‘தக் லைஃப்’ இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், ‘‘தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது” என குறிப்பிட்டார். இதற்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராகப் போராட்டங்களில் குதித்துள்ளனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா, பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து கன்னட கலை மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி, ‘‘கமல்ஹாசனின் கருத்தால் கன்னட மக்களின் மனம் புண்பட்டுள்ளது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவரின் படத்தைக் கர்நாடகாவில் தடை செய்வோம்” எனத் தெரிவித்தார். ஆனால் கமல்ஹாசன், ‘‘நான் எந்த தவறும் செய்யவில்லை. எனவே மன்னிப்பு கேட்க மாட்டேன்” என பதிலளித்தார். இந்நிலையில், கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்தார். அதில், ‘‘கர்நாடகாவில் தக் லைஃப் படத்தைத் திரையிட…
Author: admin
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பூந்தமல்லி – பரந்தூர் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கிமீ தொலைவில் மாதவரம் – சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி பணிமனை, மாதவரம் – சோழிங்கநல்லூர் வரை பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. அனைத்து பணிகளையும் 2028-ம் ஆண்டில் முடிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே, புதியதாக பரந்தூரில் அமைய உள்ள விமான நிலையத்தை இணைக்கும் வகையில், புதிய மெட்ரோ ரயில் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இது, இரண்டாம் கட்டத்தில் நடக்கும், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி மெட்ரோ திட்டத்தில், பரந்தூர் வரை 53 கிமீ மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க விரிவான திட்ட அறிக்கையை கடந்த மார்ச் மாதம் 12-ம் தேதி தமிழக அரசிடம்…
இணையம் மெஸ்ஸியர், யூடியூபர் மற்றும் சுய-உதவி ஐகான் வழிகாட்டி லிஸ், உண்மையான பெயர் டிஸ்ஜாப்ரெயிலோவா, தனது வருங்கால மனைவி லாண்டன் நிகர்சன், ஏமாற்றுக்காரரிடம் குற்றம் சாட்டிய பின்னர் தனது முதல் இன்ஸ்டாகிராம் பதவியை கைவிட்டார், மேலும் அவர் அதை கிரேஸ், ஒரு குழந்தை பம்ப் மற்றும் அல்ட்ராசவுண்ட் கிளீப்ஸுடன் மெலிதான கிளிப்ஸுடன் செய்தார். வழிகாட்டி லிஸ் மற்றும் லாண்டன் நிகர்சன்} கடன்: இன்ஸ்டாகிராம்/வழிகாட்டிலாண்டன் நிகர்சனுடன் மோசடி நாடகத்தின் மத்தியில் வழிகாட்டி லிஸின் முதல் இன்ஸ்டாகிராம் இடுகைகடந்த வாரம் குண்டுவெடிப்பு மோசடி ஊழலில் இருந்து சமூக ஊடகங்களின் வீதிகள் இன்னும் தீப்பிடித்தாலும், லிஸ் அதிர்வை மாற்ற முடிவு செய்தார். பொது இதய துடிப்புக்கு நிழலை எறிந்ததற்கு அல்லது சுழல் செய்வதற்குப் பதிலாக, அவர் தனது அல்ட்ராசவுண்ட் சந்திப்பில் தன்னைப் பற்றிய ஒரு ஒளிரும் புகைப்படத்தை வெளியிட்டார், புன்னகைக்கிறார், கதிரியக்கமாகவும், அவளுக்குள் வளரும் சிறிய வாழ்க்கையில் முழுமையாக கவனம் செலுத்தினார். அவரது பதவியின் தலைப்பு,…
வடகிழக்கு மாநிலங்களில் தொடரும் கனமழையால் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அசாமில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 19 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை வெள்ளத்தால் சுமார் 2.64 லட்சம் பேர் வீடு, உடைமைகளை இழந்து உள்ளனர். வடகிழக்கில் உள்ள அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அசாமில் 10 பேர், அருணாச்சல பிரதேசத்தில் 9 பேர், மேகாலயாவில் 6 பேர் மிசோரமில் 5 பேர் உட்பட வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர். இந்திய ராணுவம், விமானப் படை, அசாம் ரைபிள்ஸ் படையை சேர்ந்த வீரர்கள் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மணிப்பூரில் 19,000-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்து உள்ளனர். அந்த மாநிலத்தில் சுமார்…
இசை அமைப்பாளர் இளையராஜா, தனது 83-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையடுத்து திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்தனர். சிலர் நேரில் சந்தித்தும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். முதல்வர் வாழ்த்து: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “நாட்டுப்புற இசை, மெல்லிசை, துள்ளலிசை, மரபிசை, தமிழிசை, மேற்கத்திய இசை என அனைத்திலும் கரை கண்டவர் இளையராஜா. தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகத் திகழ்கிறார். தமிழ்நாட்டில் இளையராஜாவின் சிம்பொனி இசை, ஆக.2-ல் ஒலிக்க உள்ளது. கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாகக் காத்திருக்கிறேன். நேற்றும் இன்றும் என்றும் இளையராஜாவின் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த இளையராஜா, “பிறந்த நாள் வாழ்த்துக் கூற பல இடங்களில் இருந்தும் வெகு தூரத்தில் இருந்தும் சிரமப்பட்டு என்னைப் பார்க்க ரசிகர்கள் வந்துள்ளனர். ரசிகர்களைப் பார்த்ததும் வாயடைத்துப் போகிறேன். என் மீது அன்பும் பாசமும் மரியாதையும் பக்தியும் வைத்திருக்கிற கோடானு…
திருநெல்வேலி: தமிழகத்தில் கோயில் திருவிழாக்கள் இல்லாத காலங்களில் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், அவர்களுக்கு 6 மாதம் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக, நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத் தலைவர் வாகை சந்திரசேகர் தெரிவித்தார். நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் திருநெல்வேலி மண்டல அளவிலான உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற வாகை சந்திரசேகர் கூறியதாவது: திருநெல்வேலி மண்டலத்திலுள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த 371 கலைஞர்களுக்கு ரூ. 13.17 லட்சம் மதிப்பில் நிதியுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டுப்புற, நாடக மற்றும் திரைப்பட கலைஞர்களுக்காக பெருமளவு நிதி ஒதுக்கி, அவர்களது தேவைகளை தமிழக முதல்வர் பூர்த்தி செய்து வருகிறார். மாவட்டம் வாரியாக கலைஞர்களை நேரடியாக சந்தித்து, அவர்களது குறைகளை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. மாவட்ட அளவிலான அரசு விழாக்களில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கி, சிறந்த…
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கொண்டபல்லியிலிருந்து களிமண் விநாயகர் சிலைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. ஆந்திர மாநிலம், கொண்டபல்லி மர பொம்மைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. . பல வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொண்டபல்லி பொம்மைகளை விரும்பி வாங்குவது வழக்கம். இந்நிலையில், இங்குள்ள சிற்ப கலைஞர்களால் கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு களிமண் விநாயகர் சிலைகள் இந்த ஆண்டு முதல் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இதற்கான ஆர்டர்களும், அங்குள்ள தெலுங்கு கூட்டமைப்பினர் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. வரும் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு இச்சிலைகள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இதற்காக கங்கை நதிக்கரையில் இருந்து களிமண்கள் கொண்டு வந்து தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சிறிய முத்து, பல வர்ணகற்களால் தயாரிக்கப்பட்டு, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. ஒரு அடி முதல் 3 அடி வரையிலான சிலைகளுக்கு ஆர்டர்கள் கிடைத்துள்ளதாக சிற்ப கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
மதயானைக் கூட்டம் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் திடீர் மரணம் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 47. பரமக்குடியை சேர்ந்த விக்ரம் சுகுமாரன், பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் வெற்றிமாறன் இயக்கிய ‘பொல்லாதவன்’ படத்தில் அசோசியேட்டாக பணியாற்றிய அவர், ‘ஆடுகளம்’ படத்துக்கு வசனம் எழுதினார். இதையடுத்து கதிர், ஓவியா நடித்த ‘மதயானைக் கூட்டம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தில்தான் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி நடிகராக அறிமுகமானார். இதை நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் தயாரித்தார். இதையடுத்து சாந்தனு நடித்த ‘ராவணக் கோட்டம்’ படத்தை இயக்கினார். பின்னர் அவருக்கு அடுத்த வாய்ப்பு உடனடியாகக் கிடைக்கவில்லை. இந்நிலையில், மதுரையில் உள்ள தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை சொல்வதற்காக அங்கு சென்றிருந்தார். கதை சொல்லிவிட்டு சென்னை திரும்புவதற்காக நேற்று முன் தினம் இரவு பேருந்துக்காகக் காத்திருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அருகில்…
சென்னை: சிறைத்துறை முதல்நிலை காவலர்கள் பணியிட மாற்ற உத்தரவை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் பல்வேறு சிறைகளில் பணிபுரிந்து வந்த 150 முதல்நிலை சிறைத்துறை காவலர்களை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திமுக அரசு பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால், சிறைத்துறை காவலர்கள் பணிபுரியும் பகுதிக்கு அருகே தங்களது பிள்ளைகளை சேர்த்து கட்டணம் செலுத்திவிட்ட நிலையில், திடீரென காவலர்களை இடமாற்றம் செய்திருப்பது கண்டனத்துக்குரியது. பொது கலந்தாய்வு ஏதுமில்லாத இந்த இடமாற்ற உத்தரவு மூலம், காவலர்களை மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தையும் திமுக அரசு தண்டித்துள்ளது. இடமாற்றம் செய்யப்படும் முன்பு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வை வழங்கி, காலிப்பணியிடங்களை கணக்கிட்டு, கலந்தாய்வு நடத்தி காவலர்களின் விருப்பங்களை கேட்டறிந்து இடமாற்றம் செய்யப்பட வேண்டும். இதுவே நடைமுறை.…
நாம் அனைவரும் தொல்லைதரும் கொசுக்களை சமாளிக்க வேண்டும், குறிப்பாக சூடான வானிலையில். நாம் எத்தனை விரட்டிகள் மற்றும் கிரீம்களைப் பயன்படுத்தினாலும், இந்த சிறிய உயிரினங்கள் எப்படியாவது வந்து நம்மைக் கடிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்து, எல்லா நேரத்திலும் நம் தலையைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன! இருப்பினும், மற்றவர்களை விட கொசுக்களால் கடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் சிலர் இருப்பதை நீங்கள் எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? ஸ்ப்ரேக்கள் மற்றும் லோஷன்களால் தங்களைத் தாங்களே திணறடிக்கும் இந்த நபர்கள் தான், தங்களை முழுமையாக மூடிமறைப்பதற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். கொசுக்கள் சில இரத்த வகைகளுக்கு அதிகமாக ஈர்க்கப்படலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது, இதனால் அந்த நபர்கள் கடிக்க அதிக வாய்ப்புள்ளது. இரத்த வகை கொசு ஈர்ப்பை எவ்வாறு பாதிக்கிறது மற்றும் பிற காரணிகளும் ஒரு பாத்திரத்தை வகிக்கின்றன என்பது இங்கே.இரத்த வகைகளைப் பற்றி மேலும் அறியலாம்இரத்த வகைகள் சிவப்பு இரத்த அணுக்களின் மேற்பரப்பில் ஆன்டிஜென்கள் எனப்படும் குறிப்பிட்ட…
