Author: admin

லக்னோ: இந்திய ராணுவம் குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பேச்சு சுதந்தித்திற்கு வரம்புகள் உள்ளதாக நீதிமன்றம் கூறியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டபோது இந்திய ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்தி நேரில் ஆஜராக உ.பி.யின் லக்னோ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார். இதில் கீழமை நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை மறுத்துவிட்டது. விரிவான தீர்ப்பு அடுத்த வாரம் வழங்கப்படும் என்று தெரிவித்தது. இந்நிலையில் இந்த வழக்கில் ராகுல் காந்தியின் கோரிக்கையை நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி நேற்று நிராகரித்தார். அப்போது அவர், “அரசியலமைப்பு சட்டத்தின் 19(1)(ஏ) பிரிவானது பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்கிறது.…

Read More

சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நேற்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் ஒரு லட்சத்து 84 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இதைத்தொடர்ந்து, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு முதல்கட்டமாக சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 2 மற்றும் 3-ம் தேதி நடந்தது. பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு ஜூன் 4-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. சென்னையில் மாநில கல்லூரி, ராணி மேரி மகளிர் கல்லூரி, அண்ணாசாலை காயிதே மில்லத் மகளிர் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் கூட்டம் அலைமோதியது. மாநில கல்லூரியில் நடைபெற்ற கலந்தாய்வு குறித்து அக்கல்லூரியின் முதல்வர் ஆர்.ராமன் கூறுகையில், “முதல் நாளில் வணிகவியல், கார்ப்பரேட் செக்ரட்டிரிஷிப், பொருளாதாரம், கணிதம், புள்ளியியல்,…

Read More

மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்குஎதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க, நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு கமிட்டியை கேரள அரசு அமைத்தது. இந்த கமிட்டி தனது அறிக்கையை கேரள முதல்வரிடம் சமர்ப்பித்தது. கடந்த வருடம் ஹேமா கமிட்டியின் ஒரு பகுதி வெளியாகிப் பரபரப்பானது. அதன்பின்னர் சில நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சில நடிகைகள் வெளிப்படையாகக் கூறினர். அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ஹேமா கமிட்டி அறிக்கையுடன் தொடர்புடைய வழக்குகளை மூட கேரள போலீஸார் முடிவு செய்துள்ளதாகச் செய்திகள் வெளியானது. இதைக் கேலி செய்து நடிகை பார்வதி திருவோத்து அரசுக்கு கேள்வி எழுப்பினார். முதல்வர் பினராயி விஜயனை டேக் செய்த அவர், “ஹேமா கமிட்டிஅமைக்கப் பட்டு ஐந்தரை ஆண்டுஆகிறது. ஏதாவது முடிவு எடுக்கப்பட்டுள்ளதா? என்று கிண்டலாக கேட்டிருந்தார். அவருக்கு பதிலளித்துள்ள இயக்குநர் விது வின்சென்ட் நீண்டபதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “படப்பிடிப்புகளில் சந்தித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து…

Read More

மாமல்​லபுரம்: மாமல்​லபுரம் அடுத்த பூஞ்​சேரி பகு​தி​யில் உள்ள தனி​யார் நட்​சத்​திர விடு​தி​யில் 2-ம் கட்​ட​மாக 10 மற்​றும் 12-ம் வகுப்பில் சிறந்த மதிப்​பெண்​கள் பெற்ற மாணவ, மாணவி​களுக்கு தமிழக வெற்​றிக் கழகம் கட்​சி​யின் தலை​வர் விஜய் கல்வி விருது மற்​றும் பாராட்டு சான்​றுகளை வழங்​கி​னார். தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் 10 மற்​றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்​வில் தொகுதி வாரி​யாக சிறந்த மதிப்​பெண்​கள் பெற்று தேர்ச்​சி​யடைந்த மாணவ, மாணவி​களுக்​கு, தமிழக வெற்​றிக் கழகத்​தின் சார்​பில், கல்வி விருது வழங்​கும் விழா, 2-ம் கட்​ட​மாக மாமல்​லபுரம் அருகே பூஞ்​சேரி உள்ள தனி​யார் நட்​சத்​திர விடு​தி​யில் நேற்று நடை​பெற்​றது. இதில், சிறந்த மதிப்​பெண்​கள் பெற்ற மாணவ, மாணவி​கள் தங்​களின் பெற்​றோர்​களு​டன் பங்​கேற்​றனர். விழா​வில், தவெக தலை​வர் விஜய் பங்​கேற்​றார். முதலில், மாற்​றுத்​திற​னாளி மாணவ, மாணவி​களை சந்​தித்து பேசி​னார். பின்​னர், அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த் அனை​வரை​யும் வரவேற்​றார். இதையடுத்​து, 12-ம் வகுப்​பில் 599…

Read More

புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பது என்பது வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளை நிவர்த்தி செய்வதை உள்ளடக்குகிறது. தூப, போதிய சூரிய ஒளி, சமையல் புகைகள், பாராபென்ஸ், புகைபிடித்தல், அதிகப்படியான ஆல்கஹால், தூக்கமின்மை, மன அழுத்தம், சர்க்கரை, பிளாஸ்டிக்கில் உணவை சூடாக்குவது மற்றும் எரிந்த உணவு ஆகியவை புற்றுநோய் அபாயத்தை உயர்த்தும். காற்றோட்டம், வைட்டமின் டி, பராபென் இல்லாத தயாரிப்புகள், புகைபிடிப்பதை விட்டு வெளியேறுதல், மன அழுத்தத்தை நிர்வகித்தல், சர்க்கரையை கட்டுப்படுத்துதல் மற்றும் எரிந்த உணவைத் தவிர்ப்பது ஆகியவை முக்கியமானவை. புற்றுநோய் உலகளவில் மரணத்திற்கு ஒரு முக்கிய காரணியாக உள்ளது, ஆனால் சில வாழ்க்கை முறை தேர்வுகள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள் உங்கள் ஆபத்தை பாதிக்கும். புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகள் உங்கள் வீடுகளில் மறைக்கப்படுகின்றன. இந்த 10 முக்கியமான கேள்விகளை நீங்களே கேட்டுக்கொள்வதன் மூலம், உங்கள் அன்றாட வழக்கத்தில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை நீங்கள் கண்டறிந்து, உங்கள் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கலாம்.நீங்கள்…

Read More

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடுமையான பதிலடியை தந்தது. அப்போது, பாகிஸ்தானுக்கு சொந்தமான 9 விமானங்கள் அழிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: மே மாத தொடக்கத்தில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரை தொடங்கிய பிறகு பாகிஸ்தானின் வான்வழி மற்றும் தரைவழி ராணுவ சொத்துகளுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டது. வான்வழி தாக்குதல் நடவடிக்கைகளின்போது பாகிஸ்தான் விமானப் படைக்கு சொந்தமான 6 விமானங்கள் குண்டு வீசி தகர்க்கப்பட்டன. மேலும், இரண்டு உயர்திறன் கண்காணிப்பு விமானங்கள் அழிக்கப்பட்டன. ட்ரோன் மூலம் குறிப்பிட்ட இலக்கை தாத்குவதன் மூலம் சி-130 ஹெர்குலில் போக்குவரத்து விமானம் அழிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானுக்கு சொந்தமான 9 விமானங்கள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது முற்றாக தகர்க்கப்பட்டன. உயர் மதிப்பு கண்காணிப்பு பிரிவில் பாகிஸ்தானின் 2 விமானங்களை இந்திய ராணுவம் குறிவைத்து தாக்கி அழித்தது நான்கு…

Read More

புதுடெல்லி: ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் விவகாரம் எனக் கூறி ஆபரேஷன் சிந்தூர் பற்றிய தூதுக்குழுக்களின் அனைத்து நடவடிக்கைகளையும் தடுப்பதற்காக பாகிஸ்தான் எழுப்பிய கோரிக்கையை மலேசியா நிராகரித்துள்ளது. மத அடையாளத்தைப் பயன்படுத்த முயன்ற பாகிஸ்தான், சஞ்சய் குமார் ஜா தலைமையிலான இந்தியக் குழுவின் அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்யுமாறு மலேசிய அரசு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து, “நாங்களும் இஸ்லாமிய நாடு, நீங்களும் இஸ்லாமிய நாடு, மலேசியாவில் இந்திய தூதுக்குழுவின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து விடுங்கள்.” என்று கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்த மலேசிய அரசு, 9 பேர் அடங்கிய இந்திய தூதுக்குழுவுக்கு 10 முன்மொழியப்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது. ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் எம்பி சஞ்சய் ஜா தலைமையிலான அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவில், பாஜக எம்.பி.கள் அபராஜித சாரங்கி, பிரிஜ் லால், பிரதான் பருஹா, ஹேமங் ஜோஷி, திரிணமூல் காங்கிரஸின் அபிஷேக் பானர்ஜி, சிபிஎம்-ன் ஜான் பிரிட்டாஸ், காங்கிரஸ்…

Read More

கே.பாக்யராஜ், மீரா கிருஷ்ணன், ஜீவா தங்கவேல், விட்டல் ராவ், குரு அரங்கதுரை, நிஷாந்த், ஜெயந்தி தியாகராஜன் மற்றும் ஆழியாறு அறிவுத் திருக்கோயிலை சேர்ந்தவர்கள் நடித்துள்ள படம், ‘ஆனந்த வாழ்க்கை’. ஆர்.சுப்ரமணிய பாரதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார். சத்யா.சி, இசையமைத்துள்ளார். கே.கோகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஊரில் உள்ளவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றல் கொண்ட கே.பாக்யராஜ், தன் குடும்பத்தில் உள்ளவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாமல் தவிக்கிறார். அப்போது வேதாத்திரி மகரிஷியின் ஆழியார் அறிவு திருக்கோயில் பற்றிக் கேள்விப்பட்டு, குடும்பத்தினரை அங்கு அழைத்துச் செல்கிறார். அங்கு எளிய முறை யோகப் பயிற்சிகளைக் கற்று, எது உண்மையான ஆனந்த வாழ்க்கை என்பதைப் புரிந்து கொள்வதாகக் கதை செல்லும். எஸ்கேஎம் மயிலானந்தம் வழிகாட்டுதலின்படி,ஆழியாறு அறிவுத் திருக்கோயிலுடன் உலக சமுதாய சேவா சங்கம் இதைத் தயாரித்துள்ளது.

Read More

மதுரை: மதுரையில் திமுக நடத்திய பிரமாண்ட பொதுக்குழுவுக்கு போட்டியாக, மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தை மதுரையில் பாஜக ஜூன் 8-ம் தேதி நடத்த உள்ளது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். மதுரையில் கடந்த 1-ம் தேதி பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்ட திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை மத்திய பாஜக அரசுக்கு எதிரானவையாகும். குறிப்பாக, மத்திய விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தும் பாஜக அரசுக்குக் கண்டனம், உச்ச நீதிமன்றத்துடன் மோதும் பாஜக அரசுக்குக் கண்டனம், வஞ்சக பாஜகவையும், துரோக அதிமுகவையும் விரட்டியடித்து 2026-ல் திமுக ஆட்சி தொடர களப்பணியாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தப் பொதுக்குழுவில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசும்போது, அதிமுக, பாஜகவை நேரடியாகவும், நடிகர் விஜய்யை மறைமுகமாகவும் விமர்சனம் செய்தார். மேலும், “மொத்த தமிழகத்தையும் பாஜக கன்ட்ரோலுக்கு கொண்டுசெல்ல பழனிசாமி…

Read More

உடலுக்குள் உருவாகும் கற்களைப் பற்றி நாம் பேசும்போது, ​​நாம் பெரும்பாலும் இரண்டு வகையான கற்களைப் பற்றி பேசுகிறோம் – ஒன்று சிறுநீரக கல், மற்றொன்று பித்தப்பை கல். இரண்டும் ஒத்ததாக இருந்தாலும், உண்மையில் ஒரு பெரிய அளவிற்கு, அறிகுறிகள், சிகிச்சை மற்றும் காரணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இரண்டிற்கும் இடையே சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன. பார்ப்போம் …சிறுநீரக கற்கள்சிறுநீரக கற்கள் கடினமானவை, படிக கனிம வைப்பு அவை சிறுநீரகங்களுக்குள் உருவாகின்றன. சிறுநீரில் கால்சியம், ஆக்சலேட் அல்லது யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும்போது அவை உருவாகின்றன, பின்னர் அவை படிகமாக்கி ஒன்றாக ஒட்டிக்கொண்டு கடினமான, கல் போன்ற பொருளை உருவாக்குகின்றன. இந்த கற்கள் அரிசி தானியத்தைப் போல சிறியதாகவோ அல்லது கோல்ஃப் பந்தைப் போலவும் சிறியதாக இருக்கலாம்.கால்சியம் கற்கள் உட்பட பல்வேறு வகையான சிறுநீரக கற்கள் உள்ளன, அவை மிகவும் பொதுவானவை. அடுத்தது தொற்றுநோய்களால் ஏற்படும் ஸ்ட்ரூவைட் கற்கள், உணவு மற்றும் வளர்சிதை…

Read More