பாதுகாப்புக்காக சரியான செல்லப்பிராணி நாயைத் தேர்ந்தெடுக்கும் போது, லாப்ரடோர் ரெட்ரீவர்ஸ் மற்றும் ஜெர்மன் மேய்ப்பர்கள் பெரும்பாலும் பிரபலமான இனங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர் – ஆனால் மிகவும் மாறுபட்ட காரணங்களுக்காக. லாப்ரடோர் மற்றும் ஜெர்மன் ஷெப்பர்ட் இருவரும் மிகவும் புத்திசாலித்தனமானவர்கள், விசுவாசமுள்ளவர்கள், பயிற்சியளிக்க எளிதானவர்கள் என்றாலும், இரண்டு நாய் இனங்கள் வெவ்வேறு இயல்பு மற்றும் பலங்களைக் கொண்டுள்ளன, அவை அவற்றை ஒதுக்கி வைக்கின்றன. உதாரணமாக: ஆய்வகங்கள் அவற்றின் நட்பு மற்றும் மக்களை மகிழ்விக்கும் தன்மைக்கு பெயர் பெற்றவை, அதே நேரத்தில் ஜெர்மன் மேய்ப்பர்கள் தங்கள் பாதுகாப்பு உள்ளுணர்வு மற்றும் ஒழுக்கங்களுக்கு பிரபலமானவர்கள். எனவே, எது சிறந்த காவலர் நாயை உருவாக்குகிறது? பிரபலமான இரண்டு செல்ல நாய் இனங்களுக்கிடையில் சில முக்கியமான வேறுபாடுகளை இங்கே பட்டியலிடுகிறோம், அவை எம் பற்றிய நியாயமான யோசனையைத் தரும் மற்றும் உங்கள் தேவைகளுக்கு ஏற்ப சரியான இனத்தைத் தேர்வுசெய்ய உதவும்:
Author: admin
போபால்: மத்திய பிரதேச அரசில் 50 ஆயிரம் `கோஸ்ட்’ ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் அங்கு ரூ.230 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பணியில் போலியாக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்கள் கோஸ்ட் ஊழியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். மத்தியப் பிரதேச மாநில அரசு ஊழியர்களில் சுமார் 50,000 பேருக்கு, அதாவது அங்குள்ள ஒட்டுமொத்த அரசு ஊழியர்களின் எண்ணிக்கையில் சுமார் 9 சதவீதம் பேருக்குக் கடந்த ஆறு மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படவில்லை. ஆனால், இதற்காக அந்த ஊழியர்கள் எந்தவிதப் போராட்டத்தையும் நடத்தவில்லை என்பது ஆச்சரியமான விஷயமாக உள்ளது. மேலும், இது ஒரு மர்மமான விஷயமாக பார்க்கப்படுகிறது. மேலும், இது மத்தியப் பிரதேச வரலாற்றில் மிகப்பெரிய சம்பள மோசடியாக இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த `கோஸ்ட்’ ஊழியர்களின் ஆவணங்கள் எல்லாம் உரிய முறையில் இருக்கின்றன. அவர்களின் பெயர், பணியாளர் குறியீடு உள்ளிட்டவை அரசு ஆவணங்களில் உள்ளன.…
புதுச்சேரி: புதுச்சேரி அரசு வருவாயை அதிகரிக்க மதுபானங்களைத் தொடர்ந்து பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. புதுவை அரசு ஏற்கெனவே முதியோர் உதவித்தொகையை ரூ.2 ஆயிரத்து 500- ஆக உயர்த்தியுள்ளது. குடும்பத் தலைவிகளின் மாத உதவித்தொகை ரூ. 2 ஆயிரமாகவும், மஞ்சள் கார்டுக்கு ரூ.1,000-மாகவும் உதவித்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை நிறைவேற்ற அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 500 கோடி கூடுதல் செலவாகும். இதற்கு வருவாயை உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி மதுபானங்களுக்கான கலால்வரியை அரசு ஏற்கெனவே உயர்த்தியது. தற்போது பத்திரப்பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. புதுவையில் நிலம், மனை விற்கும்போது 10 சதவீத முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த வருவாயை பத்திர பதிவு துறை, உள்ளாட்சி துறை தலா 5 சதவீதம் பிரித்துக்கொள்ளும். கணினி நகல் பெற கட்டணம்: ஒவ்வொரு ஆண்டும் நிலம், வீட்டு மனை வழிகாட்டு மதிப்பு வெளியிடப்படும். இந்த நில வழிகாட்டி மதிப்பு 1.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி…
சென்னை: தமிழக ஐடிஐ-க்களில் மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில் சோலார் திறன் மேம்பாட்டு மையங்களை அமைப்பதற்கான திட்டத்தில் டாடா பவர் நிறுவனமும் தமிழ்நாடு அரசும் கையெழுத்திட்டுள்ளன. மாநிலத்தில் பசுமை எரிசக்தி துறையில் மாணவர்களின் திறன் மேம்பாட்டை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, மாநிலத்தில் உள்ள ஐடிஐ.க்களில் சோலார் திறன் மேம்பாட்டு மையங்களை அமைப்பதற்காக டாடா பவர் அதன் திறன் மேம்பாட்டு பிரிவான டிபிஎஸ்டிஐ மூலம் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகத்துடன் (டிஇடி) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, முதல்கட்டமாக 4 சோலார் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் திருநெல்வேலி பேட்டை, தூத்துக்குடி, சாத்தூர் மற்றும் விருதுநகரில் உள்ள அரசு ஐடிஐ-க்களில் அமைக்கப்பட உள்ளன. இந்த முயற்சியின் மூலம் சூரிய ஆற்றலிலும், காற்றாலை மற்றும் பசுமை ஹைட்ரஜன் தொடர்புடைய துறைகளிலும் ஐடிஐ மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி கிடைக்கும். கூடுதல் பிராந்திய திறன் தேவையை அரசு…
டம்பல்ஸின் பல நன்மைகளில் ஒன்று அவற்றின் பல்துறைத்திறன் ஆகும், இது பரந்த அளவிலான பயிற்சிகளைச் செய்ய உங்களை அனுமதிக்கிறது. டம்பல்ஸின் பல நன்மைகளில் ஒன்று அவற்றின் பல்துறைத்திறன் ஆகும், இது பரந்த அளவிலான பயிற்சிகளைச் செய்ய உங்களை அனுமதிக்கிறது. பயிற்சி உலகிற்கு ஒரு சிறந்த அறிமுகம் டம்பல் பயிற்சிகளால் வழங்கப்படுகிறது. இந்த உடற்பயிற்சிகளும் தசையை வளர்க்கவும், பல வழிகளில் உங்கள் வலிமையை மேம்படுத்தவும் உதவும். எடுத்துக்காட்டாக, ஒரு இயந்திரத்தை வேலை செய்ய பயன்படுத்துவது ஒரு பெரிய தசை பகுதியை மட்டுமே ஈடுபடுத்தும்; மறுபுறம், டம்பல்ஸைப் பயன்படுத்துவது மிகவும் மாறுபட்ட வொர்க்அவுட்டை வழங்கும். இந்த உடற்பயிற்சிகளும் தசையை வளர்க்கவும், பல வழிகளில் உங்கள் வலிமையை மேம்படுத்தவும் உதவும். எடுத்துக்காட்டாக, ஒரு இயந்திரத்தை வேலை செய்ய பயன்படுத்துவது ஒரு பெரிய தசை பகுதியை மட்டுமே ஈடுபடுத்தும்; மறுபுறம், டம்பல்ஸைப் பயன்படுத்துவது மிகவும் மாறுபட்ட வொர்க்அவுட்டை வழங்கும். சரியான எடைகளைத் தேர்வுசெய்கநாங்கள் பயிற்சிகளைத் தொடங்குவதற்கு முன்பு…
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7-ம் தேதி காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. இதில், கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நேரத்தை முடிவு செய்வதில் கோயில் நிர்வாகம் மற்றும் கோயில் விதாயகர்த்தா இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு, உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை கடந்த இரு தினங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்தது. இந்நிலையில், திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கும் நேரத்தை கோயில் நிர்வாகம் நேற்று மாலை அறிவித்தது. இதுகுறித்து அறநிலையத் துறை இணை ஆணையர் சு.ஞானசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருச்செந்தூர் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் குடமுழுக்கு விழா இந்த ஆண்டு…
மதுரை: முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி அமைக்க அனுமதி மறுக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரிய வழக்கில், போலீஸார் அரசியல் சார்பின்றி, நடுநிலையுடன் செயல்படுமாறு உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது. தமிழக இந்து முன்னணி மாநிலச் செயலாளர் முத்துக்குமார், உயர் நீதிமன்றம் மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: இந்து முன்னணி சார்பில் மதுரையில் ஜூன் 22-ம் தேதி முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் தற்காலிக மாதிரி கோயில்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றில் வரும் 10 முதல் 22-ம் தேதி வரை காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரையும், மாலையில் 5 முதல் 7 மணி வரையும் பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கவும், 22-ம் தேதி ஒரே நேரத்தில் கந்தசஷ்டி கவசம் மற்றும் திருப்புகழ் பாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை அம்மா திடல் தனியார் பட்டா நிலம்.…
மதுரை: மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தவிடாமல் தடுக்க பல்வேறு இடையூறுகளை செய்கின்றனர். மாநாட்டுக்கு அனுமதி மறுத்தால் உயர் நீதிமன்றத்தை நாடுவோம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மதுரை ஒத்தக்கடை வேலம்மாள் மைதானத்தில் நாளை (ஜூன் 8) நடைபெறும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். இந்த கூட்டத்துக்கான பந்தல்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், பெருங்கோட்டப் பொறுப்பாளர் கதலி நரசிங்கப் பெருமாள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர், நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் நாளை நடைபெறும் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று இரவு மதுரை வருகிறார். இரவு மதுரையில் தங்கும் அவர் நாளை காலை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் செல்கிறார். மாலையில் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். எம்ஜிஆர்…
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கியுள்ளது. மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீத இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கியதுபோக, 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதுதவிர, தனியார் கல்லூரிகளில் 3,450 இடங்கள், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்கள் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளன. இதில், அரசு ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் வழங்கப்படும். மொத்தமாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அதேபோல, 3 அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 250 பிடிஎஸ் இடங்களில் அகில இந்திய…
காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழாவில் நேற்று 5 தேரோட்டம் நடைபெற்றது. திருநள்ளாறில் சனி பகவானுக்கு தனி சந்நிதியுடன் கூடிய, பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த மே 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வுகளாக மே 30-ம் தேதி இரவு அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு வீதியுலா, ஜூன் 4-ம் தேதி இரவு சகோபுர வீதியுலா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. மற்றொரு முக்கிய நிகழ்வான 5 தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு செண்பக தியாகராஜ சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து நீலோத்பாலாம்பாள், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளும் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். பின்னர் தேர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனைக் காட்டப்பட்டு, நேற்று அதிகாலை 5.30 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஏ.கே.சாய் ஜெ.சரவணன்குமார், தருமபுரம்…
