Author: admin

ஒடிசாவில் மாவோயிஸ்ட்களால் கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 2.5 டன் வெடிபொருட்களை பாதுகாப்பு படையினர் நேற்று கைப்பற்றினர். ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் ஜார்க்கண்ட் எல்லையை ஒட்டிய வனப் பகுதியில் பாதுகாப்பு படையினர் நேற்று மாவோயிஸ்ட்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒடிசா காவல் துறையின் சிறப்பு அதிரடிப்படை, ஜாகுவார் படை, சிஆர்பிஎப் மற்றும் மாவட்ட தன்னார்வ படை அடங்கிய கூட்டுப்படையினர் இப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2.5 டன்னுக்கும் மேற்பட்ட வெடிபொருட்களை கைப்பற்றினர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த வெடிபொருட்கள் கடந்த 27-ம் தேதி சுந்தர்கர் மாவட்டத்தின் கே.பாலங் பகுதியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டவை. கல்குவாரி ஒன்றுக்கு லாரியில் எடுத்துச் செல்லப்பட்டபோது மவோயிஸ்ட்கள் துப்பாக்கி முனையில் பறித்துச் சென்றனர். சில வெடிபொருட்களை நிலத்தில் புதைத்து வைத்திருந்தனர். மற்றவற்றை பாறைகளுக்கு அடியில் மறைத்து வைத்திருந்தனர்” என்றார்.

Read More

ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமான்டிக் திரைப்படம் ‘ஓஹோ எந்தன் பேபி’. இதை கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கியுள்ளார். நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார். இந்தப் படம் பற்றி விஷ்ணு விஷால் கூறும்போது, “இந்தக் கதையில் எல்லா அம்சங்களும் சரியாக உள்ளன. இருந்தாலும் இந்தக் கதைக்கு நான் பொருத்தமானவன் இல்லை என்பதை உணர்ந்தேன். உடனே என் தம்பி ருத்ராவை நடிக்க வைத்தேன். தயாரிப்பாளராக அவரை அறிமுகப்படுத்துவது ஸ்பெஷலான தருணம். நடிகர் சூர்யா சார் தயாரிப்பில் எப்படி கார்த்தி சாருக்கு ஆதரவு கொடுக்கிறாரோ அப்படி, இனிவரும் காலத்தில் ருத்ரா நடிக்கும் படங்களுக்கு ஆதரவு கொடுக்க இருக்கிறேன். நானும் எத்தனையோ படங்களில் நடித்துள்ளேன். இந்த அளவுக்கு ரொமான்ஸ் காட்சிகள் எனக்கு அமையவில்லை. ஆனால் என் தம்பிக்கு அமைந்திருக்கிறது” என்றார்.

Read More

சென்னை: எதிர்க்கட்சியினரை கோமாளிகள் என்று சொல்பவர்கள்தான் ஏமாளிகளாக போவார்கள் என தமிழிசை தெரிவித்தார். தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசையின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கின் தீர்ப்பு, இனி யாரும் குற்றம் இழைக்கக் கூடாது எனும் வகையில் இருக்கும் என நம்புகிறோம். ஆனால், அரக்கோணத்தில் இருந்து இன்னொரு கூக்குரல் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் பல இடங்களில் இதுபோன்ற பாலியல் குற்றங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. இருந்தாலும் அவற்றிற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. பாலியல் குற்றவழக்குகளை உயர் நீதிமன்றம் விரைவுபடுத்தியபோது, ஏதோ தங்களுடைய சாதனைகள்போல முதல்வர் பேசிக்கொண்டிருக்கிறார். அப்படி என்றால் குற்றம் நடந்தது யாருடைய சாதனை. திமுக அரசு எதில் பெருமை கொள்கிறது என்பது புரியவில்லை. தமிழகம் எதை நோக்கிச் செல்கிறது என்று புரியவில்லை. முதல்வர் நிறைவேற்றிய தீர்மானத்தில்…

Read More

எங்களைப் போன்ற ஒரு வெப்பமண்டல நாட்டிற்கு கூட ஏராளமான சூரிய ஒளியைப் பெறுகிறது, கிட்டத்தட்ட 80% மக்கள் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். “சன்ஷைன் வைட்டமின்” என்று அழைக்கப்படும் வைட்டமின் டி, கால்சியத்துடன், எலும்புகளை உருவாக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து ஆகும். உங்கள் உடலில் போதுமான வைட்டமின் டி இல்லாதபோது, ​​அது நுட்பமான ஆனால் முக்கியமான வழிகளில், குறிப்பாக உங்கள் தலைமுடி மற்றும் தோலில் காண்பிக்கப்படும். உங்களுக்கு சில வைட்டமின் டி தேவை என்பதற்கான சில அறிகுறிகள் இங்கே …முடி ஆரோக்கியம்ஆரோக்கியமான, நறுமணமுள்ள, கூந்தலுக்கு வைட்டமின் டி அவசியம். இது மயிர்க்கால்களை செயல்படுத்த உதவுகிறது, முடி வளரும் உங்கள் உச்சந்தலையில் உள்ள சிறிய சாக்குகள். வைட்டமின் டி அளவுகள் குறைவாக இருக்கும்போது, ​​மயிர்க்கால்கள் சரியாக செயல்படாது, இது முடி மெலிந்த அல்லது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.வைட்டமின் இல்லாததால் பொதுவான முடி பிரச்சினைகள் dமுடி மெலிந்தது: குறைந்த வைட்டமின் டி…

Read More

இந்தூர்: மத்​திய பிரதேச மாநிலம் இந்​தூரின் துகோகஞ்ச் பகு​தி​யைச் சேர்ந்​தவர் நந்​தினி சிப்​லங்​கர் (80). இவர் பள்​ளி​யில் பணி​யாற்றி ஓய்வு பெற்​றுள்​ளார். இவரை 2 நாட்​கள் டிஜிட்​டல் அரஸ்ட் செய்து ரூ.1.02 கோடியை மோசடி கும்​பல் பறித்​துள்​ளது. இதுகுறித்து இந்​தூர் குற்​றப் பிரிவு டிசிபி ராஜேஷ் தண்​டோ​தியா நேற்று கூறிய​தாவது: கடந்த மே 27-ம் தேதி மர்ம நபர்​கள் சிலர் நந்​தினி சிப்​லங்​கரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசி​யுள்​ளனர். அப்​போது மும்பை கொலாபா போலீஸ் என்​றும் சிபிஐ அதி​காரி​கள் என்​றும் தங்​களை அறி​முகப்​படுத்தி கொண்​டுள்​ளனர். மேலும், ஜெட் ஏர்​வேஸ் நிறு​வனர் நரேஷ் கோயலுடன் நந்​தினி பணப் பரிவர்த்​தனை வைத்​துள்​ள​தாக​வும், சட்​ட​விரோத பணப் பரிவர்த்​தனை​யில் ஈடு​பட்​டுள்​ள​தாக​வும் மர்ம நபர்​கள் கூறி​யுள்​ளனர். இதுதொடர்​பாக நந்​தினி மீது 267 எப்​ஐஆர் பதிவு செய்​யப்​பட்​டுள்​ள​தாக​வும் மிரட்டி அவரை 2 நாட்​கள் டிஜிட்​டல் அரஸ்ட் செய்​து ரூ.1.2 கோடியை பறித்துள்ளனர். தொடர்ந்து அந்த கும்​பல் மிரட்​டிய நிலை​யில்,…

Read More

அகமதாபாத்: 18-வது ஐபிஎல் கிரிக்கெட் கோப்பை இறுதிப் போட்டியில் இன்று பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. 18-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கியது. மொத்தம் நடைபெற்ற 70 லீக் போட்டிகளின் முடிவில் பெங்களூரு, பஞ்சாப், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் முதல் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. கடந்த மாதம் 29-ம் தேதி நடைபெற்ற முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு அணி, பஞ்சாப் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து 30-ம் தேதி நடைபெற்ற எலிமினேட்டர்-1 ஆட்டத்தில் பலம் வாய்ந்த குஜராத் அணியை, மும்பை அணி தோற்கடித்து தகுதிச் சுற்று-2 ஆட்டத்துக்கு முன்னேறியது. இந்நிலையில் நேற்று முன்தினம் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற தகுதிச் சுற்று-2 ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை சாய்த்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.…

Read More

உக்ரைன் ராணுவத்தின் ‘ஆபரேஷன் ஸ்பைடபர் வெப்’ மூலம் 41 ரஷ்ய போர் விமானங்கள் அழிக்கப்பட்டது தொடர்பான பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களாக இரு நாடுகளுக்கும் இடையே போர் தீவிரமடைந்திருக்கிறது. இந்த சூழலில் ரஷ்யாவின் பெலயா, ஒலன்யா, டியாகிலெவா, இவாநோயா, அமூர் ஆகிய 5 விமான படைத் தளங்கள் மீது உக்ரைன் ராணுவம் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் ட்ரோன்கள் மூலம் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இதில் ரஷ்யாவின் டியு-95, டியு-22 உட்பட 41 அதிநவீன போர் விமானங்கள் தீயில் எரிந்து நாசமாகின. இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திட்டமிட்டு ரஷ்யா மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலை வெற்றிகரமாக நடத்திய உக்ரைன் ராணுவத்தை பாராட்டுகிறேன்” என்று…

Read More

சென்னை: தமிழகத்தில் மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான தேர்தலில், தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 2 பேர் நேற்று மனுத்தாக்கல் செய்தனர். மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. ஜூன் 9-ம் தேதி வரை மனுத்தாக்கல் செய்யலாம். முதல் நாளான நேற்று தேர்தல் நடத்தும் அதிகாரி பா.சுப்பிரமணியம் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கே.ரமேஷ் ஆகியோரிடம் 2 சுயேச்சைகள் மனுத்தாக்கல் செய்தனர். அதில் ஒருவர், அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட மனுத்தாக்கல் செய்யும், சேலம், மேட்டூரைச் சேர்ந்த கு.பத்மராஜன். இது இவர் தாக்கல் செய்யும் 249-வது மனுவாகும். அதே போல், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத், மேட்சல்- மகாஜகிரியைச் சேர்ந்த கண்டே சயன்னா என்பவரும் மனுத்தாக்கல் செய்துள்ளார். இருவரும் எம்எல்ஏக்கள் முன்மொழிவை வழங்கவில்லை. மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்படும் ஒருவருக்கு 34 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஜூன் 9-ம் தேதி மனுத்தாக்கல்…

Read More

புதுடெல்லி: இந்திய விமான போக்குவரத்து துறை உலக அளவில் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (ஐஏடிஏ) இயக்குநர் (இந்தியா, நேபாளம், பூடான்) அமிதாப் கோஸ்லா கூறியதாவது: உலக அளவில் அதிக அளவிலான பயணிகளை கையாளும் விமானப் போக்குவரத்து சந்தைகளில் இந்தியா 3-ம் இடம் பிடித்துள்ளது. விமான நிலைய உள்கட்டமைப்பு வசதிகள் அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம். இந்தியாவில் வேலைவாய்ப்பு, பொருளாதார நடவடிக்கைகள், சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் விமான போக்குவரத்து துறை முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) விமானப் போக்குவரத்துத் துறையின் பங்கு 1.5% ஆக உள்ளது. இந்தத் துறை நேரடியாகவும் மறைமுகமாகவும் 77 லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்கி உள்ளது. கடந்த 2023-ல் இந்திய பொருளாதாரத்தில் இத்துறையின் பங்கு ரூ.4.57 லட்சம் கோடியாக இருந்தது. இந்த ஆண்டில் இந்தியர்கள் அதிகபட்சமாக 1.37 கோடி பேர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு…

Read More

தூக்க வங்கி என்பது பலவீனமான அறிவாற்றல் செயல்பாடு மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி போன்ற எதிர்மறையான விளைவுகளைத் தணிக்க எதிர்பார்க்கப்பட்ட தூக்கமின்மையின் காலங்களுக்கு முன் வேண்டுமென்றே கூடுதல் தூக்கத்தைக் குவிப்பதை உள்ளடக்குகிறது. இந்த செயல்திறன் மிக்க அணுகுமுறை செயல்திறனை மேம்படுத்தலாம் மற்றும் மன அழுத்தத்தை சமாளிக்கும் உடலின் திறனை பலப்படுத்தலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. நிபுணர்கள் தூக்க நேரத்தை நீட்டிக்கவும், நிலையான அட்டவணையை பராமரிக்கவும், பயனுள்ள தூக்க வங்கிக்கு நல்ல தூக்க சுகாதாரத்தை கடைப்பிடிக்கவும் பரிந்துரைக்கின்றனர். வேலை காலக்கெடு, குடும்பக் கடமைகள், சமூக கடமைகள் மற்றும் முடிவற்ற திரை நேரம் ஆகியவற்றுக்கு மத்தியில், தூக்கம் பெரும்பாலும் முதல் விபத்தாக மாறும். உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் அதன் முக்கிய பங்கு இருந்தபோதிலும், மக்கள் பின்புற பர்னரில் தூக்கத்தை வைக்க முனைகிறார்கள். விளைவுகள்? வகை 2 நீரிழிவு, எடை அதிகரிப்பு, கரோனரி இதய நோய், பக்கவாதம் மற்றும் புற்றுநோய் கூட.போதுமான தூக்கம்…

Read More