Author: admin

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் 300 பேர் தங்களது தாயகம் திரும்ப விருப்ப மனு அளித்துள்ளனர். இலங்கையில் 1983-ல் உள்நாட்டுப் போர் தொடங்கிய காலக் கட்டத்திலிருந்தே தமிழகத்துக்கு இலங்கைத் தமிழர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். விடுதலைப் புலிகளை வென்று 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக, இலங்கை அரசு அறிவித்தது. அதன்பின்னரும், ராமேசுவரத்துக்கு இலங்கைத் தமிழர்களின் வருகை தொடர்ந்துகொண்டேதான் இருந்தது. தமிழகத்தில் 119 இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு இடைத்தங்கல் முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் ஒரு லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இதில் 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காவல் நிலையங்களில் பதிவு செய்துவிட்டு, வெளியிடங்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த 3 ஆண்டுகளில் தனுஷ்கோடிக்கு வந்த 314-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்படாமல், மனிதாபிமான அடிப்படையில் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தமிழக அரசு தங்க வைத்துள்ளது. இதனிடையே,…

Read More

லக்னோவில் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. பிரியா சரோஜ் நிச்சயதார்த்தம் செய்தது சிரமமின்றி திருமண பாணியைக் காட்டியது. பிரியா ஒரு வெளிர் இளஞ்சிவப்பு மற்றும் தந்த மலர் லெஹங்காவைத் தேர்ந்தெடுத்து, விசித்திரக் காதல் ஆறுதலுடன் சமநிலைப்படுத்தினார். அவளது குறைவான நகைகள் மற்றும் மென்மையான கிளாம் ஆகியவை தோற்றத்தை பூர்த்தி செய்தன. ரிங்குவின் மிருதுவான வெள்ளை ஷெர்வானி ஒரு அமைதியான மாறுபாட்டை வழங்கினார். இந்த ஜோடி நவம்பர் 2025 இல் வாரணாசியில் திருமணம் செய்து கொள்வதாக கூறப்படுகிறது. லக்னோவில் ஒரு அமைதியான, வெயிலில் நனைந்த விழாவில், சமாஜ்வாடி கட்சியின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. பிரியா சரோஜ் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குக்கு ஆம் என்று கூறினார், அவ்வாறு செய்யும்போது, ​​சிரமமின்றி நிச்சயதார்த்த பாணியில் ஒரு மாஸ்டர் கிளாஸை வழங்கினார். ஜூன் 8 ஆம் தேதி நடைபெற்ற நெருக்கமான விவகாரத்திற்காக, 26 வயதான அரசியல்வாதி திருமண ஆடம்பரத்தின் யோசனையை அதன்…

Read More

மதுரை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். மதுரை ஒத்தக்கடையில் இன்று (ஜூன் 8) நடைபெறும் பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை இரவு புதுடெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு 10.30 மணிக்கு வருகை தந்தார். அங்கிருந்து சிந்தாமணியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கினார். அதனைத் தொடர்ந்து இன்று காலை மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்ய காலை 11.52 மணிக்கு வருகை தந்தார். கிழக்கு கோபுர வாசல் அருகில் உள்ள அம்மன் சன்னதி வாசல் வழியாக கோயிலுக்குள் சென்றார். கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல் ராஜன், கோயில் இணை ஆணையர் கிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். முன்னதாக மீனாட்சியம்மன் கோயிலில் வந்திறங்கிய அமித் ஷாவை மதுரை…

Read More

சரி, நீங்கள் அறிகுறிகளைப் படித்திருக்கிறீர்கள், அவற்றில் சில கொஞ்சம் தெரிந்திருக்கும். இப்போது என்ன?முதலில், பீதி அடைய வேண்டாம். வைட்டமின் டி குறைபாடு சூப்பர் சிகிச்சையளிக்கக்கூடியது. ஒரு எளிய இரத்த பரிசோதனை உங்கள் 25-ஹைட்ராக்ஸிவைடமின் டி அளவை அளவிட முடியும். நீங்கள் எவ்வளவு குறைவாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம்:தினசரி சப்ளிமெண்ட்ஸ் (டி 3 பொதுவாக டி 2 ஐ விட சிறப்பாக உறிஞ்சப்படுகிறது)வெற்று தோலில் (கைகள் மற்றும் முகம்) 15-30 நிமிட சூரிய ஒளி வாரத்திற்கு சில முறைமுட்டையின் மஞ்சள் கருக்கள், காளான்கள், சால்மன், பலப்படுத்தப்பட்ட பால் அல்லது தாவர பால் போன்ற டி நிறைந்த உணவுகள்உறிஞ்சுதலை அதிகரிக்க ஆரோக்கியமான கொழுப்புகளுடன் வைட்டமின் டி இணைப்பது (வெண்ணெய், கொட்டைகள், ஆலிவ் எண்ணெய் என்று நினைக்கிறேன்)நீங்கள் மிகவும் குறைவாக இருந்தால், உயர்-டோஸ் டி துணை (வாராந்திர அல்லது மாதாந்திர எடுக்கப்பட்டது) பரிந்துரைக்கப்படலாம்.

Read More

புதுச்சேரி: புதுச்சேரியில் தேரை வடம் பிடித்து இழுக்க முதல்வர் ரங்கசாமிக்காக, துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் காத்திருந்ததார். வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோவில் தேரை வடம் பிடித்து தொடங்கி வைப்பதற்காக துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் சரியாக காலை 7.30 மணிக்கு வந்தார். அதேபோல் தேரை வடம் பிடித்து இழுக்க முதல்வர் ரங்கசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர் சரியான நேரத்துக்கு வரவில்லை. அதே நேரத்தில் பேரவைத் தலைவர், அமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர், எம்எல்ஏக்கள் ஆகியோரும் வந்திருந்தனர். இதனால் ஆளுநர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தேர் முன்பு வடம் பிடித்து இழுக்காமல் முதல்வர் ரங்கசாமி வருகைக்காக காத்திருந்தனர். சுமார் 10 நிமிடம் தாமதமாக முதல் அமைச்சர் அவசர அவசரமாக வந்தார். அதன் பிறகு அனைவரும் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

Read More

புதுடெல்லி: இன்றைய ஏஐ சூழ் டிஜிட்டல் உலகத்தில் மென்பொருள் பொறியாளர்களுக்கு இந்தவொரு திறன் மிகவும் அவசியம் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா கூறியுள்ளார். டெக் உலகில் அடியெடுத்து வைக்கும் இளம் பொறியாளர்களுக்கு அறிவுரையும் அவர் வழங்கியுள்ளார். “மென்பொருள் குறித்த அடிப்படைகளை மென்பொருள் பொறியாளர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம். அது மிகவும் முக்கியமானது. ஏஐ நுட்பத்தின் வரவு எண்ணற்ற மென்பொருள் வடிவமைப்பாளர்களை உருவாக்க வழி செய்துள்ளது. ஏனெனில், கோடிங் சார்ந்து ஏஐ நிச்சயம் உதவுகிறது. செயற்கை நுண்ணறிவு, மென்பொருள் பொறியாளர்களின் பணியை இன்னும் வேகப்படுத்தி உள்ளது. இருந்தாலும் அது பயனரின் சிந்திக்கும் திறன் மற்றும் வழிகாட்டுதலை சார்ந்தே உள்ளது. அதனால் இந்த துறையில் அடியெடுத்து வைக்க விரும்புபவர்கள் இதை கருத்தில் கொள்ள வேண்டும். இந்த ஒரு திறன் இருந்தால் ஏஐ-யை வெல்லலாம். அண்மையில் நான் எழுதிய கோட் (Code) ஒன்றில் பிழை இருந்தது. அதை கண்டறிய எனக்கு…

Read More

சமீபத்திய ஆய்வுகள் வைட்டமின் டி குறைபாடு மற்றும் மாரடைப்பு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை ஆராய்கின்றன, சீரற்ற கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்துகின்றன. வைட்டமின் டி கூடுதல் முக்கிய இருதய நிகழ்வுகளின் அபாயத்தை, குறிப்பாக மாரடைப்பு மற்றும் கரோனரி மறுவாழ்வுமயமாக்கல் ஆகியவற்றைக் குறைக்கக்கூடும் என்று ஒரு ஆஸ்திரேலிய சோதனை சுட்டிக்காட்டியது. இருப்பினும், மிச்சிகன் மாநில பல்கலைக்கழக ஆய்வு உட்பட பிற ஆராய்ச்சிகள், வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸுடன் இருதய நோய் அபாயத்தில் குறிப்பிடத்தக்க குறைப்பு இல்லை. இருதய நோய்கள் (சி.வி.டி) உலகம் முழுவதும் அதிகரித்து வருகின்றன. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, சி.வி.டி.க்கள் உலகளவில் மரணத்திற்கு முக்கிய காரணமாகும், ஒவ்வொரு ஆண்டும் 17.9 மில்லியன் உயிர்களை எடுத்துக்கொள்கிறார்கள். சி.வி.டி.களுக்கு பங்களிக்கும் காரணிகளை, குறிப்பாக மாரடைப்பு, மற்றும் வைட்டமின் டி குறைபாட்டுடனான அதன் இணைப்பு தாமதமாக பிரபலமடைந்து வருகிறது. வைட்டமின் டி குறைபாட்டிற்கும் மாரடைப்புக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளதா? பார்ப்போம். வைட்டமின் என்னவைட்டமின் டி, ‘சன்ஷைன் வைட்டமின்’…

Read More

தமிழ், ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் இசைப் பள்ளி சான்றிதழ், 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழுக்கு இணையானது என பள்ளிக்கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணை: பள்ளிகளில் 10-ம் வகுப்பு மாணவர்கள் தமிழ் (பகுதி-1) ஆங்கிலம் (பகுதி-2) ஆகிய மொழி பாடங்களையும், பகுதி-3-ல் முதன்மை பாடங்களான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களையும் பயில்கின்றனர். இந்த நிலையில், இசைப் பள்ளி மாணவர்கள் பகுதி 3-ல் முதன்மை பாடம், துணைப்பாடம், வாய்மொழி தேர்வு, இசையியல் பாடங்கள் (தியரி எக்ஸாம்) ஆகியவற்றை பயில்கின்றனர். அரசு தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்படும் 10-ம் வகுப்பு தமிழ், ஆங்கில மொழி பாடங்களில் அவர்கள் தேர்ச்சி பெறும் பட்சத்தில், பகுதி 3-ல் அவர்கள் பயின்றதை சிறப்பு நிகழ்வாக முதன்மை பாடங்களாக கருதலாம். அவர்களது இசைப்பள்ளி தேர்ச்சி சான்றிதழை அரசு தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்படும் 10-ம் வகுப்பு…

Read More

சென்னை: நார்வேயில் நடைபெற்ற செஸ் போட்டியில் இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் குகேஷ் மூன்றாவது இடத்தைப் பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நார்வேயில் நடைபெற்ற செஸ் போட்டியில் பங்கேற்று மூன்றாவது இடத்தைப் பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது. உலக சாம்பியனாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் தனது திறமையால், அறிவுக்கூர்மையால், கடின உழைப்பால் 3வது இடம் பிடித்திருப்பதால் இந்தியர்கள் பெருமை அடைகிறார்கள். நார்வே செஸ் தொடரில் நடைபெற்ற 10 சுற்று போட்டிகளின் இறுதியில் குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 3 வது இடம் பிடித்திருக்கிறார். இந்தியாவின் விளையாட்டுத்துறையின் திறமையை உலக அரங்கில் பரப்புவதில் தமிழக விளையாட்டு வீரர் குகேஷ் ஆற்றும் பங்கு போற்றுதலுக்குரியது. குகேஷ் இந்திய மக்களுக்கு செஸ் விளையாட்டில் ஆர்வம் ஏற்படும் வகையில் ஊக்கம்…

Read More

மதுரை: மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம், இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என மதுரை ஆதீனம் மனு அளித்தார். மதுரையில் நடைபெறும் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வந்துள்ளார். அவர் இன்று காலை மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டார். முன்னதாக மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்த அமித் ஷாவை மதுரை ஆதீனம் சால்வை அணிவித்து வரவேற்று புத்தகம் மற்றும் மனுவை வழங்கினார். பின்னர் மதுரை ஆதீனம் கூறுகையில், “பிரதமர் மோடி மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும்போதும் அவரை சந்தித்து பேசினேன். இப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்துள்ளார். அவரை கோயில் முன்பு வரவேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அமித் ஷாவிடம் மனு ஒன்றை அளித்தேன். அதில் இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு ஏற்படுத்த வேண்டும், கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் சேர்க்க வேண்டும். இந்திய மீனவர்கள் தாக்கப்படாமல் இருக்கவும்,…

Read More