அகமதாபாத்: முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலியின் மிகப் பெரிய ரசிகன் நான் என பிரிட்டன் நாட்டின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார். அதோடு நடப்பு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணி பட்டம் வெல்ல வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டியை நேரில் காண அவர் அகமதாபாத் வந்துள்ளார். மைதானத்தில் இருந்தபடி ஆர்சிபி அணிக்கு அவர் உற்சாகம் கொடுப்பார். “லாஸ் ஏஞ்சலஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டை இடம்பெற செய்ததில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பிசிசிஐ) முக்கிய பங்கு உள்ளது. ஐபிஎல் கிரிக்கெட்டை மாற்றம் காண செய்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் இதில் விளையாட வேண்டும் என விரும்புகின்றனர். மகளிரையும் இதில் ஈடுபட செய்யும் வகையில் மகளிர் பிரீமியர் லீக் தொடர் நடத்தப்படுகிறது. அது வரவேற்கத்தக்கது. நான் விராட் கோலியின் மிகப் பெரிய…
Author: admin
வாணியம்பாடி: வாணியம்பாடியில் தனியார் பல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட பல் மருத்துவமனைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலையில் அறிவரசன் என்பவர் பல் மருத்துவமனையை நடத்தி வந்தார். இந்த மருத்துவமனையில் கடந்த 2023-ம் ஆண்டு பல் வலி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வாணியம்பாடியைச் சேர்ந்த 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் அடுத்த 6 மாதங்களில் ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதில், கடைசியாக உயிரிழந்த வாணியம்பாடியைச் சேர்ந்த இந்திராணி என்பவரின் மகன் ஸ்ரீராம்குமார் என்பவர் தனது தாயார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், தனியார் பல் மருத்துவமனையில் தன் தாயாருடன் சிகிச்சை பெற்று வந்த 8 பேரும் உயிரிழந்ததால் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை, காவல் துறையினருக்கு புகார் அளித்தார். ஆனால், அந்த புகார் மீது யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், தமிழக…
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வாணியம்பாடி ஆட்டு சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது வியாபாரிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஜூன் 7-ம் தேதி பக்ரீத் பண்டிகையை கொண்டாட இஸ்லாமியர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம் பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமைகளில் ஆட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். வாரந்தோறும் நடைபெறும் ஆட்டு சந்தையில் வாணியம்பாடி மட்டும் அல்லாமல் மாவட்டத்தின் பிற பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான ஆட்டு வியாபாரிகள் தங்களது வளர்ப்பு ஆடுகளை கொண்டு வந்து வியாபாரம் செய்து வருகின்றனர். அதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை ஆட்டு சந்தையில் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதல் ஆடுகள் கொண்டு வரப்பட்டன. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, “வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நிம்மியப்பட்டு ஆட்டு சந்தையில் 800-க்கும் குறையாத ஆடுகள் விற்பனையாகும். அதாவது, ரூ.2 கோடி வரை ஆடுகள்…
நீண்ட ஆயுளுக்கான டாக்டர் டக்கரின் மருந்து கடுமையான உணவுத் திட்டம் அல்லது கவர்ச்சியான சப்ளிமெண்ட்ஸ் ஆகியவற்றைக் கொண்டிருக்கவில்லை. இது மிகவும் எளிமையானது மற்றும் மிகவும் ஆழமானது: கனிவாக இருங்கள். மகிழ்ச்சியாக இருங்கள். புகைபிடிக்க வேண்டாம். வெறுக்க வேண்டாம்.அவர் ஒருபோதும் புகைபிடிக்கவில்லை, சமூக ரீதியாக குடிக்கிறார் (ஒரு வெள்ளிக்கிழமை மார்டினி இப்போதெல்லாம்), எல்லாவற்றையும் மிதமாக சாப்பிடுகிறார். ஆனால் உணர்ச்சி பழக்கவழக்கங்கள் உடல் ரீதியானவற்றை விட அதிகமாக உதவியிருக்கலாம் என்று அவர் நம்புகிறார்.”வேலையிலும் வீட்டிலும் மகிழ்ச்சி எல்லாம்,” என்று அவர் கூறுகிறார். அவர் ஒரு நோயாளியை நினைவு கூர்ந்தார், அவளுடைய வேலையால் ஆழ்ந்த வலியுறுத்தப்பட்டார், அவர் வெறும் 42 வயதில் ஒரு பெரிய பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அந்த நினைவகம் அவரை ஒருபோதும் விட்டுவிடவில்லை.அவரது காதல் கதையும் யுகங்களுக்கு ஒன்றாகும். ஏறக்குறைய 70 ஆண்டுகளாக திருமணம் செய்து கொண்டார், அவரும் அவரது மனைவியும் இன்னும் வாதிடுகிறார்கள் – ஆனால் மிக முக்கியமாக, அவர்கள் இன்னும் விரும்புகிறார்கள்.…
புதுடெல்லி: “கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டுக்கு இந்தியா அழைக்கப்படாதது மற்றுமொரு ராஜதந்திர குளறுபடி” என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே “மத்தியஸ்தம்” செய்ய அமெரிக்காவை அனுமதித்த “தவறு”க்குப் பிறகு இந்த ராஜதந்திர குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. உலகம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்து ஆலோசிக்கும் ஜி7 உச்சி மாநாடு இம்முறை ஜூன் 15 முதல் 17 வரை கனடாவில் நடைபெற உள்ளது. இதில், ரஷ்யா – உக்ரைன் உள்பட பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கின்றன. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு கனடா அழைப்பு விடுக்கவில்லை என செய்திகள் வெளியாகி உள்ளன. ஒருவேளை, கனடா இனி அழைப்பு விடுப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டாலும், அதில் பங்கேற்பதற்கான அடிப்படை வேலைகளை மேற்கொள்ள போதுமான காலம் இல்லாததால் பிரதமர் மோடி, மாநாட்டை தவிர்ப்பார் என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரம்…
அகமதாபாத்: யுடிடி சீசன் 6-ல் இன்று அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்டான்லியின் சென்னை லயன்ஸ் அணியின் கிரில் ஜெராசிமென்கோ (கஜகஸ்தான்), ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் கனக் ஜாவுடன் (அமெரிக்கா) மோதினார். முதல் செட்டில் தொடக்கம் முதலே கனக் ஜா ஆதிக்கம் செலுத்தினார். ஒரு கட்டத்தில் அவர் 9-6 என முன்னிலை வகித்தார். எனினும் கிரில் ஜெராசிமென்கோ போராடி 10-10 என சமநிலைக்கு கொண்டு வந்தார். கோல்டன் புள்ளியாக அமைந்த இந்த செட்டை இறுதியில் கனக் ஜா 11-10 என கைப்பற்றினார். அடுத்த இரு செட்களும் நெருக்கமாகவே சென்றது. இந்த செட்களையும் கனக் ஜா 11-10 என தன்வசப்படுத்தினார். முடிவில் அவர் 3:0 (11-10,11-10, 11-10) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதனால் இந்த மோதலில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி 3-0 என முன்னிலை வகித்தது.…
மதுரை: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இருபோக பாசனத்துக்கு கால தாமதமின்றி தண்ணீர் திறக்க வேண்டும் என மதுரையில் இன்று நடந்த விவசாயிகள் கருத்துக் கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தினர். மதுரை பொதுப்பணித் துறை அலுவலகத்தில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து இரு போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கான, விவசாயிகளின் கருத்துக் கேட்பு கூட்டம் பென்னிகுயிக் அரங்கில் நடைபெற்றது. இதற்கு பெரியாறு வைகை வடிநிலக் கோட்ட செயற் பொறியாளர் பாரதி தாசன் தலைமை வகித்தார். மேலூர் பிரிவு உதவி செயற் பொறியாளர் சிவபிரபாகரன், உதவி பொறியாளர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முல்லைப் பெரியாறு அணை மூலம் இரு போக பாசன விவசாயத்துக்கு பேரணை முதல் கள்ளந்திரி வரை 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற தண்ணீர் திறக்கப்படுகிறது. இது தொடர்பாக நடந்த கருத்து கேட்புக் கூட்டத்தில் பாசன வசதி பெறும் வாடிப்பட்டி, அலங்காநல்லூர், மதுரை மேற்கு, கிழக்கு, திண்டுக்கல் மாவட்ட பேரணை…
பெரும்பாலான மக்கள் வாழ்க்கையில் உற்பத்தி மற்றும் வெற்றிகரமாக இருக்க விரும்புகிறார்கள், ஆனால் பலர் அவ்வாறு இருக்க முடியாது. ஆனால், அது ஏன்? வெற்றிகரமான நபர்கள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர்களிடமிருந்து வித்தியாசமாக என்ன செய்கிறார்கள்? மற்றவர்களை விட வெற்றிகரமானவர்கள் பெரும்பாலும் மத ரீதியாக சில பழக்கங்களைப் பின்பற்றுகிறார்கள் என்பது பெரும்பாலும் கவனிக்கப்படுகிறது, இது அவர்களை மற்றவர்களை விட அதிக ஒழுங்கமைக்கப்பட்டதாகவும், அதிக உற்பத்தி செய்யவும் உதவுகிறது. இந்த எளிய பழக்கவழக்கங்கள் பெரும்பாலும் ஒரு இரவைத் தொடங்குகின்றன, இது அடுத்த நாளுக்கு நன்றாகத் தயாரிக்க உதவுகிறது. ஒரு சில வேண்டுமென்றே பழக்கவழக்கங்கள் எல்லா வித்தியாசங்களையும் ஏற்படுத்தும். எனவே, புத்துணர்ச்சியுடனும், கவனம் செலுத்துவதையும், உங்கள் காலை சொந்தமாக வைத்திருக்க முற்றிலும் தயாராக இருப்பதற்கும் உதவும் சில எளிய மற்றும் சக்திவாய்ந்த இரவு பழக்கங்களை இங்கே பட்டியலிடுகிறோம்.
புதுடெல்லி: நோயாளிகளின் நலன்களைக் காக்கவும், நெறிமுறைகள் சார்ந்த தரத்தை கடைபிடிக்கவும், மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களை மருத்துவப் பிரதிநிதிகள் சந்திப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நடத்தும் அனைத்து மருத்துவனைகளிலும், மருத்துவமனை வளாகத்துக்குள் மருத்துவமனை பிரதிநிகள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று சுகாதார சேவைகள் இயக்குநரகம் (DGHS) அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து டிஜிஹெச்எஸ் வெளியிட்டுள்ள உத்தரவில், “இந்த உத்தரவு, மருத்துவமனை வளாகத்துக்குள் மருத்துவப் பிரதிநிதிகளை அனுமதிக்கக் கூடாது என்ற முந்தைய உத்தரவு தொடர்பானது. இதன்படி, மருத்துவமனை வளாகத்துக்குள், மருத்துவப் பிரதிநிதிகள் அனுமதிக்கப்படக் கூடாது என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்தப்படுகிறது. மருத்துவமனையின் தலைவர்கள், இதுகுறித்த தேவையான கடுமையான வழிகாடுதல்களை தங்களின் அலுவலர்களுக்கு வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இயக்குனரகத்துக்கு தெரிவிக்கலாம். மருத்துவமனைகளுக்குள் இருக்கும் மருத்துவர்களை, மருத்துவப் பிரதிநிதிகளின் நிறுவனங்களால் முன்னிறுத்தப்படும் மருத்துகளை பரிந்துரைப்பதில் தேவையற்ற செல்வாக்கினைத் தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை…
அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தை காண தலைப்பாகை, ஆர்சிபி ஜெர்ஸி அணிந்து வந்துள்ளார் கிறிஸ் கெயில். அவர் எந்த அணிக்கு ஆதரவு அளிக்கிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்த இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸை இழந்த ஆர்சிபி அணி, முதலில் பேட் செய்து வருகிறது. இந்த ஆட்டத்தை நேரில் காண நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்துக்கு ரசிகர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என பலரும் வந்துள்ளனர். இதில் ஆர்சிபி அணிக்காக நீண்ட காலம் ஆடிய கிறிஸ் கெயில் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் வந்துள்ளனர். இதில் ஆர்சிபி அணியை ஆதரிப்பதாக டிவில்லியர்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். ஆனால், கெயில் தனது ஆதரவு எந்த அணிக்கு…
