சென்னை: “பாஜகவோடு ஒட்டும் இல்லை. உறவும் இல்லை எனக் கூறி வந்த அதிமுக, அப்படியே யூடர்ன் அடித்து கமலாலயம் பக்கம் வண்டியைத் திருப்பியது போலத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்திலும் தன் நிலைப்பாட்டை மாற்றிவிட்டு இன்று வியாக்கியானம் பேசுகிறது,” என்று இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொகுதி மறுசீரமைப்பு எப்போது நடந்தாலும் அதில் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த போதே தெரிவித்தது நான்’ எனச் சொல்லியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. சட்டமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சத்தமே இல்லாமல் கடந்த மார்ச் 25-ம் தேதி டெல்லியில் பழனிசாமி எதற்காகப் போய் இறங்கினார்? டெல்லியில் செய்தியாளர்கள் கேட்ட போது, “பிரத்யோகமான நபரைப் பார்க்க வரவில்லை. டெல்லி அதிமுக அலுவலகத்தைப் பார்க்க வந்தேன்” என ஏன் பொய் சொன்னார்?…
Author: admin
மும்பை: மும்பையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் ஆட்டோ ஓட்டாமலேயே மாதம்தோறும் ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை வருவாய் ஈட்டி வருவதாக சொல்லும் பதிவு ஒன்று நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ராகுல் ரூபானி தனது லிங்க்டுஇன் பக்கத்தில் வெளியிட்ட பகிர்வில், “நான் இந்த வாரம் விசா விண்ணப்பிக்கும் விவகாரம் தொடர்பாக அமெரிக்க தூதரகத்துக்கு சென்றிருந்தேன். அப்போது, பாதுகாப்பு அதிகாரிகள் எனது பையை உள்ளே எடுத்துச் செல்ல முடியாது என்று சொன்னார்கள். அங்கு எந்தவித லாக்கர்களும் இல்லை, பையை என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தேன். அப்போது, அங்கிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் என்னைப் பார்த்து கை அசைத்தார். பையை என்னிடம் தந்துவிட்டுச் செல்லுங்கள். நான் பத்திரமாக பார்த்துக் கொள்கிறேன் என்றார். ஆனால், பையை பார்த்துக் கொள்வதற்கான கட்டணம் ரூ.1000 தர வேண்டும் என்றார். பையை கொடுக்க முதலில் தயக்கமாக…
தலைமுறைகளாக, மக்கள் பட புதிர்களால் ஈர்க்கப்பட்டனர், ஏனெனில் அவை பொழுதுபோக்கு மற்றும் மன சவாலின் சிறப்பு கலவையை வழங்குகின்றன. காட்சி புதிர்களை நிறைவு செய்வது IQ ஐ அதிகரிக்கிறது மற்றும் அவதானிக்கும் திறன்களை மேம்படுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? மறைக்கப்பட்ட அம்சங்கள், விவரங்கள் மற்றும் வடிவங்களை செயலாக்க அவை உங்கள் மூளையில் சிரமத்தை அளிக்கின்றன.இன்றைய பணியை தீர்க்க உங்கள் உள் துப்பறியும் நபரைப் பயன்படுத்த வேண்டும். “புத்தகம்” என்ற சொல் இந்த வசதியான குடும்ப வாழ்க்கை அறையில் எங்காவது நேர்த்தியாக மறைக்கப்பட்டுள்ளது, இது புத்தகங்கள், நாய்கள் மற்றும் ஓய்வு ஆகியவற்றால் நிரம்பியுள்ளது. வெறும் ஐந்து வினாடிகளில், நீங்கள் அதைக் கண்டுபிடிக்க முடியுமா? இந்த ப்ரைண்டீசரை மிகவும் புலனுணர்வு மனதினால் மட்டுமே தீர்க்க முடியும். நீங்கள் தயாரா? வாழ்க்கை அறையில் இந்த இனிமையான அமைப்பை உற்று நோக்கவும். பெற்றோர்கள் கவச நாற்காலிகளில் படிக்கும்போது குடும்ப செல்லப்பிராணி அமைதியாகப் பார்க்கிறது, அவர்களின் மகள் தரையில்…
புதுடெல்லி: ‘நீங்கள் என்னை தப்பியோடியவன் என்று கூறலாம்… ஆனால் நான் மோசடிக்காரன் அல்ல’ என்று இந்தியாவில் இருந்து தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். ரூ.9,000 கோடிக்கு மேல் பணமோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் தேடப்படும் குற்றவாளியான விஜய் மல்லையா, கடந்த 2016-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பி ஓடினார். இங்கிலாந்தில் உள்ள அவர், இந்தியாவில் தனக்கு எதிராக இருக்கும் வழக்குகள் குறித்தும், தனது சட்டப் போராட்டங்கள், தனது விமான நிறுவனத்தின் வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் இருந்து தான் வெளியேறியது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள விஜய் மல்லையா, “மார்ச் 2016-க்குப் பிறகு நான் இந்தியாவுக்கு திரும்பவில்லை. இதற்காக நீங்கள் என்னை தப்பியோடியவர் என்று கூறுங்கள். ஆனால், நான் ஓடிப்போகவில்லை. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயணம் காரணமாக இந்தியாவிலிருந்து புறப்பட்டுச் சென்றேன். நான் இந்தியா திரும்பாததற்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. நீங்கள் என்னை தப்பியோடியவர் என்று அழைக்க…
புதுச்சேரி: காங்கிரஸ் ஆட்சி வந்தவுடன் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு தரக்கூடிய இன்சூரன்ஸ் திட்டத்தை அறிவிப்போம் என புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில், மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் முன்னிலையில் வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் பலர் இன்று இணைந்தனர். புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த இணைப்பு விழாவில் வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் சட்டப்பேரவை துணைத் தலைவர் எம்என்ஆர். பாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. பேசியது: “புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் கடைகள் ஒதுக்க வேண்டும். ஆனால் அதனை ஏலம் விடாமல் நிறுத்தி வைத்தனர். ஒதியஞ்சாலை அண்ணா திடலில் கடைகள் கட்டி முடிக்கப்படவில்லை. ஆனால் ஆளும் கட்சிக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் கடை ஒதுக்கீடு செய்து சாவி கொடுத்துள்ளனர். தற்போது வியாபார சங்கத் தலைவராக உள்ள எம்எல்ஏ-யே 4 பேரை அனுப்பி கடைகளை…
நாம் வளரும்போது, உண்மையிலேயே முக்கியமானது என்ன என்பதை வாழ்க்கை அமைதியாக நமக்குக் கற்பிக்கிறது. இந்த பாடங்கள் பாடப்புத்தகங்களில் காணப்படவில்லை. அவை அனுபவம், பிரதிபலிப்பு மற்றும் நேரத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இளைஞர்கள் ஆற்றலைக் கொண்டுவருகையில், வயது ஞானத்தைத் தருகிறது. தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் உலகில், இந்த காலமற்ற உண்மைகள் தான் அடித்தளமாக இருக்கவும் வளரவும் உதவுகின்றன. நீங்கள் உங்கள் 20 களில் அல்லது 70 களில் இருந்தாலும், இந்த நுண்ணறிவுகள் தெளிவு, நோக்கம் மற்றும் அமைதியை வழங்கும். பலர் வாழ்க்கையில் தங்கள் பயணத்தில் கண்டுபிடிக்கும் சில தங்கப் பாடங்கள் இங்கே உள்ளன, மேலும் நீங்கள் இன்று அரவணைக்க முடியும், மேலும் அர்த்தமுள்ளதாகவும் மனதுடனும் வாழ.
பாட்னா: பிஹாரில் அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 85 சதவீத இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் புதிய மசோதாவை நிறைவேற்ற சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டக் கோரி முதல்வர் நிதிஷ் குமாருக்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் கடிதம் எழுதியுள்ளார். மேலும், இந்தக் கோரிக்கையை நிறைவேற்றத் தவறினால் மிகப் பெரிய போராட்டம் மேற்கொள்ளப்போவதாக அவர் எச்சரித்துள்ளார். இது குறித்து தேஜஸ்வி யாதவ் எழுதியுள்ள கடிதத்தில், ‘மொத்த இடஒதுக்கீட்டை 85 சதவீதமாக உயர்த்தும் மசோதாவை சட்டமன்றம் நிறைவேற்றி, அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்ப்பதற்கான முன்மொழிவை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். இந்த மசோதா அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டால் நீதித்துறை மறு ஆய்விலிருந்து பாதுகாக்கப்படும். முந்தைய மகாகத்பந்தன் அரசாங்கத்தில் எனது பதவிக் காலத்தில், 2023-ஆம் ஆண்டு சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, இது 75 சதவீத இடஒதுக்கீடு கட்டமைப்புக்கு அடித்தளம் அமைத்தது. இதில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் இபிசிக்கு 65…
சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மநீம தலைவர் கமல்ஹாசன் தனது வேட்புமனுவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (ஜூன் 6) தாக்கல் செய்தார். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மாநிலங்களவை எம்பிக்கள் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக எம்பி அன்புமணி, அதிமுக எம்பி சந்திரசேகரன், மதிமுக எம்பி வைகோ ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் இருந்து 6 புதிய மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 2ம் தேதி தொடங்கியது. மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்கள் திமுக வேட்பாளர்களுக்கும், ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி, தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 6) மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும்…
மசாபா பாணிக்காக கஷ்டப்படுவதில்லை. அவள் நைன்களுக்கு ஆடை அணிந்தபோதும், அவளது தோற்றத்தில் ஒரு எளிமை இருக்கிறது, அவள் ஒரு போர்டு ரூம், ஒரு புருன்சிற்காக அல்லது ஒரு படப்பிடிப்புக்கு மாறாமல் எளிதாக நடக்க முடியும். கோட்டன்ஸ், மல்ஸ் மற்றும் கைத்தறி போன்ற சுவாசிக்கக்கூடிய துணிகளை அவர் வென்றார், குறிப்பாக அவரது சாதாரண உடைகளில். பெரிதாக்கப்பட்ட குர்தாக்கள், திரவ ஆடைகள் மற்றும் பாயும் ஒருங்கிணைப்புகள் அவளது கடமை தோற்றத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன.களியாட்டத்திற்கு எளிதாக முன்னுரிமை அளிப்பதன் மூலம், நவீன இந்தியப் பெண்களுக்கு ஆடம்பரத்தின் அர்த்தம் என்ன என்பதை அவர் மீண்டும் எழுதுகிறார். வலிமிகுந்த குதிகால் அல்லது தோல்-இறுக்கமான பொருத்தத்திற்கு பதிலாக, மசாபாவின் செய்தி தெளிவாக உள்ளது: நம்பிக்கை மட்டுமே சரியாக பொருந்த வேண்டும். இந்த பாடம் குறிப்பாக அச om கரியத்தை நேர்த்தியுடன் சமன் செய்யும் உலகில் விடுதலையாகும்.
பாட்னா: “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வார்த்தைகள், பாகிஸ்தானின் வார்த்தைகளை ஒத்திருக்கிறது. அவர் தேசத்தை மதிக்கவில்லை” மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிரிராஜ் சிங், “ராகுல் காந்தி இந்தியாவின் வீரத்தை எதிர்த்தார். அவர் ராணுவத்தின் துணிச்சல் குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், உலகளவில் இந்திய ராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தார். பிஹார் பொதுமக்கள் அவரை எதிர்ப்பார்கள், ராணுவத்தையோ அல்லது தேசத்தையோ மதிக்காத ஒருவருக்கு அவர்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்? ராகுல் காந்தியின் நாக்கு, பாகிஸ்தான் போன்றது. அவர் தேசத்தை மதிக்கவில்லை. இப்போது பிரதமர் மோடி அவமதிக்கப்படவில்லை. 1971-ல் ராணுவம் வென்றதா அல்லது இந்திரா காந்தி ஜெயித்தாரா? ஜெயித்தது ராணுவம்தான். அப்போது வாஜ்பாய் எதிர்க்கட்சியில் இருந்தார். அவர், “இப்போது பாரதம் மட்டுமே இருக்கிறது, வேறு எந்த கட்சியும் இல்லை” என்றார். இந்த பயனற்ற நபர் (ராகுல் காந்தி) நாட்டின் துணிச்சலையும் ராணுவத்தையும் கேலி செய்கிறார்.…
