ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டு உள்ள உலகின் மிக உயரமான பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் பக்கால் மற்றும் கவுரி பகுதிகளுக்கு இடையே சிந்து நதியின் துணை நதியான செனாப் நதியின் குறுக்கே புதிய பாலம் கட்ட கடந்த 2002-ம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2004-ம் ஆண்டில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் பாலத்தின் உறுதித்தன்மையில் கேள்வி எழுந்ததால் கடந்த 2009-ம் ஆண்டில் பணிகள் நிறுத்தப்பட்டன. இதன்பிறகு கடந்த 2010-ம் ஆண்டில் செனாப் நதியில் இரும்பு கம்பிகளால் பாலம் கட்டும் பணி தொடங்கியது. வடக்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் வருகிறது. எனினும் மலைப் பகுதி என்பதால் செனாப் ரயில் பாலம் கட்டும் பணி கொங்கன் ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு பாலம் கட்டும் பணி வேகம்…
Author: admin
பெங்களூருவில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு(ஆர்சிபி) அணி வெற்றி கொண்டாட்ட நிகழ்வின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த வழக்கில், போலீஸார் ஆர்சிபி அணியின் நிர்வாகி நிகோல் சோசலே, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த டிஎன்ஏ நிறுவனத்தின் துணை தலைவர் சுனில் மேத்யூ உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி அணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் 4-ம் தேதி வெற்றி விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றதால் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். 64 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹா தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை கர்நாடக அரசு அமைத்துள்ளது. இந்நிலையில் கப்பன் பூங்கா போலீஸார், ஆர்சிபி அணிக்கு வெற்றி விழா ஏற்பாடு செய்த ஆர்சிபி நிர்வாகம், கர்நாடக மாநில கிரிக்கெட்…
பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு தமிழக முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழகம் உட்பட நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தி வருமாறு: முதல்வர் மு.க.ஸ்டாலின்: தியாகத்தையும் பகிர்ந்துண்ணும் பண்பையும் போற்றும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். இஸ்லாமியர்களின் இருபெரும் திருநாள்களில் ஒன்று பக்ரீத். புத்தாடை உடுத்தி, உணவை வறியவர்க்கு ஒரு பகுதியையும், நண்பர்களுக்கு ஒரு பகுதியையும் பகிர்ந்தளித்துக் கொண்டாடும் பெருநாள். இஸ்லாமிய மக்களுக்காக இட ஒதுக்கீடு, கல்வி உதவித்தொகை, சென்னை நங்கநல்லூரில் ஹஜ் இல்லம் என அவர்களின் சமூக – கல்வி – பொருளாதார மேம்பாடு மற்றும் உரிமைகளுக்காகத் தொடர்ந்து பணியாற்றும் சகோதர உணர்வோடு அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கும் எனது அன்பான பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக பொதுச்செயலாளர்…
மும்பை: வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.5 சதவீதமாக குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனால், வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் 2 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு கூட்டம் (எம்பிசி)கடந்த 4-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் குறைத்து 5.5 சதவீதமாக நிர்ணயிக்க ஒருமனதாக ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. பணவீக்கம் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியுள்ளதாவது: நாட்டின் முக்கிய 5 துறைகளின் நிதிநிலை குறிப்பு வலுவான நிலையில் இருப்பது மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இந்திய பொருளாதாரம் மகத்தான வாய்ப்புகளை வழங்குகிறது. சர்வதேச பொருளாதாரம் பலவீனமான நிலையில்…
மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட 4 வேட்பாளர்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையிலும், அதிமுக வேட்பாளர்கள் 2 பேர் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி முன்னிலையிலும் நேற்று வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுகவின் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவின் சந்திரசேகரன் ஆகிய 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் ஜூலை 27-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 புதிய எம்.பி.க்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் அதிகாரியாக தமிழக சட்டப்பேரவை செயலக கூடுதல் செயலர் சுப்பிரமணியன், உதவி தேர்தல் அதிகாரியாக பேரவை செயலக இணை செயலர் கே.ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்து மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்ய வேண்டும். அதன்படி, தமிழக சட்டப்பேரவையில், எம்எல்ஏக்கள்…
சமீபத்திய ஆய்வின்படி, கவனத்துடன் கேட்கும் ஒருவர் அறிவாற்றல் பின்னடைவை கணிசமாக அதிகரிக்கக்கூடும். எளிதில் கிடைக்கக்கூடிய கேட்போர் கொண்ட பெரியவர்கள் வயது தொடர்பான மூளை அளவு இழப்புடன் கூட சிறந்த அறிவாற்றல் செயல்பாட்டை நிரூபித்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த சமூக ஆதரவு அறிவாற்றல் வயதானதை மெதுவாக்கும் மற்றும் அல்சைமர் அறிகுறிகளை தாமதப்படுத்தக்கூடும். ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு மூளையை கூர்மையாக வைத்திருப்பது முக்கியமானது. அறிவாற்றல், நினைவகம் மற்றும் உணர்ச்சி ஒழுங்குமுறை ஆகியவற்றிலிருந்து, நாம் தினமும் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதில் ஆரோக்கியமான மூளை முக்கிய பங்கு வகிக்கிறது. மூளை ஆரோக்கியத்தை பராமரிக்க நாம் அடிக்கடி புதிர்கள், உடற்பயிற்சி மற்றும் உணவுக்கு திரும்பும்போது, விஞ்ஞானிகள் இப்போது மிகவும் எளிமையான ஒன்றைக் கூறுகிறார்கள், ஆனால் பெரும்பாலும் கவனிக்கப்படவில்லை, அவ்வளவு சக்திவாய்ந்ததாக இருக்கலாம்: கேட்கும் ஒருவரைக் கொண்டிருப்பது! ஜமா நெட்வொர்க்கில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, நீங்கள் பேச வேண்டியிருக்கும் போது, மேம்பட்ட அறிவாற்றல் பின்னடைவுடன், உங்கள் பேச்சைக் கேட்க நீங்கள் நம்பக்கூடிய…
2023 இல் 90 நாட்களுக்கு ஒவ்வொரு 90 விநாடிகளிலும் பூமி நடுங்கியது செப்டம்பர் 2023 இல், உலகெங்கிலும் உள்ள நில அதிர்வு கண்காணிப்பு நிலையங்கள் ஒரு வினோதமான, தாள சமிக்ஞையை பதிவு செய்யத் தொடங்கின. ஒவ்வொரு 90 விநாடிகளிலும், பூமி துடிப்புக்கு -நேர் ஆனால் விடாமுயற்சியுடன் தோன்றியது. இந்த நிகழ்வு ஒன்பது நாட்கள் நீடித்தது மற்றும் ஒரு மாதத்திற்குப் பிறகு திரும்பியது, விஞ்ஞானிகள் குழப்பமடைந்தனர். நடுக்கம் விளக்க பூகம்பம், எரிமலை வெடிப்பு அல்லது வெடிப்பு எதுவும் இல்லை. மர்மத்தின் ஆதாரம் தொலைதூரத்தில் காணப்பட்டது டிக்சன் ஃபோர்ட் கிழக்கு கிரீன்லாந்தில். அந்த நேரத்தில், நீர்மூழ்கிக் கப்பல் எரிமலை நடவடிக்கைகள் முதல் இரகசிய இராணுவ சோதனைகள் வரை கோட்பாடுகள் இருந்தன.இப்போது, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் அடுத்த தலைமுறை செயற்கைக்கோள் மற்றும் இயந்திர கற்றல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முதல் கான்கிரீட் விளக்கத்தை வழங்கியுள்ளனர். அவர்கள் வெளிப்படுத்தியவை பருப்பு வகைகளின் காரணம்…
பெங்களூருவில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட விழாவின்போது 11 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கிரிக்கெட் வீரர் விராட் கோலி மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (ஆர்சிபி) முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றதை கொண்டாடுவதற்காக பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தைச் சேர்ந்த எச்.எம். வெங்கடேஷ் என்ற சமூக ஆர்வலர் ஒருவர், சின்னசாமி ஸ்டேடியத்திற்கு அருகில் உள்ள பெங்களூரு கப்பன் பார்க் காவல் நிலையத்தில் விராட் கோலி மீது புகார் அளித்துள்ளார். இதற்கு பதிலளித்த கப்பன் பார்க் போலீசார், புகார் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் பரிசீலிக்கப்படும் என்றும், விசாரணையின் போது அது சரிபார்க்கப்படும் என்றும் தெரிவித்தனர். ஏற்கனவே இந்த விவகாரத்தில் ஆர்சிபி அணியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர்…
சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஐ.எஸ்.இன்பதுரை மற்றும் ம.தனபால் ஆகியோர் தங்களது வேட்புமனுக்களை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று (ஜூன் 6) தாக்கல் செய்தனர். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக மாநிலங்களவை எம்பிக்கள் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக எம்பி அன்புமணி, அதிமுக எம்பி சந்திரசேகரன், மதிமுக எம்பி வைகோ ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்தச் சூழலில் தமிழகத்தில் இருந்து 6 புதிய மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்திருந்தது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 2ம் தேதி தொடங்கியது. மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்கள் திமுக வேட்பாளர்களுக்கும், ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு இடமும்…
இஸ்பேஸ், இன்க் வழங்கிய இந்த படம். சந்திரனைச் சுற்றி வரும் பின்னடைவு லேண்டர் (AP புகைப்படம்) ஒரு ஜப்பானிய தனியார் சந்திர லேண்டர் வெள்ளிக்கிழமை சந்திரனுக்கு வம்சாவளியின் போது தகவல்தொடர்புகளை இழந்தார், அதன் தலைவிதியை தெளிவற்றதாக விட்டுவிட்டார். டோக்கியோவை தளமாகக் கொண்ட இஸ்பேஸ், லேண்டர், பின்னடைவு என்று பெயரிடப்பட்டது, வெற்றிகரமாக சந்திர சுற்றுப்பாதையில் இருந்து புறப்பட்டது, ஆனால் மணிநேர வம்சாவளியில் தொடர்பு இழந்தது என்பதை உறுதிப்படுத்தியது.முக்கியமான தருணங்களில் நிறுவனத்தின் லைவ்ஸ்ட்ரீம் திடீரென துண்டிக்கப்படுகிறது. ஒரு வர்ணனையாளர் ஜப்பானிய மொழியில் தரையிறங்குவதை உறுதிப்படுத்துவது இன்னும் குறைவு என்று கூறினார், ஏனெனில் மிஷன் கட்டுப்பாடு மீண்டும் இணைப்பதற்கான முயற்சிகளைத் தொடர்ந்தது. “எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை” என்று ஜப்பானிய மொழியில் வர்ணனையாளர்களில் ஒருவர் கூறினார், மிஷன் கட்டுப்பாடு “தொடர்ந்து லேண்டருடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கும்” என்று அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தோல்வியுற்ற பணியைத் தொடர்ந்து, சந்திரனில் இறங்குவதற்கான இரண்டாவது முயற்சி இது. நிறுவனம்…
