Author: admin

ஐபிஎல் 2025 பிளே ஆப் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை வெளியேற்றியது பஞ்சாப் கிங்ஸ் இதன் மூலம் ஐபிஎல் இறுதிப்போட்டியில் முதல் முறையாக பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. இதில் எந்த அணி கோப்பையை வென்றாலும் அந்த அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றும் அணியாக இருப்பதும் இந்த ஐபிஎல் தொடரில் விசேடமாகும். இதன் மூலம் ஸ்ரேயஸ் அய்யர் 3-வது அணியை ஐபிஎல் இறுதிப்போட்டிக்குத் தன் கேப்டன்சியினால் அழைத்துச் சென்றுள்ளார். அய்யர் 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 87 நாட் அவுட் என்று மும்பை இந்தியன்ஸுக்கு இறுதி ஆப்பு வைத்து இறுக்கினார். ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸின் 200 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்டிச் சாதித்தது பஞ்சாப் கிங்ஸ். இந்தப் போட்டிக்கு முன்னதாக நாக் அவுட் சுற்றுக்களில் மும்பை இந்தியன்ஸ் 18-7 என்ற வெற்றி தோல்வி விகிதத்தை வைத்திருக்கும் பவர்ஃபுல் அணி. அதுவும் கோப்பை வெற்றியாளர்…

Read More

சென்னை: “ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர, அவசரமாக இந்த வழக்கை முடிக்க திமுக அரசு முனைந்தது ஏன்? SIRஐ காப்பாற்றியது யார் ? இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது.” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் இன்று காலை தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அதில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை எந்தவித தண்டனைக் குறைப்புமின்றி ஞானசேகரன் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தண்டனை விவரம் வெளியான சில நிமிடங்களில் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர, அவசரமாக இந்த வழக்கை முடிக்க திமுக அரசு முனைந்தது ஏன்? SIRஐ காப்பாற்றியது யார் ?…

Read More

தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் கஜா புயல் சேதம், காண்டாமிருக வண்டு தாக்குதல், வெள்ளை ஈ தாக்குதலைத் தொடர்ந்து 68 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘தஞ்சாவூர் வாடல் நோய்’ தாக்குதலால் தென்னை மரங்கள் சேதமடைந்து வருகின்றன. இதனால் தென்னை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். தஞ்சாவூரில் நெல் சாகுபடிக்கு நிகராக, தென்னை சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகளில் கிழக்கு கடற்கரை காற்று வீசுவதால் தென்னை மர வளர்ச்சிக் கும், மகசூலுக்கும் பெரிதும் உதவி வருவதால், பெரும்பாலான விவசாயிகள் தென்னை சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய வட்டங்களில் சுமார் 50 லட்சத்துக்கும் அதிகமான தென்னை மரங்கள் உள்ளன. இந்த நிலையில் தற்போது தென்னை மரங்களில் ‘தஞ்சாவூர் வாடல் நோய்’ எனப்படும் ஒருவித வைரஸ் நோய் பரவி வருவதால் தென்னை மரங்கள் காய்ந்து, கருகி பட்டுப் போவதுடன், அடுத்தடுத்த மரங்களுக் கும் பரவும் அபாயம் இருப்பதால் தென்னை…

Read More

வளர்ந்து வரும் ஆராய்ச்சி உடல் பருமனுக்கும் மன நல்வாழ்வுக்கும் இடையிலான சாத்தியமான தொடர்பைக் குறிக்கிறது, குறிப்பாக கவலை மற்றும் அறிவாற்றல் செயல்பாடு. எலிகள் குறித்த ஒரு ஆய்வில், அதிக கொழுப்புள்ள உணவு கவலை போன்ற நடத்தைகள் மற்றும் ஹைபோதாலமஸில் மூளை சமிக்ஞையை மாற்றியமைக்க வழிவகுத்தது என்று தெரியவந்துள்ளது. இந்த பருமனான எலிகள் அவற்றின் மெலிந்த சகாக்களுடன் ஒப்பிடும்போது குடல் பாக்டீரியாக்களில் தனித்துவமான வேறுபாடுகளை வெளிப்படுத்தின. அந்த கூடுதல் பவுண்டுகள், பாதிப்பில்லாததாகத் தோன்றலாம், இது உங்கள் மனதுடன் குழப்பமடையக்கூடும். நீங்கள் நினைப்பது அல்ல. உடல் பருமன் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதை விட அதிகமாக செய்யக்கூடும், இது கவலை மற்றும் அறிவாற்றல் செயலிழப்புக்கும் பங்களிக்கக்கூடும். ஒரு புதிய ஆய்வில் உடல் பருமன் கவலை மற்றும் அறிவாற்றல் குறைபாட்டிற்கு பங்களிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளதுஜார்ஜியா மாநில பல்கலைக்கழகத்தின் டி.எச்.டி., தேசீரி வாண்டர்ஸ் தலைமையிலான ஒரு ஆய்வு, உணவு தூண்டப்பட்ட உடல் பருமன் நடத்தை மற்றும் மூளை…

Read More

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு சம்பவத்தை பாஜக, அதிமுக உள்ளிட்ட சில அமைப்புகள் அரசியலாக்கி ஆதாயம் தேடும் செயலில் ஈடுபட்டன என இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பயின்று வந்த மாணவி, கடந்த 2024 டிசம்பர் 23 ஆம் தேதி மாலையில் அவரது சக மாணவருடன் பேசிக் கொண்டிருந்த போது, மர்ம நபரால் கடத்தி, பாலியல் வன் தாக்குதலுக்குள்ளானார். பாதிக்கப்பட்ட மாணவி அருகில் உள்ள கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் டிசம்பர் 24 ஆம் தேதி புகார் செய்தார். புகார் மீது காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுத்து டிசம்பர் 25 ஆம் தேதி குற்றவாளி குணசேகரன் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தை பாஜக, அதிமுக உள்ளிட்ட சில அமைப்புகள் அரசியலாக்கி ஆதாயம் தேடும் செயலில் ஈடுபட்டன. வழக்கை மத்திய புலானய்வுத் துறைக்கு மாற்ற…

Read More

குழந்தைகளுக்கு மிகவும் மென்மையாக இருக்கிறது, உங்கள் வார்த்தைகள் கூட அவர்களின் நல்வாழ்வை பாதிக்கும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடனான தகவல்தொடர்புகளை ஆராய வேண்டும், குறிப்பாக அவர்கள் திருத்த முயற்சிக்கும்போது. ஆக்கபூர்வமான திருத்தம் மற்றும் இழிவான நடத்தை ஆகியவற்றை எவ்வாறு வேறுபடுத்துவது என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். திட்டுவது அல்லது இழிவுபடுத்துவது உங்கள் குழந்தையின் உளவியல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கான அறிகுறிகள் இங்கே:1. லேபிளிங்சஃபாரி குழந்தையின் தலைவர் ஜிதேந்திர கர்சனின் கூற்றுப்படி, “‘கெட்டது’ அல்லது ‘குறும்பு’ போன்ற சொற்களைப் பயன்படுத்துவது குழந்தையின் அடையாளத்தை அவர்களின் செயலைக் காட்டிலும் குறிவைக்கக்கூடும். இது பெரும்பாலும் குழந்தைகளை இந்த லேபிள்களை உள்வாங்க வழிவகுக்கிறது, இதனால் இந்த பேசப்படும் பெயரடைகள் தங்கள் சொந்த அடையாளத்தின் ஒரு பகுதி என்று நம்ப வைக்கிறது. அவர்கள் தவறு செய்திருப்பதை உணர்ந்த அவர்கள், அவர்கள் தவறு என்று நம்பத் தொடங்குகிறார்கள். நிரந்தரமாக லேபிளிங் உங்கள் குழந்தையின் சுயமரியாதையை கீழே போடலாம்,…

Read More

குவஹாத்தி: அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக மாநிலத்தின் 15 மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் பேர் மழை வெள்ளத்தில் சிக்கித் தவிப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 29-ம் தேதி முதல் மழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் வெள்ள நிலைமை மோசமாக உள்ள நிலையில், மேலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அசாமில் இன்றும் வெள்ள நிலைமை மோசமாகவே உள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் நீர் மட்டம் உயர்ந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குவாஹாட்டியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பிராந்திய வானிலை ஆய்வு மையம் (RMC), அசாமின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில்…

Read More

கீவ்: முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா முன்வர வேண்டும் என்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையே இன்று அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார். நேட்டோவில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி அந்நாட்டுக்கு எதிராக ரஷ்யா, ராணுவ நடவடிக்கையை எடுக்கத் தொடங்கியது. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை நடைபெற்ற சமாதான முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை. எனினும், அமைதிக்கான தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இரு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. உக்ரைன் சார்பில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் குழுவுக்கு பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டெம் உமெரோவ் தலைமை தாங்குவார் என்று ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும் அவர், “எங்கள் சுதந்திரம், எங்கள் அரசு மற்றும் எங்கள்…

Read More

சென்னை: “பந்தல்குடி எனுமிடத்தில் என் பார்வைக்குப் படாதபடி கால்வாயைத் துணியைக் கட்டி மறைத்திருக்கிறார்கள் என்று ஊடகங்களில் செய்தி வெளியாக, அது குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனக் கருத்துகளும் பதிவான நிலையில், உடனே அதனை அகற்றச் சொன்னேன். அதுமட்டுமல்ல, அந்த இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தேன். துணி மறைப்பு கட்டி, உண்மை நிலையை உலகத் தலைவர்களின் கண்களிலிருந்து மறைக்கும் பாஜக மாடல் இதுவல்ல, இது திராவிட மாடல்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “திமுக பொதுக்குழு மதுரை மாநகரில் மற்றொரு சித்திரைத் திருவிழா போல நடந்து, கட்சி வரலாற்றில் முத்திரை பதித்திருக்கிறது. மே 31 மாலையில் மதுரை விமான நிலையத்திலிருந்து 22 கி.மீ. தூரத்துக்கான ரோடுஷோவில் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று அன்பை வெளிப்படுத்தினர். சிறுவர் -சிறுமியர், பள்ளி – கல்லூரி மாணவர்கள், பெண்கள், வயதில் மூத்தவர்கள் என எல்லா…

Read More

டெல்லியைச் சேர்ந்த உள்ளடக்க உருவாக்கியவரான சிம்ரான் ஆனந்த், ஜான்பத் சந்தையில் இருந்து 20 கிலோகிராம் கையால்-எம்பிராய்டரி பெட்ஷீட்டை ஒரு அதிர்ச்சியூட்டும் லெஹங்காவாக மாற்றினார். மற்றவர்கள் வீட்டு அலங்காரத்தை மட்டுமே பார்த்த திறனைப் பார்த்த அவர், தனது பார்வையை உயிர்ப்பிக்க உள்ளூர் தையல்காரருடன் ஒத்துழைத்தார். இந்த உயர்த்தப்பட்ட உருவாக்கம் இந்திய பாணியில் நிலைத்தன்மையை மறுவரையறை செய்கிறது, இது கற்பனையின் ஆற்றலையும் வடிவமைப்பில் வழக்கத்திற்கு மாறான பொருட்களையும் காட்டுகிறது. ஆஃப்-தி-ரேக் லெஹங்காக்கள் வசதியானவை, அழகாக கூட. ஆனால் புதிதாக ஒன்றை வடிவமைப்பதில் மறுக்கமுடியாத சிறப்பு ஒன்று உள்ளது – ஒவ்வொரு தையலும் ஒரு கதையாகும், மேலும் ஒவ்வொரு விவரமும் ஆழ்ந்த தனிப்பட்டதாக இருக்கும். பல பெண்களுக்கு, தனிப்பயன் லெஹங்காவை வடிவமைப்பது ஒரு பேஷன் கற்பனையாகும், குறிப்பாக இது எதிர்பாராத திருப்பத்தை உள்ளடக்கும் போது. டெல்லியை தளமாகக் கொண்ட உள்ளடக்க உருவாக்கியவர் சிம்ரான் ஆனந்தை உள்ளிடவும், அவர் DIY கோடூரை மிகவும் கற்பனையான முறையில் மறுவரையறை…

Read More