Author: admin

ஓசூர்: ஓசூர் பகுதியில் நிலவும் மிதமான சீதோஷ்ண நிலையால், வாட்டர் ஆப்பிள் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், இச்சாகுபடிக்கு தேவையான உரியத் தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நல்ல மண் வளம் மற்றும் ஆண்டு முழுவதும் நிலவும் மிதமான குளிர்ந்த சீதோஷ்ண நிலை மலர் மற்றும் காய்கறி சாகுபடிக்கு விவசாயிகளுக்குக் கைகொடுத்து வருகிறது. அதேபோல மலைப்பிரதேசங்களில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்களும் இப்பகுதியில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்நிலையில், தேன்கனிக்கோட்டை, பாலூர், உரிகம், தளி உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் மிதமான சீதோஷ்ண நிலையை அடிப்படையாக கொண்டு, பன்னீர் ஆப்பிள் என்று அழைக்கப்படும் வாட்டர் ஆப்பிள் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், இப்பகுதிகளில் வெள்ளை, பச்சை, இளஞ்சிவப்பு, மஞ்சள் ஆகிய 4 வண்ணங்களில் வாட்டர் ஆப்பிள் சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை செய்யப்பட்டு, விற்பனைக்கு…

Read More

நடுத்தர அளவிலான, புத்திசாலித்தனமான மற்றும் சுறுசுறுப்பான நாயைப் பெற திட்டமிட்டுள்ளீர்களா? பின்னர் லாப்ரடோர் மற்றும் பார்டர் கோலி இருவரும் தேர்வு செய்ய ஒரு சிறந்த வழி. செல்லப்பிராணி நாய் இனங்கள் இரண்டும் இந்த அம்சங்களில் ஒத்ததாக இருந்தாலும், அவற்றின் ஆற்றல் அளவுகளும் இயல்பும் மிகவும் வேறுபட்டவை. லாப்ரடர்கள் அவர்களின் வேடிக்கையான அன்பான, சமூக இயல்புக்கு பெயர் பெற்றவர்கள் மற்றும் குறிப்பாக இளைய ஆண்டுகளில் ஆற்றல் மிக்கவர்கள். அவர்கள் நீச்சல், பெறுதல் மற்றும் வெளிப்புற விளையாட்டு போன்ற நடவடிக்கைகளை விரும்புகிறார்கள். இதற்கிடையில், பார்டர் கோலிகள் கிட்டத்தட்ட அயராத சகிப்புத்தன்மை மற்றும் மன கூர்மைக்கு பெயர் பெற்றவை. அவர்கள் முதலில் வளர்ப்பிற்காக வளர்க்கப்பட்டனர், மேலும் அவை ஒப்பிடமுடியாத இயக்கி மற்றும் கவனம் செலுத்துகின்றன. இங்கே நாம் இரண்டையும் ஒப்பிடுகிறோம், குறிப்பாக அவற்றின் ஆற்றல் மட்டங்கள், எந்த செல்ல நாய் இனம் சிறந்தது என்பதைப் பார்க்கிறோம்:

Read More

மஞ்சூர்: நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை வெகுவாக குறைந்துவரும் நிலையில், சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மஞ்சூர் அருகில் உள்ள கீளூர் கோக்கலாடா அரசு உயர்நிலைப்பள்ளியில் சேரும் 1-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய இருப்பதாக கவர்ச்சி அறிவிப்பை வெளியிட்டு மாணவர் சேர்க்கையில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திட்டம் குறித்து கிராம மக்கள் கூறும் போது, ‘மாணவர் சேர்க்கை குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பள்ளி மூடப்பட்டது. இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும்ஊர் பொதுமக்களின் தொடர் முயற்சியால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் இந்த பள்ளி திறக்கப்பட்டது. தற்போது இந்த பள்ளியில் 42 மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர் எண்ணிக்கையை மேலும்…

Read More

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடிகர் சூர்யா இன்று (ஜூன் 5) தனது 46-வது படக்கதையுடன் வந்து தரிசனம் செய்தார். நடிகர் சூர்யாவின் 46-வது திரைப்படத்தை, ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்க உள்ளார். இந்நிலையில் வியாழக்கிழமை காலை நடிகர் சூர்யாவும், இயக்குநர் வெங்கி அட்லூரியும் பழநி முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்தனர். அவர்கள் பழநி அடிவாரத்தில் இருந்து ரோப் காரில் மலைக்கோயிலுக்கு வந்தனர். அவர்களை கோயில் அதிகாரிகள் வரவேற்றனர். சிறுகால சந்தி பூஜையில் கலந்து கொண்டு, 46-வது படக்கதையை முருகன் பாதத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்து, வேடன் அலங்காரத்தில் தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் முருகன் படம், பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கோயில் உட்பிரகாரத்தில் உள்ள ஆனந்த விநாயகர், போகர் ஜீவ சமாதிக்கு சென்று வழிபட்டனர். கோயிலுக்கு வந்த பக்தர்கள்…

Read More

சென்னை: மறைந்த அரசியல் தலைவர் காயிதே மில்லத் பிறந்த நாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின்: “எவரும் குறைகாண முடியாத அப்பழுக்கற்ற வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். இஸ்லாமிய சமூகத்தின் இணையற்ற தலைவர். தந்தை பெரியாரால் அரிய தலைவர் எனப் போற்றப்பட்டவர். தலைவர் கலைஞரின் மீது அன்பைப் பொழிந்தவர். 1967-இல் கழகம் ஆட்சியமைக்கத் துணை நின்றவர். நாட்டுப்பற்றிலும் மொழிப்பற்றிலும் எஃகு போன்ற உறுதியைக் காட்டிய கண்ணியத்தென்றல் காயிதே மில்லத் பிறந்தநாள். காயிதே மில்லத் பிறந்த திருநெல்வேலி மாவட்டத்தில் அமையவுள்ள மாபெரும் நூலகத்துக்கு அவரின் பெயர் சூட்டப்படும் என அறிவித்த மனநிறைவோடு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினேன்.” என்று முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அன்புமணி ராமதாஸ்: “இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், அரசியல் நிர்ணய அவையின் உறுப்பினருமான கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் 130-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அன்னைத் தமிழை தேசிய…

Read More

ஆன்மீக ஆசிரியரும் ஊக்கமளிக்கும் பேச்சாளருமான பிரம்மா குமாரி சகோதரி சிவானி, ஆழ்ந்த வேரூன்றிய அறிவு மற்றும் ஆன்மீக பாடங்களுக்காக அறியப்படுகிறார். அவரது வழிகாட்டுதல் சரியான பெற்றோருக்குரிய நுட்பங்களின் தாக்கத்தை வலியுறுத்துகிறது மற்றும் குழந்தை வளர்ச்சிக்கு வளர்க்கும் சூழலை உருவாக்க நடைமுறை அணுகுமுறைகளை வழங்குகிறது. சகோதரி சிவானியின் 5 சிறந்த பெற்றோருக்குரிய ஆலோசனைகள் இங்கே பெற்றோரின் சிக்கல்களுக்கு செல்ல உதவும்:குழந்தைகளை லேபிளிடுதல்சகோதரி சிவானி குழந்தைகளை முத்திரை குத்துவதற்கான பொதுவான நடைமுறைக்கு எதிராக நம்புகிறார், அவற்றின் வளர்ச்சியில் அதன் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை சுட்டிக்காட்டுகிறார். குழந்தைகள் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதை குழந்தைகள் ஆகின்றன என்று அவர் விளக்குகிறார், மேலும் “சோம்பேறி,” “குறும்பு,” அல்லது “பலவீனமான” போன்ற சொற்கள் அவற்றின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தக்கூடிய நீடித்த உணர்ச்சி முத்திரைகளை உருவாக்குகின்றன. லேபிள்களைப் பயன்படுத்துவதை விட குழந்தையின் நடத்தைக்கான மூல காரணத்தை புரிந்துகொள்வது மிகவும் நன்மை பயக்கும் என்பதை ஆன்மீக ஆசிரியர் வலியுறுத்துகிறார். குழந்தைகளின் செயல்கள் பொதுவாக அவர்களின்…

Read More

சென்னை: உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஆலோசிப்பதற்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் வரும் ஜூன் 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ திமுக தலைவர் மு .க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் ஜூன் 7ம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் – நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் – தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். கடந்த 1-ம் தேதி, மதுரை உத்தங்குடியில் திமுக பொதுக்குழு கூட்டம் கட்சி தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அதில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை திமுகவில் உறுப்பினராக…

Read More

குல்தீப் யாதவின் நிச்சயதார்த்த கொண்டாட்டத்தில், சமாஜ்வாடி கட்சி எம்.பி., பிரியா சரோஜ், ஒரு கருப்பு மற்றும் தங்க சேலையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் காலமற்ற நேர்த்தியைக் காண்பித்தார். தற்போதைய போக்குகளைத் தவிர்த்து, அவரது தேர்வு இந்திய ஜவுளி மற்றும் கைவினைத்திறனின் அழகை எடுத்துக்காட்டுகிறது. பிரியாவின் சுத்திகரிக்கப்பட்ட தோற்றம் இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை கொண்டாடும் நோக்கத்துடன் வடிவமைக்கப்படும்போது பாரம்பரிய நெசவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் நவீனமாக இருக்கும் என்பதை நினைவூட்டுவதாக அமைந்தது. பளபளப்பான மற்றும் சீக்வின்கள் ஒவ்வொரு சிவப்பு கம்பள மற்றும் பண்டிகை நிகழ்விலும் ஆதிக்கம் செலுத்தும் நேரத்தில், சமாஜ்வாடி கட்சி எம்.பி. ப்ரியா சரோஜ் கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவின் நிச்சயதார்த்த கொண்டாட்டத்தில் குறைவான நேர்த்தியுடன் ஒரு சக்திவாய்ந்த வழக்கை உருவாக்கினார். ஜூன் 4 ஆம் தேதி லக்னோவில் நடைபெற்றது, இந்த நிகழ்வு ஒரு நட்சத்திரம் நிறைந்த விவகாரம், ஆனால் பிரியாவின் சுத்திகரிக்கப்பட்ட சார்டோரியல் தேர்வுதான் அமைதியாக கவனத்தை திருடியது.வெறும் 26 வயதில்…

Read More

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட பயங்கரவாதிகள் இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை என தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, இது பிரதமர் நரேந்திர மோடிக்கு நிச்சயமாகத் தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூன் 6) காலை ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொள்கிறார். பிரதமரின் ஜம்மு காஷ்மீர் பயணத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடியுள்ளது. இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார். ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு நேரடியாகப் பொறுப்பான பயங்கரவாதிகள் இன்னும் பிடிபடவில்லை என்பது நிச்சயம் அவர் அறிந்திருப்பார். அதோடு, டிசம்பர் 2023 -ல் பூஞ்ச் ​​மற்றும் அக்டோபர் 2024 -ல் ககாங்கீர் மற்றும் குல்மார்க்கில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களிலும் இதே பயங்கரவாதிகள் ஈடுபட்டதாக…

Read More

வாஷிங்டன்: இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ மோதலை டொனால்ட் ட்ரம்ப்தான் முடிவுக்குக் கொண்டு வந்தாரா என்பது பற்றி தனக்குத் தெரியாது என்றும், பாகிஸ்தானிடம் ட்ரம்ப் பேசி இருக்கலாம் என்றும், தான் பாகிஸ்தானியோ, அமெரிக்கரோ இல்லை என்றும் சசி தரூர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கடுமையான நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு தெரிவிக்கும் வகையில், அனைத்து கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்து பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையிலான குழு கொலம்பியா உட்பட பல்வேறு நாடுகளின் பயணங்களை முடித்துக்கொண்டு அமெரிக்கா சென்றுள்ளது. இந்த பயணம் தொடர்பாக சசி தரூர் வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ராணுவ மோதலை, வர்த்தகத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறி இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சசி தரூர்,…

Read More