சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி இந்தியாவுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து 4 முறை கடிதம் அனுப்பியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தாலும் அதனை இந்தியா பொருட்படுத்தவில்லை. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையில் சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டதால் தண்ணீர் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள பாகிஸ்தான் மிகுந்த ஏமாற்றமும் கவலையும் அடைந்துள்ளது. இந்நிலையில் சிந்து நதி விவகாரத்தில் இந்தியா தனது முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கோரி பாகிஸ்தான் இதுவரை 4 கடிதங்களை எழுதியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த…
Author: admin
அறிமுக இயக்குநர் ப.முருகசாமி இயக்கத்தில் லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம், ‘குயிலி’. ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்துக்கு ஜூ ஸ்மித் இசையமைத்துள்ளார். பி எம் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரித்துள்ளார். படம் பற்றி இயக்குநர் ப.முருகசாமி கூறும்போது, “இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் பணியாற்றிவிட்டு இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறேன். மதுவுக்கு எதிரான ஒரு தாயின் போராட்டம்தான் இந்தப் படத்தின் கதை. தந்தையையும் தனது கணவனையும் குடிகாரனாகக் கொண்ட ஒரு பெண்ணின் வாழ்க்கை என்ன ஆகிறது? அந்தப் பெண் தனது மகனை என்னவாக உருவாக்குகிறார். மதுவால் தன்னை போல பெண்கள் பாதிக்கப்படக் கூடாது என்று அவர் ஒரு முடிவு எடுக்கிறார், அது என்ன? என்பதுதான் கதை. கோவை அருகே நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றின் அடிப்படையில்…
சென்னை சென்ட்ரல் – கூடூர் மார்க்கத்தில், கவரைப்பேட்டை – கும்மிடிப்பூண்டி இடையே பொறியியல் பணி நடைபெற உள்ளதால், 19 மின்சார ரயில்களின் சேவையில் ஜூன் 9, 12 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதன்படி, சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டிக்கு நாளையும் (9-ம் தேதி), வரும் 12-ம் தேதிகளில் காலை 10.30, 11.35 மணி, சென்னை சென்ட்ரல் – சூலூர்பேட்டைக்கு காலை 10.15, நண்பகல் 12.10, மதியம் 1.05, சூலூர்பேட்டை – சென்னை சென்ட்ரலுக்கு மதியம் 1.15, பிற்பகல் 3.10 மணி, இரவு 9 மணிக்கு மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டிக்கு அதே நாட்களில் காலை 9.40, நண்பகல் 12.40, சூலூர்பேட்டை – நெல்லூருக்கு பிற்பகல் 3.50 மற்றும் சென்னை சென்ட்ரல் – ஆவடிக்கு இரவு 11.40, கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரைக்கு காலை 10.55, கும்மிடிப்பூண்டி – சென்னை சென்ட்ரலுக்கு…
வங்கியில் WWE பணம் 2025 முடிவுகள்: சில நாட்களுக்கு முன்பு, மூத்த WWE நட்சத்திரம் ஆர்-ட்ரூத் ஸ்டாம்போர்டை தளமாகக் கொண்ட பதவி உயர்வு தனது ஒப்பந்தத்தை புதுப்பிக்காது என்று அறிவித்தது. இதன் பொருள் என்னவென்றால், பதவி உயர்வு உடனான ஒப்பந்தம் முடிந்தபின் அவர் ஒரு வேலை இல்லாமல் (குறைந்தது சிறிது நேரம்) இருப்பார். எக்ஸ் பற்றிய சத்தியத்தின் இடுகை (முன்னர் ட்விட்டர் என்று அழைக்கப்பட்டது) சீற்றத்தைத் தூண்டியது. இப்போது, ஒரு நேர்மறையான வளர்ச்சியில், அவர் WWE உடன் திரும்பி வந்துள்ளார், மேலும் அவரது உண்மையான பெயரான ரான் கொலைகள் கீழ் மல்யுத்தம் செய்வார். ஆர்-ட்ரூத் ஒப்பந்தத்தை புதுப்பிக்காத வரிசையில் WWE நிரலாக்கத்தை வழங்குகிறதுஆர்-ட்ரூத் நிறுவனத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தார், WWE நட்சத்திரம் ராவின் சமீபத்திய எபிசோடில் தனது பொருட்களை அணிய அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், பாடிஸ்லாம்.நெட்டின் கோரி ஹேஸின் கூற்றுப்படி, திட்டம் மாற்றப்பட்டுள்ளது, உண்மை இப்போது நிறுவனத்துடன் இருக்கும். ‘ரசிகர்கள் மற்றும் பணியாளர்களிடமிருந்து பின்னடைவு’ பிறகு…
ஆந்திராவை சேர்ந்த பெண் இன்ஜினீயர் மாதவி லதா, தனது 17 ஆண்டு கால வாழ்க்கையை அர்ப்பணித்து உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை வடிவமைத்து, பிரம்மாண்டமாக கட்டி எழுப்பி உள்ளார். ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தால் பக்கால்- கவுரி பகுதிகளுக்கு இடையே செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் திறந்துவைத்தார். இது, உலகின் மிக உயரமான ரயில் பாலம் ஆகும். பூகம்பம், வெடிகுண்டு தாக்குதலை சமாளிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், இன்ஜினீயரிங் அதிசயம் என்று போற்றப்படுகிறது. செனாப் பாலம் உருவான பின்னணி கதை தற்போது வெளியாகி இருக்கிறது. செனாப் நதியின் குறுக்கே பாலம் கட்டும் பணி கடந்த 2004-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சிமென்ட் தூண்களால் கட்டப்பட்ட இந்த பாலத்தின் உறுதித்தன்மையில் கேள்வி எழுந்ததால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின்…
தமிழ் சினிமாவில் சுமார் இருநூறு படங்களுக்குத் திரைக்கதை, நாற்பது படங்களுக்குக் கதை எழுதிய கலைஞானம், 18 படங்களைத் தயாரித்தும் இருக்கிறார். சாண்டோ சின்னப்பா தேவரின் நிறுவனத்துக்குத் தொடர்ச்சியாக எழுதி வந்த அவரிடம், படம் தயாரிக்கச் சொன்னார், தேவர். தான் ஃபைனான்ஸ் செய்வதாகவும் சொன்னார். இதையடுத்து தயாரிப்பில் இறங்கிய கலைஞானம், அதற்காக ‘விஸ்வரூபம்’ என்ற கதையை எழுதினார். அண்ணன் – தங்கை பாசத்தை வைத்து எழுதிய கதை இது. சிறு வயதில் விபத்து ஒன்றில் பிரிந்து விடுகிறார்கள் அண்ணனும், தங்கையும். அண்ணன் தங்கையைத் தேடி அலைகிறான். ஒரு பணக்காரரின் மனைவி அண்ணனை வளர்க்கிறார். அவர்களுக்கு ஏற்கெனவே ஒரு மகன் இருக்கிறான். அந்த மகனின் தீய செயல்களுக்குத் துணை போகும் அவன், ஒரு முறை ஒரு பெண்ணை கடத்துகிறான். பணக்காரரின் மகன், அவளை பாலியல் வன்கொடுமை செய்கிறான். தான் கடத்தி வந்தது தனது தங்கை என தெரிகிறது, பண்ணையார் வீட்டில் வளரும் அண்ணனுக்கு. தனது…
மகாராஷ்டிரா தேர்தல் முடிவு குறித்த ராகுல் காந்தியின் கருத்து அடிப்படை ஆதாரமற்றது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றன. இது வரும் பிஹார் தேர்தலிலும் நடக்கும்” என குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாராஷ்டிரா தேர்தல் முடிவு குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக அவர் கூறியிருப்பது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இது சட்டத்தின் ஆட்சியை அவமதிக்கும் செயல் ஆகும். இந்த உண்மைகள் அனைத்தையும் கடந்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதியே காங்கிரஸ் கட்சிக்கு அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளை மீண்டும் மீண்டும் எழுப்பும்போது, உண்மைகள் அனைத்தும்…
பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 6-ம் நிலை வீரரும் 24 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுடன் மோதினார். 3 மணி நேரம் 16 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜன்னிக் சின்னர் 6-4 7-5 7-6(3) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். பிரெஞ்சு ஓபன் தொடரின் ஓபன் எராவில் (1968-ம் ஆண்டுக்கு பிறகு) இறுதிப் போட்டிக்கு முன்னேறிய 2-வது இத்தாலி வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஜன்னிக் சின்னர். இதற்கு முன்னர் 1976-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் தொடரில் இத்தாலியின் அட்ரியானோ பனாட்டா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில்…
இந்திப் பட இயக்குநர் ஆனந்த். எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம், ‘ராஜ்ன்னா’. இது 2013-ம் ஆண்டு வெளியானது. இதன் இரண்டாம் பாகமாக ‘தேரே இஸ்க் மே’ என்ற படம் இப்போது உருவாகி வருகிறது. இதில் தனுஷ் ஜோடியாக கீர்த்தி சனோன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. இதில் கீர்த்தி சனோனுடன் தனுஷ் ஸ்கூட்டரில் செல்லும் படப்பிடிப்புக் காட்சிகள் சில மாதங்களுக்கு முன் இணையத்தில் வெளியாயின. இந்நிலையில், இந்தப் படத்தில் இருந்து தனுஷின் புதிய தோற்றம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் விமானப்படைக்கான உடையை நடிகர் தனுஷ் அணிந்துள்ளார். இதனால் அவர் விமானப்படை அதிகாரியாக நடிப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
பிரபல உடற்பயிற்சி பயிற்சியாளர் வினோத் சன்னா, வயது மீறும் தோற்றத்திற்கான ரகசியங்களை வெளிப்படுத்துகிறார், இது ஷில்பா ஷெட்டி குந்த்ரா மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோரால் ஈர்க்கப்பட்டது. புரதம், சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, அத்தியாவசிய கொழுப்புகள் மற்றும் பழங்கள் நிறைந்த ஒரு சீரான உணவை அவர் வலியுறுத்துகிறார். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை பானங்கள் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றைத் தவிர்ப்பது, மனம் கொண்ட உணவைப் பயிற்சி செய்வதோடு, இளமை தோல் மற்றும் ஒட்டுமொத்த உயிர்ச்சக்திக்கு முக்கியமானது. திரைப்பட நட்சத்திரங்களில் பெரும்பாலானவை எப்படி வயதை அழகாக நிர்வகிக்கின்றன என்று எப்போதாவது யோசித்தீர்களா? சிலர் தங்கள் வயதில் பாதி பேர் கூட பார்க்கிறார்களா? இல்லை, நாங்கள் ஒப்பனை நடைமுறைகள் அல்லது விலையுயர்ந்த தோல் சிகிச்சைகள் பற்றி பேசவில்லை. நிச்சயமாக, சிலர் அந்த விருப்பங்களைத் திருப்புகிறார்கள், அதில் எந்தத் தவறும் இல்லை (அது அவர்களின் பார்வை வரை, வழக்கமான அழகுத் தரங்களை கடைப்பிடிப்பதைப் பற்றி அல்ல). ஆனால் பலருக்கு,…
