பாட்னா: “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வார்த்தைகள், பாகிஸ்தானின் வார்த்தைகளை ஒத்திருக்கிறது. அவர் தேசத்தை மதிக்கவில்லை” மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிரிராஜ் சிங், “ராகுல் காந்தி இந்தியாவின் வீரத்தை எதிர்த்தார். அவர் ராணுவத்தின் துணிச்சல் குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், உலகளவில் இந்திய ராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தார். பிஹார் பொதுமக்கள் அவரை எதிர்ப்பார்கள், ராணுவத்தையோ அல்லது தேசத்தையோ மதிக்காத ஒருவருக்கு அவர்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்? ராகுல் காந்தியின் நாக்கு, பாகிஸ்தான் போன்றது. அவர் தேசத்தை மதிக்கவில்லை. இப்போது பிரதமர் மோடி அவமதிக்கப்படவில்லை. 1971-ல் ராணுவம் வென்றதா அல்லது இந்திரா காந்தி ஜெயித்தாரா? ஜெயித்தது ராணுவம்தான். அப்போது வாஜ்பாய் எதிர்க்கட்சியில் இருந்தார். அவர், “இப்போது பாரதம் மட்டுமே இருக்கிறது, வேறு எந்த கட்சியும் இல்லை” என்றார். இந்த பயனற்ற நபர் (ராகுல் காந்தி) நாட்டின் துணிச்சலையும் ராணுவத்தையும் கேலி செய்கிறார்.…
Author: admin
சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் கவிஞர் சல்மா ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (ஜூன் 6) தாக்கல் செய்தனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மாநிலங்களவை எம்பிக்கள் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக எம்பி அன்புமணி, அதிமுக எம்பி சந்திரசேகரன், மதிமுக எம்பி வைகோ ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் இருந்து 6 புதிய மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 2ம் தேதி தொடங்கியது. இத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் பி.வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம் மற்றும் ரொக்கையா மாலிக் (எ) கவிஞர் சல்மா ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 6) தாக்கல் செய்தனர். அப்போது, கங்கிரஸ் தலைவர்…
புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட மோதல் என்பது பொருளாதார நடவடிக்கைகளில் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தியது என்று இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்.22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மே 7-ம் தேதி இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பயங்கரவாதிகளின் நிலைகள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானும் எல்லையோர பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியது. இந்த நேரத்தில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “அந்த தாக்குதலால் மிக மிகக் குறைவாக சிறிய அளவிலேயே பொருளாதார பாதிப்புகள் இருந்தன. அந்த நேரத்தில்…
புகைப்படம்: சைக்காலஜி லோவ் 100/டிக்டோக் ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனைகள் இந்த நாட்களில் மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன. கண்களை ஏமாற்றக்கூடிய வித்தியாசமான படங்கள் இவை- எனவே ஆப்டிகல் மாயைகள் என்று அழைக்கப்படுகின்றன. மேலும், இந்த படங்கள் உளவியலை அடிப்படையாகக் கொண்டவை- எனவே, அவை ஒரு நபரின் உள்ளார்ந்த எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துவதாகக் கூறுகின்றன. உதாரணமாக, ஆரம்பத்தில் டிக்டோக்கில் சைக்காலஜி லோவ் 100 ஆல் பகிரப்பட்ட இந்த குறிப்பிட்ட படம், ஒரு நபர் ஒரு சுதந்திரமான சிந்தனையாளரா அல்லது மற்றவர்களால் எளிதில் பாதிக்கப்படுகிறாரா என்று சொல்வதாகக் கூறுகிறது. எப்படி? படத்தில் இரண்டு முக்கிய கூறுகள் உள்ளன- ஒரு துறவி காட்டில் அல்லது ஒரு முகத்தில் நடந்து செல்கிறார்- ஆனால் முதல் பார்வையில், ஒரு நபர் அவற்றில் ஒன்றை மட்டுமே கவனிக்க முடியும். முதலில் ஒரு நபரின் கவனத்தை ஈர்ப்பதைப் பொறுத்து, அவர்களைப் பற்றி நிறைய டிகோட் செய்ய முடியும்.இந்த சோதனையை எடுக்க,…
ஸ்ரீநகர்: மனிதநேயத்தின் மீதும், காஷ்மீர் பெருமிதத்தின் மீதும் பாகிஸ்தானால் நடத்தப்பட்ட தாக்குதலே பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும், “பஹல்காம் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்படாது” என்று அவர் உறுதி அளித்தார். ஜம்மு காஷ்மீரில் செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம், செனாப் நதியின் கிளை நதியான ஆஞ்சி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நாட்டின் முதல் கேபிள் ரயில் பாலம் ஆகியவற்றை திறந்து வைத்த பிரதமர் மோடி, கத்ரா பகுதியில் ரூ.46,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டினார். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இன்றைய நிகழ்ச்சி இந்தியாவின் ஒற்றுமை மற்றும் மன உறுதியின் மிகப் பெரிய கொண்டாட்டமாகும். மாதா வைஷ்ணோதேவியின் ஆசிர்வாதத்தால், இன்று காஷ்மீர் பள்ளத்தாக்கு இந்தியாவின் ரயில் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் முதல்…
காசா: காசாவில் இருந்து சமீபத்தில் வெளியான ஒரு வைரல் பதிவில், இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இதுவும், போரின் கொடூர முகத்தைக் காட்டும் மற்றொருச் சான்று என இணையத்தில் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது. இந்தியாவில் மலிவு விலையில் கிடைக்கும் 5 ரூபாய் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட், போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் அசல் விலையை விட 500 மடங்கு அதிகமாக விற்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் இருந்து சமீபத்தில் வெளியான ஒரு வைரல் பதிவு, பார்லே-ஜி பாக்கெட் 24 யூரோக்களுக்கு மேல் (தோராயமாக ரூ.2,342) விற்கப்படுவதாகக் கூறி பெரும் பரபரப்பை உருவாக்கியது. அந்தப் பதிவில், “நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இன்று ரவீஃப்புக்குப் பிடித்த பிஸ்கட் எனக்குக் கிடைத்தது. விலை 1.5 யூரோக்களிலிருந்து 24 யூரோக்களுக்கு மேல் உயர்ந்தாலும், ரவீஃப்புக்குப் பிடித்த விருந்தை என்னால் மறுக்க முடியவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.…
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான எம்.எஸ்.ஜனார்த்தனம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் (வயது 89) உடல்நலக் குறைவால் இன்று (ஜூன் 6) இயற்கை எய்தினார். நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம், 1988-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரலாற்று சிறப்புமிக்க பல தீர்ப்புகளை வழங்கியவர். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக 2006-ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட இவர், 2015 ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பில் நீடித்தார். இவரது பரிந்துரையின் அடிப்படையில் தான் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு,…
பெரும்பாலும் “கேஷராஜா” அல்லது “முடி ராஜா” என்று குறிப்பிடப்படுகிறது, பிரிங்ராஜ் பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத முடி பராமரிப்பின் ஒரு மூலக்கல்லாக இருந்து வருகிறார். முடி வீழ்ச்சி, முன்கூட்டிய சாம்பல் மற்றும் உச்சந்தலையில் தொற்றுநோய்களுக்கு இது அதிசயங்களைச் செய்கிறது.நன்மைகள்:மயிர்க்கால்களைத் தூண்டுகிறது மற்றும் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.பொடுகு சிகிச்சையளிக்கிறது மற்றும் உச்சந்தலையில் தொற்றுநோய்களைத் தடுக்கிறது.சாம்பல் நிறத்தை தாமதப்படுத்துகிறது மற்றும் இயற்கை முடி நிறமியை மேம்படுத்துகிறது.எவ்வாறு பயன்படுத்துவது:புதிய பிரிங்ராஜ் இலைகளை தேங்காய் அல்லது எள் எண்ணெயில் வேகவைத்து, வாரத்திற்கு இரண்டு முறை சூடான முடி எண்ணெயாக தடவவும். உலர்ந்த பிரிங்ராஜ் தூளை தயிர் அல்லது அலோ வேரா ஜெல்லுடன் கலப்பதன் மூலம் முடி முகமூடியாக பயன்படுத்தலாம்.
ஸ்ரீநகர்: “மனோஜ் சின்ஹா பதவி உயர்வு பெற்றுவிட்டார். ஆனால், நான் பதவி இறக்கம் செய்யப்பட்டதாக உணர்கிறேன்” என்று பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச முதல்வர் உமர் அப்துல்லா தனது கவலையை தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வலியுறுத்தும் வகையில் அவர் இவ்வாறு பேசியுள்ளார். ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். அவருடன் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதல்வர் உமர் அப்துல்லா, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து செனாப் நதியின் கிளை நதியான ஆஞ்சி ஆற்றின் குறுக்கே, கட்டப்பட்டுள்ள நாட்டின் முதல் கேபிள் ரயில் பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். பின்னர், இப்பாலங்கள் வழியாக…
சென்னை: திருவண்ணாமலை மலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள 1,535 கட்டிடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் அமைந்துள்ள மலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றக் கோரி பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சட்டவிரோத கட்டுமானங்களை கண்டறிந்து அகற்ற, ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில், வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து, உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் மீண்டும் இன்று (ஜூன் 6) விசாரணைக்கு வந்தது. எந்த அனுமதியும் பெறாமல் 1,535 கட்டுமானங்கள் கட்டப்பட்டு உள்ளதாகவும், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குழு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்,…
