Author: admin

திண்டிவனம்: ராமதாஸ் – அன்புமணி மோதல் விவகாரம் குறித்து பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், “விரைவில் இரு தரப்பிலும் சமாதானம் ஏற்படும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை பாமக நிறுவனர் ராமதாஸை, கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் தலைவர் பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். பின்னர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறியது: “ராமதாஸும், அன்புமணியும் 45 நிமிடங்கள் பேசினர். இது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இருவரும் சந்திக்கவில்லை என்று தவறான தகவலைப் பரப்புகின்றனர். தற்போது ராமதாஸ் தெம்பாக இருக்கிறார். இருவரும் நல்ல செய்தியை சொல்வார்கள். உட்கட்சி பிரச்சினையை வெளியே பேசுவதே தவறு. கட்சி என்பது குடும்பம். குடும்பப் பிரச்சினையை வெளியே பேசக்கூடாது. ராமதாஸும் அன்புமணியும் 45 நிமிடம் பேசியுள்ளனர். இவருவம் சந்தித்து பேசவில்லை என திட்டமிட்டு தவறான தகவலை பரப்புகின்றனர். வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். ராமதாஸை மரியாதை நிமித்தமாக ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்துப் பேசியுள்ளார்.…

Read More

புதுடெல்லி: குவஹாதியின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி) ஆராய்ச்சியாளர்கள், களிமண் துகள்கள் SARS-COV-2 முன்னிலையில் வித்தியாசமாக தொடர்புகொள்வதைக் கண்டறிந்துள்ளனர்-கோவ் -19 ஐ ஏற்படுத்தும் வைரஸ்-ஒரு எளிய, மலிவு சோதனை மாற்றீட்டை உருவாக்க அவர்கள் பயன்படுத்திய கண்டுபிடிப்பு.வளர்ந்த அணுகுமுறை களிமண்ணின் துகள்கள் வைரஸைக் கொண்ட உப்பு நீர் கரைசலில் எவ்வளவு விரைவாக குடியேறுகின்றன என்பதைப் பார்க்கிறது.”வைரஸின் முன்னிலையில் களிமண்ணின் இடை-துகள் சக்திகளில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, களிமண்-எலக்ட்ரோலைட் அமைப்பின் வண்டல் வீதம் மாறியது” என்று ஆசிரியர்கள் அப்ளைடு களிமண் அறிவியல் இதழில் வெளியிட்ட ஆய்வில் எழுதினர்.இந்த கண்டுபிடிப்புகள் SARS-COV-2 ஐக் கண்டறிய தற்போது பயன்படுத்தப்படும் சிக்கலான, விலையுயர்ந்த முறைகளுக்கு “எளிய மற்றும் மலிவு” மாற்றீட்டை வழங்குகின்றன என்று குழு தெரிவித்துள்ளது.”பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (பி.சி.ஆர்) போன்ற தற்போதைய முறைகள் மிகவும் உணர்திறன் வாய்ந்தவை, ஆனால் நேரத்தை எடுத்துக்கொள்வது மற்றும் கனரக உபகரணங்கள் தேவை. ஐ.ஐ.டி குவஹதிசிவில் இன்ஜினியரிங் துறை, கூறினார்.மேலும், தற்போது…

Read More

சிவகாசி: சிவகாசி காரனேசன் சந்திப்பில் பட்டாசுத் தொழிலாளியின் உழைப்பைப் பிரதிபலிக்கும் வகையில் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நினைவுச் சிலையை அமைச்சர் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்டம் சார்பில் பட்டாசுத் தொழிலாளர்களின் உழைப்பு மற்றும் தியாகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பட்டாசு தொழிலாளியின் நினைவு சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக விருதுநகர் சாலையில் நகரின் நுழைவுப் பகுதியான காரனேசன் சந்திப்பில் இடம் தேர்வு செய்யப்பட்டு சிலை உருவாக்க ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பட்டாசுத் தொழிலாளி நினைவுச்சிலையை அமைச்சர் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை மாலை திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், மேயர் சங்கீதா, சார் ஆட்சியர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சிவகாசி அறிவுசார் மையத்தில் காமிக்ஸ் நூலகம், சிவகாசி அரசுக் கல்லூரியில் ரூ.80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கலையரங்கம் ஆகியவற்றை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்துவைத்தார். தொடர்ந்து பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த…

Read More

மதுரை: மதுரையில் அங்கன்வாடியில் குழந்தைக்கு வழங்கிய கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி இருந்ததால், சம்பந்தப்பட்ட மைய பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகரில் செயல்படும் அங்கன்வாடியில் அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் படித்து வருகின்றனர். வழக்கம்போல் வெள்ளிக்கிழமை காலை சத்துமாவு மூலம் தயாரிக்கப்பட்ட கொழுக்கட்டைகள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதில் ஒரு குழந்தைக்கு வழங்கப்பட்ட கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. கொழுக்கட்டையை சாப்பிடுவதற்கு முன்பே தெரியவந்ததால் பாதிப்பு ஏதுமில்லை. இருப்பினும், அக்குழந்தையை திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதிக்கப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட குழந்தையின் தாயார், பணியில் இருந்த அங்கன்வாடி மைய பணியாளர் கோமதி என்பவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் முறையாக பதிலளிக்காமல் அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அக்குழந்தையின் தாயார், மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் மாவட்ட திட்ட அலுவலகத்தில் புகார் செய்தார். அதனடிப்படையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.…

Read More

புதுடெல்லி: கனடாவில் நடைபெறவுள்ள ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். கனடா பிரதமரின் அழைப்பை ஏற்றுக் கொண்டதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “கனடா பிரதமர் மார்க் கார்னி தொலைபேசியில் பேசினார். கனடா பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு வாழ்த்து கூறினேன். ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க அவர் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டேன். கனடாவும் இந்தியாவும் மிகப் பெரிய ஜனநாயக நாடுகள். இரு நாடுகளின் மக்கள் இடையே ஆழமான உறவு நீடிக்கிறது. கனடாவும் இந்தியாவும் பரஸ்பர நலன்களின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயல்படுகின்றன. ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மார்க் கார்னியை சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு…

Read More

மதுரை: மதுபான கொள்முதல், விற்பனை விவரங்களை டாஸ்மாக் வலைதளத்தில் பதிவேற்றக் கோரி வழக்கில், அரசு விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “ஒவ்வோர் ஆண்டும் டாஸ்மாக் வலைதளத்தில் வெளியிடப்படும் ஆண்டறிக்கையில் கொள்முதல் நிறுவனங்களின் விவரம், அதிக அளவில் விற்பனையான மதுபானத்தின் விவரம், விலை, உரிமக் கட்டணம், சிறப்புக் கட்டணம், வருவாய் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கும். ஆனால், 2016-2017-க்குப் பிறகு ஆண்டறிக்கைகள் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இதுகுறித்து ஆய்வு செய்தபோது, சில மது வகைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது, ரசீது வழங்காமல் விற்பனை செய்வது, குறிப்பிட்ட சில நிறுவனங்களிடமிருந்து மட்டும் அதிக மது வகைகள் கொள்முதல் செய்யப்படுவது போன்ற விவரங்கள் தெரியவந்தன. டாஸ்மாக் நிறுவனம் 11 நிறுவனங்களிடமிருந்து 125 வகையான மது வகைகளையும், 7 நிறுவனங்களிடமிருந்து 38 வகையான பீரையும் கொள்முதல் செய்ய…

Read More

சென்னை: அரசுப் பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டின் பராமரிப்பு செலவினங்களுக்காக முதல்கட்டமாக ரூ.97.95 கோடி நிதியானது தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழு 2025-26-ம் கல்வியாண்டுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின்கீழ் தொடர் செலவினத்துக்காக அரசுப் பள்ளிகளுக்கு மானியம் வழங்க பரிந்துரை செய்துள்ளது. எனவே, முதல்கட்டமாக 50 சதவீத தொகை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்குவதற்காக தற்போது நிதி மாவட்டங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தமிகழம் முழுவதும் உள்ள 37,476 அரசுப் பள்ளிகளுக்கும் ரூ.97.95 கோடி நிதி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை முன்னுரிமை அடிப்படையில் செலவு செய்ய வேண்டும். ஆசிரியர்களின் கையடக்கக் கணினிக்கு…

Read More

மதுரை: தமிழகம் முழுவதும் நகரம், கிராமங்களில் செயல்பட்டு வரும் முருகன், ஐயப்பன், ஓம்சக்தி, சாய்பாபா பக்தர்கள் குழுக்களை சந்தித்து மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு பாஜகவினர் அழைப்புவிடுத்து வருகின்றனர். மதுரையில் இந்து முன்னணி சார்பில் ஜூன் 22-ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநாட்டில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் மத்திய அமைச்சர்கள், பாஜக தேசிய நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர். மாநாட்டு அரங்கில் மாநாட்டுக்கு 6 நாட்களுக்கு முன்பே அறுபடை வீடுகளின் மாதிரிகள் அமைக்கப்பட்டு அந்தந்த வீடுகளில் அருள்பாலிப்பது போல் முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்த 6 நாளும் அறுபடை வீடுகளின் மாதிரியை பார்வையிட வரும் பக்தர்களுக்கு பூஜைகள் செய்யப்பட்டு பிரசாதம் வழங்கி பக்தர்களின் வருகையை அதிகரிக்க…

Read More

சென்னை: “2027 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மத்திய அரசு மேற்கொண்டால், தென்னகத்தின் ஜனநாயக வலிமை மதிப்பில்லாத அளவுக்குக் குறைந்துவிடும். அதிமுக போன்ற அடிமைத் துரோகிகள் தங்களின் சுயநலத்துக்காக பாஜக முன் மண்டியிட்டாலும், திமுகவின் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணிவகுக்கும். நம் மாநிலம் வளர்ச்சியடைந்துள்ள ஒரே காரணத்துக்காகத் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் நிகழும் தாமதமும், அதைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் தொகுதி மறுவரையறையும் தற்செயலானவை அல்ல. நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது. மத்திய பாஜக அரசு சென்சஸ் மற்றும் தொகுதி மறுவரையறையைச் செயல்படுத்தவுள்ள போக்கு வஞ்சகம் நிறைந்தது. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வளர்ச்சியடைந்த தென்மாநிலங்கள் தண்டிக்கப்பட இருக்கின்றன. அதேவேளையில், மக்கள்தொகைக் கட்டுப்பாட்டைப் பல பத்தாண்டுகளாகக் காற்றில் பறக்கவிட்ட மாநிலங்களோ நாடாளுமன்றத்தில்…

Read More

நிர்ஜலா ஏகாதாஷியின் கதை மிகவும் பிரபலமான ஒன்றாகும், மேலும் பாண்டவர்களை உள்ளடக்கியது. மைட்டி பாண்டவரான பீம், வேகமாக வைத்திருக்க விரும்பினார் என்று நம்பப்படுகிறது, ஆனால் அவரது பசியால் முடியவில்லை. அவர் உணவை நேசித்தார், எகாதாஷி மீது கூட உண்ணாவிரதம் இருப்பது மிகவும் கடினம். அவரது குடும்பத்தின் மற்றவர்கள் ஒவ்வொரு ஏகாதாஷியையும் பக்தியுடன் கவனித்தாலும், பசியுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை பீம் தாங்க முடியவில்லை, தாகமாக இருக்கட்டும்.ஆனால் அவர் வெளியேறி குற்றவாளி என்று உணர்ந்தபோது, ​​அதைப் பற்றிய தனது சோகத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு முனிவரை அணுகினார். 24 ஏகாதாஷிகளுக்கும் சக்தி, தகுதி மற்றும் ஆசீர்வாதங்கள் இருப்பதால், ஒரு வருடத்தில் ஒரு வருடத்தில் ஒரு எகாதாஷி வேகமாக, நிர்ஜாலா ஏகாதாஷி அவதானிக்க வேண்டும் என்று பிஹிமுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Read More