திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயில் பங்குனித் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக போற்றப்படும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா தேரோட்டம் பிரசித்தி பெற்றது. நடப்பாண்டு விழா மார்ச் 8-ம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் நாள்தோறும் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனித் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, அலங்கரிக்கப்பட்ட முதல் தேரில் விநாயகர், முருகன் மற்றும் அம்மனுடன் சோமஸ்கந்தராக சுவாமி எழுந்தருளினார். 2-வது தேரில் அகிலாண்டேஸ்வரி அம்மன் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பிறகு தேர் வடம் பிடித்தல் காலை 7.16 மணிக்கு தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் `நமச்சிவாய’ முழக்கத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர். நான்கு வீதிகளையும் வலம் வந்த தேரோட்டம் மாலையில் நிறைவடைந்தது. இதையொட்டி,…
Author: admin
பிரபல இந்தி இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணக் கதை திரைப்படமாகி வருகிறது. இரண்டு பாகமாக உருவாகும் இதில் ரன்பீர் கபூர் ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடித்து வருகின்றனர். ராவணனாக, யாஷ் நடிக்கிறார். அனுமனாக சன்னி தியோல், சூர்ப்பணகையாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் ராவணனாக யாஷ் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக உஜ்ஜைனியில் உள்ள மஹாகாளேஸ்வர் கோயிலில் நடிகர் யாஷ் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வழிபாட்டுக்குப் பிறகு அவர் அளித்த பேட்டியில், “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சிவபெருமானின் ஆசிவேண்டும் என்பதால் இந்தக் கோயிலுக்கு வந்தேன்.நான் தீவிர சிவபக்தன். அனைவரின் மகிழ்ச்சிக்காகவும் நலத்துக்காகவும் பிரார்த்தனை செய்தேன்” என்றார்.
திருநெல்வேலி: திருநெல்வேலியிலுள்ள பிரசித்தி பெற்ற அருள்தரும் காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு நெல்லையப்பர் கோயில் வளாகத்தில் அடையாளம் தெரியாத இருவர் திரைப்பட பாடலுக்கு ஆடி ரீல்ஸ் பதிவு செய்த காட்சிகள் வைரலானது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோயில் செயல் அலுவலர் சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார். இத்திருக்கோயில் வளாகத்தில் அடையாளம் தெரியாத இளைஞர் மற்றும் இளம்பெண் ஆகிய இருவரும் திரைப்பட பாடலுக்கு ஆடி ரீல்ஸ் பதிவு செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இது பக்தர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. புனிதமான கோயில் வளாகத்தில் இவ்வாறு அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் திருக்கோயில் செயல் அலுவலர் அய்யர்சிவமணி திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் போலீஸில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். திருநெல்வேலி நகர் அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் திருக்கோயில்…
புதுடெல்லி: பத்து வயதுக்கு மேலான சிறுவர், சிறுமியர் சுயமாக வங்கிக் கணக்கை கையாளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: எந்த வயதை சேர்ந்த குழந்தை, சிறாருக்கு வங்கிக் கணக்கை தொடங்கலாம். அப்போது அவர்களின் தாய், தந்தையை பாதுகாவலர்களாக நியமிக்கப்பட வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர் சுயமாக வங்கிக் கணக்கை கையாளலாம். அவர்கள் சுயமாக சேமிப்பு கணக்கை தொடங்கலாம், டெபாசிட் செய்யலாம். அவர்களுக்கு டெபிட் கார்டு, காசோலைகளை வழங்கலாம். இன்டர்நெட் வங்கி வசதியையும் வழங்கலாம். இது வங்கியின் முடிவுக்கு உட்பட்டது. சிறுவர்களின் வங்கிக் கணக்குகள் அவர்களால் கையாளப்படுகிறதா அல்லது அவர்களின் பாதுகாவலர்களால் கையாளப்படுகிறதா என்பதை வங்கி நிர்வாகங்கள் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். சிறுவர்கள், பெரியவர்களான பிறகு வழக்கமான வங்கி நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த புதிய விதிகளை அனைத்து வணிக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். இவ்வாறு ரிசர்வ்…
நீங்கள் அலுவலக ஊழியரா? வேலை நீங்கள் நாள் முழுவதும் கணினியை உட்கார வைக்க வேண்டுமா அல்லது முறைத்துப் பார்க்க வேண்டுமா? உங்கள் பதில் ஆம் எனில், நீங்களே பிரேஸ் செய்யுங்கள், நீங்கள் கற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என்பது உங்களை பீதியடையச் செய்யும். அலுவலக ஊழியர்கள் அதிர்ஷ்டசாலிகளின் ஒரு குலம் என்று வெளி உலகம் நினைக்கலாம். நாள் முழுவதும் உட்கார்ந்து (அல்லது அவர்களின் வார்த்தைகளில் ‘நிதானமாக’), தங்கள் வேலையைச் செய்வது, வெளியேறுவது. மாசுபாட்டிற்கு வெளிப்பாடு இல்லை, வானிலை குறை கூற வேண்டிய அவசியமில்லை, எந்தவொரு உடல் முயற்சியும் இல்லை. அலுவலக வேலைகள் வெளியில் கவர்ச்சியாகத் தோன்றலாம், ஆனால் நீங்கள் கற்பனை செய்வதை விட உள் பார்வை அசிங்கமானது. முதுகுவலி முதல் உலர்ந்த மற்றும் கஷ்டமான கண்கள், எடை அதிகரிப்பு மற்றும் மன அழுத்தம் வரை அது மோசமாகிறது. உங்கள் வேலையின் முடிவுகள் இதனுடன் பொருந்தினால், உங்களுக்காக சில மோசமான செய்திகள் எங்களிடம் உள்ளன.…
ஏப்ரல் 24, 2025 அன்று உலகளாவிய இணைய இணைப்பை வழங்குவதில் ஸ்பேஸ்எக்ஸ் ஒரு முக்கிய மைல்கல்லை உருவாக்கியது, ஸ்டார்லிங்க் 6-74 மிஷனை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியது. மிஷனில், 28 செயற்கைக்கோள்கள் குறைந்த பூமி சுற்றுப்பாதையில் பயன்படுத்தப்பட்டன, இது ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் விண்மீன் கூட்டத்திற்கு மேலும் சேர்த்தது. உலகின் மிக தொலைதூர மற்றும் குறைந்த பகுதிகளுக்கு கூட அதிவேக இணைய இணைப்பை வழங்கும் நிறுவனத்தின் பணிக்கு இந்த விரிவாக்கம் மையமாகும். ஒவ்வொரு வெற்றிகரமான வரிசைப்படுத்தலிலும், ஸ்பேஸ்எக்ஸ் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான தனிநபர்களுக்கு குறைந்த தாமதமான, நம்பகமான இணையத்தை வழங்குவதற்கான அதன் பார்வைக்கு அதிக அளவில் நகர்கிறது, கிராமப்புற சமூகங்களில் இணைப்பை மேம்படுத்துகிறது.ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 கேப் கனாவெரலில் இருந்து ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை அறிமுகப்படுத்தியதுராக்கெட் புளோரிடாவின் கேப் கனாவெரல் விண்வெளி படை நிலையத்தில் வெளியீட்டு வளாகம் 40 (எல்.சி -40) இலிருந்து 9:52 PM ET க்கு தொடங்கப்பட்டது. பால்கான் 9 ராக்கெட் மாலை…
முன்னாள் ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் தனது வரவிருக்கும் நினைவுக் குறிப்பில் அவர் ஆலோசனை கோரினார் என்று வெளிப்படுத்தினார் போப் பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் தொடர்பாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் கையாள்வது குறித்து பிரான்சிஸ்.ட்ரம்பின் வணிக பின்னணியை ஒரு சவாலாகக் கண்ட மேர்க்கெல், “அரசியலுக்குள் நுழைவதற்கு முன்பு அவர் இருந்த சொத்து உருவாக்குநரின் கண்ணோட்டத்தில் எல்லாவற்றையும் அவர் பார்த்தார். ஒவ்வொரு நிலப்பகுதியையும் ஒரு முறை மட்டுமே விற்க முடியும், வேறு யாராவது அவ்வாறு செய்யவில்லை என்றால், அவர் உலகைப் பார்த்தார்.””அடிப்படையில் வேறுபட்ட பார்வைகள்” கொண்ட நபர்களைக் கையாள்வது குறித்த ஆலோசனையை மேர்க்கெல் போப்பிடம் கேட்டபோது, அவர் டிரம்ப் மற்றும் காலநிலை உடன்படிக்கைகளை குறிப்பிடுகிறார் என்பதை அவர் புரிந்து கொண்டார் என்று அவர் உணர்ந்தார். மேர்க்கலின் கூற்றுப்படி, போப் அறிவுறுத்தினார், “பெண்ட், பெண்ட், பெண்ட், ஆனால் அது உடைக்காது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.”நினைவுக் குறிப்பு, “சுதந்திரம்: நினைவுகள் 1954-2021″டிரம்ப் மற்றும்…
மும்பை: “பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகள் முஸ்லிம் அல்லாதவர்களைத்தான் குறி வைத்தனர், நாங்கள் அதைப் பார்த்தோம். எங்கள் உணர்வுகளுடன் விளையாட வேண்டாம். இதை அரசியலாக்க வேண்டாம்” என அந்தத் தாக்குதலில் கணவரை இழந்த பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் விஜய் வடெட்டிவார், “பயங்கரவாதிகள் மதத்தைக் கண்டறிந்து பின்னர் மக்களைக் கொன்றதாக சொல்லப்படுகிறது. யாரையாவது நெருங்கிச் சென்று அவர்களிடம் அது குறித்து கேட்கும் அளவுக்கு நேரம் இருக்கிறதா? இது மிகவும் சர்ச்சைக்குரியது. ஏனென்றால், சிலர் இதுபோன்ற விஷயங்கள் நடந்ததாகக் கூறுகிறார்கள், மற்றவர்கள் அதை மறுக்கிறார்கள். எனவே, நாம் அது குறித்து பேச வேண்டாம்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில், இத்தகைய பேச்சுகள் மூலம் தங்கள் உணர்வுகளுடன் விளையாட வேண்டாம் என்றும், இதை அரசியலாக்க வேண்டாம் என்றும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கணவரை இழந்த புனேவைச் சேர்ந்த பிரகதி ஜக்தலே என்பவர் தெரிவித்துள்ளார். பஹல்காம்…
சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி 14 புரோ+ 5ஜி போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். இதோடு சேர்த்து 14 புரோ மாடல் போனையும் ரியல்மி அறிமுகம் செய்துள்ளது. உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. சமயங்களில் ப்ரீமியம் ரக போன்களையும் வெளியிடும். ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. தற்போது இந்தியாவில் ரியல்மி 14 புரோ+ 5ஜி போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி 14 புரோ+ சிறப்பு அம்சங்கள் 6.83 இன்ச் AMOLED டிஸ்பிளே ஸ்னாப்டிராகன்…
மும்பை: குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்தை கருதி அவர்களின் கல்விக்கு பெற்றோர்கள் முன்னுரிமை அளித்து வருவதால் சர்வதேச பள்ளிகளை நடத்துவதில் உலகளவில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ஒரு காலத்தில் உயரடுக்கு பிரிவினரில் ஒரு சிலருக்கு மட்டுமே சர்வதேச பள்ளிகளில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏனெனில் அதற்கான செலவினம் என்பது லட்சக்கணக்கில் இருந்தது. ஆனால், தற்போது நடுத்தர வர்க்கத்தினரும் தங்களது குழந்தையின் எதிர்காலத்தை சிறப்பான முறையில் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற உறுதியான எண்ணத்தால் சர்வதேச பள்ளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன் தாக்கம், உலகளாவிய கல்வி வாரியங்களுடன் இணைந்து சர்வதேச பள்ளிகளை அதிகளவில் நடத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. உலகின் சர்வதேச பள்ளிகளின் சந்தையை கண்காணிக்கும் ஐஎஸ்சி ஆய்வில் தெரிவிக்கப்பட்ட புதிய தரவுகளின்படி இந்தியாவில் கடந்த 2019-ல் 884 சர்வதேச பள்ளிகள் இருந்த நிலையில், 2025 ஜனவரி நிலவரப்படி அதன் எண்ணிக்கை 972-ஆக அதிகரித்துள்ளது.…
