட்​டோம்​” என்​றார். கர்​நாடக திரைப்பட வர்த்தக சபை தலை​வர் நரசிம்​மலு கூறும்போது, ‘‘கமல்​ஹாசன் கன்னட மக்​களிடம் மன்​னிப்பு கேட்​கா​விடில் அவரது படங்​களுக்கு கர்​நாட​கா​வில் தடை விதிக்​கப்​படும்​”…

Read More

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் கிராண்ட்​ஸ்​லாம் டென்​னிஸ் போட்​டி​யின் மகளிர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்​றில் உக்​ரைன் வீராங்​கனை எலீனா ஸ்விட்​டோலினா வெற்றி பெற்று அடுத்த சுற்​றுக்கு முன்​னேறி​னார். பிரெஞ்சு ஓபன் கிராண்ட்​ஸ்​லாம் டென்​னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடை​பெற்று வரு​கிறது. நேற்று நடை​பெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் எலீனா ஸ்விட்​டோலி​னா​வும், இத்​தாலி​யின் ஜாஸ்​மின் பவுலினி​யும் மோதினர். இதில் எலீனா 4-6, 7-6 (6), 6-1 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று அடுத்த சுற்​றுக்கு முன்​னேறி​னார். ஆடவர் பிரிவு 4-வது சுற்​றில் அமெரிக்க வீரர் டாமி பால் 6-3, 6-3, 6-3 என்ற செட் கணக்​கில் ஆஸ்​திரேலி​யா​வின் அலெக்ஸி பாப்​பிரின்னை தோற்கடித்தார். போபண்ணா ஜோடி தோல்வி: ஆடவர் இரட்​டையர் பிரிவு 3-வது சுற்​றில் இந்​தி​யா​வின் ரோஹன் போபண்​ணா, செக் குடியரசின் ஆதம் பாவ்​லாசக் ஜோடி 2-6, 6-7(5) என்ற செட் கணக்​கில் ஸ்பெ​யினின் மார்​செல் கிரானோலர்​ஸ், அர்​ஜெண்​டி​னா​வின்​ ஹொராசி​யோ ஜெபலோஸ்​…

Read More

“உழைத்தவரும், உழைத்து களைத்தவரும் என்றும் இளைத்தவரும் ஏய்த்து பிழைப்பவரும், படிப்பவரும், கொள்ளை அடிப்பவரும், இங்கு குடிப்பவரும், அன்பில் துடிப்பவரும் எவர் எவராகினும் அவர்க்கொரு துயரம் உயர் இசை கேட்டில் துயர் மனமுருகும், இன்னிசை என்னிசையென” எவர்க்கும் பொதுவென்று அள்ளிக் கொடுப்பவர் இசைஞானி இளையராஜா. அதனால்தான் அதிசயங்களை நிகழ்த்தியப் பிறகும் தொடரும் அவரது தீரா இசை தேடல் இப்போது வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. திரை இசைத் துறையில் பின்னணி பாடகராக விரும்புகின்ற பலருக்கும் இளையராஜாவின் இசையில் ஒரு பாடலையாவது பாடிவிட வேண்டும் என்ற ஆவல் எப்போதும் இருக்கும். விவரிக்க இயலாத இசை ஆற்றலைப் பெற்ற இளையராஜா, பாடலுக்கான இசைக் குறிப்புகள் முழுவதையும் எழுதிய பிறகுதான், அந்தப் பாடலை யார் பாடப் போகிறார்கள் என முடிவு செய்வதாக கூறுகிறார். பிரபலமான தென்னிந்திய பாடகர்கள் துவங்கி, பாலிவுட்டின் பெருமைமிகு குரல்கள் வரை இளையராஜாவின் இசை சுவைத்தவையே. அந்த வகையில், இளையராஜா தன்னுடைய இசையில் பல…

Read More

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள சட்டைநாதர் கோயிலில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை கவுதமி நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குறித்து விமர்சிக்க ஆதவ் அர்ஜுனாவுக்கு தகுதி இல்லை. இத்தனை ஆண்டுகளாக அரசியலில் சாதித்து, படிப்படியாக கட்சியை ஒருங்கிணைத்து, 4 ஆண்டுகாலம் முதல்வராக சிறப்பாக செயல்பட்ட பழனிசாமி குறித்து ஆதவ் அர்ஜுனா பேசுவது கண்டிக்கத்தக்கது. மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவேன். மக்களுக்கான நேர்மையான ஆட்சி நிச்சயம் அமையும் என்றார். அதிமுக கூட்டணியில் தவெக இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, போகப்போக தெரியும். சரியான நேரத்தில் சரியான முடிவை பழனிசாமி அறிவிப்பார் என தெரிவித்தார்.

Read More

எங்களுக்கு போதுமான நேரம் இல்லை என்று நாங்கள் அடிக்கடி கூறுகிறோம் – ஆனால் பெரும்பாலும், இது ஒரு நாளில் மணிநேரங்களைப் பற்றியது அல்ல. நாங்கள் அவற்றை எவ்வாறு செலவிடுகிறோம் என்பது பற்றியது. நம்மில் பலர் எங்கள் காலையை நிரம்பிய செய்ய வேண்டிய பட்டியல்களுடன் தொடங்குகிறோம், எல்லா நேரங்களும் எங்கு சென்றன என்று யோசித்து நாள் முடிக்க மட்டுமே.நாங்கள் போதுமானதாக இல்லை என்பது பிரச்சினை அல்ல. ஏதேனும் இருந்தால், நாங்கள் எப்போதும் ஏதாவது செய்கிறோம் – செய்திகளுக்கு பதிலளிப்பது, பணிகளுக்கு இடையில் மாறுவது, ஒழுங்கீனத்தைத் துடைப்பது அல்லது பொறுப்புகளை ஏமாற்றுதல். ஆனால் பெரும்பாலும், நம் கவனத்திற்கு தகுதியானதை வேண்டுமென்றே தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக வினைபுரியும் சுழற்சியில் நாங்கள் சிக்கிக்கொண்டிருக்கிறோம்.பிஸியாக இருக்க ஒரு நிலையான அழுத்தம் உள்ளது, இது உண்மையான முன்னேற்றத்துடன் செயல்பாட்டை குழப்புவதை எளிதாக்குகிறது. முடிவு? நிறைய இயக்கம், ஆனால் அதிக அர்த்தம் இல்லை.நல்ல செய்தி என்னவென்றால், உங்கள் நேரத்தை எண்ணுவதற்கு ஒவ்வொரு நிமிடமும்…

Read More

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டிய காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூர், சல்மான் குர்ஷித் வரிசையில் தற்போது மணீஷ் திவாரியும் இணைந்துள்ளார். இது, மத்திய அரசை ஏற்கெனவே விமர்சித்து வரும் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கடுமையான நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் வகையில், அனைத்து கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்து பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இந்திய சமூகத்தினரிடையே பேசியதாவது: பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தவில்லை என்றால் இதைவிட மிகவும் ஆக்ரோஷமான பதிலடி இந்தியாவிலிருந்து கொடுக்கப்படும். பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலை எத்தியோப்பியா கண்டித்துள்ளதுடன் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியா எடுத்துள்ள சுய பாதுகாப்பு நடவடிக்கையை எத்தியோப்பியா மிகவும் பாராட்டியுள்ளது. எத்தியோப்பிய மக்களுடன் எங்களுக்குள்ள உறவு வலுவாகவும்…

Read More

மியூனிச்: யுஇஎஃப்ஏ சாம்​பியன்ஸ் லீக் கால்​பந்​துப் போட்​டி​யில் பிஎஸ்ஜி அணி கோப்​பையைக் கைப்​பற்​றியது. ஐரோப்​பா​வில் நடை​பெறும் மிகப்​பெரிய கால்​பந்து போட்​டி​யான சாம்​பியன்ஸ் லீக் போட்​டி​யில் 36 அணி​கள் மோதின. இதில் இறு​திப் போட்​டிக்​கு, பிஎஸ்ஜி அணி​யும் இன்​டர் மிலன் அணி​யும் தகுதி பெற்​றன. இதையடுத்து நேற்று முன்​தினம் இரவு ஜெர்​மனி​யின் மியூனிச் நகரில் நடை​பெற்ற இறுதி ஆட்​டத்​தில் இரு அணி​களும் மோதின. இதில் பிஎஸ்ஜி அணி 5-0 என்ற கோல் கணக்​கில் இன்​டர் மிலன் அணியை வீழ்த்தி கோப்​பையைக் கைப்​பற்​றியது. பிஎஸ்ஜி அணிக்​காக டிசையர் டவ் 20, 63-வது நிமிடங்​களில் 2 கோல்​களும், அச்​ரவ் ஹக்​கிமி 12-வது நிமிடத்​தில் ஒரு கோலும், கிவிச்சா வரட்​ஸ்​கீலியா 73-வது நிமிடத்​தில் ஒரு கோலும், சென்னி மயுலு 86-வது நிமிடத்​தில் ஒரு கோலும் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்​தனர்.

Read More

தாகா: வங்கதேசம் வெளியிட்டுள்ள புதிய கரன்சி நோட்டுகளில் அந்நாட்டின் தேசத் தந்தை முஜிபுர் ரகுமான் படம் நீக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் வழக்கமாக அந்நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த தேசத் தந்தை ஷேக் முஜிபுர் ரகுமான் படம் இடம் பெற்றிருக்கும். இவரது மகள் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிராக கடந்தாண்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். வங்கதேச சுதந்திரத்தின் போது உயிரிழந்த ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு மீண்டும் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டதை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் தீவிரம் அடைந்ததால், அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். தற்போது அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் ஆட்சி நடைபெறுகிறது. வங்கதேசம் 3 புதிய ரூபாய் நோட்டுகளை நேற்று வெளியிட்டது. அதில் முஜிபுர் ரகுமான் படம் இடம்பெறவில்லை. இது குறித்து வங்கதேச வங்கியின் செய்தி தொடர்பாளர் ஆரிப் உசைன் கான் கூறுகையில், ‘‘ புதிய…

Read More

சிங்கப்பூரில் நட்சத்திர விடுதி ஒன்றில் பேண்ட் பாடகராக இருக்கும் சக்தி (முகேன் ராவ்), இந்தியா வரும்போது, பழமையான பெட்டியை வாங்கிக்கொண்டு திரும்புகிறார். வீட்டில் உள்ள பலரும் அது என்ன பெட்டி எனக் கேட்க, அதற்குள் ‘ஜின்’ என்கிற அதிர்ஷ்டப் பேய் அடைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். முதலில் மிரண்டாலும் பின்னர், பிரியா (பவ்யா) என்கிற பெண்ணை, சக்தி திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்ததால் ஜின்னை ஏற்கிறார்கள். ஆனால், பிரியாவை ஒரு கும்பல் கொலை செய்யும் நோக்கத்தில் கொடூரமாகத் தாக்கிவிட்டுப் போக, அதன் பின் ஜின் மீது சந்தேகம் வந்து அது இருக்கும் பெட்டியைத் தூக்கி வெளியே வீசுகிறார் சக்தி. பெட்டிக்குள் இருந்த ஜின் வெளியே வந்ததா, பிரியாவை கொலை செய்ய முயன்றவர்கள் யார் எனக் கதை செல்கிறது. போரில் வென்ற ஜின் என்கிற அதிர்ஷ்டப் பேயை மலேசிய அரசர் ஒருவர் நூற்றாண்டுகளுக்கு முன் வளர்த்தார். அதை எதிரிகள் பெட்டிக்குள் ஏன் அடைத்தார்கள் என்று ஏஐ-யில் உருவாக்கப்பட்ட…

Read More

சென்னை: தமிழகத்தில் 2026-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக இடம்பெறும் கூட்டணி ஆட்சி அமையும் என பாமக தலைவர் அன்புமணி நம்பிக்கை தெரிவித்தார். சென்னை உத்தண்டியில் பாமகவின் 8 மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் அன்புமணி தலைமையில் நேற்றும் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது: சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது முக்கியமில்லை வெற்றி பெற வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளிலும் கணிசமாக வெற்றி பெற வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை செயல்படுத்த இருக்கிறோம். சாதிவாரி கணக்கெடுப்பு செய்ய முதல்வருக்கு விருப்பமில்லை. தமிழகத்தில் சமூகநீதி என்றால் என்னவென தெரியாத தமிழக அரசு இருக்கிறது. ஆனால், சமூகநீதியில் பிஎச்டி படித்திருக்கிறோம். சமூகநீதி என்றால் பாமக நிறுவனர் ராமதாஸ்தான். அவர் கொள்கைகளை கடைப்பிடித்து முன்னேறுவோம். மற்றவர்களை ஆட்சியில் அமரவைக்க பாமகவை தொடங்கவில்லை. தமிழகம் முழுவதும் உரிமை மீட்பு பயணம் விரைவில் செய்யப்படும். வரும் 2026-ல் பாமக இடம்பெறும் கூட்டணி ஆட்சி அமையும். அதன்பிறகு தமிழகத்தில் பாமக…

Read More