அமெரிக்காவின் மாநிலமான கன்சாஸின் விசிட்டா பகுதியில் அதிக மழை பெய்ய வழிவகுத்தது. அவசர மீட்புக் குழுக்கள் தங்கள் கார்களில் சிக்கிக்கொண்ட ஓட்டுநர்கள் உட்பட டஜன் கணக்கான மக்களை மீட்டனர்.திங்கள்கிழமை முதல் 1.5 முதல் 7 அங்குலங்கள் (4 முதல் 18 செ.மீ) மழையை கவுண்டி பெற்றது என்று செட்விக் கவுண்டியின் அவசரநிலை மேலாண்மை இயக்குனர் ஜூலி ஸ்டிம்சன் தெரிவித்தார். வெள்ளத் தடுப்புகள் அல்லது அவசர வாகனங்களைச் சுற்றி செல்ல வேண்டாம் என்று ஓட்டுனர்களை அவர் எச்சரித்தார். கன்சாஸ் கவர்னர் லாரா கெல்லி ஒரு பேரழிவு அவசர அறிவிப்பை வெளியிட்டார்.வெள்ளம் சூழ்ந்த வாகனங்களில் இருந்து மக்களை மீட்க விசிட்டா தீயணைப்புத் துறை படகுகளைப் பயன்படுத்தியது. சில கார்கள் கிட்டத்தட்ட நீருக்கடியில் இருந்தன, ஆனால் ஓட்டுநர்கள் இன்னும் ஆபத்தான பகுதிகளை கடந்து செல்ல முயன்றனர்.எங்கள் லைஃப் ஜாக்கெட்டுகள் மற்றும் எங்கள் படகுகள் அவற்றை ஒரு லைஃப் ஜாக்கெட்டிலும், அவற்றை தண்ணீரிலிருந்து வெளியேற்றுவதற்காக ஒரு படகிலும்…
Author: admin
பெங்களூரு: பெங்களூரு நகரில் நடப்பு ஐபிஎல் சாம்பியன் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். ‘இது எதிர்பாராத அசம்பாவிதம்’ என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “மாநில அரசும், கிரிக்கெட் சங்கமும் ஐபிஎல் பட்டம் வென்ற ஆர்சிபி அணிக்கு வெற்றி விழாவை இன்று ஏற்பாடு செய்தது. இது இப்படியொரு துயர சம்பவமாக மாறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் மொத்தமே 35,000 பார்வையாளர்களுக்கு மட்டும்தான் பார்வையாளர் மாடத்தில் இடம் உள்ளது. ஆனால், அங்கு சுமார் 2 முதல் 3 லட்சம் வரையிலான மக்கள் வந்திருந்தனர். விதான் சவுதாவுக்கு எதிரே சுமார் ஒரு லட்சம் பேர் குவிந்தனர். ஆனால், அங்கு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதை அரசு, கிரிக்கெட் சங்கம் மற்றும் மக்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு தரப்பில்…
விழுப்புரம்: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான செம்மண் கொள்ளை வழக்கில் கூடுதலாக 20 பக்க குற்றப்பத்திரிகை இன்று (ஜூன் 4) தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரி இயங்கியது. இக்குவாரியில் திமுக ஆட்சியில் (2006-11), விதிகளை மீறி 2 லட்சத்துக்கு 64 ஆயிரத்து 644 லோடு செம்மண் கொள்ளை போனது. இதன் மூலம் அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்துக்கு 40 ஆயிரத்து 600 ரூபாயை இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக, அப்போது அமைச்சராக இருந்த பொன்முடி, அவரது மகனான முன்னாள் எம்.பி., கவுதமசிகாமணி மற்றும் ஆதரவாளர்கள் ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், கோபிநாதன், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2012-ல் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு…
புதுடெல்லி: ஆர்சிபி அணியின் ஐபிஎல் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, பெங்களூரு சின்னசாமி மைதானம் வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில். “பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் உயிரிழப்பு மிகுந்த வேதனையளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார். புதன்கிழமை அன்று ஆர்சிபி அணியின் முதல் ஐபிஎல் கோப்பை வெற்றியை கொண்டாட பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தனர். அப்போது ஒரே நேரத்தில் மைதானத்துக்குள் மக்கள் நுழைய முயன்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். முழு விவரம்: > ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நெரிசலில் 11 பேர்…
மதுரை: ‘சுப்பிரமணியபுரம்’ திரைப்பட நடிகர் மதுரை இலைக்கடை முருகன் (மொக்கச்சாமி) உடல்நலக் குறைவால் இன்று (ஜூன் 4) காலமானார். அவருக்கு வயது 78. மதுரை மூன்று மாவடி பகுதியில் வசித்தவர் இலைக்கடை முருகன். இவரது தந்தை முத்தையா நாடக கம்பெனி நடத்தியவர். இவருடைய 7வது மகன் முருகன். ஏற்கெனவே நெல்பேட்டை மார்க்கெட்டில் இலை வியாபாரம் செய்த இவர், தற்போது மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் இலைக்கடை நடத்தி வந்தார். இவருக்கு மதுரை புதுத்தாமரைப்பட்டியைச் சேர்ந்த இயக்குநரும், நடிகருமான சசிகுமாருடன் பழக்கம் இருந்தது. இவரது பேச்சு , நடிப்பை கவனித்த சசிகுமார் ‘சுப்பிரமணியபுரம்’ என்ற மதுரை பற்றிய திரைப்படத்தில் மொக்கச்சாமி எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்தார். மதுரை வழக்கில் பேசி நடித்த அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.தொடர்ந்து ‘கொம்பன்’ , ‘வேலாயுதம்’ , ‘தோரணை’ மற்றும் ‘மலையாளி’ என்ற மலையாள படத்திலும் குணச்சித்திர வேடத்தில் நடித்து மக்களை ரசிக்க வைத்தார். இருப்பினும்,…
சென்னை: “நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம். மத்திய அரசு எங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “2026-ம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பாஜக வெளிப்படையாக அறிவித்துள்ளது. தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பாஜகவுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணைபோகிறவராகவும் இருக்கிறார். டெல்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது. நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள்…
பெங்களூரு: ஐபிஎல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றதைக் கொண்டாட இன்று (ஜூன் 4) பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்; 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 18 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதை கொண்டாட பெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வெளியே சிறுவர்கள், பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. ஆர்சிபி அணியை பாராட்ட கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (கேஎஸ்சிஏ) நடத்தும் நிகழ்ச்சிக்காக பெங்களூரு சின்னசாமி மைதானம் அருகே கூட்டம் கூடியதைத் தொடர்ந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், காயமடைந்தவர்கள் மற்றும் மயக்கமடைந்தவர்களை சிவாஜி நகரில் உள்ள பவுரிங் மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். முன்னதாக, கூட்டத்தைக் கட்டுப்படுத்த…
சென்னை: “கர்நாடக அரசும், ஆர்சிபி அணி நிர்வாகமும் தான் பெங்களுரூ கூட்ட நெரிசல் உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐபிஎல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வென்றதைக் கொண்டாடும் வகையில், கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் இன்று நடைபெற்ற வெற்றிப் பேரணியில் 13 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். பெங்களூர் அணி 18 ஆண்டுகளில் முதன் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற நிலையில் ரசிகர்களிடம் ஏற்பட்ட அளவு கடந்த உற்சாகத்தை நேற்று இரவே அறிய முடிந்தது. அதன்பின் 12 மணி நேர அவகாசத்தில் வெற்றிக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அளவு கடந்த கூட்டம் வரும் என்பதை கணித்து அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் கொண்டாட்டத்தை இன்னும் சில நாட்களுக்கு தள்ளி…
வானியலாளர்கள் ஒரு சிறிய நட்சத்திரத்தை சுற்றி வரும் ஒரு பெரிய கிரகத்தை கண்டுபிடித்ததாகக் கூறுகிறார்கள், இது விஞ்ஞானிகளை ஸ்டம்பிங் செய்த ஒரு வினோதமான ஜோடி (பட கடன்: எக்ஸ்/ஏ.எஃப்.பி) புதன்கிழமை வானியலாளர்கள் ஒரு சிறிய நட்சத்திரத்தை சுற்றி வரும் ஒரு பெரிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த வினோதமான ஜோடி விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறிய நட்சத்திரம் அழைக்கப்படுகிறது TOI-6894. பெரும்பாலான நட்சத்திரங்கள் பால்வீதி விண்மீன் TOI-6894 போன்ற சிறியவை. இது ஒரு சிவப்பு குள்ளன், சூரியனின் வெகுஜனத்தில் சுமார் 20 சதவீதம் மட்டுமே உள்ளது. இதுபோன்ற சிறிய நட்சத்திரங்கள் பாரிய கிரகங்களை ஆதரிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் ஒருபோதும் நினைத்ததில்லை.இருப்பினும், சர்வதேச வானியலாளர்கள் குழு a இன் தெளிவான அறிகுறிகளைக் கண்டறிந்தது எரிவாயு ராட்சத கிரகம் சிறிய நட்சத்திரம் TOI-6894 ஐச் சுற்றி வருகிறது. அவர்களின் கண்டுபிடிப்புகள் பத்திரிகையில் வெளியிடப்பட்டன ‘இயற்கை வானியல்’.இந்த கண்டுபிடிப்பு TOI-6894 ஐ இவ்வளவு பெரிய கிரகத்தை நடத்த…
ராய்பூர்: சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் 100 கி.மீ. வேகத்தில் சென்ற சொகுசு காரிலிருந்து எச்சில் உமிழ்வதற்காக ஓட்டுநர் கதவைத் திறந்ததால் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிந்தார். இரண்டு பேர் படுகாயமடைந்தனர். திங்கள்கிழமை நடந்த இந்த விபத்தில் கார் பலமுறை சாலையில் உருண்டு மேலும் இரண்டு வாகனங்களில் மோதியுள்ளது. போலீஸாரின் கூற்றுப்படி, விபத்தில் உயிரிழந்தவர் ஜாக்கி கெஹி (31). பிலாஸ்பூரின் புறநகரான சக்கர்பாதாவைச் சேர்ந்த துணி வியாபாரி ஆவார். இவர் ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் ஒரு விருந்தில் கலந்து கொண்டார். விருந்து முடிந்ததும், தனது நண்பர் ஆகாஷ் சந்தானியைக்கு பேசி தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறினார். ஆகாஷ் அவரது நண்பர் பங்கஜ் சாப்ராவை அழைத்துக்கு கொண்டு இன்னோவா கார் ஒன்றில் ஜாக்கியை கூப்பிடச் சென்றார். திரும்பி வருகையில் ஆகாஷ் வாகனம் ஓட்ட, அவரது நண்பர் பங்கஜ் ஓட்டுநருக்கு அருகில் உள்ள இருக்கையிலும், ஜாக்கி பின் இருக்கையிலும் அமர்ந்து இருத்திருக்கிறார்கள். இன்னோவா பிலாஸ்பூர் -…
